Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாலியல் தொழில் பற்றி உச்ச நீதிமன்றம்: 'வயதுவந்த, சுய ஒப்புதலோடு இதில் ஈடுபடுவோர் மீது குற்ற நடவடிக்கை கூடாது' சுசித்ரா கே.மொகந்தி பிபிசி செய்திகளுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வயதுவந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது, அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்படவேண்டும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. 2011ம் ஆண்டு கொல்கத்தாவில் பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்…

  2. கோதுமை ஏற்றுமதி மீதான... தடையை நீக்க, இந்தியாவிடம் வேண்டுகோள்! கோதுமையின் ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவிடம் சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டி இந்தியா எடுத்த இந்த முடிவை பாராட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283727

  3. https://www.facebook.com/100079744693894/videos/710579476817197 பிரதமர் மோடியை... கண்டு கொள்ளாத , அமெரிக்க ஜனாதிபதி.

  4. இந்தியா உள்ளிட்ட... 16 நாடுகளுக்கு, செல்ல தடை இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை வித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி அறிமுகத்திற்கு வந்த பிறகு கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாக உயர்ந்து வர்கிறது. இதையடுத்து சவுதி அரேபிய மக்கள் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா, லெபன…

  5. காங்கிரஸ் கட்சியை, வலுப்படுத்த வருமாறு... நிர்வாகிகளுக்கு, சோனியா காந்தி அழைப்பு. கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கிய நிலையில் அங்கு உரையாற்றிய போதே சோனியா காந்தி இந்த கோரிக்கையை விடுத்தார். கட்சி நிர்வாகிகள் தனிப்பட்ட லட்சியங்களுக்கும் மேலாக கட்சி அமைப்பை வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கட்சியில் மாற்றங்கள் செய்யவேண்டியது காலத்தின் தேவை என்று குறிப்பிட்ட சோனியா காந்தி, இதற்கு செயன்முறையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். https://athavannews…

  6. பெட்ரோல் ரூ. 9.50, டீசல் ரூ.7, சிலிண்டர் ரூ.200 வரை குறைந்தது - நரேந்திர மோதி அரசின் புதிய அறிவிப்புகள் - பின்னணி என்ன? 21 மே 2022, 14:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்த பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் இந்த அறிவிப்பு சாத்தியமாகியிருக்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான மாநில அளவிலான மதிப்புக் கூட்டு வ…

  7. அசாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை கொல்லும் காளான்கள் - என்ன நடக்கிறது? திலீப் ஷர்மா மற்றும் சோயா மாதீன் அசாம், டெல்லி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 8ஆம் தேதி, அஞ்சலி காரியா தனது மகளுடன் இரவு உணவை உண்ண உட்காரும்போது, அதுதான் அவளுடன் உண்ண போகும் கடைசி உணவை என அவருக்கு தெரியவில்லை. அசாம் மாநிலத்தின் சபதோலி கிராமத்தில் நீண்ட நேர வேலைக்கு பிறகு, மலைகளில் உள்ள வளைவுகளை கடந்து, தனது வீட்டிற்கு சென்றார். பின், சாப்பிட்டு, உறங்கி விட்டார். அன்று அதிகாலை மூன்று மணிக்கு, தனது ஆறு வயது மகள் சுஷ்மிதா வாந்தி எடுக்கும் சத்தத்தில் எழுந்தார். பிறகு, சுஷ்மித…

  8. ஹைதராபாத் என்கவுன்டர் 'போலி': உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆணையம் அறிக்கை - முழு விவரம் 20 மே 2022, 12:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த பாலியல் வல்லுறவு சம்பவத்தில் சந்தேக நபர்களாகக் கைது செய்யப்பட்ட நான்கு பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு போலியான நடவடிக்கை என்று அது தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை பதிவு செய்து கொண்டது. அந்த அறிக்கையை சீலிட்ட கவரிலேயே வைத்திருக்க வேண்டும் என்று தெலங்கான அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் விடுத்…

  9. மாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காற்று மாசுபாடு வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும் என்பதை அண்மையில் வெளியான லான்செட் அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 16 லட்சம் காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசு…

