Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,RESCUE 1122 30 ஜூலை 2023, 14:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F) என்ற கட்சி இந்தப் பொதுக் கூட்டத்தை நடத்தியது. அந்த இடத்தை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துள்ளனர். அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு எதனால் நிகழ்ந்தது என்று பாதுகாப்புப் படைகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. அங்கே மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. காயமட…

  2. 28 JUL, 2023 | 12:51 PM புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. அதன்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வர…

  3. இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா பிரேரனையை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன. கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது. இந்தக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், மத்திய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக நா…

  4. ஆற்றில் மிதக்கும் சாமி சிலைகள் இந்தியாவின் பல்நாடு மாவட்டம் அச்சம்பேட்டை அம்பதிப்புடி கிருஷ்ணா நதிக்கு அப்பகுதி சேர்ந்த சிலர் நேற்று சென்றிருந்த போது ஆற்றின் கரையோரம் பழங்கால சாமி கற்சிலைகள் இருப்பதை கண்டுள்னர். ஆற்றில் கிடைக்கப்பெற்ற விஷ்ணு , சிவலிங்கம் , மற்றும் இரண்டு நந்தி சிலைகள் என்பவற்றை எடுத்து சென்றுள்ளனர். அதேபோல , சீதா நகரம் என்ற கிராமத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் நாக தேவதையின் கற்சிலை குவியல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்திற்கு சென்ற தொல்லியல் நிபுணர்கள் 50ற்கும் மேற்பட்ட நாக தேவதை சிலைகளை இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இவை , எந்த நூற்றாணடை சேர்ந்தவை என்ற ஆய்வினை நடத்தி வருகின்றனர். ஆற்று வெள்ளத்தில் ச…

  5. இரண்டே நாட்களில் 718 பேர் மியான்மரில் இருந்து மணிப்பூர் வந்தது எப்படி? - அசாம் ரைஃபில்ஸ் படையிடம் விளக்கம் கோரிய மாநில அரசு 25 Jul, 2023 | 10:21 AM மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ் படையிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கோரியுள்ளது. ஜூலை 23 மற்று 24 தேதிகளில் 301 குழந்தைகள் உள்பட 718 பேர் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளனர். முறையான விசா மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இத்தனை பேர் எப்படி நுழைந்தனர் என்று அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலர் வினீத் ஜோஷி இது தொ…

  6. மிகப்பெரிய வீதி வலையமைப்பைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைச்சுக்களும் தம்மால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து திட்டங்களை திட்டமிடப்பட்ட காலத்திற்குள் விரைவாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி ரஷ்யா மற்றும் ஈரானுடன் இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்கும் 7,200 கி.மீ. சர்வதேச வடக்கு தெற்கு போக்குவரத்து திட்டம் மற்றும் 1,400-கி.மீ. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை உள்ளிட்ட பிற மெகா சர்வதேச திட்டங்களை விரைவில் முடிக்கவும் அழுத்தம் கொடுத்துள்ளது. உலகின் அடுத்த தொழிற்சாலையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளு…

    • 1 reply
    • 658 views
  7. 22 JUL, 2023 | 10:37 AM கொரோனா பரவலுக்கு பிறகு இளைஞா்களிடையே மாரடைப்பால் ஏற்படும் திடீா் மரணங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக மக்களவையில், இந்திய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கூட மாரடைப்பு அதிகமாக ஏற்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு இது போன்ற இள வயது மாரடைப்புகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞா்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடா்பாக மக்களவையில் எழுத்துமூலமாக …

  8. மணிப்பூரில் கொடூரம்: நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட பெண்கள்! Jul 20, 2023 08:44AM IST ஷேர் செய்ய : மணிப்பூர் மாநிலத்தில் குகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் மே 3-ஆம் தேதி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது இரண்டு சமூக மக்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு கலவரம் நடைபெற்று வருகிறது. இந்த வன்முறையில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மணிப்பூர்மாநிலத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இந்தநிலையில் குகி சமுதாயத்தை ச…

  9. Oommen Chandy: இளம் வயதில் Politics; ஒரே தொகுதிக்கு 50+ Years Service. மூத்த அரசியல்வாதி மறைந்தார்.

  10. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக யுவானை மிஞ்சுமா இந்திய ரூபாய் ? இந்திய ரூபாயில் வர்த்தகத்தை அனுமதிக்கும் வகையில் வொஸ்ட்ரோ ரூபாய் கணக்குகளை தொடங்க 18 நாடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. சீனா ஏற்கனவே யுவானை உலகமயமாக்கும் போட்டியில் இறங்கியுள்ள நிலையில் அவர்களுடன் ஒப்பிடும் போது ரூபாயை சர்வதேசமயமாக்குவதில் இந்தியாவிற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. ரூபாயை சர்வதேசமயமாக்கும் நடவடிக்கையானது, ரஷ்யா அல்லது பிற நாடுகளின் மீதான அமெரிக்கத் தடைகளுடன் தொடர்புடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக மட்டும் அல்லாமல் ரூபாய் மற்றும் ரூபள் செலுத்தும் அமைப்பு ஒரு நீண்ட கால நடவடிக்கையாக பார்ப்பதாக பிரதமருக்கான பொருள…

