Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்திய செயலிகளை உருவாக்கும் சவால்: இளைஞர்களுக்கு மோடி அழைப்பு! இந்தியாவில் செயலிகளை உருவாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதன்படி, உலகத் தரம்வாய்ந்த செயலிகளை உருவாக்கும் வகையில் ‘ஆத்மனிர்பார் பாரதத்திற்கான குறியீடு’ என்ற சவாலில் பங்கேற்குமாறு பிரதமர் இளைஞர்களை அழைத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிற்றர் பதிவில், “உங்களிடம் செயலி போன்ற தயாரிப்பு இருந்தால் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்கான நிபுணத்துவம் இருப்பதாக உணர்ந்தால் இந்த சவால் உங்களுக்கானது. தொழில்நுட்ப சமூகத்தில் உள்ள எனது நண்பர்கள் அனைவரையும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உள்நாட்டு பயன்பாடுகளை புதுமைப்பட…

  2. சிவிங்கிப் புலிகள்: இந்தியக் காடுகளுக்கு ஆப்பிரிக்காவில் இருந்து பாய்ந்து வரப்போகின்றனவா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிவிங்கிப் புலி உலகில் அதிவேகமாக ஓடக்கூடிய பாலூட்டியான சிவிங்கிப் புலிகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகம் செய்யும் திட்டம் ஒன்று உள்ளது. பல்லுயிர்ப் பெருக்க ஆர்வலர்களுக்கு இந்த திட்டம் மகிழ்ச்சியைத்தானே தந்திருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அனைவரும் ஒரே குரலில் வரவேற்கவில்லை. ஏன் தெரியுமா? 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஆப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியாவின் காடுகளுக்கு…

  3. "அக்னிபாதை" திட்டத்தின் கீழ்... விமானப் படைக்கு, ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்! அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது. இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களைத் தெரிவு செய்வதற்காக, அக்னி பாதை என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இராணுவத்தில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்ற, 17அரை வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விமானப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை இன்று தொடங்கும் என்று விமானப் படை தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி அறிவித்தள்ளார். வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் IAF…

  4. விருப்ப உடலுறவுக்கான வயது குறைக்கப்பட வேண்டுமா? போக்சோ சட்டத்தின் அறியப்படாத மற்றொரு பக்கம் கட்டுரை தகவல் எழுதியவர்,கீதா பாண்டே பதவி,பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒருமித்த உடலுறவுக்கான வயது குறைக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போக்சோ சட்டம் சொல்லும் பல விவரங்கள் அதிகம் அறியப்படாதவை ஆக உள்ளன. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை கையாள 10 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான புதிய சட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந…

  5. பட மூலாதாரம்,FEROZ SHAIKH 34 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பெண்கள் மல்யுத்தம் செய்வது விசித்திரமாக பார்க்கப்பட்ட 1950களில், ஹமீதா பானோ ஆண் மல்யுத்த வீரர்களுக்கு ஒரு சவாலாகத் திகழ்ந்தார். இந்த 32 வயது மல்யுத்த வீராங்கனை, ஆண் மல்யுத்த வீரர்களிடம் ஒரு சவால் விடுத்தார். "என்னை யார் மல்யுத்த களத்தில் தோற்கடிக்கிறாரோ அவர் என்னைத் திருமணம் செய்து கொள்ளலாம்" என்பதுதான் அவர் விடுத்த சவால். இதேபோன்ற சவாலில், 1954 பிப்ரவரியில் இருந்து அவர் ஏற்கெனவே இரண்டு ஆண் மல்யுத்த சாம்பியன்களை தோற்கடித்திருந்தார். இவர்களில் ஒருவர் பாட்டியாலாவை சேர்ந்தவர். மற்றவர் கொல்கத்தாவை சேர்ந்தவர். அந்த ஆண்டு மே மாதம் தனது மூன்றாவது போட்டிக்…