  10. தேவசகாயம்: புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் முதல் தமிழர் - 1700களில் கிறிஸ்துவத்துக்கு மதம் மாறியதால் கொல்லப்பட்டவர் மரிய மைக்கேல் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,அமலகிரி எழில் படக்குறிப்பு, புனிதராக உயர்த்தப்படும் தேவசகாயம் இந்தியாவில் முதல் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட தேவசகாயம், மே மாதம் 15ஆம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு இந்த நிகழ்வு வத்திக்கானின் செயின்ட் பீட்டர் பசிலிக்காவில் நடைபெறுகிறது. இதுவரை புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித அல்போன்சாள், புனித அன்னை தெரசா…

  11. ரஷ்யா – உக்ரைன் போர்... இந்தியாவிற்கு, ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது – நிர்மலா சீதாராமன் ரஷ்யா – உக்ரைன் போர் இந்தியாவிற்கு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆகவே இது போன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஏற்றுமதியாளர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், தோல் பொருட்கள் மட்டுமில்லாமல் துணி மற்றும் சிப் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த முறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கவ…

    • 3 replies
    • 271 views
  12. டெல்லியில்... பயங்கர தீ விபத்து : 27 பேர் பலி, 40 பேர் வைத்தியசாலையில் ! இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் புகையிரத நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை அடுத்து ஏற்பட்ட இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த சுமார் 24 தீயணைப்பு குழுவினர் நடவடிக்கை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டட…

  13. இந்திய எல்லைப் பகுதியில்... யார் அத்துமீறினாலும், பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார். இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது, இப்போது... உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். https://athavan…

    • 3 replies
    • 274 views
  14. இந்தியாவில்... எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுமாறு, ஜெர்மன் நிறுவனங்களிடம் கோரிக்கை! இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அழைப்பு விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிரீன் ஹைட்ரஜன், கிரீன் அமோனியா மற்றும் பேட்டரி சேமிப்பில் சொந்த தேவையையும் உலகத் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியா உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடல் காற்றில் இருந்து 30 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதிக திறன் கொண்ட 50 ஆயிரம் மெகாவொட் சூரிய மின்கலங்கள் உற்பத்…

  15. இலங்கையில் பாஜக கட்சி ஆரம்பிக்கிறதா? - அண்ணாமலை கூறியது என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கு இந்தியர்களுக்கு இலவச விசா நடைமுறையொன்றை இலங்கை அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை, கொழும்பில் நேற்று (மே 03) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். கச்சத்தீவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிக்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை இலவச விசா நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கை…

  16. இந்திய எல்லைப் பகுதியில்... பாலம், அமைக்கும் சீனா! எல்லைப் பகுதியில் சீனா தற்போது புதிதாக சாலைகளை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லடாக்கிற்குள் எளிதில் ஊடுருவும் வகையில் சீனா புதிய சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை காட்டும் செயற்கைக்கோள் ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளன. வீரர்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்புவதற்கு ஏதுவாக இந்த சாலைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2022/1279827

  17. ரஷ்யாவுக்கு எதிராக... மோடியை அழைக்க, தீர்மானம்? ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சமாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் மாதம் 26 ஆம் திகதி பவேரியன் ஆல்ப்ஸில் ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளராக மோடியை அழைப்பது எனவும், ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்க ஜெர்மனி பிரதமர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1279544

  18. உள்நாட்டு தொழிநுட்பத்தில்... தயாரிக்கப்பட்ட பீரங்கி பரிசோதனை, வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு! நீண்ட தூர இலக்கை அழிக்கும் மேம்படுத்தப்பட்ட உயர் ரக ஏடிஏஜிஎஸ் பீரங்கி பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பீரங்கியில் இருந்து சென்ற குண்டுகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததுடன், சுவீடன் தயாரிப்பான Bofors பீரங்கிகளுக்கு பதிலாக இது பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டு தொழிநுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பீரங்கியை தயாரித்து உள்ளது. டாடா மற்றும் பாரத் போர்ஜ் நிறுவனங்களின் உதவியுடன் இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1279654

