Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு: சீன-இந்தியப் படையினருக்கு இடையில் மோதல்! இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்ட…

  2. இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு! அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத…

  3. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் நெஞ்சு வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இரவு 8.45 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சில் வலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் உடனே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே இதய சிகிச்சைப் பிரிவு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமர் இருந்த மன்மோகன் சிங், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவராகப் பதவி வகித்தவர். அத்துடன் மத்திய நிதியமைச்சராகவும், ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. …

  4. இந்தியாவில் கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 62 ஆயிரமாக அதிகரிப்பு! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையானது 62 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளும் முடக்கப்பட்டன. இதனை தொடர்ந்தும் கொரோனா வைரஸ் பாதிப்புக் கட்டுக்குள் வராததால் ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சு சில தளர்வுகளுடன் மே 17 வரை நீடித்ததுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று மட்டும் 526 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்து 535 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது க…

  5. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடியை கடனாகப் பெறும் மத்திய அரசு இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 12 இலட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாகப் பெறவுள்ளதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்றுமதி வரிகள், ஜி.எஸ்.டி. வரிகள், மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் பெருமளவுக்கு குறைந்துள்ளதால் வருடாந்த நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதேவேளை, 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் நிதிப்பற்றாக்குறை ஏழு இலட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாகக் கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சந்தைகளில் இருந்து கடனாக இத்தொகையை மத்திய அரசு பெறுவது வழக்கம். தற்போது இந்தக் கடன்தொகை 12 இலட்சம் கோடி ரூபாயாக உயர்கிறது. இதனால…

    • 1 reply
    • 456 views
  6. கோவிட்-19 | கேரளா வெற்றியின் இரகசியம்IIIIIநிப்பா வைரஸ் கற்றுத்தந்த பாடம் கோவிட்- 19 வைரஸின் கொட்டத்தை அடக்கிய இந்திய மாநிலங்களில் முதன்மையானது கேரளா. உலக நாடுகளில் முதன்மையானது வியட்நாம். இரண்டின் வெற்றிகளுக்கும் காரணம் பொதுப்புத்தி இருந்தமையும், அதைப் பாவித்தமையும். 2018 இல் கேரளாவில் ஒரு வைரஸ் தொற்று வந்தது. அதுவும், சார்ஸ் கொவ்-2 வைப் போல, வெளவாலிலிருந்து (பழ வெளவால்) தொற்றியிருந்தது. 19 நோயாளிகளில் 17 பேர் மரணமடைந்திருந்தனர். முதல் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தாதி உட்பட, பெரும்பாலானவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள். நோய் இன்னது என்று அறியமுன்னரே அது தொற்றுக்கள் பரவி விட்டன. அந்த தொற்றுக்குக் காரணமான வைரஸுக்குப் பெயர் நிப்பா. …

    • 0 replies
    • 371 views
  7. கொரோனாவுக்குப் பிந்தைய பிறப்பு விகிதம்: இந்தியா முதலிடம்! மின்னம்பலம் யுனிசெஃப் அறிக்கையின்படி, இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் 20 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறது. "இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் பெரும்பாலானவை தொற்றுநோய்க்கு முன்பே அதிக குழந்தை பிறந்த இறப்பு விகிதங்களைக் கொண்டிருந்தன. மேலும் இந்த அளவுகள் கோவிட்-19 நிலைமைகளுடன் அதிகரிப்பதைக் காணலாம்," எனக் கூறியுள்ளது. ஒப்ப…

  8. சரக்கு ரெயில் மோதி புலம்பெயர் தொழிலாளர்கள் பலி "மிகுந்த வேதனையளிக்கிறது" - பிரதமர் மோடி சரக்கு ரெயில் மோதி 17 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். பதிவு: மே 08, 2020 10:14 AM புதுடெல்லி மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வந்த மத்திய பிரதேச தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரெயில் தண்டவாள பாதையில் நடந்து சென்றுள்ளனர். ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் எந்த ரெயிலும் வராது என்று நினைத்த, தொழிலாளர்கள் வெகுநேரம் நடந்த களைப்பில் அனைவரும் நேற்று இரவில் கர்மத் அருகே தண்டவாளத்திலேலே படுத்து…

    • 4 replies
    • 915 views
  9. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தை நெருங்கியது! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளன. மத்திய சுகாதாரத்துறை இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 342ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3900 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 56 ஆயிரம் பேரில் 16 ஆயிரத்து 540 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந…

