Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராகுல் காந்தியின்... ருவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய ருவிட்டர் நிறுவனம், அவரது கணக்கினை தற்காலிகமாக முடக்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாவது, முடக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியின் ருவிட்டர் பக்கத்தினை மீட்டெடுத்து, சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே, ராகுல் காந்தியை , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இதர சமூக ஊடகங்கள் வாயிலாக பின்தொடருங்கள் என அறிவித்துள்ளது டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரின் ஒளிப்படத்தை ராகுல் ருவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்தே அவருடைய ருவிட்டர் கணக்கை அந்ந…

  2. இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் மனைவியின் பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி பெண் போல பர்தா போட்டு பயணிக்க முயன்றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் பொலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு வந்துள்ளார். பெண் உடையில் சென்ற நபர் எப்படி ஆண் உடையில் வெளிவருகிறார் என்று கவனித்த பணிப்பெண் ஒருவர் இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் விமானத்தை விட்டு கீழிறங்கும் போது அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த நபரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கு நோய் தொற்று உறுதியானது. இதை அடுத்து அ…

  3. பெகாஸஸ் உளவு விவகாரம் : வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது! பெகாஸஸ் உளவு விவகாரம் குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் உளவு விவகாரம் சுதந்திரமான முறையில் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது 2019 ஆம் ஆண்டு வெளியான உளவு விவகாரம் குறித்து கருத்து வெளியிடப்பட்டதுடன், இது குறித்து டெலிகிராப் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார். அதேநேரம் பெகாஸஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அது தீவிரமானதாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார். இதனையடுத்து குறித்த வழக்…

  4. ஜம்மு – காஷ்மீரின் புதிய மாற்றங்கள் அரசிலமைப்பின் 370 ஆவது பிரிவு இரத்து செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் அரசியல், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உட்பட ஏனைய ஜனநாயக உரிமைகள் என்பவற்றில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 108,621 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் அனைத்து துறைசார் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் பள்ளிக் கல்வி சீரமைப்பு, தொழிற்கல்வி ஊக்குவித்தல், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள பள்ளிகளில் 607 தொழிற்பயிற்சி கூடங்களை அமைத்தல் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். அரசியல் முன்முயற்சிகள் ஜம்மு – காஷ்மீரில் அரசியல் ஸ்தீரதன்மையை ஏற்படுத்துவதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத…

  5. புதுடில்லி சிறுமியின் மரணத்திற்கு பொறுப்புக்கூறல் கோரும் அடையாளங்களை வைத்தே போராட்டக்காரர்கள் அணிவகுத்தனர். "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று அவர்கள் கோஷமிட்டனர், அதில் "இந்தியாவின் மகளுக்கு நீதி" என்று எழுதப்பட்டிருந்தது. 9 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் கிராமத்தில் இருந்து ஆதரவாளர்களுடன் தற்காலிக மேடையில் அமர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். சிறுமியின் தாயார் கதறி அழுதார், சில சமயங்களில் தனது மகள் "திரும்பி வா" என்று அழைத்தார். அதிகாலையில், சுமார் 80 எதிர்ப்பாளர்கள் இருந்ததாக போலீசார் மதிப்பிட்டனர். எவ்வாறாயினும், கூட்டம் விரைவில் பெருகியது, சிஎன்என் குழு தரையில் மதிப்பீட்டை 300 க்கு அருகில் வைத்தது. போராட்ட இடத்திற்கு 200 பாதுகாப்புப் படையினர் நியமிக்கப…

  6. இந்த ஆண்டில் மாத்திரம், பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் செய்துள்ளது – நித்யானந்த் ராய் ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்த வருடத்தின் ஜுன் மாதம் வரை பாகிஸ்தான் 664 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் பதிலளித்துள்ளார். இதன்போது தெரிவித்த அவர், நடப்பாண்டில் ஜுன் மாதம் வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே 664 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 133 ஆக இருந்ததாகவும், நித்யானந்த ராய் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232358

