அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3312 topics in this forum
-
புருலியா: சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கினார். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், டாக்டர்களை சந்தித்துள்ளனர். அப்போது டாக்டர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தங்குவதற்கு ஏற்ற வகையில் துணியை கட்டி அதில் தங்கியுள்ளனர். இது தொடர்பாக…
-
- 0 replies
- 235 views
-
-
கொவிட் -19' எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவின் பூனே வைராலஜி ஆய்வு நிறுவனம் கொவிட் 19 வைரஸ் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரையில் 5 இலட்சத்து 97 ஆயிரத்து 458 பேர் (28ஆம் திகதி அறிக்கை) உலகவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 ஆயிரத்து 370 நபர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் கட்ட பரவல் ஆரம்பிக்கும் நிலைமை உள்ளதாகவும் சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் மிக அதிகமாக உள்ள நிலையில் ஆசியா…
-
- 4 replies
- 481 views
-
-
கொரோனா – மகாராஷ்டிராவில் 11,000 கைதிகளை விடுமுறையில் அனுப்ப முடிவு…. March 27, 2020 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக கைதிகள் அதிகம் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்படவுள்ளனர். மூன்றாண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற 11,000 கைதிகளை பரோலில் அனுப்ப முடிவு செய்துள்ளது மகாராஷ்டிர மாநில அரசு. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட, இந்தியாவின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான டெல்லி திகார் சிறையில் இருக்கும் 3,000 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் பரோலில் வெளியில் வருபவர்களும், வழக்கு விசாரணையில் இருக்கும்போது பி…
-
- 0 replies
- 266 views
-
-
கொரோனா வைரஸ்: 900 கி.மீ நடந்து சொந்த ஊருக்கு செல்லும் கூலித் தொழிலாளர்கள் - இந்திய சோகம் Hindustan Times இந்திய தலைநகர் டெல்லியிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூட்டம் கூட்டமாக நடந்தே செல்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பலரும் அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் பணி இல்லாமல், செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள், சாரை சாரையாக அவர்களது சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கிறார். பல ஆண்கள், சில பெண்கள் மற்றும் குழந்…
-
- 0 replies
- 304 views
-
-
கொரோனா வைரஸ்: இந்த ஜவுளி நகரம் `இந்தியாவின் இத்தாலியாக' ஆகப் போகிறதா? மொஹர் சிங் மீனா பிபிசி இந்தி படத்தின் காப்புரிமை Getty Images மார்ச் 8 ஆம்தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 5 மணிக்கு (கிரீன்விச்நேரப்படி 23.30 மணி) ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு 52 வயதானஆண்ஒருவர் நிமோனியா பாதிப்புடன் கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறலும் இருந்தது. பில்வாராவில் உள்ள பிரிஜேஷ் பங்கார் நினைவு மருத்துவமனையில், இந்தப் புதிய நோயாளியை 58 வயதான டாக்டர் அலோக் மிட்டல் பரிசோதனை செய்திருக்கிறார். நோயாளி வெளிநாடு சென்று வந்தாரா என்பது பற்றி யாரும் கேட்கவும் இல்லை, அவராகவும் சொல்லவும் இல்லை. தீவிர சிகிச்சைப்பிரிவில்…
-
- 2 replies
- 326 views
-
-
மூத்த மருத்துவர்களால் நோயாளிகளைத் தொட முடியாது. ஏனென்றால் அவர்கள் 50 வயதைத் தாண்டியிருப்பார்கள். கொரோனா தொற்று நோய் என்பதால், 50 வயதுக்கு அதிகமானோரைத் தாக்கினால் இறப்புக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களை களமிறக்க வேண்டும் என்றும், இதற்காக அவர்களது தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி பிரசாத் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நாராயணா ஹெல்த்தின் நிறுவனரும், பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணருமான தேவி பிரசாத் ஷெட்டி பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத…
-
- 0 replies
- 470 views
-
-
கொரோனா தனிமைபடுத்தல் கட்டுப்பாட்டை மீறி சொந்த ஊர் சென்ற சப்-கலெக்டர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனுபம் சர்மா திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட சப்-கலெக்டராக பணியாற்றி வந்தவர் அனுபம் சர்மா. இவரது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஆகும். அனுபம் சர்மா சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 19-ம் தேதி தான் பணி செய்யும் கேரளா மாநிலம் திரும்பியுள்ளார். வெளிநாடு சென்றுவந்த சர்மாவை கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடி…
-
- 1 reply
- 269 views
-
-
பஞ்சாபில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்க, அவருடன் தொடர்பில் இருந்ததாக 20 கிராமங்களை சேர்ந்த 40,000 பேரை அம்மாநில அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சமீபத்தில் உயிரிழக்க, அவர் உயிரிழந்த பின்னர்தான், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனி மற்றும் இத்தாலி சென்று திரும்பிய பல்தேவ் சிங், ஒரு மத போதகர். அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டும் அந்த முதியவர் அதனை கேட்கவில்லை என பிபிசி பஞ்சாபி சேவை செய்தியாளர் அர்விந்த சப்ராவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை இந்தியாவில் 700க்கும் மேற்பட்டோர் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் பஞ்சாபில் இதுவரை 33 பேருக்கு கொரோனா தொற்று இரு…
