அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கம் – இந்திய இராணுவம் குடியரசு தின நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் திகதி முதல் 4 நாட்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன்போது, நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம். அதன்பின்னர், ஜனவரி 29ஆம் திகதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும் நாளில், முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவர், டெல்லிக்கு வந்திருந்த பாதுகாப்பு படைகளை மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இந்த நிகழ்ச்சி பாதுகாப்புப் படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படு…
-
- 0 replies
- 196 views
-
-
வெளிநாடுகளுக்கு தகவல் திருடிய செல்போன் செயலிகள்! – அதிரடியாக தடை செய்த மத்திய அரசு! இந்திய செல்போன் பயனாளர்களின் தகவல்களை திருடி வெளிநாடுகளுக்கு வழங்கியதாக 300க்கும் மேற்பட்ட செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் அனைவர் கைகளிலும் ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்படும் ஒவ்வொரு செயலியும் பயனாளர்களின் தனிநபர் தகவல்களை சேமித்துக் கொள்கிறது. இப்படியாக சேமித்த தனிநபர் தகவல்களை பல செயலி நிறுவனங்கள் வேறு நாடுகளின் சர்வர்களுக்கு கடத்துவதாக சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 348 செல்போன் செயலிகளை தடை செய்…
-
- 0 replies
- 256 views
-
-
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்? கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 9 நவம்பர் 2022 படக்குறிப்பு, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அதனை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என தீர்ப்பளி…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
இந்திய டெக்டானிக் தட்டுகள் நகர்வதால் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் – விஞ்ஞானி எச்சரிக்கை Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 02:32 PM எதிர்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான சேதத்தை உண்டாக்கும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (என்ஜிஆர்ஐ) கணித்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால், அந்நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 45,000- கடந்துள்ளது. தொடர்ந்து இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
தண்ணீர் பஞ்சம் தீவிரமாக உள்ள சௌதி அரேபியா, பஹ்ரைன் போன்ற பாலைவன நாடுகள் இடம்பெற்றுள்ள உலகின் 17 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது என்று உலகளாவிய அறிக்கை ஒன்று கூறுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் உள்ள மாநிலங்களிலும் தண்ணீர் பிரச்சனை கடுமையாக உள்ளது. பாகிஸ்தானில் இரண்டு மாகாணங்களில் இந்த நிலைமை இருக்கிறது. இந்தியாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் பிரிவு செய்தியாளர் நவீன் சிங் காட்கா பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஹரியானா மாநிலத்தில் தரோடி கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதில் காரணத்துடன் கூடிய கோபம் காணப்பட்டது. ஹரியானா மாநிலத்தில…
-
- 0 replies
- 206 views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வரலாறு காணாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பொருளாதார ஆய்வுத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் நடப்பு 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் அடுத்த நிதியாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்கோரேப் (ecowrap) என்ற பெயரிலான அந்த அறிக்கையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனக் கணக்குப்படி நடப்பு நிதியாண்டில் 89.7 லட்சம் புதிய சம்பளக் கணக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமை Getty Images "தற்போது வேலைவாய்ப்…
-
- 0 replies
- 345 views
-
-
10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து! இந்திய இராணுவத்திற்கு சுமார் 10 இலட்சம் கையெறி குண்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில் சுமார் 409 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நாக்பூரை சேர்ந்த எக்னாமிக் எக்பிளொசிவ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தற்காப்பு மற்றும் தாக்குதல் என பலவித பயன்பாட்டுக்கு ஏற்ற விதமாக கையெறி குண்டுகள் தயாரிக்கப்படுவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/10-இ…
-
- 0 replies
- 450 views
-
-
இந்தியாவில்... மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த, பாகிஸ்தான் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை! தீவிரவாதிகளை பயன்படுத்தி இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து பண்டிகைகாலங்கள் வரவுள்ளதால் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தாக்குல் நடத்தும் திட்டத்துடன் எல்லைப் பகுதியில் ஊடுருவிய பயங்…
-
- 0 replies
- 195 views
-
-