  19. கொரோனா தடுப்பூசி : பாதகமான விளைவுகள் குறித்த, தரவுகளை வெளியிடும்படி... நீதிமன்றம் உத்தரவு! கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் குறித்த தரவுகளை வெளியிடும்படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிப்பது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது அரசின் தடுப்பூசிக் கொள்கை நியாயமற்றது இல்லை எனவும், தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குச் செல்ல விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்கெனவே நீக்காவிட்டால் அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்…

  20. இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள் 30 ஏப்ரல் 2022 பட மூலாதாரம்,INDIAN ARMY படக்குறிப்பு, இந்திய ராணுவ தலைமைத் தளபதிக்குரிய பேட்டனை, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து பெறும் ஜெனரல் மனோஜ் பாண்டே (இடது) இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்பிரதாய நடைமுறைப்படி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து மனோஜ் பாண்டே ராணுவ ஜெனரலுக்கான பேட்டனை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னதாக, பதவியில் இருந்து ஓய்வு …

  21. ‘இந்தி எப்போதும் நமது தேசிய மொழிதான்’ – நடிகரின் ட்விட்டர் பதிவால் இணையத்தில் எழுந்த விவாதம் ச. ஆனந்தபிரியா பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தி தேசிய மொழி இல்லை எனில் உங்கள் மொழி படங்களை ஏன் இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என நடிகர் சுதீப் கிச்சாவுக்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கன்னட மொழி திரைப்படமான 'கே.ஜி.எஃப்2' சமீபத்தில் பான் இந்தியா திரைப்படமாக இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக பட…

  22. தன்னம்பிக்கை கதை: கண் முன்னே மரணம்; வாட்டி வதைக்கும் புற்றுநோய் – ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவில்லை ரவி பிரகாஷ் பிபிசி ஹிந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC வாழ்வுக்கும் சாவுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். வாழ்க்கையை வாழும்போது அந்த அனுபவத்தை நம்மால் விளக்க முடிகிறது. ஆனால், மரண ஏற்பட்டபின் அந்த அனுபவத்தின் கதையை சொல்ல முடிவதில்லை. மற்றவர்கள் நம் மரணத்தின் கதையைச் சொல்லலாம். ஆனால் இறந்த பிறகு என்ன நடக்கும், இந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. சில நேரங்களில் நம் சமூகம் இதுபோன்ற சில கதைகளை விவரி…

  23. இந்தியாவிற்கு... உதவ தயாராக இருப்பதாக, அமெரிக்கா அறிவிப்பு! சீனாவின் கடற்படை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிற்கு உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அமெரிக்க அதிகாரி ஒருவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் தடையற்ற வெளிப்படையான வர்த்தகத்திற்கும் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், இந்திய இராணுவத்தினர் ரஷ்யாவின் பூர்வீகமான ஆயுதக் கொள்முதலை சார்ந்து இருக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா உதவும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவ…

  24. ரஷ்யாவிடம் இருந்து... இந்தியா, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது... அதிகரித்துள்ளது! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள குறிப்பில், ”இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் 4 கோடி பரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. அதேநேரம் இந்தியாவிற்கு தினமும் 50 இலட்சம் பரல் கச்சா எண்ணெய் தேவையில் அதில், 85 சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போது வரை ஐஓசி, எச்பிசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களை விட காட்டிலும் ரிலையன்ஸ் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இந்த நிறுவனம் ஜூன் காலாண்டு வரை தேவைக்காக 1.5 …

  25. பாமாயில் தொடர்பாக இந்தோனீசியா எடுத்துள்ள முக்கிய முடிவு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ வரும் 28 ஆம் தேதி முதல் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் அதன் மூலப்பொருளான பாமோலின் ஏற்றுமதியை தடை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் நாட்டில் பாமாயில் உற்பத்தி தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் 'மலிவாகவும் ஏராளமாகவும்' பாமாயில் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. நாட்டில் உணவுப் ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.