  7. எல்லைப் பிரச்சினை : படைகளை திரும்பப் பெற இந்தியா – சீனா இணக்கம்! கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கோக்ரா பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப் பெற இணக்கம் ஏற்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்வது குறித்து இந்திய – சீன இராணுவ அதிகாரிகள் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகயில் லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் கோக்ரா இராணுவ ரோந்து பகுதி உள்ளிட்ட பகுதிகளில் இரு நாடுகள் சார்பிலும் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை முழுமையாக திரும்பப்பெற உடன்பாடு…

  8. நாடு முழுவதும்... 24 போலி பல்கலைக்கழகங்கள், அடையாளம் காணப்பட்டுள்ளது – மத்திய அரசு நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 8 பல்கலைக்கழகங்கள் செயற்பட்டு வந்துள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க உறுப்பினரான தர்மேந்திரன் எழுத்துமூலம் மக்களவையில் பதிலளித்துள்ளார். யு.ஜி.யின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு, டெல்லியில் ஏழு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு பல்கலைக்கழகங்கள் போலியாக செயற்பட்…

  9. கேரளாவை தொடர்ந்து... மகாராஷ்டிராவிலும், ஜிகா வைரஸ் தொற்று! கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் ஜிகா வைரஸ் தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த ஐம்பது வயது பெண் ஒருவருக்கே ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த பெண் பூரணமாக குணமடைந்துள்ளமையால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதேவேளை ஏடிஸ் வகை நுளம்புகளால் பரவும் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் பலருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1231924

  10. ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றது! ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனையடுத்து ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குத் தலைமையேற்கும் முதல் இந்தியப் பிரதமர் என்னும் பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நிலையான உறுப்பு நாடுகளும் மற்ற 10 உறுப்பு நாடுகளும் உள்ளன. பாதுகாப்பு சபைக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பு நாடு தலைமையேற்கும். இதன்படி ஒகஸ்ட் மாதத்திற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்தப் பதவிகாலத்தில் ஐ.நா பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளதாக ஐ.நாவுக்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருத்தீன் தெ…

  11. கடத்தப்பட்ட சிலைகளை... மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க, அவுஸ்ரேலியா முடிவு! தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு உலோக சிலைகள், ஆறு பழமையான ஓவியங்கள், இரண்டு கற்சிலைகளை திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் தீர்மானித்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குறித்த சிலைகள் கடத்தப்பட்ட நிலையில், அவுஸ்ரேலியாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231442

    • 1 reply
    • 976 views
  12. சீன எல்லைப் பகுதியில் ரஃபேல் விமானங்களை நிறுத்தியது இந்தியா! சீனாவுடனான கிழக்கு எல்லையில் ரஃபேல் போர் விமானங்களை இந்தியா நிறுத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் அவ்வவ்போது பதற்ற நிலைமை நீடித்து வருகின்றது. அதேநேரம் படைவிலக்கல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எதிர்வரும் சனிக்கிழமை இரு நாட்டு உயர் இராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இந்தியா ரஃபேல் போர் விமானங்களை கிழக்கு எல்லையில் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1231268

  13. பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு! பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன. பெகாசஸ் உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம், சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது தனிய…

  14. இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்ப்பு! இந்த ஆண்டின் இறுதிக்குள் 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு விடும் என தகவல் வெளியாகியுள்ளது. நவீன தொழிநுட்பத்துடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டிடம் இருந்து கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்படி 26 விமானங்களை பிரான்ஸ் வழங்கியுள்ளது. அவற்றில் 24 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 9 விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுரப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இந்த ரஃபேல் விமானங்களில் போர்த்திறன் அதிகம் உள்ளதால் எதிர்காலத்தில் மேலும் 36 விமானங்களை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகிய…

  15. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்- அரச படையினரிடையே உக்கிர மோதல்! ஆப்கானிஸ்தானில் தங்களது தாக்குதல்களை தலிபான்கள் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 46 இராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் தஞ்சம் புகுந்து உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. 5 இராணுவ அதிகாரிகள் உட்பட 46 வீரர்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டுக்குள் வந்து அடைக்கலம் கோரியாதாகவும், இராணுவ விதிமுறைகளின்படி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கியதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே தலிபான்களுக்கு எதிரான போரில், பால்க் மாகாணத்தில் உள்ள கால்தர் மாவட்டம், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு படையினரால் மீண்டும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்காக நடந்த மோதலில் தலிபான் குழுக்களை…

