Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் பிழைப்புக்காக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து, புதுச்சேரியின் கிராமப்புற பகுதியான கோர்க்காட்டில் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். கரும்பு வெட்டும் வேலைக்காக வருடத்தின் பெரும்பாலான நாள்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தங்கிவிடும் இவர்களுக்கு குழந்தைகள் என்பது எப்போதும் கூடுதல் சுமை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்துப் பண்ணையில் சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார் என்று புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு ரகசிய தகவல் சென்றது. அதனடிப்படையில் அங்கு சென்று ஆய்வு நடத்திய குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் 2020 அக்டோபர் 21-ம் தேதி இரண்டு சிறுமிகளை மீட்டன…

  2. ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சைக்கு விரைவில் பதில்? பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: சர்ச்சைக்கு விரைவில் பதில்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓராண்டாக விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், விசாரணையின் இறுதி கட்டமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் நேரடியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மின்துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆக…

  3. மோடிக்கு மாற்று யார்? – எதிர்க்கட்சிகளிடம் பா.ஜ.க. கேள்வி அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மாற்று யார்? என எதிர்க்கட்சிகளிடம் பாரதீய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளால் மாற்று என ஒரு தலைவரை வழங்க முடியாது என அக்கட்சியின் முத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரகா‌ஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். மராட்டிய மாநிலம், புனேயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. இக்கட்சிகள் அனைத்தும் பிரதமர் பதவியில் இருந்து மோடியை வெளியேற்ற வேண்டும் என்று விரும்புகின்றன. அப்படியென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு ம…

  4. முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி February 20, 2019 முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை க் கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற போது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங்கள், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவை அனைத்து பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதி…

  5. ஷேர்கான்: கார்கில் போரில் இந்தியாவின் பரிந்துரையில் உயர் விருது பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர் ரெஹான் ஃபஜல்பிபிசி 28 ஜூலை 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPAKKISTAN ARMY எதிரி நாட்டு ராணுவ சிப்பாயின் துணிச்சலையும், வீரத்தையும் மதித்து, அதை எதிரி நாட்டிற்கு தெரிவிப்பதும், அதன் அடிப்படையில் விருது கொடுப்பதும் பொதுவாக யா…

  6. பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்! பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு, 1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிந…

  7. ‘மக்கள் பாஜக-வை நிராகரித்து விட்டனர்’ - ஆம் ஆத்மி, கேஜ்ரிவால் வெற்றி குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன? 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கத் தயாராகியுள்ளது. கடும் பிரச்சாரங்களுக்கு இடையே வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களை முன்னிலைப் படுத்திய கேஜ்ரிவாலின் வாக்குறுதிகளுக்கும், கடந்த ஆட்சிக்கும் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “நான் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டேன், மக்கள் பாஜகவை நிராகரித்து …

  8. ஆங்கிலேயரை வெல்ல முடியும் என்று காட்டிய ஹைதர் அலி கடைபிடித்த போர் வியூகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மைசூர் மன்னர் ஹைதர் அலி கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபஸல் பதவி,பிபிசி ஹிந்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 1757-ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வெற்றி பெற்ற பத்தாண்டுக்குள், இந்திய மன்னர்களின் ராணுவத் திறன் விரைவாக அதிகரித்து வருவதையும், பிளாசி போன்ற வெற்றியை மீண்டும் பெறுவது கடினம் என்பதையும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்களின் ராணுவத் தொழில்நுட்பத் திறனுக்கு இணையாக இந்திய சுதேச சமஸ்தானங்கள் வர வெறும் பத்தாண்டுககள் மட்டுமே ஆனது. 1760-களின் நடுப்பகுதிக்குள், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான ராணுவ பலத்தின் இடைவெளி …