  11. சாமானியர்கள் முதல் கால்நடைகள் வரை கடும் சிரமம் - என்ன நடக்கிறது? 45 ஆண்டுகளில் இல்லாத அளவு யமுனாவில் வெள்ளம்.

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அனில் அம்பானி கட்டுரை தகவல் எழுதியவர், தினேஷ் உப்ரெட்டி பதவி, பிபிசி செய்தியாளர் 12 ஜூலை 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி 2 நாள் பயணமாக பிரான்ஸுக்கு நாளை செல்கிறார். பிரான்ஸின் தேசிய அணிவகுப்பில் தலைமை விருந்தினராக அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய கடற்படைக்காக ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது உள்ளிட்ட மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்தை அவர் இந்த பயணத்தின் போது உறுதி செய்வார் என்று பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. அதே நிறுவனத்திடம் இருந்துதான…

  13. ஆடுகளைப் பலியெடுத்த புகையிரதத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் ஆடுகளைப் பலியெடுத்த ‘வந்தே பாரத்‘ புகையிரதத்தின் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று கோரக்பூரில் இருந்து லக்னோ நோக்கிப் பயணித்த வந்தே பாரத் புகையிரதத்தின் மீது சொஹாவால் பகுதியில் வைத்து சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் புகையிரதத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தாக்குதல் தொடர்பாக பொலிஸார் நன்னு பஸ்வான், அவரது மகன்கள் அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் பொலிஸார் நடத்திய வி…

  14. பட மூலாதாரம்,SHAHNAWAZAHMAD/BBC படக்குறிப்பு, 'ராதே ராதே' என்ற சொற்களுடன் கூடிய துப்பட்டாவை அணிந்துள்ள சீமா குலாம் ஹைதர் கட்டுரை தகவல் எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி நியூஸ் 26 நிமிடங்களுக்கு முன்னர் 'கையில் சிவப்பு வளையல், நெற்றியில் குங்கும பொட்டு வைத்து, கழுத்தில் ராதே ராதே என்ற சொற்கள் அடங்கிய துப்பட்டா மற்றும் மந்திர சொற்கள் அடங்கிய பாசியை அணிந்திருக்கிறார் அந்தப் பெண். செய்தியாளர்கள், கேமராக்கள் மற்றும் மைக்குகளால் சூழப்பட்ட சீமா குலாம் ஹைதர் தனது இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் இருந்து செய்தியாளர்களின் அனைத்து கேள்விகளுக்கும் நம்பிக்கையுடன் பத…

  15. Published By: DIGITAL DESK 3 11 JUL, 2023 | 10:05 AM இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் ஓடிவி என்ற தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் லிசா என்ற மெய்நிகர் செயற்கை செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது. அச்சு அசலான இளம்பெண் வடிவத்தில் தோற்றமளிக்கும் அந்த செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர், ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. தலைநகர் புவனேஸ்வரில் இதற்கான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. தொலைக்காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஓடிவி நிறுவனம், அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டும், காலத்தின் தேவைக்கு ஏற்பவும் இந்த …

  16. கிழக்கு லடாக் பகுதியில் வீரர்கள் போர் பயிற்சி - பீரங்கிகள், கவச வாகனங்கள் குவிப்பு 09 Jul, 2023 | 11:27 AM லடாக் எல்லையில் இந்தியா மீண்டும் ஆயுதங்களை குவித்து வருகின்றது கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்து மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை இந்திய வீர்ர்கள் முறியடித்தனர்.அதன் பிறகு அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பும் ராணுவத்தையும் போர் தளவாடங்களையும் குவித்தன. அதன் பிறகு இருதரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் இருதரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டன. எனினும், வரும் காலத்தில் கிழக்கு லடாக் எல்லை பகுதியில் அவசரநிலை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்…

  17. இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து : மூன்று ஊழியர்கள் கைது இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்னல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர், சிக்னல் பிரிவின் ஊழியர்களின் தவறை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி, மூவரின் செயல்கள் விபத்திற்கு வழிவகுத்தது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1338120