-
- 0 replies
- 247 views
-
-
இந்தியாவில் முடக்கல் உத்தரவுகள் உட்பட ஏனைய விதிமுறைகைளை மீறுவோர்களிற்கு எதிராக இந்திய டுகாவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம் குறித்து சர்ச்சைகள் தோன்றியுள்ளன. இந்திய காவல்துறையினர் விதிமுறைகளை மீறுவோரை கடுமையாக தண்டிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. உத்தரபிரதேசத்தின் நகரமொன்றில் வீதியில் பயணிப்பவர்களை முதுகில் பைகளுடன் தாவித்தாவி செல்லுமாறு காவல்துறையினர் பலவந்தப்படுத்துவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் முடக்கல் உத்தரவை தொடர்ந்து வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு தமது பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளர்களையே காவல்துறையினர் தாவிதாவிச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் மன்ற…
-
- 0 replies
- 316 views
-
-
மகாபாரத போருக்கு 18 நாட்கள்; கொரோனா போரில் வெல்ல 21 நாட்கள் தேவை – பிரதமர் மோடி மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டதை போன்று கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். வாரணாசி மக்களுடன் காணொலியில் இன்று உரையாடிய போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கொரோனாவை எதிர்கொள்ள நாம் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளோம். இந்த 21 நாட்கள் என்பது மிக முக்கியமானது. இந்த நாட்களில் நாம் கவனத்துடன் இருந்தால் மட்டுமே கொரோவை நாம் வெற்றி பெற முடியும். நமது நாட்டை விட்டு விரட்ட முடியும். கொரோவை விரட்டுவதற்காக நாம் நடத்திய மக்கள் ஊரடங்கி…
-
- 0 replies
- 295 views
-
-
உலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை தகவலின்படி இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 476 பேர் இந்தியர்கள், 43 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாகக் கேரளாவில் 87 பேரும், மகாராஷ்டிராவில் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைMOHFW.GOV.IN இந்நிலையில், கோவிட்-19 குறித்து நாட்டு மக்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்குப் பிரதமர் மோதி பேச உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றினார். …
-
- 5 replies
- 721 views
-
-
கொரோனா வைரஸ் உலகை உலுக்கிக்கொண்டுள்ள இந்த தருணத்தில மக்கள் மத பொருளாதார வேறுபாடுகளை மறந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என பாக்கிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களிற்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள் இதுதான் என தெரிவித்துள்ள அக்தர் கொரோனாவைரஸ் என்பது சர்வதே நெருக்கடி நாங்கள் சர்வதேச சக்திகள் போல சிந்திக்கவேண்டும மதவேறுபாடுகளிற்கு அப்பால் எழவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் முடக்கப்படுதல் என்பது வைரஸ் பாதிக்காமலிருப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் நீங்கள் சந்திப்புகளில் தொடர்பாடல்களில் ஈடுபட்டால் அது உதவிகரமானதாக அi மயப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 307 views
-
-
புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், பிகாா் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 3 போ், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக உயா்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 63 வயது நபா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவா் ஏற்கெனவே நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா் என்று மும்பை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தை பொருத்தவரை, கரோனாவால் நேரிட்ட 2-ஆவது உயிரிழப்பு இதுவாகும். …
-
- 1 reply
- 342 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை. மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? - இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம். இதற்கு அவ…
-
- 0 replies
- 313 views
-
-
புதுடெல்லி 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா, முகேஷ் சிங், அக்சய் குமார் சிங், வினய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் டெல்லி திஹார் சிறையில் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து சாலையில் வீசப்பட்டார். சிங்கப்பூரில் 13 நாள் சிகிச்சைக்குப்பின் அவர் உயிரிழந்தார். இதையடுத்து நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஓர் இளம் குற்றவாளி என 6 பேர…
-
- 47 replies
- 3.5k views
- 2 followers
-
-
ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்களை மக்கள் ஊரடங்கு ஒன்றை கடைப்பிடிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் இந்திய பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இந்த பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் எவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது அயலில் கூடி நிற்க கூடாது அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மோடி அனைவரையும் கட்டாயமாக இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது அடுத்த சில வாரங்களிற்கான சமூக விலகலுக்கான புதிய பயிற்சியை வழங்கும் என மோடி தெரிவித்துள்ளார். மாலை ஐந்து மணிக்கு எங்கள் வீடுகளில் இருந்தாவாறு மணியடிப்பதன் மூலம்; அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர…
-
- 5 replies
- 491 views
-
-
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், நாளை அதிகாலை 5.30 மணிக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்பயா வழக்கில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் இறுதியாகத் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. குற்றவாளிகளில் முகேஷ் சிங், பவன் குப்தா, அக்சய் சிங் ஆகியோர் தாக்கல் செய்த 2-வது கருணை மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்…
-
- 0 replies
- 177 views
-
-
கொரோனா வைரஸ் : பரிசோதனை செய்ய தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி! கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் 72 ஆய்வகங்கள் செயற்பட்டு வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் விஞ்ஞான ஆராய்ச்சி கழகம் பயோ-டெக்னாலஜி துறை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி, வளர்ச்சி கழகம் மேலும் 49 ஆய்வகங்கள் செயற்படும். அதே போல் தனியார் ஆய்வகங்களும் கொரோனா வைரஸ் சோதனையை இலவசமாக செய்ய கேட்டு கொள்ளப்படுவார்கள். 51 தனியார் ஆய்வகங்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய அனுமதிக…
-
- 0 replies
- 552 views
-
-
விவாகரத்து கேட்டு நிர்பயா கொலை குற்றவாளியின் மனைவி தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அவுரங்காபாத் நீதிமன்றில் இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுதாரர் புனிதா விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. இதையடுத்து, மனு மீதான விசாரணையை மார்ச் 24ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் திகதி அதாவது, நாளை தூக்கு தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறத…
-
- 1 reply
- 465 views
-
-
கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் அங்குள்ள மசூதி ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3ல் 2 பகுதியிலானோர் தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 7900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் இதுவரை 673 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெடாலிங் மசூதியில் கடந்த பிப்.,27ம் முதல் மார்ச் 1 வரையிலான 4 நாள் தொழுகை நடைபெற்றது. இதில் கனடா, நைஜீரியா, இந்தியா, ஆஸ்திரேலியா உ…
-
- 2 replies
- 349 views
-
-
புதுடில்லி: 'கொரோனாவை கட்டுப்படுத்த, தென் கிழக்கு ஆசிய நாடுகள், உடனடி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் உள்ள, 11 நாடுகளில் எட்டு நாடுகளில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவியிருக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தென் கிழக்கு ஆசிய இயக்குநர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்துள்ளதாவது: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. நேற்று (17ம் தேதி) மாலை நிலவரப்படி, தாய்லாந்து - 177, இந்தியா - 147, இந்தோனீசியா - 134, இலங்கை - 19, மாலத்தீவுகள் - 13, வங்கதேசம் - 5, நேபாள் மற்றும் ப…
-
- 0 replies
- 270 views
-
-
கொரோனா தாக்கம் : 15 அம்ச கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு! இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படும். மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம். தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும். பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்தலாம். திரும…
-
- 0 replies
- 183 views
-
-
இந்தியாவை வதைக்கும் கொரோனா: இருவர் உயிரிழப்பு – 125 பேர் பாதிப்பு உலகை அச்சத்தின் உச்சத்திற்கு கொண்டுசென்றுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் இருவர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் …
-
- 0 replies
- 203 views
-
-
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த யோசனை மற்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்ற…
-
- 1 reply
- 255 views
-
-
இந்தியாவில் வேவுபார்த்த குற்றச்சாட்டின கீழ் இலங்கை சேர்ந்த அருண் செல்வராஜனிற்கு இந்திய நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமீம் அன்சாரி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜனிற்கே நீதிமன்றம் ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 2012 இல் தஞ்சாவூரை சேர்ந்த தமிம் அன்சாரி இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய சிரேஸ் அதிகாரியான அமீர் சுபைர் சித்திக்கின் உத்தரவில் செயற்பட்ட புலானாய்வாளர்களிற்காக வேவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் 2014 இல் இலங்கையில் உள்ள பாக்கிஸ்தான் தூதரக அதிகாரியின் உத்தரவின் கீழ் சென்னையில் பல முக்கிய இடங்களை வேவுபார்த்த குற்றச்சாட்டின் கீழ…
-
- 0 replies
- 265 views
-