Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தலிபான்களுக்கு... இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக எச்சரிக்கை ஏனைய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தானை மீண்டும் மாற்றிவிடக் கூடாது என தலிபான்களை இந்தியாவும் அமெரிக்காவும் எச்சரித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்குவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பெண்கள், சிறுவர்கள், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை தாலிபான்கள் மதிக்க வேண்டும் எனவும் இருநாட்டு தலைவர…

  2. டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு! டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் துப்பாகி சூட்டினை மேற்கொண்டவர்கள் வழக்கறிஞர்களை போல் உடையணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜிதேந்தர் கோகி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1241066

  3. நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி மின்னம்பலம்2021-09-25 அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்திய பிரதமர் மோடியும் நேற்று (செப்டம்பர் 24) இரவு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சந்தித்தபோது இருவரும் சரளமாக ஜோக் அடித்து சிரித்துக் கொண்டிருந்தது உலகம் முழுதும் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், பிரதமர் நரேந்திர மோடியை மாலை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின், நடந்த செய்தியாளர் சந்திப்பில் இருபெரும் நாடுகளின் தலைவர்களின் நகைச்சுவையால் வெடிச்சிரிப்புகள் ஜொலித்தன. பைடன் பேசுகையில், "எனக்கு உறுதியாக தெரியவில்லை ஆனால் நான் 1972 இல் 28 வயதில் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நான் பதவியேற்…

  4. தடுப்பூசிகள் ஏற்றுமதி : அமெரிக்கா வரவேற்பு அளித்தாக... கமலா ஹாரிஸ் தெரிவிப்பு! கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்த கருத்துடைய நட்பு நாடுகள் என்றும், தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் ஒரேவிதமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 இலட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகவும் இருநாடுகளுக்கும் நட…

  5. ஆக்கஸ் கூட்டமைப்பில்... இந்தியா, இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது- அமெரிக்கா திட்டவட்டம்! ஆக்கஸ் கூட்டமைப்பில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் – தொடர்புத் துறை அமைச்சர் ஜென் சாகி, ‘இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. வெறும் அடையாளத்திற்காக மட்டும் ஆக்கஸ் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அந்த புதிய கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட வேறு எந்த நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது’…

  6. இந்தியாவில்... மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த, பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை! தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து பண்டிகைகாலங்கள் வரவுள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தாக்குல் நடத்தும் திட்டத்துடன் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பயங்…

  7. இந்தியாவில்... 30 இற்கும் மேற்பட்ட, தரமற்ற மருந்துகள் கண்டறிவு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 37 மருந்துகள் தரமற்றவையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இவ்வாறு கண்டறியப்பட்டுள்ள மருந்துகளில் பெரும்பாலானவை உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் 1245 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 1207 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 37 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட …

  8. அமெரிக்கா பயணமாகிறார்... மோடி! ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார். குவாட் கூட்டமைப்பு தலைவர்களின் உச்சிமாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் குவாட் கூட்டமைப்பில் பேசும் அவர், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா தடுப்பு பணிகள், மற்றும் தடுப்பூசிகளை வழங்குதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளார். அதேநேரம் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசுவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1240545

  9. ஆனந்த் கிரி: யார் இவர்? மறைந்த துறவி நரேந்திர கிரியுடன் இவரது உறவு எப்படி இருந்தது? அனந்த் பிரகாஷ் பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FACEBOOK/ANANDGIRIYOGA படக்குறிப்பு, காவலர்கள் படை சூழ வரும் ஆனந்த் கிரி அகில பாரத அகாடா பரிஷத் தலைவர் நரேந்திர கிரியின் தற்கொலை செய்துகொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அவரது சீடர் ஆனந்த் கிரி மீது உத்தரபிரதேச போலீசார் செவ்வாய்க்கிழமை அன்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். அதில், கடந்த சில காலமாக நரேந்திர கிரி, அவரது சீடர் ஆனந்த் கிரியால் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்ததாகவும்…

  10. இந்தியாவில்... கருக்கலைப்புக்கு, அனுமதி கோரும் சிறுமியர்கள் அதிகரிப்பு! பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி கருகலைப்பு செய்ய அனுமதிக்கோருகின்ற சிறுமியர்களின் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த மே மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிய நிலையில், கர்ப்பம் அடைந்த ஏழு சிறுமியர்கள் கருகலைப்புக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியரின் குடும்பத்தினர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு ஜுலை மாதத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கும் அனு…

  11. ஆப்கன் ஹெராயின்: 3,000 கிலோ சரக்குகளை இறக்குமதி செய்த தம்பதி சென்னையில் கைது - முழு விவரம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து இறக்கி வைக்கப்படும் சரக்குகளை கையாளும் முனையம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக சென்னையில் வைத்து ஒரு தம்பதியை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து…

  12. தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் பிரவேசிக்க தடை! தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஆமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை தொலைப்பேசியிலோ அல்லது பேப்பர் வடிவிலோ வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவை பொதுமக்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர். https://athavannews.com/2021/1240201

  13. சரண்ஜித் சன்னி: பஞ்சாப் முதல்வராகப் போகும் இவரது பின்னணி என்ன? 19 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,TS_SINGH DEO படக்குறிப்பு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்வாகியிருக்கும் சரண்ஜித் சன்னி (49) திங்கட்கிழமை காலை 11 மணிக்கு அம்மாநில முதல்வராக பதவியேற்கவிருக்கிறார். அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் மாநில தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழிலக பயிற்சித்துறை அமைச்சராக இருந்த அவர், இதற்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக ஓராண்டுக்கு இருந்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் ர…

