அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3269 topics in this forum
-
இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு by : Krushnamoorthy Dushanthini கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதிய கொள்கை முடிவுகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது இனி இறந்த உடல்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு குறி…
-
- 0 replies
- 418 views
-
-
கொவிட்-19இன் தற்போதைய கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ’மரணஓலம்’ எம். காசிநாதன் / 2020 மே 18 இந்தியாவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 ஆயிரத்தைக் கடந்து, இன்னும் சில தினங்களில் ஒரு இலட்சத்தைத் தொட்டுவிடும் நிலை காணப்படுகின்றது. இந்த, நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இதுவரை 2,876 பேர்தான் என்பது, முன்கூட்டியே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும், மாநில அரசுகளின் பல்வேறான தீவிர முயற்சிகளின் பலன் என்பது ஒருபுறத்தில் இருந்தாலும், 'கொரோனா வைரஸுடன் வாழப் பழகுவோம்' என்பது, நடைமுறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது. மக்கள் ஆங்காங்கே, முகக்கவசங்களுடன் ஓரிடத்திலிருந்து, வேறோர் இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 'மதுக் கடைகள்' திறக்கலாம் எ…
-
- 0 replies
- 649 views
-
-
இந்தியாவில் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம்! பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் மட்டும் 13.5 கோடி பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆர்தர் டி லிட்டில் ‘இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பு உருவாக்கும் பொருளாதார சவால்களை சமாளித்தல்’ என்ற தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 1 இலட்சம் கோடி டொலர் வாய்ப்பை இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய 5 இலட்…
-
- 0 replies
- 457 views
-
-
உயிரிழந்த தனது ஒன்றரை வயது குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவேண்டும் என நினைத்தும் சொந்த ஊருக்கு செல்ல முயலாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிலைமையை இந்த புகைப்படம் எடுத்துக்கூறுகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம்பெயர்ந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் போக்குவரத்து முடக்கத்தால் சொந்த ஊர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அரசு தரப்பில் இருந்து சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்ற பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழில…
-
- 2 replies
- 916 views
-
-
பெங்களூருவின்`காட்பாதர்' மரணம்.. இறுதிச்சடங்கில் துப்பாக்கிச் சூடு சர்ச்சை -யார் இந்த முத்தப்பா ராய்?! ரியல் எஸ்டேட் பிசினஸில் இன்றைய தேதியில் கர்நாடகா மாநிலத்தையே கன்ட்ரோலில் வைத்திருப்பது முத்தப்பா ராய் தான். மனைவி ரேகா இறந்தபிறகு இன்னும் சாதுவாகி மகன்கள் ராக்கி மற்றும் ரிக்கியை இயக்கத்தில் வளர்த்துவிட்டு அந்திமக் காலத்தில் வள்ளல் அவதாரம் எடுத்தார். பெங்களூருவின் `காட்பாதர்' என்று அழைக்கப்பட்ட முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு 68 வயது ஆகிறது. இவரது இறுதிச் சடங்களிலும் சர்ச்சை எழுந்துள்ளது. யார் இந்த முத்தப்…
-
- 0 replies
- 503 views
-
-
"கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் அல்ல. அது சீனாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆங்கில தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். "இது இயற்கையாக உருவான வைரஸ் இல்லை என்பதால், இதனுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பல நாடுகள் இதற்கான தடுப்பூசி தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றன" என்றும் அவர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். கொரோனா தொற்று தொடர்பாக இந்திய அரசு தரப்பில் இவ்வாறு முதன்முறையாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டு வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், கொரோனா வைரஸ் சீன ஆய்…
-
- 0 replies
- 391 views
-
-
சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு by : Dhackshala நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இயக்கப்பட்ட 542 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 6.48 இலட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இந்திய ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த 542 சிறப்பு ரயில்களில் இதுவரை 448 ரயில்கள் அந்தந்த ஊர்களை சென்றடைந்துவிட்டன. இன்னமும் 94 ரயில்கள் பயணத்தில் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு (1), ஆந்திரம் (1), பீகார் (117), உத்தரப்பிரதேசம் (221), மத்தியப் பிரதேசம் (38), ஒடிசா (29) உள்ளிட்ட ரயில்களும் அடங்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த சிறப்பு ர…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழர்களின் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி தமிழக வரைபடத்துக்குள் அடைபடவில்லை என்றாலும்கூட, தாராவியும் ஒரு தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருக்கிற சாதிச் சங்கங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் வரையில் அத்தனைக்கும் அங்கேயும் கிளை உண்டு. வாழ்வதுதான் மஹாராஷ்டிரமே தவிர, இன்னமும் தங்களைத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே பாவிப்பவர்கள் இவர்கள். இன்னும் ஊரோடு வேர்களை அறுத்துக்கொள்ளாதவர்கள். முக்கியமான காரணம், அங்கேயே நிலைத்திட கனவு காண தாராவி ஒன்றும் சொர்க்கம் அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய சேரி மட்டும் அல்ல அது; மிக நெரிசலான, நெருக்கடியான பகுதி. எனது தந்தை ஓராண்டு அங்கே இருந்தவர். என் அண்ணன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அங்கே வசிக்கிறார் என்பதால், நானு…
-
- 1 reply
- 759 views
-
-
எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்! இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்ட…
-
- 10 replies
- 942 views
- 1 follower
-
-
இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத…
-
- 0 replies
- 207 views
-
-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 193 views
-
-
நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடியை கடனாகப் பெறும் மத்திய அரசு இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெறவுள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள், மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவுக்கு குறைந்துள்ளதால் வருடாந்த நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதேவேளை, 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் நிதிப்பற்றாக்குறை ஏழு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தைகளில் இருந்து கடனாக இத்தொகையை மத்திய அரசு பெறுவது வழக்கம். தற்போது இந்தக் கடன்தொகை 12 இலட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது. இதனால…