  6. கார் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரபல வயலின் கலைஞர் பாலா பாஸ்கர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கேரளாவை சேர்ந்த பிரபல வயலின் கலைஞர் பாலாபாஸ்கர். இவர் கடந்த வாரம் திருச்சூரில் உள்ள கோவிலுக்கு மனைவி லட்சுமி மற்றும் 2 வயது மகள் தேஜஸ்வியினியுடன் சென்ற போது அவர்கள் பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மகள் தேஜஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார். வயலின் கலைஞர் பாலா பாஸ்கரும், அவரது மனைவி லட்சுமி மற்றும் அவரது கார் சாரதி ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பாலா பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது விதி எழுதிய ஓர…

  7. யாஷ்பால்சின் சௌஹான் மற்றும் ரவி பர்மார் பிபிசி குஜராத்தி படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC குஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. அந்த காணொளியில், முஸ்லிம்களை பொருளாதார அளவி…

  8. சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் 70 சதவீதமான மக்கள் வாக்களிப்பு சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கான தேர்தலில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் நேற்றைய தினத்திலும், மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் திகதியும் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைய, சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன. 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக துணை இராணுவத்தினர், பொலிஸ…

  9. 0 232 - + Subscribe to THE HINDU TAMIL YouTube இன்று இரவு அமிர்தசரஸ்-மும்பை விமானத்துடன் தற்காலிகமாக தனது அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் படிப்படியாக சேவையை துண்டிக்க தொடங்கியது. பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் தவித்த ஜெட் ஏர்வேஸ், வங்கிகளிடம் கடன் கோரியது. ஜெட் ஏர்வேஸ் சில மாதங்களாக கேட்கப்பட்ட ரூ. 400 கோடி கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜெட் ஏர்வேஸ் சர்வதேச மற்றும் உள்நாட…

  10. ஹோலி பண்டிகையின் போது 7 பள்ளி மாணவர்கள் மீது இரசாயண பொடி வீச்சு – 4 பேரின் நிலை கவலைக்கிடம். நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது. அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம்,…

  11. உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் – சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா கடும் எச்சரிக்கை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முகமது குரேஷி, பீஜிங் சென்று சீன வெளிவிவகார அமைச்சர் யாங்-யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சீனாவும் பாகிஸ்தானும் விடுத்த கூட்டறிக்கையில், இந்தியா ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த அறிக்கையை கண்டித்துள்ள மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒ…

  12. Published By: RAJEEBAN 30 APR, 2023 | 12:24 PM பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில், என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம்.எங்கள் ஊர் மக்க…

  13. சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிபுணர்கள் தரப்பு பீதி சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. @getty இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட…

  14. பெங்களூரு: கிராமத்து இளைஞரின் முயற்சியால் மீண்டும் உயிர்பெறும் நகர்ப்புற ஏரிகள் சாய்சுதாபிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டி என்பது, உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய முகவரி போன்றது . கான்கீரிட் கட்டடங்களுக்கு இடையில் சுமார் ஐந்து கி.மீ தொ…

  15. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 600 குழந்தைகள் உயிரிழப்பு! ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இதுவரை 600 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தை பிறக்கும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின்மை, குறை பிரசவம், சரியான கவனிப்பின்மை உள்ளிட்ட காரணங்களே பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கே.கே.லான் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ…

  16. மருத்துவ பொருட்களுக்கு... அதிக விலையை, நிர்ணயிக்கக் கூடாது – இந்தியா வலியுறுத்து! கொரோனா சிகிச்சைக்காக கொள்முதல் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றுக்கு சீனா அதிக விலையை நிர்ணயிக்க கூடாது என இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹொங்கொங்கிற்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், ‘ கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தைச் சமாளிக இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்ட…

  17. "மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, லட்சத்தீவு, அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை." - மத்திய அரசு இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல்கள் என்பவை நாள்தோறும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வழக்குகள் பதிவுசெய்யப்படுமளவுக்கு, அவற்றில் எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர் என்பது வெளியில் தெரிவதில்லை. தாக்குதல் சித்திரிப்புப் படம் இந்த நிலையில், 2018 முதல் 2021 வரையில், பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல் த…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 26 பிப்ரவரி 2025 "எனது வீட்டில் இருக்கப் பிடிக்காமல், நான் பல நாட்கள் அழுதிருக்கிறேன். யாரிடம் சொல்வது என்று தெரியாமல், விட்டு விலகிப் போகவும் முடியாமல், செய்வதறியாமல் இருக்கிறேன். 'ஒரே வீட்டில் வளர்ந்த குழந்தைகளுக்குள் ஏன் இத்தனை பாகுபாடுகள்?' என்ற கேள்வி என்னுள் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" என்று சமீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் கூறினார். இளங்கலை படித்து வரும் 21 வயதான சமீராவுக்கு 25 வயதில் சகோதரர் ஒருவர் இருக்கிறார். வீட்டில் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் பாலின அடிப்படையில் தனித்தனியே விதிகள் இருப்பதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "எனது சகோதரர் அவர் விரும்பும் ந…

