Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனந்த் பிரகாஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை புது டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரையிலான நாடுகளின் தலைவர்கள் இதை ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர். இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, பிபிசி செய்தியாளர் 2 அக்டோபர் 2023, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்துவரும் சீன கடற்படையின் ஆதிக்கமும் செயல்பாடுகளும் இந்திய அரசுக்கும் பாதுகாப்பு நிபுணர்களுக்கும் கவலைக்குரியதாகவும் விவாதத்துக்கு உரியதாகவும் உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும்நிலையில், கடந்த மூன்று ஆண்டு…

  3. பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு – 50 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானின் Balochistan மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Balochistan Mastung மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு அருகில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த நிலையிலேயே இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த குண்டு வெடிப்புக்கு இதுவரையில் யாரும் பெறுப்பேற்காத நிலையில், பாகிஸ்தான் தலிபான் (TTP) அமைப்பு தங்களுக்கும் இந்த வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என குறிப்பிட்…

  4. பட மூலாதாரம்,X/CMPRACHANDA படக்குறிப்பு, சீனா - நேபாளம் இடையேயான ரயில்வே திட்டத்தை தனது பதவிக் காலத்தில் தொடங்க முடியும் என்று பிரசந்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா ஏழு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். சீனப் பிரதமர் லீ சியாங்கின் அழைப்பின் பேரில் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், செப்டம்பர் 23 ஆம் தேதி, தலைநகர் பெய்ஜிங் சென்றடைந்தார். செப்டம்பர் 30 வரை பிரசந்தாவின் சீனப் பயணம் தொடரும். நேபாளத்தின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு பிரசந்தா சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். முன்னதாக அவர் இந்த ஆண்டு மே 31 முதல் ஜூன் 3 வரை இ…

  5. 23 SEP, 2023 | 09:42 AM (ஆர்.சேதுராமன்) சீனாவில் இன்று ஆரம்­ப­மாகும் 19 ஆவது ஆசிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­ற­வி­ருந்த இந்­திய வீராங்­க­னைகள் மூவ­ருக்கு, அனு­மதி அட்­டையை வழங்க சீனா மறுத்­துள்­ளது. இதற்கு கடும் ஆட்­சேபம் தெரி­வித்­துள்ள இந்­திய அரசு, தனது விளை­யாட்­டுத்­துறை அமைச்­சரின் சீன விஜ­யத்தை இரத்துச் செய்­துள்­ளது. அரு­ணாச்­சலப் பிர­தேச மாநி­லத்தைச் சேர்ந்த, 'வூசு' தற்­காப்புக் கலை வீராங்­க­னைகள் மூவ­ருக்கே அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது. இவர்கள் தமது அனு­மதி அட்­டையை தர­வி­றக்கம் செய்­து­கொள்ள முடி­ய­வில்லை. இந்த அனு­மதி அட்­டையே ஆசிய விளை­யாட்டு விழா­வுக்­காக சீனா­வுக்குச் செல்­வ­தற்­கான விசா­வாக…

  6. மும்பையின் தென்பகுதியில் 14 வயதான மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்துவந்திருக்கிறார். அவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகாலை 2 மணிக்கு தனது வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் மகளை பக்கத்தில் தேடிப் பார்த்துவிட்டு காணவில்லை என்று கூறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸார் கடத்தல் வழக்கு பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காணாமல் போன சிறுமி உறவினர் ஒருவர் வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே சிறுமியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தபோது அவர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. இவ் வழக்கை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர், “ சிறுமியிடம் விச…

  7. நிலவைத் தொட்ட நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா ''India is on the MOON'' - இஸ்ரோ தலைவர் சோம்நாத் உற்சாகம். 21 mins ago நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது சந்திரயான் 3! சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கி சாதனைப் படைத்துள்ளது இந்தியா. ஏற்கெனவே இதே இடத்தில் சந்திரயான் 2-வைத் தரையிறக்க முயன்று அது தோல்வி அடைந்த நிலையில், தற்போது மீண்டும் அதை முயன்று வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர் இந்திய விஞ்ஞானிகள்! சந்திரயான் 3 Live Updates: நாடெங்கும் உற்சாகம்; விஞ்ஞானிகள் கொண…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், திலீப் குமார் ஷர்மா பதவி, கெளஹாத்தியில் இருந்து பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன. நதி முற்றிலும் வறண்டு கிடப்பதையும் பலமுறை பார்க்க முடிகிறது. கிழக்கு சியாங் மாவட்டத்தின் மெபோ தாலுகாவில் வசிக்கும் டாக்டர் டாங்கி பர்மா, சிறுவயதிலிருந்தே…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது மொத்தம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. 16 செப்டெம்பர் 2023, 10:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது மொத்தம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன. அவை அந்நாட்டின் முக்கிய இராணுவ தளங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத கையிருப்பைத் தொடர்ந்து அதிகரித்தால், 2025-ம் ஆண்டுக்குள் அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும். செப்டம்பர் 11 ஆம் தேதியன்ற…

