Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை தடுக்க முடியாது: பா.ஜ.க. அமைச்சர் உறுதி! அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என அமைச்சர் கிரிராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறைஅமைச்சர் கிரிராஜ் சிங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவில் வாழும் சுமார் 100 கோடி மக்களின் மதநம்பிக்கைக்கு மையப்புள்ளியாக இருக்கும் ஸ்ரீராமபிரானுக்கு அயோத்தியில் கோவில் கட்டும் விவகாரம் நீர்த்துகொண்டே போகின்றது. தங்கள் நம்பிக்கையை இழந்த மக்கள் தற்போது பொறுமையிழந்து விட்டார்கள். ஆனால், …

  2. ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன. சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகி…

    • 0 replies
    • 333 views
  3. இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தரு…

  4. நாடு கடத்தினால்... நிரவ்மோடி, தற்கொலை செய்துகொள்வார் – வழக்கறிஞர் தெரிவிப்பு! தொழிலதிபர் நிரவ் மோடியை நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர் நாடுகடத்தப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ‘நிரவ் மோடியின் சிறுவயதில், அவரது தாய், தற்கொலை செய்துள்ளார். அதிலிருந்து நிரவ்மோடி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மனநல ஆலோசனைகளையும் அவர் முறையாக பெறவில்லை. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டால் அவர் தற்கொலை செய்துகொள்வார்’ எனத் தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபரான நிரவ்மோடி மற்றும் மெஹுல் சோக்சி, ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் இர…

  5. இந்தியாவின் மிக மோசமான ரயில் விபத்து : மூன்று ஊழியர்கள் கைது இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்து தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் மூன்று ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்னல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் இருவர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஒடிசா ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர், சிக்னல் பிரிவின் ஊழியர்களின் தவறை வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி, மூவரின் செயல்கள் விபத்திற்கு வழிவகுத்தது என விசாரணையில் தெரியவந்ததையடுத்து இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1338120

  6. சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர். தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச…

  7. அனைத்து கணணிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக மனு தாக்கல் : January 16, 2019 அனைத்து கணணிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது கடந்த மாதம் 20ம் திகதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து கணணிகளையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சி.பி.ஐ., நுண்ணறிவு பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, அமுலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு உள்பட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது. இந்தநிலையில் மத்திய அர…

  8. காஷ்மீர் எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்.. 1 மணி நேரமாக தொடர்ந்து தாக்குதல்.. பதற்றம்! இந்திய காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலையில் மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைக்கு இப்போதைக்கு சரியாவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவரும் பாகிஸ்தான் இன்னொரு புறம் எல்லையில் தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.சரியாக 6 மணிக்கு இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. உயர் ரக துப்பாக்கிகள் மூலம் இந்திய துருப்புகளை நோக்கி, பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. தொடர்ந…

  9. பிணை வழங்கினால் வெளிநாடு செல்லமாட்டேன் – பா.சிதம்பரம் பிணை வழங்கினால் வெளிநாடு செல்லமாட்டேன் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் விளக்க மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பா.சிதம்பரத்திற்கு பிணை வழங்க கூடாது என சி.பி.ஐ தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பா.சிதம்பரம் விளக்க மனுவொன்றை அளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது குறித்த விளக்கமனுவை பா.சிதம்பரம் நேற்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில், நான் பொறுப்புமிக்க குடிமகன். ஜாமீன் கிடைத்தால் நான் வெளிநாடு செல்ல மாட்டேன். வெளிநாடு சென்று தப்பி விடுவேன் என சி.ப…

  10. ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை! ஜி.எஸ்.டியை எளிமைப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றது. இதன்போது ஜி.எஸ்.டி.யை தாக்கல் செய்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. மேலும் குறிப்பிட்ட நிகழ்கால வருமானத்தை தாக்கல் செய்வது மற்றும் அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பற்றியும் கூட்டத்தில் கவலை வெளியிடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. வரியை மேலும் எளிமைப்படுத்தவும் குறைகளை களைய உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். http://athavannews.com/ஜி-எஸ்-டியை-எள…

