அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3273 topics in this forum
-
ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களை மக்கள் ஊரடங்கு ஒன்றை கடைப்பிடிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் இந்திய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்த பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் எவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது அயலில் கூடி நிற்க கூடாது அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மோடி அனைவரையும் கட்டாயமாக இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது அடுத்த சில வாரங்களிற்கான சமூக விலகலுக்கான புதிய பயிற்சியை வழங்கும் என மோடி தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணிக்கு எங்கள் வீடுகளில் இருந்தாவாறு மணியடிப்பதன் மூலம்; அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர…
-
- 5 replies
- 488 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை. மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? - இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம். இதற்கு அவ…
-
- 0 replies
- 310 views
-
-
விவாகரத்து கேட்டு நிர்பயா கொலை குற்றவாளியின் மனைவி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அவுரங்காபாத் நீதிமன்றில் இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் புனிதா விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை மார்ச் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் திகதி அதாவது, நாளை தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறத…
-
- 1 reply
- 461 views
-
-
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், நாளை அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்…
-
- 0 replies
- 174 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல் Coronavirus News படத்தின் காப்புரிமை EPA மார்ச் 11 ஆம் தேதி நிலவரத்தின்படி இந்தியாவில் 60 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. உலகில் அதிக மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய நாடு, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால் அதைச் சமாளிக்க தயார் நிலையில் இருக்கிறதா? ஏற்கெனவே 3,000 பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுவிட்ட, 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள சுவாச மண்டலம் தொடர்பான இந்த வைரஸ் தாக்குதல் நோயை சமாளிக்க உலகில் ஆயத்தமான முதல் வரிசை நாடுகளில் நாம் உள்ளதாக இந்தியா கூறுகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் முதலாவது…
-
- 14 replies
- 2k views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி! கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயற்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயற்படும். அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக…
-
- 0 replies
- 548 views
-
-
கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் 2 பகுதியிலானோர் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 7900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் இதுவரை 673 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெடாலிங் மசூதியில் கடந்த பிப்.,27ம் முதல் மார்ச் 1 வரையிலான 4 நாள் தொழுகை நடைபெற்றது. இதில் கனடா, நைஜீரியா, இந்தியா, ஆஸ்திரேலியா உ…
-
- 2 replies
- 344 views
-
-
புதுடில்லி: 'கொரோனாவை கட்டுப்படுத்த, தென் கிழக்கு ஆசிய நாடுகள், உடனடி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் உள்ள, 11 நாடுகளில் எட்டு நாடுகளில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவியிருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று (17ம் தேதி) மாலை நிலவரப்படி, தாய்லாந்து - 177, இந்தியா - 147, இந்தோனீசியா - 134, இலங்கை - 19, மாலத்தீவுகள் - 13, வங்கதேசம் - 5, நேபாள் மற்றும் ப…
-
- 0 replies
- 266 views
-
-
கொரோனா தாக்கம் : 15 அம்ச கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு! இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படும். மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம். தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும். பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்தலாம். திரும…
-
- 0 replies
- 179 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த யோசனை மற்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்ற…
-
- 1 reply
- 251 views
-
-
இந்தியாவை வதைக்கும் கொரோனா: இருவர் உயிரிழப்பு – 125 பேர் பாதிப்பு உலகை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இருவர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் …
-
- 0 replies
- 199 views
-
-
இந்தியாவில் வேவுபார்த்த குற்றச்சாட்டின கீழ் இலங்கை சேர்ந்த அருண் செல்வராஜனிற்கு இந்திய நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமீம் அன்சாரி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜனிற்கே நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 2012 இல் தஞ்சாவூரை சேர்ந்த தமிம் அன்சாரி இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய சிரேஸ் அதிகாரியான அமீர் சுபைர் சித்திக்கின் உத்தரவில் செயற்பட்ட புலானாய்வாளர்களிற்காக வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் 2014 இல் இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரியின் உத்தரவின் கீழ் சென்னையில் பல முக்கிய இடங்களை வேவுபார்த்த குற்றச்சாட்டின் கீழ…
-
- 0 replies
- 262 views
-
-
நிர்பயா கொலை வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகுமாறு சிறை நிர்வாகம் உத்தரவு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 20ஆம் திகதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிடும் பணியில் ஈடுபட மூன்று நாட்களில் தயாராகுமாறு மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012இல் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில்…
-
- 0 replies
- 444 views
-
-
பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர். சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- சார்க் நாடுகள் தங்களது குடிமக்களின் உடல்நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தலாம். ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. பல்…
-
- 5 replies
- 462 views
-
-