  10. கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை monishaSep 16, 2023 09:08AM கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், அவர்களில் 122 பேர் அதிக ஆபத்தான பிரிவில் இருப்பதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களில் 29 பேர் மலப்புறம், கண்ணூர், திரிசூர் மற்றும் வயநாடு என மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நிபா வைரஸ் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர…

  11. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்திய ராணுவம் அனந்த்நாக்கில் புதன்கிழமையன்று கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர் பதவி, பிபிசி உருது செய்தியாளர், ஸ்ரீநகரில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அழகிய சுற்றுலாத் தலமான கோகர்நாக்கில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் ஒரு கர்னல், ஒரு மேஜர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் டிஎஸ்பி ஆகியோர் கொல்லப்பட்டனர். …

  12. பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி பாராட்டு! இந்திய பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டாக்கில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார மன்றத்தின் 8ஆம் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது” ரஷ்யாவிடம் இதற்குமுன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கார்கள் இல்லை ஆனால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து ரஷ்யா இறக்குமதி செய்த மெர்சிடிஸ், அவுடி கார்களை விட அவை மிகவும் சிறப்பானவையாக இருக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படும்…

  13. சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாண தமிழர்! சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் யாழ்ப்பாணம் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுட…

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 அன்று அவரது நினைவு தினம், ஆப்கானிஸ்தான் முழுவதும் 'மசூத் தினமாக' கொண்டாடப்பட்டு வந்தது கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 10 செப்டெம்பர் 2023, 04:40 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஒரு பயணி வந்திறங்கியிருந்தால், முதலில் அவருடைய கண்ணில் படுவது அஹ்மத் ஷா மசூத்தின் பெரிய போஸ்டராகத்தான் இருக்கும். இதுமட்டுமின்றி, காபூலின் முக்கிய போக்குவரத்து வட்டத்திற்…

  15. பட மூலாதாரம்,SHEIKH ZAYED MEDICAL COLLEGE படக்குறிப்பு, குழந்தை ஷாஜியாவின் வயிற்றுக்குள் இருந்தது அவரின் இரட்டை கரு கட்டுரை தகவல் எழுதியவர், சுபைர் அசாம் & அகமது கவாஜா பதவி, பிபிசி உலக சேவை 9 செப்டெம்பர் 2023, 07:55 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை : இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்கள் உங்களை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கலாம். 10 மாத குழந்தையான ஷாஜியாவின் வயிற்றில் சந்தேகத்திற்குரிய நீர்க்கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் முஸ்தக் அகமது அவளின் வயிற்றுக்குள் இருந்த பாதியே வளர்ச்சி பெற…

  16. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சந்தீப் ராய் பதவி, பிபிசி செய்தியாளர் 3 செப்டெம்பர் 2023, 07:12 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மும்பையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மூன்றாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அதே நாளில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இதற்கு ஒரு நாள் முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதாக மத்திய அரசு அறிவித்தது, ஆனால் நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்து அரசு …

  17. உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும், ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெற உள்ளது. டெல்லியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் அந்த மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட, 18 தொன் எடையிலான பிரமாண்ட நடராஜர் சிலை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாரத் மண்டபத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நடராஜர் சிலை, உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சோழர்களின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமி மலை எனும் பகுதியில் தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. வெ…

  18. 30 AUG, 2023 | 10:59 AM அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. லடாக்கில் குறிப்பிட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில், அருணாச்சலப்பிரதேசத்தில் கிழக்கில் பல சதுர கிலோ மீட்டர் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் அத்துமீறலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது புதிய வரைபடம் ஒன்றை சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஆக்கிரமித்த இந்தியப் பகுதிகளை ‘அக்ஷ்யா சின்’ என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சல பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் என்றும், தைவானையும் தம்முடைய நிலப் பகுதி என்றும் வரைபடத்தில் சீனா குறிப்ப…

