Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 98 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7…

  2. கரோனா வைரஸ் சிக்கலை தற்சார்பு இந்தியாவுக்கான வாய்ப்பாக உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு பிரதமர் மோடி சிஐஐ ஆண்டு விழாவில் பேசிய காட்சி : படம் | ஏஎன்ஐ. கொல்கத்தா நாட்டில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழலை தற்சார்பு பொருளாதாரத்துக்கான வாய்ப்பாக உருவாக்கிக்கொள்ள வேண்டும். துணிச்சலான முடிவுகளையும், முதலீடுகளையும் செய்ய வேண்டிய நேரம் இது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கொல்கத்தாவில் இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் 95-வது ஆண்டுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ''கடந்த 5 ஆண்டுகளாாக சுயசார்பு பொருளாதாரம் என்ற கொள்கைக்கு அதிகமான முன்னு…

  3. சபரிமலை கோவில் திருவிழா இந்த ஆண்டு ஒத்தி வைப்பு; கேரள அரசு முடிவு திருவனந்தபுரம், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. எனினும், கோவில்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஊரடங்கு உத்தரவின் தளர்வுகளில் ஒரு பகுதியாக, ஜூன் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால், வருகிற 14ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது. தினமும் காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரையு…

  4. முன்னாள் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் வீரர் ஜெயமோகன் போதையில் இருந்த மகனால் அடித்து கொலை கொல்லம், ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர் ஜெயமோகன் தம்பி. கேரளாவின் மணக்காடு பகுதியில் வசித்து வரும் இவர் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து துணை மேலாளராக ஓய்வு பெற்றவர். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவரது மனைவி அனிதா காலமானார். இதனால் அவர் தொடர்ந்து மனவருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் அஸ்வின், ஓட்டலில் ‘செஃப்’பாக இருந்து வருகிறார். எனினும், பண தேவைக்காக தனது தந்தையை சார்ந்தே இருந்துள்ளார். மனைவி மறைவு மற்றும் மகனின் நிலை ஆகியவற்றால் வருத்தத்தில் இருந்த ஜெயமோகன் தனது மகனுடன் சேர்ந்து மது குடிக்க ஆரம்பித்த…

  5. பால்கரில் சாதுக்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ, என்ஐஏ விசாரணை கோரி மனு: மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இரு சாதுக்கள் உள்பட 3 பேர் கடந்த ஏப்ரல் மாதம் கும்பலால் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மகாராஷ்டிர அரசு பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை காண்டிவாலி பகுதியைச் சேர்ந்த சாதுக்கள் சிக்னே மகராஜ் கல்பவிருக்சகிரி (வயது 70), சுஷில் கிரி மகராஜ் (வயது 35) ஆகியோர் ஓட்டுநர் நிலேஸ் டெல்கடே (வயது 30) உடன் சேர்ந்து குஜராத் மாநிலம் சூரத்தில் நிகழ்ந்த ஒரு இறுதிச்சடங்கிற்கு காரில் கடந்…

  6. கொரோனா வைரஸ் பாதிப்பு; உலக அளவில் 4வது இடம் நோக்கி பயணிக்கும் இந்தியா உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு அமெரிக்கா அதிக இலக்காகி உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 20.6 லட்சத்துக்கும் கூடுதலானோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் 7.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 39 ஆயிரத்து 700க்கும் கூடுதலாக உள்ளது. 3வது இடத்தில் ரஷ்யா (பாதிப்பு எண்ணிக்கை 5.02 லட்சம்), 4வது இடத்தில் இங்கிலாந்து (பாதிப்பு எண்ணிக்கை 2.90 லட்சம்) மற்றும் 5வது இடத்தில் ஸ்பெயின் (பாதிப்பு எண்ணிக்கை 2.89 லட்சம்) ஆகிய நாடுகள் இருக்கின்றன. …

  7. ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு ஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வின் அவலம் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 11, 2020 09:07 AM லக்னோ உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு கூட ஜனாதிபதியின் பெயர் தெரியவில்லை. போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையை அடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் அண்மையில் காலியாக உள்ள 69 ஆயிரம் ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று உள்ளதாக அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலரிடமி…

  8. கொரோனா பாதிப்பு:கடந்த 24 மணி நேரத்தில் 357 பேர் மரணம்; அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பு கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 357 ஆக உள்ளது. இது அதிகபட்ச ஒருநாள் உயிரிழப்பாகும். பதிவு: ஜூன் 11, 2020 11:08 AM புதுடெல்லி இந்தியாவில் கடந்த24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.8 லட்சமாக அதிகரித்து உள்ளது. 357 நோயாளிகள் மரணம் அடைந்து உள்ளனர். கொரோனா பாதிப்பு இறப்பில் இந்தியா தனது மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் இதுவரை தொற்று நோய் காரணமாக மொத்தம் 8,102 நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த இறப்புகளில் பெரும்பாலானவை நாட்டின் மிகப்ப…

  9. வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் நிரவ் மோடி, லண்டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தற்போது லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிரவ் மோடி, பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.இதற்கிடையே, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.இந்நிலையில், நிரவ…

