Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியாவில் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர் ; விசாரணை இந்தியாவில் 84 வயது நிரம்பிய முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பீகார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஓரை கிராமத்தை சேர்ந்த 84 வயதான முதலியவர் அஞ்சல் துறையில் வேலை செய்து ஒய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். மார்ச், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அடுத்தடுத்து இவர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார். பல முறை இவர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள…

  2. இந்தியாவில் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்! பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் ‘இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 இலட்சம் கோடி டொலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய 5 இலட்…

  3. இந்தியாவில் வருகிற 15-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் சேவைகளை தொடங்க தயாராக இருக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 04:15 AM புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரெயில் சேவை தவிர்த்து அனைத்து பயணிகள் ரெயிலும் வருகிற 14-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் 15-ந் தேதி முதல் பயணிகள் ரெயில் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் ரெயில்வே நிர்வாகம் இறங்கியுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு, செயல்பாடு உள்ளிட்ட துறைகளின் அனைத்து ஊழியர்கள், ரெயில்வே கார்டு…

  4. இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி தீர்மானம். இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி குறித்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் 328 மருந்துகளுக்கு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397047

  5. இந்தியாவில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை; வைக்கோல் எரிக்கவும் கட்டுப்பாடு -சி.எல்.சிசில்- நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைதலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சிகரெட் பக்கெட்டுகள் முதல் பிளாஸ்டிக் போத்தல்கள் வரை மட்டுமின்றி வைக்கோல் எரிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலுள்ள விவசாயிகள் தங்கள் விளைச்சலை அதிகரிக்க பெரிய அளவில் வைக்கோலை எரித்து வருகின்றனர், இது நாட்டில் காற்று மாசை ஏற்படுத்துகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோட…

  6. உலகம் முழுவதும் வாழும்இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இந்தியர்கள் தங்களது அடையாளத்தை நிலைநாட்டி வருகின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிக்காக பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாராளமாக நிதியுதவி வழங்கினர். உங்களது பங்களிப்பால் நாட்டின் சுகாதார துறை சேவைகள் மேம்பட்டுள்ளன. உலகின் பல்வேறு மூலைகளில் நாம் வாழ்ந்தாலும் இணையம் வாயிலாக இணைந்துள்ளோம். நமது உள்ளம் பாரத மாதாவுடன் ஒன்றிணைந்துள்ளது.உலகளாவிய அளவில் தேநீர் முதல்ஜவுளி வரை பல்வேறு துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கிறது. மருத்துவ துறையிலும் இந்தியா சிறப்பாக சேவையாற்றி வருகிறது. …

    • 0 replies
    • 313 views
  7. 28 JUL, 2023 | 12:51 PM புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பிள்ளைகள் காணாமல் போனதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau, சுருக்கமாக: NCRB), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் ஆகியவற்றால் வரையறுக்கப்பட்ட குற்றப் புள்ளிவிவரங்களை சேகரித்து வெளியிடுகிறது. அதன்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வர…

  8. இந்தியாவில் 2021ம் ஆண்டில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும்! அதிர்ச்சி தகவல் இந்தியாவில் தடுப்பு மருந்து இல்லாத நிலையில் 2021ம் ஆண்டு இறுதியில் ஒரே நாளில் 2.87 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்படும் என ஆய்வொன்று தெரிவிக்கின்றது. பதிவு: ஜூலை 08, 2020 17:14 PM புதுடெல்லி, உலக அளவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.19 கோடியாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோன்று, இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமுடன் அதிகரித்து வருகிறது. 6 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு 5 நாட்களில் 7 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் முதல் 1 லட்சம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்க கொரோனா 110 நாட்கள் எடுத்து கொண்டது…

  9. இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில…

  10. இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம் ஜம்மு, கர்நாடகாவில் பெங்ளூர், பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள…

  11. Published By: RAJEEBAN 04 APR, 2023 | 10:16 AM இந்தியாவில்66.9 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை விற்பனைக்கு வைத்தது தொடர்பாக 3 வங்கிகள் உட்பட 11 நிறுவனங்களுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 16.8 கோடி பேரின் தனிப்பட்ட விவரங்களை சில நிறுவனங்கள் மூலம் சேகரித்துஇ அவற்றை சிலர் விற்பனை செய்ய முன்வந்த தகவல் தெரிய வந்தது. இது தொடர்பாக சைபராபாத் போலீஸார் 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வங்கிகளில் கடன் வாங்க விண்ணப்பித்தோர் தனியார் வாகன பதிவு காப்பீடுக்காக விண்ணப்பித்தோர் ஆன்லைனில் பொருட்கள் வாங்க முழு விவரங்களை வழங்கியோர் டிஜிட்டல் பணப் பரிவர்தனை செய் வோர…

  12. இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 186 views
  13. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஆதரவுக் கரம் நீட்டும் உலக நாடுகள் 27 Views இந்தியாவில் தினந்தோறும் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியில் ஓஜ்சிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா,அமெரிக்கா,சீனா மற்றும் ரஷ்சியா போன்ற நாடுகள் உதவ முன்வந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தீவிரமாகியுள்ளமை குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்திய அரசு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை விரை…

  14. இந்தியாவில் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆண் குழந்தைகளைவிட 38% அதிக பெண் குழந்தைகள்: பெண் தெய்வங்களின் நாட்டில் ஏன் இந்நிலை? அர்ஜுன் பார்மர் பிபிசி குஜராத்தி 14 நவம்பர் 2021, 11:46 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண் குழந்தைகள் இன்று (நவம்பர் 14) இந்தியா "குழந்தைகள் தினத்தை" கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று சூரத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அக்குழந்தை அக்டோபர் 28ம் தேதி சூரத்தில் பெஸ்தான் என்கிற பகுதியில் உள்ள குப்பை கிடங்…