  11. இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, நாட்டின் அமைதியை கெடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனு தொடுத்திருந்தார். அந்த மனுவிற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம் "நாடு நெருக்கடி நிலையில் உள்ளது. நாட்டில் அமைதியை கொண்டுவரும் முயற்சிகள் வேண்டும். இம்மாதிரியான மனுக்கள் அதற்கு உதவாது," என தெரிவித்துள்ளது. …

  12. பட மூலாதாரம், X/@ACBofficials 18 அக்டோபர் 2025, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பக்டிகா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகக் கூறி அதனைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனுடன், நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளது. மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்." என்று…

  13. மும்பை தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா: புதிதாக ஒருவருக்கு மட்டுமே தொற்று மராட்டிய மாநிலம் மும்பை தாராவியில் கொரோனா தொற்று கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பதிவு: ஜூலை 08, 2020 07:59 AM மும்பை, ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள் வசிக்கும் மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது. இதன்பலன…

  14. மூன்றாம் அலை பீதியை வலுப்படுத்தியிருக்கும் டெல்டா ப்ளஸ் வைரஸ்; யாரையெல்லாம் தாக்கும்? ஜெனி ஃப்ரீடா A health worker takes a nasal swab sample ( AP Photo/Aijaz Rahi ) வேகமாகத் தொற்றுவது, தடுப்பூசி அதிக திறனோடு செயல்படாதது, ஆன்டிபாடி காக்டெயில் மருந்து வேலை செய்யாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த வைரஸ் அதிகம் பரவினால் இதன் மூலம் மூன்றாம் அலை பரவும் என்று கணிக்கின்றனர். இந்தியாவில் இரண்டாம் அலையின் தாக்கம் சற்று தணியத் தொடங்கினாலும் மூன்றாம் அலை விரைவில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா ப்ளஸ் என்ற புதிய உருமாறிய வைரஸ் தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் மூன்றாம் அலையை ஏற்படுத்தலாம் என்…

  15. பிரான்ஸில் இருந்து 3 ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை! பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்தது. முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கொண்டுவரப்பட்டன. இதனையடுத்து ஏழாம் கட்டமாக 3 விமானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்திய விமானப்படையில் தற்போது 24 ரஃபேல் போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1229959

  16. சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவுக்குத் தேவையா? கட்டுரை தகவல் எழுதியவர்,ராகவேந்திர ராவ் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/TEJASVI YADAV பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்பு பணியைத் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப்பணியின் முதல் கட்டத்தை மே 31-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் சாதி, துணை சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலை …

  17. யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம். தி இந்து(ஆங்கிலம்): யானைகள் பாலத்தை கடக்க பாதியில் நிற்கும் ரயில்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தென் கிழக்கு ரயில்வேயில், யானைகள் பாலத்தை கடப்பதற்காக ரயில்களை நிறுத்துவது என்பது வாடிக்கையான…

  18. இம்ரானின் கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசு நடவடிக்கை! பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் Pakistan Terheek-e-Insaf (தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சியைத் தடை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இம்ரான் கானினால் கடந்த 1996 ஆம் ஆண்டு தெஹ்ரீக்-ஈ-இன்சாஃப்) கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல்முறையாக இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்தார். இதனைத் தொடர்ந்து, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில…

  19. வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி – காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு! இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பா.ஜ.க 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அதன்படி, நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் தெரிவித்துள்ளார். அத்துடன், தலைமைத் தேர்தல் ஆணைக்குழு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிபரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளதாகவும், இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகள் எனவும் வோட் பார் டெமாக்ரச…