  9. கரோனா வைரஸ் சிக்கலை தற்சார்பு இந்தியாவுக்கான வாய்ப்பாக உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி சிஐஐ ஆண்டு விழாவில் பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ. கொல்கத்தா நாட்டில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலை தற்சார்பு பொருளாதாரத்துக்கான வாய்ப்பாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். துணிச்சலான முடிவுகளையும், முதலீடுகளையும் செய்ய வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கொல்கத்தாவில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் 95-வது ஆண்டுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''கடந்த 5 ஆண்டுகளாாக சுயசார்பு பொருளாதாரம் என்ற கொள்கைக்கு அதிகமான முன்னு…

  10. இந்திய இளைஞர்களை குறி வைக்கும் கொரோனா! மின்னம்பலம் இளம் நோயாளிகளைக் கொண்டிருப்பதால் இந்தியா மற்ற நாடுகளை விட நாட்டின் மொத்த இறப்பு விகிதத்தில் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், எதிர்பார்த்ததை விட மிக அதிகமான விகிதத்தில் இளம் நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள். பொதுவான கருத்து என்னவென்றால், இந்தியாவில் கோவிட் -19 இறப்பு விகிதம் அநேகமாக உலகிலேயே மிகக் குறைவு என்பதே. இந்தியாவின் இறப்பு விகிதம் 2.8 சதவிகிதம், இது இத்தாலியுடன் ஒப்பிடும் போது (இத்தாலி 14.3சதவிகிதம்) மிகக் குறைவு. முதல் பார்வையில், ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் (concurrent cumulative case fatality rate- CCCFR) நிச்சயமாக பலரையும் விட மிகக் குறைவாக இருப்ப…

  11. போர் சூழ்நிலையை சீனா விரும்பினால் உளவியல் ரீதியில் கடினப்படுத்தப்பட்ட வீரர்களை சந்திப்பார்கள் – இந்திய இராணுவம் எச்சரிக்கை! சீனா போர்கள் இன்றி வெல்வதையே நோக்கமாக கொண்டிருக்கும். எனவே அவர்கள் போருக்கான சூழ்நிலையை உருவாக்கினால் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய வீரர்களை சந்திப்பார்கள் என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் இந்தியாவால் குளிர்காலத்தில் திறம்பட செயற்பட முடியாது என இந்திய படை பலத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா மேற்படி தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு பிராந்திய இராணுவ கட்டளையின் செய்தி தொடர்பாளர், “ லடாக்கில் உயரமானது முதல் மிக உயரமானது வரையிலான …

  12. 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவுள்ளதாக மோடி அறிவிப்பு! கொரோனா தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு உதவும் வகையில் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி-20 அமைப்பின் 16 ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், சவால்கள் இருந்தபோதும் இந்த நோய்தொற்று காலத்தில் விநியோகச் சங்கிலியின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியா உள்ளது. 100 கோடி தடுப்பூசி தவணைகளை இந்தியா செலுத்தியுள்ளது. அடுத்த ஆண்டின் இறுதிக்குள் 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளது. இது எங்கள் குடிமக்களுக்கு மட்டுமன்றி உலகின் பிற பகுதி…

  13. அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது February 20, 2019 ரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானியை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் அறிவித்து அபராதம் விதித்துள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நஸ்டத்தில் திணறி வரும் நிலையில், எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டிய 1600 கோடி ரூபாயை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதிக்குள் அந்தத் தொகையை வழங்கியிருக்க வேண்டும் என்ற போதிலும் அனில் அம்பானி அந்தத் தொகையை வழங்கவில்லை. இதையடுத்து அனில் அம்பானி நீதிமன்ற உத்தரவுப்படி சட்ட விதிகளை மதி…

  14. 22 JUL, 2024 | 10:45 PM மும்பை: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் கப்பலில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டபோது விபத்து. இதில் மாலுமி ஒருவரை காணவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது. மேலும், இதன் காரணமாக கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பின்னரும் அதனை நிமிர்த்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மாலுமியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த மற்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் பிரம்மபுத்திரா போர்க்கப்பலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) மாலை தீ விப…

