Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீர்மூழ்கிக் கப்பலை... தாக்கி அழிக்கும், விமானம் இந்தியா வருகை! நீர்மூழ்கிக் கப்பலை தாக்கி அழிக்கவல்ல பி-8ஐ போர் விமானம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கடந்த 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2ஆவது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடர் மீட்புப் பணிகளிலும் பி-8ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும…

  2. லடாக் பகுதி எல்லை பிரச்சினை : இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடல் எல்லை நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்திய – சீன இராணுவ மட்ட கலந்துரையாடலுக்கான ஒப்புதல்கள் இருதரப்பிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில், உண்மையான கட்டுப்பாட்டு எல்லை மாற்றுவது ஏற்புடையதல்ல என இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயை சுட்டிக்காட்டியே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார் . எனவே பதற்றங்களுக்கு வழிவகுக்காது எல்லையில் காணப்பட கூடிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டும் வகையில் மூத்த இராணுவ அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் அமைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் …

  3. தலிபான்களின் தாக்குதலில் பிரபல இந்திய புகைப்பட செய்தியாளர் பலி ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக இராணுவம் தாக்குதல் நடத்துவதும், இராணுவத்தினர் மீது தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் தனிஷ் சித்திக் உயிரிழந்துள்ளார்…

  4. இமாச்சல பிரதேசத்தில்... பெய்த கனமழை காரணமாக, 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு! இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் சுற்றுலாப் பணிகள் மலைப்பகுதிகளுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் கரையோரங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இமாச்சல பிரதேசத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228336

  5. பழங்குடி மக்களின் காட் பாதர் ஸ்டேன் சுவாமி மீது "அதிகாரங்கள்" ஆத்திரமடைந்தது ஏன்? - உலக ஆதிவாசிகள் நிலைமை.! மும்பை: சமூக செயற்பாட்டாளர், பாதிரியார், ஸ்டேன் சுவாமி 2020ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8ம் தேதி இரவு என்.ஐ.ஏ போலீசாரால் கைது செய்யப்பட்டபோது மத்திய இந்தியாவின் பல பகுதிகளும் அதிர்ந்து போயின. 70 வருடங்களாக அந்த பிராந்திய ஆதிவாசி மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவராயிற்றே ஸ்டேன் சுவாமி. 83 வயதான ஸ்டேன் சுவாமி, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டார். 2018ம் ஆண்டு மகாராஷ்டிராவின், பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதன் மூலம் வன்முறையை ஏற்படுத…

  6. காஷ்மீர் அரசியல் மாற்றத்தைக் காணுமா? ஜம்மு - காஷ்மீரின் தலைவர்களுடனான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் இப்பகுதியில் மாற்றத்தைத் தூண்டுவதோடு புதிதாக யூனியன் பிரதேசத்தில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் என்பதே நம்பிக்கைகளாகியுள்ளன. கடந்த வாரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் உட்பட 14 தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய மத்திய அரசுக்கும் ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் 370 வது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பாக இது கருதப்படுகின்றது. ஜம்மு - காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சுமார் மூன்று மணிநேரம் இடம்பெற்ற இந்த பேச்சுவா…

  7. ராஜஸ்தானில்... மின்னல் தாக்கி, 18 பேர் உயிரிழப்பு! ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெய்பூர் அருகே உள்ள அரண்மனையை பார்வையுற்ற சுற்றுலா பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கோடா, ஜலாவர், பரண் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228107

  8. தலிபான் முன்னேற்றத்தால் ஆப்கானிலிருந்து 50 அதிகாரிகளை வெளியேற்றியது இந்தியா ஆப்கானிஸ்தானின் காந்தஹாரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சுமார் 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தெற்கு நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளை தலிபான் போராளிகள் கைப்பற்றியதை அடுத்து, இந்திய விமானப்படை விமானத்தில் காந்தஹாரில் இருந்து சுமார் 50 தூதர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா வெளியேற்றியுள்ளது. தூதரகத்தில் இருந்த பணியாளர்கள் விமானப்படை விமானங்களினூடாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். "ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பும…