  10. அஸ்ஸாமில் எரிவாயு கிணறு தீ பிடித்து எரிவது ஏன்?- ஆயில் இந்தியா நிறுவனம் விளக்கம் அஸ்ஸாமில் தீன்சசுக்கியா மாவட்டத்தில் பக்ஜானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எரிவாயு கிணறு வெடி விபத்து பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆயில் இந்தியா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாமில் தீன்சுக்கியா மாவட்டத்தில் உள்ள பக்ஜான் எண்ணெய் வயலின் கீழ் உள்ள வாயு உற்பத்தி கிணறு பக்ஜான்- 5, பணி மாற்று இயக்க வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது 27 மே 2020 அன்று திடீரென்று செயல்படத் துவங்கி, வெடி விபத்து நேரிட்டது என்று, பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தக் கிணற்றிலிருந்து கட்டுப்படுத்த …

  11. எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்தை நடத்த இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தது நேபாள அரசு! by : Krushnamoorthy Dushanthini எல்லைப் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இந்தியா பதில் தரும் என நம்புவதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் கியாவாளி ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ எனத் தெர…

  12. எல்லைப் பிரச்சினை: இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்துள்ளன – அமித்ஷா ‘தனது எல்லைக்குள் எந்த ஊடுருவலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்பதை உலக நாடுகள் உணா்ந்துள்ளன’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஒடிஸாவில் உள்ள பா.ஜ.க தொண்டா்கள் மற்றும் பொதுமக்களிடையே நேற்று (திங்கள்கிழமை) இணையவழி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவினால் தக்க தண்டனை கிடைக்கும் என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா தனது எல்லைக்குள் எந்த ஊடுருவலையும் பொறுத்துக் கொள்ளாது என்பதை உலக நாடுகள் உணா்ந்து கொண்டுள்ளன. தங்களது நாட்டு இராணு…

  13. கொரோனா வைரஸ் : அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலேயே அதிக நோயாளர்கள் பதிவு! by : Krushnamoorthy Dushanthini அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தீவிர நோயாளிகள் உள்ளதாக பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகம் கொண்டுள்ளதாக இந்துஸ்தான் புள்ளிவிபர பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. இதன்படி “அமெரிக்காவில் 16, 923 நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ள அதேவேளை இந்தியாவில் 8, 944 பேர் உள்ளனர். இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்க…

    • 0 replies
    • 245 views
  14. இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நாளை ஆரம்பம்! அயோத்தியில் இராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் தற்போதுள்ள இராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் திகதியில் இருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கோபால்தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நாராயண் தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்படவுள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்னதாக சிவபெருமா…

  15. சிறுமியை தூக்கி சென்று கடித்து கொன்ற சிறுத்தை! ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை தாக்கி, தூக்கிச் சென்ற சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் இந்தியா – உத்தரகாண்ட மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உத்தரகாண்ட மாநில நைனிடால் மாவட்டத்தின் ராம்நகர் பகுதியில் குமாவோன் வனப்பகுதிக்கு உட்பட்ட சுனாகன் பகுதியைச் சேர்ந்தவர் மம்தா என்ற சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது வீட்டில் அருகேயுள்ள கால்வாய் கரையோரத்தில் அமர்ந்துகொண்டு ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுத்தை மம்தாவைத் கடுமையாக தாக்கி வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது. இது குறித்து அந்த கிராமத்தினர் வனத்துறை…

  16. இந்தித் திணிப்பை நிறுத்திவிட்டு இந்தி பேசுபவர்களை முதலில் காப்பாற்றுங்கள்! இந்தியாவில் இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் படும் மரண அவஸ்தைகளுக்கான பெரும் பொறுப்பு ஒன்றிய அரசையும் உள்துறை அமைச்சகத்தையுமே சேரும். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல இப்போது அனுமதிக்கும் அது, தொடக்க நாட்களில் அவர்களைத் தடுத்து, இரண்டு மாதங்கள் கடும் சித்திரவதைகளுக்கு அவர்கள் ஆளாக என்ன நியாயத்தை வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. இக்கட்டான இந்நேரத்தில், தனது முக்கியப் பொறுப்பொன்றைத் தட்டிக்கழித்த உள்துறை அமைச்சகம், இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்திலும் இந்தியைத் திணிப்பதில் மட்டும் தீவிரம் காட்டியிருக்கிறது என்பது அதிர்ச்சியை மட்டுமல்ல, அருவருப்பையும்தான் …

  17. சிகிச்சை கட்டணத்தை செலுத்தாத... முதியவருக்கு நேர்ந்த நிலைமை மத்திய பிரதேசம்- ஷாஜாபூர் என்ற பகுதியிலுள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவரை படுக்கையில் கட்டிப் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிதத 80 வயது மதிக்கத்தக்க முதியவர், வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் அந்த வைத்தியசாலை நிர்வாகம் அவரை படுக்கையில் கட்டிப் போட்டு மனிதாபிமானமற்ற முறையில் செயற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த முதியவரின் சிகிச்சைக் கட்டணத்தை அவரது குடும்பத்தினர் செலுத்தவில்லை எனவும் அவர் தப்பிச் சென்று விடக்கூடாது என்ற நோக்கில் இவ்வாறு …