  10. இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா? சீனாவை மையமாகக் கொண்டிருந்த கரோனா தற்போது ஐரோப்பாவைத் தனது கேந்திரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு இதுவரை குறைவாக உள்ள இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கு தனிமனித இடைவெளி பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்த விவாதங்களில் பலரும் ஒரு பிழையான ஒப்பீட்டைச் செய்துவிடுகிறார்கள். அது சீன மக்கள்தொகையுடன் இந்திய மக்கள்தொகையை ஒப்பிடுவது. 143 கோடியுடன் உலகிலேயே மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அதன் பரப்பளவு 95,96,961. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 145 பேர் வசிக்கிறார்கள். இந்தியாவின் பரப்பளவோ சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 2018-ன் க…

  11. மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனா தொற்று அதிகரிப்பு! மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனாவால் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மேலும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மும்பையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக தாராவி காணப்படுகின்ற நிலையில் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 733ஆக அதிகரித்துள்ளது. இதுமட்டுமன்றி நேற்று அங்கு ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் தாராவியில் மரணித்தோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/மும்பையில்-தமிழர்கள்-அதி/

  12. விசாகப்பட்டிணம் வாயுக்கசிவு: அதிகாலை 3 மணிக்கு அலறிய சைரன்.. கதவை உடைத்து மக்களை வெளியேற்றிய போலீஸ்- முகத்தை ஈரத்துணியால் மறைக்க அறிவுறுத்தல்-2,000 பேர் வெளியேற்றம் விசாகப்பட்டிணம் கோபால்பட்டிணத்தில் உள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிவினால் 3 கிமீ தூரம், 5 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 5 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது, சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் மூச்சுவிடச் சிரமம், மற்றும் வாந்தி ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது, சுமார் 1000 பேர் வரை இந்த வாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 2.30-3 மணியளவில் இந்த வ…

  13. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தாக்குதல் நடத்துவதாக கூறியுள்ள பாக். வெளியுறுவுத்துறை நம் துாதரக அதிகாரிக்கு 'சம்மன்' அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் ஆறு பேர் காயம் அடைந்ததாக அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் தொடர்ந்து பீரங்கி மற்றும் கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதாகவும் நடப்பாண்டில் 957 முறை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் அது கூறியுள்ளது. இதனையடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கூறி இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிக்கு பாக்., சம்மன் அனுப்பியுள்ளது. …

    • 0 replies
    • 259 views
  14. 13 நாடுகளில் சிக்கியுள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் வாரத்தில் பஹ்ரைன், பங்களாதேஷ், குவைத், மலேசியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து 64 விமானங்களில் மொத்தம் 14,800 இந்தியர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக பத்து விமானங்களும் இந்திய கடற்படையின் மூன்று கப்பல்களும் பயன்படுத்தப்படவுள்ளன. ம…

  15. இந்தியாவில் உச்சம்... 24 மணி நேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 195 பேர் மரணம் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 195 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொடர்பான பரிசோதனைகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது என்பது மாநில அரசுகளின் கருத்து. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் நேற்று மட்டும் 195 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மிக அதிகபட்சமாக 14,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிராவில் மொத்தம் 583…

  16. என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- இந்தியாவுக்குத் தேவை அதிகாரப் பரவலாக்கல் அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்! ஒரு பேரிடரை எதிர்கொள்ளும்போது நமக்குக் கிடைக்கும் பெரிய படிப்பினை, ‘உண்மையில் நாம் யாராக, என்னவாக இருக்கிறோம்?’ என்பதை நாமே புரிந்துகொள்வதுதான். நம்முடைய எல்லா பலங்கள், பலவீனங்களையும் ஒரு பேரிடர் அம்பலமாக்கிவிடுகிறது. கரோனா கிருமிக்காக ஒட்டுமொத்த நாடும் போராடிவரும் இந்நாட்களில், சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இந்த நாட்டைப் பீடித்திருக்கும் மோசமான ஒரு கிருமி நம் கவனத்தைக் கோருகிறது - அதிகாரக்குவிப்பு; இனியேனும் அதற்கு எதிரான சிகிச்சையை நாம் உடனடியாகத் தொடங்கிட வேண்டும். உலகம் முழுக்க கரோனா பரவியிருப்பதாலேயே உலகத்தின் ஒவ்வொரு நாடும் அதை எப்படி எதிர்கொள…

    • 1 reply
    • 452 views
  17. சிறப்புக் கட்டுரை: கொரோனா ஊரடங்கு - 40 நாட்கள் படிப்பினைதான் என்ன? மின்னம்பலம் ராஜன் குறை நேற்றுடன் சரியாக ஊரடங்கு தொடங்கி நாற்பது நாட்கள் நிறைவடைகிறது. முதலில் திட்டமிட்டபடி இன்று முதல் இயல்பு வாழ்க்கை அல்லது சில புதிய இயல்புகளுடன் கூடிய அன்றாட வாழ்க்கை மீண்டிருக்க வேண்டும். ஆனால், ஊரடங்கு மேலும் தொடர்கிறது. எத்தனை நாட்கள் தொடரும் என்பது நிச்சயமற்ற நிலையில் இது தொடர்கிறது. மத்திய அரசு தளர்த்தும் விதிமுறைகளைக்கூட மாநில அரசு தளர்த்தாமல் இருக்கலாம் என்ற நிலையும் உருவாகியுள்ளது. மாவட்ட வாரியாக சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் எனப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அமலாகின்றன. இந்த நிலையில் உள்ளபடியே நிலைமையை மத்திய மாநில …