16 முறை தோல்வியடைந்த சாமியார் மீண்டும் தேர்தல் களத்தில் 16முறை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்கர் பாபா சாமியார், தொடர்ந்தும் 17அவது முறையாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுராவில் உள்ள கடேஷ்வர் கோவிலில் தலைமை சாமியாராக இருந்து வருபவர் பக்கர் ராமாயணி (73). உள்ளூர் மக்கள் இவரை பக்கத் பாபா என அழைப்பது வழக்கம். பக்கர் பாபா நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். இதுவரை 8 நாடாளுமன்றம், 8 சட்டசபைத் தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். ஆனால் அனைத்திலும் தோல்வியடைந்து வந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்டுப்பணத்தைக் கூட ப…
-
- 0 replies
- 493 views
-
-
அருண் சாண்டில்யா பிபிசி தனது அரசியல் பயணத்தில் முதல் முறையாக, 1977ஆம் ஆண்டு இந்திரா காந்தி தோல்வியடைந்ததை அடுத்து, கர்நாடகாவின் சிக்மங்களூரிலிருந்து போட்டியிட்டு அடுத்த ஆண்டே மக்களவை உறுப்பினரானார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக தானோ அல்லது …
-
- 0 replies
- 257 views
-
-
இந்தியாவுக்கு சொந்தமான நீர் பாகிஸ்தானுக்கு 70 வருஷமாக போகுது.. அதை மோடியாகிய நானே தடுப்பேன்.! டெல்லி: ஹரியானாவுக்கு வரவேண்டிய தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய்கொண்டிருக்கிறது அதை ஹரியானா மாநிலத்திற்கே மோடி ஆகிய நான் கொண்டுவருவேன் என ஹரியானா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 21-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்காக அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஹரியானாவில் உள்ள சார்கி தாத்ரி எனும் இடத்தில் பாஜக சார்பில் நடந்த தேர்தல் …
-
- 0 replies
- 801 views
-
-
மோடியின் ‘தேசிய ஜனநாயக கூட்டணி மொடலுக்கு’ அச்சுறுத்தலா? எம். காசிநாதன் / 2019 நவம்பர் 26 , பி.ப. 04:53 இந்தியாவில் 288 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மஹாராஷ்டிரா மாநிலத்தில், புதிய கூட்டணி ஆட்சி உருவாக இருக்கிறது. “புதிய கூட்டணி மட்டுமல்ல” வித்தியாசமானதொரு கூட்டணியாக இது உருவெடுக்கும் என்று தெரிகிறது. “அரசியலில் நிரந்தர பகைவரும் இல்லை. நிரந்தர நண்பர்களும் இல்லை” என்ற இலக்கணத்தை, “நிரந்தரப் பகைவர்களாக” இருந்த கட்சிகள் தங்களுக்குள் மாற்றிக்கொள்ள முன்வந்திருப்பது, இந்திய அரசியலில் புதிய பரிணாம வளர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. மஹாராஷ்டிராவைப் பொறுத்தமட்டில் “தீவிர இந்துத்வா” “தீவிர மராத்தா” முகத்துடன், சிவசேனா கட்சியை மறைந்த பால்தாக்ரே வளர்த்தார். “இந்துத…
-
- 0 replies
- 255 views
-
-
ஆக்கஸ் கூட்டமைப்பில்... இந்தியா, இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது- அமெரிக்கா திட்டவட்டம்! ஆக்கஸ் கூட்டமைப்பில் இந்தியா இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் – தொடர்புத் துறை அமைச்சர் ஜென் சாகி, ‘இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை நிலவ வேண்டும் என பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் விரும்புகின்றன. அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. வெறும் அடையாளத்திற்காக மட்டும் ஆக்கஸ் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. அந்த புதிய கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட வேறு எந்த நாடுகளும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது’…
-
- 0 replies
- 199 views
-
-
அருணாச்சல பிரதேசத்தில்... கண்காணிப்பு பணிகளை, தீவிரப்படுத்தியது இந்திய இராணுவம்! அருணாச்சல பிரதேசத்தின் சீனாவுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லையில் சீன இராணுவ வீரர்கள் அண்மையில் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியில் இந்திய துருப்புக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 230 views
-
-
அமெரிக்க வேளாண் துறையின் சோதனை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து உரிய தரத்துக்கு இருந்தால் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதியளிப்பார்கள். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆய்வு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் விளையும் மாம்பழங்களுக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. குறிப்பாக அல்போன்சா, இமாம் பசந்த், பங்கனப்பள்ளி, கேசர் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாம்பழ உற்பத்தியில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் இருந்து வருகின்றன. இந்திய மாம்பழங்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய…
-
- 0 replies
- 260 views
-
-
ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கு முயற்சி! ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது. டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) 12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு கூறுகையில், ”யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளிய…
-
- 0 replies
- 131 views
-
-