போக்சோ சட்டத்தில் புதிய விதிமுறைகள்! பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தை மேலும் கடுமையாக்குவதற்கான புதிய விதிகள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத் திருத்தங்களை அமுல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. பாடசாலைகள், குழந்தைகள் காப்பகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான விவரங்களை பொலிஸார் மூலம் உறுதி செய்வதை கட்டாயமக்குவது, சிறார் ஆபாச படங்கள் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு…
-
- 0 replies
- 658 views
-
-
சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் 17, கேரளா 17, மகாராஷ்டிரா 19, உத்தரபிரதேசம் 11, டெல்லி 6, ஆந்திரா 4, கர்நாடகா 4, லடாக் 3, காஷ்மீர் 1, பஞ்சாப் 1 ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் கடுமையா…
-
- 0 replies
- 125 views
-
-
கொரோனா அச்சுறுத்தல்: டெல்லியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31ஆம் திகதி வரை மூடப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேர்வுகள் நடைபெறும் வகுப்புகள் தவிர ஏனைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது எனத் தெரிவித்துள்ள அவர், திரையரங்குகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பரில் கொரோனா வைரஸ் தாக்கியது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 117 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதுவரை 4,635 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர…
-
- 0 replies
- 204 views
-
-
காசியில் மசூதியை அகற்றி காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்படும்.. அடுத்த குண்டை வீசிய சு.சாமி.!! காசியில் மசூதியை அகற்றிவிட்டு காசி விஸ்வநாதர் கோவில் கட்டப்படும் என்று சு.சாமி திருச்சியில் புதிதாக ஒரு குண்டை வீசி விட்டு சென்றிருக்கிறார். முஸ்லீம்களுக்கு அடுத்த சிக்கல் காசியில் காத்திருக்கிறது என்கிறார்கள் சு.சாமி ஆதரவாளர்கள். சென்னையில் இருந்து திருச்சி வந்த சுப்பிரமணியசாமி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது. “அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி ஏப்ரல் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. அந்த பணி 2 ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக தனியாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த கமிட்டி ராமர் கோவில் கட்டும்…
-
- 1 reply
- 337 views
-
-
கொரோனா தொற்று – இந்தியாவில் முதல் உயிரிழப்பு பதிவு? உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் ஐதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து கர்நாடகா அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இது குறித்து கர்நாடகா அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், “சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த முகமது உசைன் சித்திக், 76, என்ற முதியவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்…
-
- 1 reply
- 294 views
-
-
லண்டனில் வசித்து வரும் புஷ்பம் பிரியா சௌத்ரி என்ற பெண், பீகாரின் புதிய முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவித்து பெரிய அளவில் விளம்பரம் செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் தற்போது ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அங்கு எதிர்க்கட்சியாக உள்ள தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் பிற கட்சிகளுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது. பீகார் என்றால…
-
- 14 replies
- 812 views
-
-
இந்தியர்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்து திரும்பினால் குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்படலாம் என இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், ராஜரீக அதிகாரிகள், ஐநா அல்லது சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்கள், பணி நிமித்தப் பயணம், அலுவல் திட்ட ரீதியான விசாக்களை தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. "வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமக்கள் விசா இன்றி இந்தியாவுக்கு பயணம் செய்ய வழங்கப்பட்ட வசதி ஏப்ரல் 15, 2020 வரை இடைநிறுத்திவைக்கப்படுகிறது. இத்தாலி, சீனா, இரான், கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்…
-
- 0 replies
- 436 views
-
-
மத்திய பிரதேசத்தில் 16 அமைச்சர்கள் இராஜினாமா மத்திய பிரதேசத்தில் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட 16 அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. முதல்வர் கமல்நாத்திற்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு பெற்ற 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்ளூருக்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட 16 அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்…
-
- 0 replies
- 228 views
-
-
கவுகாத்தி : கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வெளிநாட்டவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, அண்டை நாடுகளுடனான எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. மணிப்பூர் அரசு, மியான்மர் எல்லையை, காலவரையின்றி மூடியுள்ளது. அந்த வழியாக வெளிநாட்டவர் உள்ளே வருவதற்கு தடை விதித்துள்ளது. எல்லை பகுதிக்கு செல்ல வேண்டாம் என மக்கள் கேட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மிசோரம் மாநில அரசும் மியான்மர் மற்றும் வங்கதேச எல்லைகளை மூடியுள்ளதுடன், கொரோனா பரவலை தடுப்பதற்காக வெளிநாட்டினர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அருணாச்சல பிரதேச அரசும், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. மறுஉத்தரவு வரும் வரை, அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 310 views
-
-
இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, உத்தரப்பிரதேசம், கேரளாவில் எர்ணாகுளம் ஜம்மு, கர்நாடகாவில் பெங்ளூர், பஞ்சாப் மற்றும் புணே ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் கடந்த ஜனவரி மாதம் முதல் சீனா உள…
-
- 0 replies
- 277 views
-
-
வினாக்களுடன் கடந்து சென்ற மகளிர் தினம் எம். காசிநாதன் / 2020 மார்ச் 09 மகளிர் தினம் 2020; இந்தியாவில் உள்ள மகளிருக்கு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மகளிர் தினமாகவே கடந்து போயிருக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையில், 13 பெண் உறுப்பினர்கள் அங்கம் வகித்து இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குத் துணை நின்றுள்ளார்கள்; நாட்டின் குடியரசுத் தலைவராக பிரதீபா பட்டீலும் பிரதமராக இந்திரா காந்தியும் பொறுப்பேற்றுப் பணியாற்றி இருக்கிறார்கள். ஆனால், இந்தியாவின் மக்களவையிலும் சட்டமன்றங்களிலும் ‘மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு’ வழங்கும் சட்டமூலம் மட்டும், இன்னும் கரை சேரவில்லை. இந்த முறையாவது சட்டமூலம் நிறைவேற்றப்படுமா என்ற ஏக்கம் நாடுமுழுவதும் பரவ…
-
- 0 replies
- 294 views
-