  9. கங்கை நதியில்... கொரோனா வைரஸின் தடையங்கள் கிடைக்கவில்லை – ஆய்வில் தகவல்! கங்கை நதியில் கொரோனா வைரஸின் எந்த தடயங்களும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என அரசு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் சில மாவட்டங்களை ஒட்டி, கங்கை நதியில் சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. குறித்த சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இதனையடுத்து கங்கை நதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி முடிவு வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2021/1227485

  10. அமைச்சரவை, விரிவாக்கம் குறித்த அறிவிப்பு! பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இருபது புதிய அமைச்சர்கள் பதவி வகிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நாட்டின் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நலத்திட்டங்களின் பலன் அடித்தட்டு மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு இந்த அமைச்சகம் பாலமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1227118

  11. உலகின், மருந்தகமாக... இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த் உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் தங்கள் சான்றுகளை குடியரசு தலைவரிடம் அளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தொற்று பாதிப்பு சூழலில் கொரோனா தொற்று தடுப்புக்கான அத்தியாவசிய மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங…

  12. வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் – விவசாயிகள் அறிவிப்பு! வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 22 ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி 19 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, ‘வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வக…

  13. ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என்று இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி ஏற்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாக்களுக்கு மும்பையில் இருக்கும் சென்சார் குழு சான்றளிக்காமல், அதை பொதுவெளியில் திரையிட முடியாது. சென்சார் குழுவுக்கு வட்டார அலுவலகங்களும் இருக்க…

  14. சிறுவர்களை... கொத்தடிமைகளாக, விற்க முயற்சி! உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 40 சிறுவர்கள் உள்ளிட்ட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாநிலத்தில் இருந்து பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் 80 பேரும் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தப்பி சென்றுள்ள நிலையில், அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226314

  15. ட்ரோன் தாக்குதல் போன்ற புதிய ராணுவ சவால்களை எதிர்கொள்ள இந்தியா தயாரா? ராகவேந்திர ராவ் பிபிசி செய்தியாளர் 2 ஜூலை 2021, 05:01 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ட்ரோனை பயன்படுத்தும் இந்திய ராணுவம். ஜூன் 27 அன்று, இந்திய விமானப்படையின் ஜம்மு விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு எச்சரிக்கை மணி எழுப்பியுள்ளது. ட்ரோனில் வெடிபொருட்களை வைத்து இந்திய ராணுவத்தை குறிவைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட இத்தகைய சம்பவம் இது தான் முதல் முறை என்று கூறப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளத்தின் தொழி…

  16. "ஸ்புட்னிக் லைட்" தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை! ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டொக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி உள்ளிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226127

  17. அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை! அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரைக்கு கிழக்கே அப்துல் கலாம் தீவில் உள்ள 4 ஆம் ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இதன்போது அக்னி பிரைம் ஏவுகணை இலக்குகளை மிக துல்லியமாக எட்டியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னி பிரைம் ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து 1000 முதல் 2000 கிலோமீற்றர் தூரம்வரை பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225533

  18. பதுங்கிப் பாயும் திட்டத்தில் சீனா.. சமாளிக்கத் தயாராகும் இந்தியா! - எல்லையில் நடப்பது என்ன? வருண்.நா சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் ( Twitter/@adgpi ) இந்திய-சீன எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவத் தொடங்கியிருக்கிறது... என்ன காரணம்? விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைக் கோட்டை நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை நீடித்து வரு…

  19. "கொவிஷீல்டுக்கு" அங்கீகாரம் வழங்குமாறு... இந்தியா, ஐரோப்பிய யூனியனிடம் கோரிக்கை! கொவிஷீல்டு மருந்துக்கு அங்கீகாரம் வழங்குமாறு இந்தியா ஐரோப்பிய யூனியனிடம் வலியுறுத்தியுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 நாடுகள் மாநாட்டிலேயே மேற்படி இந்தியா வலியுறுத்தியுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொரோனாவுக்கு எதிரான சவால்களை சந்திக்க தடுப்பூசிகள், மருந்துகள் போன்றுவற்றுக்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1225802