  18. கொரோனா இந்தியாவில் அதிவேகமாக பரவவில்லை - உலக சுகாதார நிறுவனம் சொல்வதின் பின்னணி என்ன? கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் சமீப காலமாக அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது! - இப்படித்தான்நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.இந்தியாவில் இந்த தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டி விட்டது. 6,600-க்கும் மேற்பட்டோர் எவ்வளவோ தீவிர சிகிச்சைகள் எடுத்துக்கொண்டும் பலனின்றி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். இன்னும் நாட்டில் பல்வேறு நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் நாடு முழுவதும் சர்வ சாதாரணமாக 5 ஆயிரம், 6 ஆயிரம் என்று தொற்றுக்கு ப…

  19. கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயினை மிஞ்சியது இந்தியா - உலக நாடுகளில் என்ன நிலவரம்? இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 9,971 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரமாக உள்ளது. ஆறாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். மேலும் இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த தகவலில் படி, இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் கிட்டதட்ட 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்த விகிதம் 1…

  20. கொரோனா விவகாரம் : இந்தியாவின் உதவியை நாடும் பிரான்ஸ்! கொரோனா தடுப்பு சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து என்பவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்பை பிரான்ஸ் எதிர்பார்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்திலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேற்கு வங்கம், மற்றும் ஒடிசாவில் பேரழிவை ஏற்படுத்திய அம்பான் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க பிரான்ஸ் அரசு தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா மருந்து மற்றும் சிகிச்சை அனை…

  21. 1962-ஐ விட இந்திய ராணுவம் இப்போது நவீனமடைந்துள்ளது; சீனாவுக்கு எதிராக மத்திய அரசு கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா கடினமான, கறாரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர், கேப்டன் அமரீந்தர் சிங் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அதாவது பேச்சுவார்த்தைகளுக்கு சீனா ஒத்துவரவில்லையென்றால் கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்கிறார் அமரீந்தர் சிங். இது தொடர்பாக வீடியோ செய்தியாளர்கள் சந்திப்பில் அமரீந்தர் கூறியதாவது: இரண்டு இறையாண்மை பொருந்திய நாடுகளும் ராஜீய ரீதியாக இதற்கு தீர்வு காண வேண்டும். இந்தியா போரை விரும்பவில்லை, ஆனால் எல்…

  22. ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம்: ஒரு மனிதனின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய போலீஸ் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் போலீஸார் சிலர் ஒருவரைப்பிடித்து கீழே தள்ள போலீஸாரில் ஒருவர் அந்த நபரின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திய வீடியோ ‘ஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட்’ சம்பவம் என்ற பெயரில் சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. அதாவது அந்த நபர் முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிந்ததாகவும் போலீஸார் அதை கேட்ட போது அந்த நபர் போலீஸாரைத் தாக்கியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அமெரிக்காவே பற்றிய எரியக் காரணமாகும் கருப்பர் கழுத்தில் பூட்ஸ் காலால் மிதித்த ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்துடன் இது ஒப்பிடப்பட்டு சமூகவலைத்தள வாசிகள் போலீஸாரை…

  23. இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியா - சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வ…

    • 2 replies
    • 493 views
  24. ஒழுக்கத்தின் நிழலில் அவதூறு: இந்திய பெற்றோர்களை சாடும் யுனிசெஃப்! மின்னம்பலம் குழந்தைகளை ஒழுங்குபடுத்தும் முயற்சி என்ற பெயரில் குழந்தைகள் மீது இந்திய பெற்றோர்கள் 30 வகையான உடல் மற்றும் வாய்மொழி அவதூறுகளை பயன்படுத்துவதாக யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 'பெற்றோருக்குரிய விஷயங்கள்: பெற்றோரின் அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்தல்' என்ற ஆய்வு யுனிசெஃப் மூலம் நடத்தப்பட்டது. இதில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் தலா இரண்டு மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் மூன்று மாவட்டங்களிலும், மகாராஷ்டிராவின் நான்கு மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கோள்ளப்பட்டது. இதன் மூலம், தண்டனை என்பது குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற…

  25. விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை விஜய் மல்லையா எந்நேரமும் இந்தியா அழைத்துவரப்படலாம்: சட்டநடவடிக்கைகள் முடிந்தன; தயார்நிலையில் மும்பை ஆர்தர் சிறை விஜய் மல்லையா, பிரதமர் மோடி : கோப்புப்படம் புதுடெல்லி இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று லண்டனில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முடிந்துவி்ட்டதால் அவர் எந்நேரமும் மும்பை அழைத்துவரப்படலாம் என சிபிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா அழைத்துவரப்படும் விஜய் மல்லையா முதலில் சிபிஐ வசம் உள்ள வழக்கில் ஆஜர்படுத்தப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.