Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எம்என்சி நிறுவனங்களிடம் கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை கேட்கும் அமைச்சர் – தமிழர்களுக்கு பிரச்னையா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 25 பிப்ரவரி 2024 கர்நாடகா கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, சமீபத்தில் அம்மாநிலத்தில் அலுவலகங்கள் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) அங்கு ‘எத்தனை கன்னட பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்,’ எனப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது உண்மையில் சாத்தியமா? இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்? சமீப காலமாகவே கர்நாடக மாநிலத்தில…

  2. 18 FEB, 2024 | 10:28 AM மொரேனா: மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பால…

  3. அபுதாபியில் இந்துக் கோயில். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை இன்று திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோயிலானது பல்வேறு வசதிகளுடன் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடதத்க்கது. https://athavannews.com/2024/1369685

  4. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, டெல்லியை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது பஞ்சாப் - ஹரியானா ஷாம்பு எல்லை அருகே பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். கட்டுரை தகவல் எழுதியவர், தீபக் மண்டல் பதவி, பிபிசி செய்தியாளர் 12 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் ட…

  5. 13 பிப்ரவரி 2024 2019ஆம் ஆண்டு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்த ஹர்பால் சிங், மார்ச் 2021 வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர் மார்ச் 5ஆம் தேதி ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். இந்த விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது. "என்னால் கை, கால்களை அசைக்க முடியாது. என் மனைவி இல்லாவிட்டால் நான் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அவள் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்கிறார் ஹர்பால் சிங். ஹர்பாலும் ஆன்னியும் 2018இல் பேஸ்புக் வாயிலாக சந்தித்துக் கொண்டனர். 2019இல் அவர்கள் திருமணம் செய்து க…

  6. பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் இழுபறி damithFebruary 12, 2024 பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (11) முடிவடைந்த நிலையில், சிறை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் பெரும்பான்மையாக 264 ஆசனங்களில் 101 இடங்களை வென்றிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்று 60 மணி நேரத்திற்குப் பின்னரே இறுதி முடிவு வெளியாகியுள்ளது. இந்தத் தாமதம் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதில் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷரீபின் கட்சி பாராளுமன்றத்தில் மிகப்பெரிய ஒற்றை கட்சியாக 75 இடங்களை வென்றுள்ளது. எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை வெல்லாத நிலையில் கூட்ட…

  7. பட மூலாதாரம்,GETTY IMAGES 10 பிப்ரவரி 2024, 03:01 GMT இந்தியா - மாலத்தீவு உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை திரும்ப அழைத்த பிறகு அந்த இடத்திற்கு இந்தியாவில் இருந்து ஒரு தொழில்நுட்பக் குழு அனுப்பி வைக்கப்படும் என்று வியாழக்கிழமை தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். இந்தியா ஒரு நடுநிலையான பாதையைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மாலத்தீவும் அதை ஏற்கத் தயாராகும் என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அங்கு இந்திய வீ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பதிவாளரிடம் தங்கள் உறவை பதிவு செய்ய வேண்டும் என உத்தரகாண்ட் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் உத்தராகண்ட் மாநில பாஜக அரசு நிறைவேற்றியிருக்கும் பொது சிவில் சட்ட மசோதாவில், `லிவ்-இன்` உறவில் இருப்பவர்களுக்கென வகுத்துள்ள விதிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, `லிவ்-இன்` உறவில் இருப்பவர்கள் தங்கள் உறவை மாவட்ட பதிவாளரிடம் அறிவிக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதேவேளையில், அந்த உறவில் இருக்கும்போது, க…

  9. 09 FEB, 2024 | 12:10 PM உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரஸா இடிப்பு தொடர்பாக வெடித்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும் கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் தடைசெய்யப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி: உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹல்த்வானி பகுதியில் கட்டப்பட்டு இருந்த மதரஸாவை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் போலீஸாருக்கும் உள்…

  10. Published By: RAJEEBAN 08 FEB, 2024 | 11:44 AM பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள அதேவேளை பாகிஸ்தான் முழுவதும் மொபைல் இணைய சேவைகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். சட்டஒழுங்கை பேணுவதற்காக இந்த நடவடிக்கை என பாக்கிஸ்தானின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மொபைல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் பெறுமதிமிக்க உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு சட்டமொழுங்கு நிலவரத்தை பேணுவதற்கும் உருவாகக்கூடிய ஆபத்துக்களை கையாள்வதற்கும் இது அவசியம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. …

  11. 196 குழந்தைகள் பிறப்பு : சிறையில் பெண்கள் கர்ப்பமாகும் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் சிறைச்சாலை காவலில் உள்ள பெண் கைதிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாக கொல்கத்தா உயர்நீதி மன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய , சிறைச்சாலையில் 196 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி கொல்கத்தா உயர் நீதிமன்றில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பெண்கள் சிறைச்சாலையில் ஆண்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1369099

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 8 பிப்ரவரி 2024, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்). இந்தியா 2048-ஆம் ஆண்டு வரை கத்தாரிடம் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி) வாங்குவதற்கான ஒப்பந்தம்தான் இது. இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதி நிறுவனமான பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிட்டெட் (Petronet LNG Limited - PLL), கத்தாரின் அரசாங்க நிறுவனமான ‘கத்தார் எனெர்ஜி’யுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெ…