  14. தந்த வேட்டைக்கு பலியாகும் ஆசிய யானைகள் - சர்வதேச நெட்வொர்க் எப்படி இயங்குகிறது? #WildlifeTrafficking ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் "முப்பது ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். முதல்முறையாக என்னைக் கைது செய்துவிட்டீர்கள்" என நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 70 வயதான நாகராஜன் வாக்குமூலம் கொடுத்தபோது வனத்துறை அதிகாரிகள் உறைந்து போனார்கள். இத்தனைக்கும் அவர் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். கோத்தகிரியிலும் தென்காசியிலும் அவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்த சம்பவம் இது. தந்தத்தை தந்தமாகவே கொண்டு சென்றால் சிக்கல் என்பதால் க…

  15. தீவிரவாதிகளின் மீது... தாக்குதல் நடத்த, இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா! ஆப்கான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடமாடும் தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த இந்தியாவின் உதவியை அமெரிக்கா கோரியுள்ளது. குறித்த தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவின் விமானப்படை தளங்களை பயன்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் ஆப்கான் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தலிபான்களுக்கும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வான்வழி தாக்குதல…

  16. கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது? - இந்திய அரசை அதிரவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GWENGOAT / GETTY IMAGES இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் மூன்றாம் பாகம் இது. அரசு விரும்பாத கருத்தைச் சொல்லும் ஊடகங்களைத் தடைசெய்ய முடியுமா? இந்திய உச்ச நீதிமன்றத்தால் 1950ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று, அப்படிச் செய்ய முடியாது…

  17. சுவிஸ் வங்கியில் உள்ள... இந்தியர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு! சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் உள்ளடங்கிய மூன்றாவது பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த தொகுப்பில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய விபரங்களை சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பல்வேறு சொத்துக்கள், வரி ஏய்ப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://ath…

  18. ஏழு மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிப்பு! சிக்கிம், கோவா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுவரை 74.32 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று மட்டும் 50 இலட்சத்து 25 ஆயிரத்து 159 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239096

  19. இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் - கொண்டாடுவதில் அவரசம் காட்டப்படுகிறதா? கீதா பாண்டே பிபிசி நியூஸ், டெல்லி 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று புதிய பெண் நீதிபதிகள். உடன் ஏற்கெனவே நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி. இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி ஆகலாம் என குறிப்பிட்டு செய்திகள் வெளியாயின. சிலர் இதை "ஒரு வரலாற…

  20. யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டால் அரசியல் சர்ச்சை: ‘தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான்’ 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யோகி ஆதித்யநாத், உ பி முதல்வர் (இன்று 13.09.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான். கடவுள் ராமர் மீது நம்பிக்கையுள்ளவர்களை அவமதித்ததும் அந்தக் கட்சிதான் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. குஷிநகர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வள…

  21. ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி! சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் அடிப்படையில் பசுமை வாயு வெளியீட்டைக் குறைக்க மத்திய அரசு தீர்மானித்தது. இதேபோன்று ரயில்வே நிர்வாகமும் 2030ஆம் ஆண்டுக்குள், கார்பன் வெளியீடு இல்லாத பசுமைப் போக்குவரத்துக்காக ரயில் போக்குவரத்தை மாற்றுவதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அதாவது, இருபக்கமும் டீசலால் இயங்கும் இன்ஜின்கள் உள்ள ரயில் தொடரில், குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த திட்டத்தின் ஊடாக வ…

  22. வினீத் கரே பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சுஹைல் ஷாஹீன், தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜம்மு காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என்று பிபிசியிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். தோஹாவில் உள்ள சுஹைல் ஷாஹீல் ஜூம் செயலி மூலம் பிபிசிக்கு அளித்த நேர்காணலின்போது, கத்தார் நாட்டின் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன் செய்து கொண்ட உடன்பாட்டு விதிகளில் கையெழுத்திட்டபோதே, ஆப்கானிஸ்தான் மண்ணை வேறெந்த நாட்டுக்கு எதிரான ஆயுத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் எந்த கொள்கையும் தங்களுக்கு இல்லை என பேசியதை …

  23. '1965' போர்: சிறப்பு ஆபரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி? ரெஹான் ஃபைசல் பிபிசி செய்தியாளர், டெல்லி 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFENCE.PK படக்குறிப்பு, விமானத்திலிருந்து குதிக்கும் வீரர்கள் 1965 செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தானின் பி -57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, மூன்று சி - 130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின. ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர். இரவ…

  24. இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? - நீதித்துறை தலையீடும் வழக்குகளும் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, "ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை …

  25. ஃபிரோஸ் காந்தி நினைவு தினம்: இந்திரா காந்தியின் விதவை கோலத்துக்கு என்ன காரணம்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEHRU MEMORIAL MUSEUM AND LIBRARY அது 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி. இந்திரா காந்தி அப்போதுதான் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி பாலம் விமானப்படை தளத்தை வந்தடைந்தார். அவரிடம் உடனடியாக ஃபிரோஸ் காந்திக்கு மற்றொரு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஃபிரோஸ் சேர்க்கப்பட்டிருந்த வெல்லிங்டன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஃபிரோஸின் உதவியாளர் உஷா பகத் இருந்தார். "இரவு முழுவதும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.