  19. ரஷ்யாவிடம் இருந்து... போர் துப்பாக்கிகளை, கொள்வனவு செய்ய இந்தியா திட்டம்! ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் AK 203 ரக போர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழரை இலட்சம் பெருமதியான குறித்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்தவற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசு மட்டத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் துப்பாக்கிகளை தயாரிக்க இந்தோரஷ்யன் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக 70 ஆயிரம் AK 203 ரக துப்பாக்கிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/20…

  20. பாஜக பிரமுகர் மீது புகார்: "சிறுநீரை வாயால் சுத்தம் செய்ய வைத்து பணிப்பெண்ணை சித்ரவதை செய்தார்" 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/@AMBEDKARITEIND (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (01/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு ஆண்டுகளாக சித்ரவதை செய்துவந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக பிரமுகரை அந்தக் கட்சி இடைநீக்கம் செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்ற பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செ…

  21. குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கு பிரதமர் மோடியின் தாயார் பெயர்! குஜராத்தின் தடுப்பு அணைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் பெயர் சூட்டப்படவுள்ளது. ராஜ்கோட்டின் வாகுதாத் கிராமத்தின் நியாரி ஆற்றின் குறுக்கே 15 லட்சம் ரூபாய் செலவில் கிர் கங்கா பரிவார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட தடுப்பு அணைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. பிரதமர் மோடியின் தாயாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தடுப்பு அணைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, அறக்கட்டளையின் தலைவர் திலீப் சாகியா தெரிவித்தார். இரண்டு வாரங்களில் நிறைவடையவுள்ள இந்த அணையில், சுமார் 2.5 கோடி லிட்டர் நீரை சேமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தாயார் ஹிர…

  22. கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தானது நிபா வைரஸ்: ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை monishaSep 16, 2023 09:08AM கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் இதுவரை 6 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 1,080 பேரை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும், அவர்களில் 122 பேர் அதிக ஆபத்தான பிரிவில் இருப்பதாகவும், அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களில் 29 பேர் மலப்புறம், கண்ணூர், திரிசூர் மற்றும் வயநாடு என மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நிபா வைரஸ் குறித்து பல அதிர்ச்சி தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர…

  23. இந்திய – பசிபிக் கடல் மண்டலத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியக் கடற்படை தீவிரமாகக் கண்காணிக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டணத்தில் கிழக்குக் கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி போதோ இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்டை நாடான சீனா எப்போதும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுவதனால் கடல்சார் பாதுகாப்புத் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக தெரிவித்த அவர் தமது கடற்படை மேலும் வலுவடையும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலையும், கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெ…

  24. பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் நீடித்து வருவதாக சந்தேகிக்கத் தூண்டும் வகையில் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது மலேசிய இந்தியர்கள் மத்தியில் புதிய விவாதப் பொருளாகியுள்ளது. Image caption பினாங்கு ராமசாமி இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய காவல்துறைத் தலைவர் ஹாமிட் பாடோர், விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட, எத்தகைய பயங்கரவாத சித்தாந்தங்களாக இருப்பினும், அவற்றைப் பரப்புபவர்கள் காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்ப இயலாது என எச்சரிக்கை விடுத்தார். துணை முதல்வர் ராமசாமியும், தமிழீழ ஆதரவாளர்கள் சிலரும் இடம்பெற்றுள்ள அக்…

    • 0 replies
    • 292 views
  25. வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண். ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதேபோன்ற ஒரு சம்பவம் கேரள பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. திருமணமான உடன் கணவரை நம்பி வெளிநாடு நாடு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் பின்னணி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.