  13. Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:53 PM பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் மாகாணத்திலேயே இந்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களுக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175808

  14. 07 FEB, 2024 | 09:59 AM புதுடெல்லி: திருமணமாகாத பெண் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றும் திருமண பந்தத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஒரு திருமணமாகாத பெண் (44) பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் வழக்கறிஞர் ஷ்யாமல் குமார் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் “கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற 35 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்திய பெண் விரும்பினால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டத்தின் 2(எஸ்)-வது பிரிவு கூறுகிறது. அதாவது திருமணமாகாத பெண் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று…

  15. பட மூலாதாரம்,GETTY IMAGES 6 பிப்ரவரி 2024 இந்தியாவின் தலைநகரான டெல்லி, அடுத்த இரண்டு நாட்களுக்கு இதுவரை பார்த்திடாத ஒன்றை பார்க்க இருக்கிறது. நாளை(புதன்கிழமை) முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் இந்தியாவில் உள்ள கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தின் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கு பிரதமர் மோதி தலைமையிலான மத்திய அரசு இழைத்துள்ள அநீதிக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளனர். அதேவேளையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், கேரளாவின் அனைத்து அமைச்சர்கள், இ…

  16. இந்திய துணை உயர்ஸ்தானிகர் டாக்டர். சத்யஞ்சல் பாண்டே அவர்களுக்கும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இடையில்லான சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. இதில் வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், த. கலையரசன், முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன், உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368537

  17. பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காக இ…

  18. மாலைத்தீவு நாடாளுமன்றில் கைகலப்பு : காணொளி உள்ளே மாலைத்தீவு நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. https://athavannews.com/2024/1367457

  19. 31 JAN, 2024 | 12:20 PM சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் நேற்று மாலை மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் கோப்ரா எனப்படும் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்தவராவார். மேலும் இந்தத் தாக்குதலில் 15 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் பெரிய தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா - பிஜாபூர் மாவட்ட எல்லையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் கடந்த 2021-ல் நடந்த தாக்குதலில் 23 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நேற்றைய தாக்குதலும் அதே இடத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தது. …

  20. பட மூலாதாரம்,RAJAT GUPTA/EPA-EFE/REX/SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி செய்தியாளர் 27 ஜனவரி 2024, 08:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 22 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அதேபோல, சமூகங்களுக்கு இடையே மோதல் சம்பவங்களும் பதிவானது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த பிறகும் இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் தினமும் இதுபோன்ற சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. கடந்த நான்கு நாட்களில…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் முகமது சைரஸ் காஜி கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டின் பதவி, பிபிசி நியூஸ் கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு பாகிஸ்தான் குடிமக்களை இந்திய ஏஜென்டுகள் 2023ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மண்ணில் கொன்றதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" என்று கூறியுள்ளது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டிய சில மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், இந்தியா அதை மறுத்துள்ளது. …

  22. 44 ஆண்டுகளுக்கு பிறகு உல்ஃபா பிரிவினைவாத அமைப்பு கலைப்பு 25 JAN, 2024 | 10:50 AM குவாஹாட்டி: இந்தியாவின் அசாமை தளமாக கொண்டஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முறைப்படி கலைக்கப்பட்டது. இந்த அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை இம்மாதம் அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979-ம்ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது. ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்புஇ தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 1990-ல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து உல்ஃபா அ…

  23. சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சர்ச்சைக்குரிய ஆய்வு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் அது எந்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னதாக இலங்கை நிராகரித்திருந்தது. இதனையடுத்து மாலைத்தீவு அதற்கு அனுமதி வழங்கியதுடன் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் அங்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பணியாளர்களின் சுழற்சி மற்றும் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்காக மாத்திரமே ஷியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பல் தங்களது கடற்பகுதியில் நங்கூரமிடவுள்ளதாகவும், இது எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாது எனவும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்ட…

  24. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜனவரி 22ஆம் தேதி நடக்கவுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், அமரேந்திர யார்லகட்டா பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அயோத்தியில் கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு இன்று நடக்கும் நிலையில் அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துறவிகள் மற்றும் விருந்தினர்கள் அயோத்திக்கு வந்தடைந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக தீர்த்த க்ஷேத்ர புரம் என்ற பெயரில் தற்காலிக நகரம் ஒன்றை அமைத்து கொடுத்துள்ளது ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை. இந்த தீர்த்த க்ஷேத்ர புரத்திற்கு வி…

  25. “அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிரதமர் மோடி செய்தது ‘மன்னர்கள்’ வேலை” - இளையராஜா சென்னை: “இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள். என்னென்ன செய்தார்கள் என்று பாருங்கள். அதில் யார் செய்தது அதிகம் என்று எண்ணிப் பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... அதை சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது” என்று இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா புகழாரம் சூட்டியுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபா அரங்கில் ‘சென்னையில் அயோத்தி’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் பேசிய இளையராஜா, “இன்றைய நாள் சரித்திரத்தில் முக்கியமான நாள். ராமர் கோயில் நிகழ்வு பிரதமர் மோடி…

    • 2 replies
    • 340 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.