  16. அசாம், மிசோரம் இடையே ஏற்பட்ட எல்லைத் தகராறில் இரு மாநிலத்தவருக்கும் நடந்த மோதலில் அசாம் போலீஸார் 6 பேர் உயிரிழந்தனர், காவல் கண்காணிப்பாளர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அசாம் முதல்வரும், மிசோரம் முதல்வரும் வெளிப்படையாக வாக்குவாதம் செய்து கொண்டனர். போலீஸாரால் ஏற்பட்ட வன்முறைக்கு இரு முதல்வர்களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எல்லைப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, மிசாரம் முதல்வர் ஜோரம்தங்கா ஆகியோருடன் பேசி சமாதானம் செய்தார். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இரு மாநிலங்களும் சுமார் 164 கி…

  17. மகாராஷ்டிராவில் பலத்த மழைவீழ்ச்சி : 800 பேர் வெளியேற்றம்! மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த ஒருவார காலத்திற்கும் மேலாக பலத்த மழைவீழ்ச்சி பதிவாகி வருகிறது. இதன்காரணமாக மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மாநிலத்தில் பல பகுதிகளிலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் இருந்து 800 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராய்காட் மாநிலத்தின் பகுதிகளில் ஏராளமாக மரங்கள் சாய்ந்துள்ளதுடன், வீடுகள், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1230653

  18. கனமழை: வட கர்நாடகாவிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட கர்நாடகாவிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வட கர்நாடகாவிலுள்ள யாதகிரி, ஹாவேரி, பாகல்கோட்டை, பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதேவேளை கிருஷ்ணா, வேதகங்கா, துத்கங்கா உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அவற்றின் கரையோரத்திலுள்ள கர்ஜகி, யாதஹள்ளி, கும்பாரஹள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை கத்ரா பகுதியில் 50 வீடுகள் தொடர் மழையால் இடிந்து விழுந்துள்ளள. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கு…

  19. தொடர்ச்சியாக... உணரப்படும், நில நடுக்கங்களால் அச்சத்தில் மக்கள்! ஹைதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.0 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இதனால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் சிக்கிம் மாநிலத்திலும் 4.0 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பல பாகங்களிலும் அண்மைக்காலமாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக மக்கள் அச்சத்தை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1230619

  20. "பெகாசஸ்" மென்பொருள் விவகாரம் : நாடாளுமன்ற நிலைக்குழு மூலம் விசாரணை நடத்த திட்டம்! பெகாசஸ் மென்பொருள் மூலமாக இந்தியாவைச் சேரந்த முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொலைப்பேசி உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தலைமையில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனத் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரலங்களின் தொலைப்பேசி உளவு பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய…

  21. பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஏழாம் கட்டமாக 3 விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய விமானப்படையில் தற்போது 24 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229959

  22. நாடு கடத்தினால்... நிரவ்மோடி, தற்கொலை செய்துகொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு! தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து நிரவ்மோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும் அவர் முறையாக பெறவில்லை. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார்’ எனத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்சி, ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இர…

  23. ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை – மத்திய அரசு! ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே மேற்படி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ராஜ்யசபாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தினமும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் வ…

  24. செளதிக் பிஸ்வாஸ் பிபிசி நியூஸ் இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முந்தைய சில ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்பதை ஒப்பிட்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பெருந்தொற்று காலத்தில் இறந்தவர்களில் கோவிட்-19 பாதிப்பால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைக் கூறுவது கடினமென்றாலும், அந்தத் தொற்றால் ஏற்பட்ட ஒட்டுமொத்த பாதிப்பை அளவிடுவதற்கான எண்ணிக்கையாக இது உள்ளது. இதுவரை இந்தியாவில் 4,14,000-க்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 தொற்று காரண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.