  19. பட மூலாதாரம்,YOUYU COUNTY POLICE RELEASE கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீஃபன் மெக்டோன்னெல் மற்றும் ஃபேன் வாங் பதவி, பிபிசி செய்தியாளர்கள் 5 செப்டெம்பர் 2023 புதுப்பிக்கப்பட்டது 6 செப்டெம்பர் 2023 உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதியைச் சில கட்டுமானப் பணியாளர்கள் கடுமையாகச் சேதப்படுத்தியிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சீனாவின் மத்திய ஷாங்சி மாகாணத்தில் கட்டுமானப் பணியாளர்களால் சீனாவின் பெரிய சுவரின் ஒரு பகுதி கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்கவேட்டர் எனப்படும் பூமியைத் தோண்டப் பயன்படுத்தும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட…

  20. பட மூலாதாரம்,TWITTER@DPRADHANBJP 5 செப்டெம்பர் 2023, 13:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜி20 மாநாடு தொடர்பாக அனுப்பியுள்ள இரவு உணவு அழைப்பிதழ் ஒன்று தொடர்பாக செவ்வாய்க்கிழமை அரசியல் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. அந்த அழைப்புக் கடிதத்தில், 'பாரத்’தின் ஜனாதிபதி' (President of Bharat) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'இந்தியா' என்ற வார்த்தையை நாட்டின் பெயராகப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தற்போது அதை 'பாரத்' என்று மட்டுமே அழைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகினறன. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ் பதவி, பிபிசி தெலுகுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உணவகங்களுக்கு மதிப்புரை எழுதினால் பணம் தருவதாகக் கூறி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கும் சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதுவரை இந்த மோசடியில் சுமார் நூறு பேர் பல கோடி ரூபாயை இழந்திருப்பதாக விசாகப்பட்டினம் போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த போதெல்லாம…

  22. Published By: SETHU 03 SEP, 2023 | 04:53 PM இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தின் காக்­ராபர் அணு மின் நிலை­யம் முற்­றிலும் உள்­நாட்டில் மேம்­ப­டுத்­தப்­பட்ட 3 ஆவது அலகு மின் உலை முழு உற்­பத்தித் திறனை எட்­டி­யமை தொடர்பில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பாராட்டு தெரி­வித்­துள்ளார். 'எக்ஸ்' வலை­தள (முன்னர் டுவிட்டர்) பக்­கத்தில் பிர­தமர் மோடி வெளி­யிட்ட பதிவில், 'இந்­தியா மற்­று­மொரு மைல்­கல்லை எட்­டி­யுள்­ளது. முதல் உள்­நாட்டு அணு மின் உலை­யான 700 மெகாவாட் மின் உற்­பத்தித் திறன் கொண்ட காக்­ராபர் அணு மின் நிலை­யத்தின் 3ஆவது அலகு முழு உற்­பத்தித் திறனை எட்­டி­யுள்­ளது. அதற்­காக விஞ்­ஞா­னிகள் மற்றும் பொறி­யி­ய­லா­ளர்­க­ளுக்கு பாராட்­ட…

  23. `நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானதாக இருந்தால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள்' - ஈஷா யோக மையம்! ஈஷா கட்டிடங்கள் அங்கீகரிக்கப்பட்ட யானை வழித்தடத்தில் கட்டப்படவில்லேயே தவிர அப்பகுதி 'யானைகள் வாழுமிடம்' என்று வனத்துறை உறுதியளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் பல ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஈஷா யோகா மையத்தின் கட்டடங்கள் சட்டத்துக்கு புறம்பாகவும், யானைகளின் வழித்தடத்திலும் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுகின்றன. ஈஷா யோகா மையத்திற்கு சொந்தமான நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ஈஷா யோகா மையத்த…

  24. 01 SEP, 2023 | 12:19 PM புதுடெல்லி: அதானி குழும நிறுவன பங்குகளில் குடும்பத்தினரே ரகசியமாக முதலீடு செய்ததாக ஓசிசிஆர்பி அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. கவுதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளாக மளமவென உயர்ந்தன. இதன்மூலம் கவுதம் அதானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம், தனது நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நிறுவன கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளதாகவு…

  25. ஜி-20 மாநாட்டைப் புறக்கணிக்கும் உலகத் தலைவர்கள்: மோடிக்கு பின்னடைவா? SelvamSep 01, 2023 07:56AM இந்தியாவில் செப்டம்பர் 9 -10 தேதிகளில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் ரஷ்ய அதிபரைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பேசுப்பொருளாக மாறியுள்ளது; இந்தியப் பிரதமர் மோடிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இதில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குழுவினரும் இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். டெல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.