  18. இஸ்லாமிய வெறுப்பு: “முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுகிறோமா? - விஷ்வ இந்து பரிஷத் நிர்வாக தலைவர் அலோக் குமார் நேர்காணல் Getty Images கொரோனா பெருந்தொற்றின் போது நாட்டில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களும், அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன. முஸ்லிம் வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிக்காரர்களிடம் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இதுபோன்ற முஸ்லிம் எதிர்ப்பு காணொளிகள் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கர்நாடகா, பஞ்சாப் என பல்வேறு மாநிலங்களின் பல இடங்களிலிருந்து வெளிவருகின்றன. 'முஸ்லிம்கள் கொரோனாவைப் பரப்புகிறார்கள்' என்பது போன்ற வதந்திகளு…

  19. ஹன்ட்வாரா தாக்குதல்: ராணுவ மேஜர் உள்ளிட்ட 5 இந்திய வீரர்கள் உயிரிழப்பு ANI ஜம்மு காஷ்மீரின் குப்லாரா மாவட்டத்தில் உள்ள ஹன்ட்வாராவில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில், இரு இந்திய ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் கர்னல், மேஜர் ஜெனரல், இரு ராணுவ வீரர்கள், மற்றும் ஒரு காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்ததாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் இரு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் சுமா…

  20. நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக ஆய்வில் தகவல் கொரோனா வைரஸ் பிரச்சினையை திறம்பட கையாளுவதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான ‘மோர்னிங் கன்சல்ட்’ (morning consult), இந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, ஜப்பான், பிரேசில், பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜேர்மனி ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கையாளுகின்றனர், அவர்களுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வ…

  21. தமிழர்களின் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஆகிவிடக் கூடாது தாராவி தமிழக வரைபடத்துக்குள் அடைபடவில்லை என்றாலும்கூட, தாராவியும் ஒரு தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் இருக்கிற சாதிச் சங்கங்கள் தொடங்கி அரசியல் கட்சிகள் வரையில் அத்தனைக்கும் அங்கேயும் கிளை உண்டு. வாழ்வதுதான் மஹாராஷ்டிரமே தவிர, இன்னமும் தங்களைத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே பாவிப்பவர்கள் இவர்கள். இன்னும் ஊரோடு வேர்களை அறுத்துக்கொள்ளாதவர்கள். முக்கியமான காரணம், அங்கேயே நிலைத்திட கனவு காண தாராவி ஒன்றும் சொர்க்கம் அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய சேரி மட்டும் அல்ல அது; மிக நெரிசலான, நெருக்கடியான பகுதி. எனது தந்தை ஓராண்டு அங்கே இருந்தவர். என் அண்ணன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அங்கே வசிக்கிறார் என்பதால், நானு…

  22. விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி! விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத 68 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசேர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ் கட்சி முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தகவலை வெளியிட்டுள்ள ரிசேர்வ் வங்கி, தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் மொத்தம் 68 ஆயிரத்து 607 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்த…

  23. இந்தியாவில் 33 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 74 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வைரஸ் அதிவேகமாக பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இறப்பு விகிதமும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று(வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில…

  24. லாக் டவுனில் சிக்கித் தவிப்பவர்கள் சொந்த ஊருக்குச் செல்லலாம்: நிபந்தனைகளுடன் உள்துறை அமைச்சகம் அனுமதி பிரதிநிதித்துவப் படம். புதுடெல்லி நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் சில நிபந்தனைகளுடன் அந்தந்த இடங்களுக்குச் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்…

  25. ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக தமிழகத்தை சேர்ந்த திருமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகத்தைசேர்ந்தவர் திருமூர்த்தி . இவர் மத்திய வெளியுறவுத்துறை யில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது இவர் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது ஐ.நாவில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்துவரும் சையத் அக்பருதீன் விரைவில்ஓய்வு பெற உள்ளதை அடுத்து இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1995ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறையில் பணியில் சேர்ந்தார். ஜெனிவா, வாஷிங்டன் டிசி, ஜகார்த்தா, மலேசியா, நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் உயர் பதவி மற்றும் ஐ.நா.,வின் பொருளாதாரம் மற்றும் சமூக பணிதுறையின் இணை செயலாளரா…

    • 4 replies
    • 487 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.