  20. இரண்டு குழந்தைகள்... கொள்கை, குறித்து அசாம் முதலமைச்சர் விளக்கம்! இரண்டு குழந்தைகள் கொள்கை மூலமே வறுமையையும், கல்வியறிவின்மையையும் போக்க முடியும் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 2 குழந்தைகள்வரை பெற்றவர்களே அரசு வேலைவாய்ப்பு, நலத்திட்டங்களைப் பெற முடியும் என்பதை படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அதற்கு சட்டம் இயற்ற உள்ளதாகவும் அசாம் மாநில முதலமைச்சர் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். முஸ்லிம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் மேற்படி விளக்கமளித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், இரு குழந்தைக் கொள்கைக்கு இஸ்லாமியர்களிடம் எந்த எதிர்ப்பு…

  21. பயங்கர வாதத்துக்கான டிரோன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் இந்தியா! பயங்கரவாதத்துக்கான டிரோன்கள் உலகளாவிய ஆபத்து என இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பொதுக்குழுவில் உலகளாவிய பயங்கரவாதம் குறித்த விவாதத்தின்போது ஜம்மு – காஷ்மீர் விமானப்படை தளம் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் ஏந்திய டிரோன்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து சர்வேதச சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்தியா வலியுத்தியுள்ளது. அதேநேரம் குறைந்த விலை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய டிரோன்களை பயங்கரவாத குழுக்கள் மோசமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவது உலகெங்கிலும் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உடனடி ஆப…

  22. சீன எல்லையில்... மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை, நிறுத்தியது இந்தியா சீன எல்லையில் மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது. கடந்த வருடம், சீன இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இடம்பெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- சீனா எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவி வந்தமையினால் இரு தரப்பினரும் அதிகளவான படை வீரர்களை அப்பகுதியில் நிறுத்தினர். இந்நிலையில் இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மேற்கொண்ட பல சுற்றுப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. ஆனாலும் சீன இராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுகி…

  23. பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் : விளைவுகளை பாகிஸ்தானே பொறுப்பேற்க வேண்டும் என இந்தியா வலியுறுத்து! பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா முறைப்பாடு அளித்துள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி பவன் குமார் பாதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் அன்றாட நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின சிறுமிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர். பத்திரிகை…

  24. கிராமத்தில் இருந்து வந்து ஜனாதிபதி ஆவேன் என கனவில் கூட கண்டது இல்லை - ராம்நாத் கோவிந்த் கிராமத்தில் இருந்து வந்த சாதாரண சிறுவனான நான் ஜனாதிபதி ஆவேன் என கனவில் கூட கண்டது இல்லை என ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். பதிவு: ஜூன் 27, 2021 16:10 PM கான்பூர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் தமது சொந்த ஊருக்கும் சென்றுள்ளார். உத்தர பிரதேசத்தின் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் பராங்கு பகுதிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதலில் மண்ணை தொட்டு வணங்கினார். அதன்பின்னர் தம்மை வரவேற்க வந்தவர்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டின் விடுதலை போராட்ட வீரர்கள், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய க…

  25. ஜம்மு விமானப்படைத்தளத்தில் இரு வெடிப்பு சம்பவங்கள் June 27, 2021 ஜம்மு விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு குறைந்த சக்தியுடைய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கேனும் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஒரு வெடிப்பு சம்பவத்தால் கட்டடம் ஒன்றின் மேற்கூரைக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும், இன்னொரு வெடிப்புச் சம்பவம் திறந்த வெளியில் இடம்பெற்றதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெடிப்பு சம்பவங்களால் எந்தக் கருவிக்கும் சேதம் ஏற்பமவில்லை எனத் தெரிவித்துள்ள இந்திய விமானப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.