பணமதிப்பு நீக்கத்தின் போது நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானி வங்கி வாசலில் கியூவில் நின்றனரா?- ராகுல் காந்தி Published : 03 Apr 2019 19:29 IST Updated : 03 Apr 2019 19:29 IST பிரதமர் மோடி, ராகுல் காந்தி பணமதிப்பு நீக்கத்தின் போது மக்கள் தங்கள் பணத்துக்காக வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்றிருந்தார்கள், நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, அனில் அம்பானியா நின்றனர் என்று ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி மீது தன் விமர்சனத்தைத் தொடர்ந்தார். அசாம் மாநிலம் லக்மிபூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: மெஹுல் சோக்சி, நிரவ் மோடி, அனில் அம்பானியா பணமதிப்பு நீக்கத்தின் போது வங்கியி…
-
- 0 replies
- 200 views
- 1 follower
-
-
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில், இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா! எச். ராஜா மறுபடியும் ஆரம்பித்து விட்டார். கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக கட்சிகள் போராடும் நிலையில் திமுகவினர், காங்கிரஸ் பிரமுகர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் எச் ராஜா. இங்கெல்லாம் இந்தி கட்டாயம் என்பதையும் அவர் மறக்காமல் சுட்டிக் காட்டியுள்ளார். வெளியில் இந்தி திணிப்பு என்று கூறி விட்டு உள்ளுக்குள் சத்திமில்லாமல் ரகசியமாக இவர்கள் இந்தியை படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். இது இரட்டை நிலை இல்லையா என்றும் கேட்டுள்ளார் எச். ராஜா. கொஞ்ச நாளாவே சற்று காட்டமான ட்வீட்டுகளைத்தான் போட்டு வருகிறார் எச்.ராஜா. இந்த நிலையில் தற்போது ஒரு பட்டியலை வெளியி…
-
- 0 replies
- 372 views
-
-
முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 66. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்க்கரை நோயால் அவதிப்பட்ட ஜேட்லி உடல் எடையை குறைப்பதற்கான அறுவை சிகிச்சையை செய்து கொண்டார். கடந்த இரு ஆண்டுகளாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது…
-
- 0 replies
- 361 views
-
-
ஒளரங்கசீப் கல்லறை விவகாரம்: நாக்பூரில் வெடித்த வன்முறை! மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த விவகாரம் பாரிய பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும் அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை …
-
- 0 replies
- 169 views
-
-
ரூ.200 கோடி மோசடி: குஜராத்தில் 'வாடகை' வங்கி கணக்குகள் வழியே புதுமையான முறையில் பணம் கைமாறியது எப்படி? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் ராக்ஸி ககடேகர் சாரா பிபிசி செய்தியாளர் 9 நவம்பர் 2025 வீடு, கடை, கார், பங்களா போன்றவற்றை வாடகைக்கு விடுவது சாதாரண விஷயம் தான். ஆனால் இப்போது, குஜராத்தில் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு விடும் புதிய மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை குஜராத் காவல்துறை கண்டுபிடித்துள்ளது. இந்தக் கணக்குகள் குஜராத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவை. பெரும்பாலான கணக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்த…
-
- 0 replies
- 100 views
- 1 follower
-
-
இந்தியாவில் பறவைக்காய்ச்சல் அபாயம் இந்தியாவில் பல மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் சில பகுதிகளில் ஏராளமான காக்கைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து, சுகாதாரத் துறையினர் நடத்திய பரிசோதனையில், அவற்றுக்கு பறவைக் காய்ச்சல் இருந்தது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 மாதிரிகளில் 5 மாதிரிகளில் பறவைக்காய்ச்சல் (H5N8) தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நோய்தாக்கம் உள்ள பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்துகள் மற்றும் தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தட…
-
- 0 replies
- 515 views
-
-
உத்தரகாண்ட் : பனிமலை உருகி வெள்ளப்பெருக்கு -100க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல் 24 Views உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிமலை உடைந்து உருகியதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டம் ஜோஷிமாத் நகரில் உள்ள நானாதேவி பனிமலை இன்று திடீரென உடைந்துள்ளது. ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகின. இதனால் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துகொண்டே சென்றதனால்,கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட …
-
- 0 replies
- 648 views
-
-
தடுப்பூசிகள் ஏற்றுமதி : அமெரிக்கா வரவேற்பு அளித்தாக... கமலா ஹாரிஸ் தெரிவிப்பு! கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வரவேற்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இந்த சந்திப்பு தொடர்பான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்த கருத்துடைய நட்பு நாடுகள் என்றும், தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் ஒரேவிதமான ஈடுபாட்டை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 இலட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணியாற்றி வருவதாகவும் இருநாடுகளுக்கும் நட…
-
- 0 replies
- 152 views
-
-
மனித உரிமைகள் பேரவையின், உறுப்பினராக... இந்தியா மீண்டும் தெரிவு ! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது. 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது. இதேவேளை மூன்று ஆண்டுகளின் ப…
-
- 0 replies
- 164 views
-