  18. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ராகுல் காந்திக்கும், 2024 தேர்தலுக்கு தயாராகி வரும் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த 2019-இல் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் ம…

  19. மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது,சிறுநீர் கழித்த அரசியல்வாதி மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினச் சிறுவன் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் மதுபோதையில், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், சித்தி தொகுதியின் பா.ஜ.க எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவரே குறித்த சிறுவனின் மீது சிறுநீர் கழித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், குறித்த நபர் அரசியல் பிரமுகர் என்பதால் அச்சத்தில் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த வீடியோவ…

  20. 50 நிமிடங்களுக்கு முன்னர் இன்று (ஜூலை 1) அதிகாலை மும்பை-நாக்பூர் சம்ரித்தி விரைவு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக புல்தானா காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் கடசனே தெரிவித்துள்ளார். விபத்தின்போது பேருந்தில் 33 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 25 பயணிகள் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளனர் மற்ற 8 பயணிகள் உயிர் பிழைத்தனர். விபத்துக்குள்ளான பேருந்து நாக்பூரில் இருந்து சம்ரிதி எக்ஸ்பிரஸ் வழியாக புனேவுக்கு வந்துகொண்டிருந்தபோது, புல்தானாவில் உள்ள சிந்த்கேதராஜா அருகே பேருந்தின் டயர் வெடித்தது. பேருந்தைக் கட்டுப்படுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அருகில் இரு…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்கை முறையில் இல்லாமல் செயற்கை முறையில் மருத்துவ உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறையே செயற்கை கருத்தரிப்பு என்றழைக்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி செய்தியாளர் 29 ஜூன் 2023, 03:24 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கைக் கருவூட்டல் முறையில் கணவரின் விந்தணுவுக்குப் பதிலாக வேறொருவரின் விந்தணுவைச் செலுத்தி ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததால் அது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தற்போது அது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. …

  22. பட மூலாதாரம்,LAXMI PATEL படக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த மங்கள்பாய் கட்டுரை தகவல் எழுதியவர்,லக்ஷ்மி படேல் பதவி,பிபிசி குஜராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நட்பு எவ்வளவு காலம் நீடித்தது என்பது முக்கியமில்லை. அந்த நட்பு எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்பதே உறவின் வலிமையை தீர்மானிக்கும். என்னுடைய நட்பு வெறும் 15 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஆனால், 15 ஆண்டுகள் பழகிய உணர்வைத் தந்தது." 15 நாள் பழகிய நண்பர் உயிரிழந்ததால், அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டி லட்சக்கணக்கான ரூபாயை திரட்டிக் கொடுத்த 27 வயதேயான கான்ஜி தேசாயின் வார்த்தைகள் இவை. குஜராத் மாநில…

  23. பயணிகள் முன்னிலையில் இயற்கை உபாதையைக் கழித்த நபரால் பரபரப்பு விமானத்தில் நபர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் மலம் மற்றும் சிறுநீரைக் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 ஆம் திகதி டெல்லி நோக்கி பயணித்த எயார் இந்தியா விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின் செயலைக் கண்டு சக பணிகள் புகார் அளித்துள்ள நிலையில் இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு , நியூயோர்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ப…

  24. பட மூலாதாரம்,BANKIM PATEL கட்டுரை தகவல் எழுதியவர்,ஜெய் சுக்லா பதவி,பிபிசி குஜராத்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் குஜராத்தில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல விரும்பும் நபர்கள் எப்படி அவதிக்குள்ளாகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி மாறியுள்ளனர். ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா செல்ல விரும்பிய ஆமதாபாத்தைச் சேர்ந்த தம்பதி ஈரானில் கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், குஜராத் அரசு, ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் காவல்துறையின் முயற்சியின் உதவியுடன், தம்பதியினர் இறுதியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் ஈரானில் இருந்து துருக்க…

  25. பட மூலாதாரம்,WILLIAM PINCH படக்குறிப்பு, ஏழ்மையான விதவை தாயால் ஒரு போர் வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட அனுப்கிரி கோசைன் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 25 ஜூன் 2023, 15:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்துக் கடவுளான சிவனிடம் பக்தி கொண்ட துறவியாகவோ, இந்தியாவில் புனித மனிதர்களாக மதிக்கப்படும் நாக சாதுக்களில் ஒருவராகவோ திகழ்ந்த அனுப்கிரி கோசன், போர்ப் படை தளபதியாகவும் விளங்கிய வரலாறு உள்ளது. துறவி என்பதை விட பயமுறுத்தும் போர்ப் படை தளபதியாகவே அவர் சித்தரிக்கப்படுகிறார். நிர்வாண போர் வீரர்களை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.