  20. ஒன்றரை இலட்சம் பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: விசாரிக்க அதிவிரைவு நீதிமன்றங்கள் நாடு முழுவதும் தேங்கிக் கிடக்கும் பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆயிரத்து 23 அதிவிரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் 1 இலட்சத்து 66 ஆயிரத்து 882 பாலியல் துஷ்பிரயோக மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரித்து முடிக்காமலும் தீர்ப்பளிக்கப்படாமலும் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றில் 389 மாவட்ட நீதிமன்றங்களில் தலா நூறுக்கும் அதிகமான சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப…

  21. இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமெரிக்கா! இந்தியாவுடன் 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது என்று ஹெக்ஸெத் தனது இந்திய சகா ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பிற்குப் பின்னர் எக்ஸில் பதிவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வொஷிங்டன் டெல்லியன் பொருட்களுக்கான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப்பாக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள…

  22. ஜெனரல் நரவனே யார்? அவரின் வெளியாகாத புத்தகம் குறித்து நாடாளுமன்றத்தில் அமளி ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜெனரல் எம்.எம். நரவனே டிசம்பர் 2019 முதல் ஏப்ரல் 2022 வரை இந்திய ராணுவத்தின் 28வது முப்படைகளின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார். 31 நிமிடங்களுக்கு முன்னர் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் உரையால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் (எம்எம்) நரவனே எழுதிய வெளியாகாத புத்தகம் (ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி) குறித்து கேரவன் இதழில் வெளியான கட்டுரையின் சில பகுதிகளை ராகுல் காந்தி வாசிக்க முயன்றார். ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில்…

  23. ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா: இவ்வளவு அதிகாரம் கொண்டதா? திரையுலகினர் கூறுவதென்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவின் ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா அரசுக்கு அளப்பரிய சென்சார் அதிகாரத்தை வழங்கும் என்று இந்தியாவின் முன்னணி சினிமா இயக்குநர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது சென்சார் சான்று வழங்கப்பட்டு வெளியான படத்தை கூட மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வழி ஏற்படும். இந்தியாவில் தயாரிக்கப்படும் சினிமாக்களுக்கு மும்பையில் இருக்கும் சென்சார் குழு சான்றளிக்காமல், அதை பொதுவெளியில் திரையிட முடியாது. சென்சார் குழுவுக்கு வட்டார அலுவலகங்களும் இருக்க…

  24. குஜராத்தில் தங்கத்தை தேடி தோண்டியபோது கிடைத்தவை, மனித வரலாற்றை மாற்றும் பொக்கிஷங்களா? பட மூலாதாரம்,PRASHANT GUPTA படக்குறிப்பு, லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 26 பிப்ரவரி 2024, 02:39 GMT குஜராத் மாநிலம் கட்ச் நகரின் தோலாவிராவிலிருந்து 51 கிமீ தொலைவில் உள்ள லோத்ரானி பகுதியில் ஹரப்பா நாகரிக காலத்தை சேர்ந்த தொன்ம எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோலாவிராவில் கிடைத்த புதைபடிவங்களைப் போன்றே இங்கும் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சிந்து சமவெளி பண்பாட்டின் முக்கிய நகரங்களாகக் கருதப்படும் ஆமதாபாத்தின் லோத்தல் மற்றும் கட்சின் தோலாவிரா ஆகியவை, தற்போது குஜராத்…

  25. படத்தின் காப்புரிமை LOKSABHATV தனது நாடாளுமன்ற கன்னிப் பேச்சின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மவுவா மெளத்திரா. இந்த ஆண்டின் சிறந்த பேச்சு இதுவென சமூக ஊடகங்களில் அவரது நாடாளுமன்ற பேச்சை கொண்டாடுகிறார்கள். ஃபாசிசத்தின் ஆரம்பகால அறிகுறிகள் தெரிவதாகவும், இந்திய அரசமைப்பு சட்டம் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். பா.ஜ.கவின் பெரும் வெற்றியை கொண்டாடிய அவர், ஃபாசிசத்தின் ஏழு அறிகுறிகள் தெரிவதாக கூறினார். பா.ஜ.கவின் பெரும் வெற்றி, எதிர்ப்பு குரல்களும் கேட்கப்பட வேண்டும் என்பதை அவசியமாக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.