  15. இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் 10 ஆயிரம் பேரை சீனா உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு! இந்தியாவின் முக்கிய அதிகாரிகள் உட்பட 10 ஆயிரம் பேரை சீனா உளவுப்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து உலக நாடுகள் சீனா மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்திய உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பட்டியலின்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தி, இந்திய தலைமை நீதிபதி பாப்டே, இராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 10 ஆயிரம் முக்கிய அதிகாரிகளை சீன உளவுப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவ…

  16. மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BE-720x450.jpg பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி மத்திய அரசு இரத்து செய்தது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக பிரிவினைவாத அமைப்பான காஷ்மீர் காலிஸ…

  17. எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் சீனா : நவீன இராணுவ டாங்குகளை எல்லையில் நிறுத்தியது! எல்லைப் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் சீனா தனது இராணுவ டாங்குகளை எல்லைப் பகுதியில் நிறுத்தியுள்ளது. ரெசாங் லா, ரெச்சின் லா, முகோசிரி ஆகிய மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் 30 முதல் 35 இராணுவ டாங்குகளை சீனா நிறுத்தியுள்ளது. இந்திய நிலைகளை குறிவைத்து நிறுத்தப்பட்டுள்ள சீனாவின் டாங்குகள் இலகுரக நவீன ரகத்தை சேர்ந்தவை எனவும் கூறப்படுகிறது. அதே நேரம் சீனா வாலாட்டினால் நமது இராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை தடுக்க 17 ஆயிரம் அடி உயரத்தில் நமது டாங்குகளும் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிர…

  18. டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் குண்டு வெடிப்பு.! இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்வத்தில் குறைந்த வலுக் கொண்ட குண்டு வெடித்துள்ளதாகவும், இதன்போது சில கார்கள் சேதமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் டெல்லி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது. http://aruvi…

  19. "ஸ்புட்னிக் லைட்" தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை! ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது. ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டொக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி உள்ளிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226127

  20. இந்தியாவில் 95 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அறிவிப்பு! இந்தியாவில் 95 சதவீதமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இதுவரை 164 கோடியே 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75 சதவீதமானோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 கோடியே 30 இலட்சம்பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாகவும், சிறார்களுக்கு 4 கோடியே 42 இலட்சம் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 182 views
  21. இந்த ஆண்டின் முதல் ரொக்கெட்டினை விண்ணில் செலுத்த தயாராகின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்! இந்த ஆண்டின் முதல் ரொக்கெட் எதிர்வரும் 14ஆம் திகதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணியளவில் PSLV-C52 ரொக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. 1710 கிலோ எடை கொண்ட Risat-1A செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 529 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படும். வேளாண்மை காடுகள் வளம், தாவரங்கள், பயிர்கள், மண்ணின் ஈரப்பதம், வெள்ளம் குறித்த துல்லியமான விவரங்களையும் படங்களையும் இந்த செயற்கைக் கோள் அனுப்பி வைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்ப…

  22. பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காக இ…

  23. வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் தலைமைத் தளபதி செயற்படுவார் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் தெரியவந்துள்ளது. எனினும் முதலாவது தலைமைத் தளபதி யார் என அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்…

  24. பிரம்மபுத்திரா ஆற்றுக்கு கீழே சுரங்கச் சாலை அமைக்க இந்தியா திட்டம் சச்சின் கோகாய் பிபிசி மானிடரிங் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. மத்தியிலும், அசாமிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி, அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப்பாதை குறித்து ஜூலை 16-ம் தேதி விளம்பரப்படுத்தியது. '…

  25. “நான் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது’ – காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 370-ஐ நீக்கிய ஒன்பதாம் நாள் நான் கைது செய்யப்பட்டேன் என தனது கைது தொடர்பான அனுபவத்தை விபரித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக்கா. “நான் பிடித்து வைக்கப்பட்டிருந்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது. ஆனால், நான் ஏன் ஒரு போலீஸ் நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை.” நான் எனது ஆறு மாத பெண் குழந்தை சாவ்தா பின்டி இர்ஃபானை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தேன். தொலைபேசிகள் ஒலிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.