  15. இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மற்றுமொறு குழந்தை- மீட்கும் பணி தீவிரம் உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்கும் பணியினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2021/1222553

  16. இந்தியாவில் இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் அமைச்சின் கீழ் வந்தன! இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் முதற்கட்டமாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இணையத் தளங்களைக் கொண்டுவருவதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, நெற்பிளிக்ஸ், சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், ருவிற்றர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவையும் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதேவேளை, உள்ளூர் ஊடகங்கள் போல் இணைய ஊடகங்களின் ஒழுங்குமுறையை விவரிக்கும் சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் என இணைய சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்னணு ஊடகங்கள் 1995 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒழுங்குமுறை சட்டத…

  17. இந்தியாவில் இத்தனை படித்த பிச்சைக்காரர்களா ? டெல்லி: இந்தியாவில் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எத்தனை பேர் படித்தவர்கள் என்ற விவரம் சென்செக்ஸ் கணக்கின் மூலம் வெளியாகி உள்ளது.இந்தியாவில் சகஜமாக எல்லோரும் பார்க்க கூடியது சாலையோர பிச்சைக்காரர்களைத்தான். ஜாதி, மதம், மொழி என்று பிரிந்து இருந்தாலும், எல்லா மாநிலத்திலும் பிச்சைக்காரர்கள் காணக்கிடைப்பார்கள்.பிச்சைக்காரன் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் படித்துவிட்டு ஆங்கிலம் பேசுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும், அது முழுக்க முழுக்க உண்மை என்று 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய சென்செக்ஸ் கணக்கு நிரூபித்து இருக்கிறது. ஆம், இந்தியாவில் அந்த அளவிற்கு படித்த பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். மொத்தம் எத்த…

  18. இந்தியாவில் இயக்கப்படும் முதல் ஹைட்ரஜன் ரயில்! இந்திய ரயில்வே திணைக்களம் ,அதன் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாறுபாட்டை ஏற்படுத்தும் வகையில், ஹைட்ரஜனால் இயங்கும் முதல் ரயிலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கத் தொடங்கும் எனவும், இதன் மூலம், கார்பன் வெளியேற்றத்தை குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தில் இந்தியா முன்னேற்றம் அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில்கள் இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் ஒரு முக்கிய கட்டமாக விளங்குகிறது. நிலையான போக்குவரத்து, கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், தூய்மையான எரிசக்தி ஆதாரங்களைப் பயன…

  19. அசாம், மிசோரம் இடையே ஏற்பட்ட எல்லைத் தகராறில் இரு மாநிலத்தவருக்கும் நடந்த மோதலில் அசாம் போலீஸார் 6 பேர் உயிரிழந்தனர், காவல் கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். போலீஸாரால் ஏற்பட்ட வன்முறைக்கு இரு முதல்வர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மிசாரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோருடன் பேசி சமாதானம் செய்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கி…

  20. இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70 வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்.! டெல்லி: ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருக்கிறது அதை ஹரியானா மாநிலத்திற்கே மோடி ஆகிய நான் கொண்டுவருவேன் என ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் …

  21. இந்தியாவில் இருந்து... டுபாய்க்கு, செல்லும் விமானங்களுக்கு தடை! இந்தியாவில் இருந்து டுபாய்க்கு செல்லும் பயணிகள் விமானங்களுக்கு ஜுன் மாதம் 30 ஆம் திகதிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக ஏப்ரல் 24 முதல் பயணிகள் விமானங்களை அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 14 நாட்களாக இந்தியா வழியாக பயணம் செய்த பயணிகள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட் கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள், தூதரக பணி உறுப்பினர்கள் கொவிட் நெறிமுறைகளுக்கு இணங்க பயணிக்கலாம…

  22. இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ள சீனா, மாசுபட்ட தண்ணீரால் வுகான் வரை பரவியதாக கூறியுள்ளது. இந்த நிலையில், சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட…

  23. இந்தியாவில் இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்கும் ராஜஸ்தான் இளைஞன் இந்தியாவில் மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெறவுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள மானசரோவர் பகுதியைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் (21 வயது), தனது ஐந்து ஆண்டு சட்டப்படிப்பை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நடந்த நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், அதிலும் தேர்ச்சிபெற்றார். இந்நிலையில் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இதனூடாக அவர், இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதி ஆனவர் எனும் சிறப்பையும் பெறவுள்ளார். நீதிபதி ஆவதற்கு குறைந்தபட்ச வரம்பாக இருந்த 23 வயதை …

  24. இந்தியாவில் உச்சம்... 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 195 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 195 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் நேற்று மட்டும் 195 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவில் மொத்தம் 583…

  25. மதமாவது ? மொழியாவது ? இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் !! அதிரடி ஆர்.எஸ்.எஸ். !! தெலுங்கானா மாநிலம் இப்ராகிம்பட்டினத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டு நாள் ‘விஜய சங்கல்ப சிபிரம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் , . “இந்தியா பாரம்பரியமாகவே ‘இந்துத்துவா’ நாடுதான்; அதனடிப்படையில் நாட்டின் 130 கோடி மக்களையும், அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ‘இந்து சமூகம்’ என்றே ஆர்எஸ்எஸ் கருதுகிறது” என்று கூறினார். “ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒருவரை, ‘இந்து’ என்று அழைக்கும் போது, இந்தியாவை தங்கள் தாய்நாடாக கருதி அதை நேசிப்பவர்கள் என்றே அர்த்தம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பாரதத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.