-
- 1 reply
- 452 views
-
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரமாக அதிகரிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 62 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்தும் கொரோனா வைரஸ் பாதிப்புக் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சு சில தளர்வுகளுடன் மே 17 வரை நீடித்ததுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று மட்டும் 526 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 535 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது க…
-
- 0 replies
- 248 views
-
-
சரக்கு ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலி "மிகுந்த வேதனையளிக்கிறது" - பிரதமர் மோடி சரக்கு ரெயில் மோதி 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பதிவு: மே 08, 2020 10:14 AM புதுடெல்லி மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரெயில் தண்டவாள பாதையில் நடந்து சென்றுள்ளனர். ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்து…
-
- 4 replies
- 904 views
-
-
கோவிட்-19 | கேரளா வெற்றியின் இரகசியம்IIIIIநிப்பா வைரஸ் கற்றுத்தந்த பாடம் கோவிட்- 19 வைரஸின் கொட்டத்தை அடக்கிய இந்திய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. உலக நாடுகளில் முதன்மையானது வியட்நாம். இரண்டின் வெற்றிகளுக்கும் காரணம் பொதுப்புத்தி இருந்தமையும், அதைப் பாவித்தமையும். 2018 இல் கேரளாவில் ஒரு வைரஸ் தொற்று வந்தது. அதுவும், சார்ஸ் கொவ்-2 வைப் போல, வெளவாலிலிருந்து (பழ வெளவால்) தொற்றியிருந்தது. 19 நோயாளிகளில் 17 பேர் மரணமடைந்திருந்தனர். முதல் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தாதி உட்பட, பெரும்பாலானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள். நோய் இன்னது என்று அறியமுன்னரே அது தொற்றுக்கள் பரவி விட்டன. அந்த தொற்றுக்குக் காரணமான வைரஸுக்குப் பெயர் நிப்பா. …
-
- 0 replies
- 365 views
-
-
விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு: அதிகாலை 3 மணிக்கு அலறிய சைரன்.. கதவை உடைத்து மக்களை வெளியேற்றிய போலீஸ்- முகத்தை ஈரத்துணியால் மறைக்க அறிவுறுத்தல்-2,000 பேர் வெளியேற்றம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 2.30-3 மணியளவில் இந்த வ…
-
- 9 replies
- 848 views
-
-
கொரோனாவுக்குப் பிந்தைய பிறப்பு விகிதம்: இந்தியா முதலிடம்! மின்னம்பலம் யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறது. "இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பெரும்பாலானவை தொற்றுநோய்க்கு முன்பே அதிக குழந்தை பிறந்த இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. மேலும் இந்த அளவுகள் கோவிட்-19 நிலைமைகளுடன் அதிகரிப்பதைக் காணலாம்," எனக் கூறியுள்ளது. ஒப்ப…
-
- 1 reply
- 516 views
-
-
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3900 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 56 ஆயிரம் பேரில் 16 ஆயிரத்து 540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந…
-
- 0 replies
- 334 views
-
-
இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? சீனாவை மையமாகக் கொண்டிருந்த கரோனா தற்போது ஐரோப்பாவைத் தனது கேந்திரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு இதுவரை குறைவாக உள்ள இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கு தனிமனித இடைவெளி பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்த விவாதங்களில் பலரும் ஒரு பிழையான ஒப்பீட்டைச் செய்துவிடுகிறார்கள். அது சீன மக்கள்தொகையுடன் இந்திய மக்கள்தொகையை ஒப்பிடுவது. 143 கோடியுடன் உலகிலேயே மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அதன் பரப்பளவு 95,96,961. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 145 பேர் வசிக்கிறார்கள். இந்தியாவின் பரப்பளவோ சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 2018-ன் க…
-
- 1 reply
- 414 views
-
-
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று அதிகரிப்பு! மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவால் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மும்பையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தாராவி காணப்படுகின்ற நிலையில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி நேற்று அங்கு ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் தாராவியில் மரணித்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/மும்பையில்-தமிழர்கள்-அதி/
-
- 0 replies
- 414 views
-
-
விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி! விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்த…
-
- 11 replies
- 1.5k views
-
-
என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- இந்தியாவுக்குத் தேவை அதிகாரப் பரவலாக்கல் அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்! ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும். உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள…
-
- 1 reply
- 447 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ள பாக். வெளியுறுவுத்துறை நம் துாதரக அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் ஆறு பேர் காயம் அடைந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதாகவும் நடப்பாண்டில் 957 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிக்கு பாக்., சம்மன் அனுப்பியுள்ளது. …
-
- 0 replies
- 253 views
-
-
13 நாடுகளில் சிக்கியுள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் வாரத்தில் பஹ்ரைன், பங்களாதேஷ், குவைத், மலேசியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து 64 விமானங்களில் மொத்தம் 14,800 இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக பத்து விமானங்களும் இந்திய கடற்படையின் மூன்று கப்பல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. ம…
-
- 0 replies
- 398 views
-
-
இந்தியாவில் உச்சம்... 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 195 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 195 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் நேற்று மட்டும் 195 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவில் மொத்தம் 583…
-
- 0 replies
- 462 views
-