Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டெல்லி வன்முறை: இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம் ஃபைசல் முகமது அலி பிபிசி செய்தியாளர், டெல்லியிலிருந்து படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN/AFP via Getty Images கிழக்கு டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறை சம்பவங்களை படம்பிடித்து, பதிவு செய்து கொண்டிருந்தபோது, எங்களுடைய செல்போன்களை பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கிருந்து வெளியேற நாங்கள் முயற்சி செய்தோம். அப்போது, எங்களுக்கு அருகே கற்கள் பறந்து வந்து விழுந்தன.…

  2. இந்தியாவில் டிரம்ப்: இந்த பயணத்தால் அமெரிக்க அதிபர் சாதிக்க நினைப்பது என்ன? ருத்ரா சௌத்ரி பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images @-moz-keyframes gel-spin { 0% { -moz-transform: rotate(0deg); } 100% { -moz-transform: rotate(360deg); } } @-webkit-keyframes gel-spin { 0% { -webkit-transform: rotate(0deg); } 100% { -webkit-transform: rotate(360deg); } } @-ms-keyframes gel-spin { 0% { -ms-transform: rotate(0deg); } 100% { …

  3. டிரம்ப் குறிப்பிட்ட 7 தகவல்களின் உண்மை நிலை என்ன? படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன்னுடைய இந்தியப் பயணத்தின் தொடக்கமாக, குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் உள்ள மொடேரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் உரையாற்றினார். @-moz-keyframes gel-spin { 0% { -moz-transform: rotate(0deg); } 100% { -moz-transform: rotate(360deg); } } @-webkit-keyframes gel-spin { 0% { -webkit-transform: rotate(0deg); } 100% { -webkit-transform: rotate(360deg); } } @-ms-keyframes gel-spin { 0% { -ms-transform: rotate(0deg); } 100%…

  4. விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்தியாளார் முகமது ரசாக் சௌத்ரி பிப்ரவரி 27 ஆம் தேதி தன் வீட்டு முற்றத்தில் கட்டிலில் அமர்ந்தபடி தொலைபேசியில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்தார். பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள சமாஹ்னி மாவட்டத்தில், சிறிய மலையின் மீது உள்ள ஹோர்ரன் நகராட்சியில் ரசாக்கின் வீடு உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது. ``நிலைமை பதற்றமாக இருந்தது. காலையில் இருந்து சில விமானங்கள் மேலே பறந்…

  5. போர்க்களமான டெல்லி... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு... 200 பேர் படுகாயம் டெல்லி: சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் என்ற பெயரில் வடகிழக்கு டெல்லியில் 2 நாட்களாக வன்முறை கும்பல் நடத்திய கோரத்தாண்டவத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடகிழக்கு டெல்லியில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ.) எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் வன்முறையாளர்கள…

  6. இந்தியா- அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய் இராணுவ ஒப்பந்தம் கைச்சாத்து இந்தியா- அமெரிக்கா இடையே 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இராணுவ ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். குறித்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை …

  7. "டிரம்ப் வருவதால் 7 நாட்களில் குடிசைகளை காலி செய்யுங்கள்” : குஜராத் பா.ஜ.க அரசு கெடு விதித்து அராஜகம்.! குஜராத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் அகமதாபாத்தில் மோடோரா பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து காலி செய்யவேண்டும் என அகமதாபாத் மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர்டொனால்டு டிரம்ப், தனது மனைவியுடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் வருகிறார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வரும் டிரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மோடி அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடியுடன் டிரம்ப் ம…

    • 14 replies
    • 1.4k views
  8. அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும், அப்பாச்சி (Apache) மற்றும் ரோமியோ அடைமொழியுடன் அழைக்கப்படும் MH-60 சீஹாக் ((MH-60 Seahawk)) ஹெலிகாப்டர்கள் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்... சர்வதேச அளவில் விமானங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும், அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பு தான் அப்பாச்சி(Apache)ஹெலிகாப்டர். அதிவேகமாக சுழலும் வண்ணம் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. இரட்டை தாக்குதல் பொறிமுறை கொண்டுள்ளது. அப்பாச்சி ஹெலிகாப்டர், 58 அடி நீளம், 13 அடி உயரம் கொண்டது. இரவிலும், தாக்குதல் நடத்தும் வண்ணம், சென்சார் மற்றும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. ஹெலிகாப்டரின் சக்கரங்களுக்கு நடுவே, நவீனத் துப்பாக்கி, ஹெல்ஃபையர் (Hellfire) ஏ…

  9. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல – மோடி இரண்டு நாள் விஜயமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்போது இருநாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்பினை வரவேற்று உரையாற்றினார். இதன்போது கருத்து தெரிவித்த மோடி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா உங்களை மனதார வரவேற்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்தியாவின் பன்முகத் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அகமதாபாத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு இதர நாடுகளைப் போன்றது அல்ல எனவ…

  10. டெல்லி வடகிழக்கில் மீண்டும் கலவரம்; பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு: அமித் ஷா அவசர ஆலோசனை பிடிஐ டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கலவரம் ஏற்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தக் கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்தக் கலவரத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முதல்வர் கேஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்…

  11. இஸ்லாமிய பயங்கரவாதமே உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தல் – ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் இருந்து நாடுகளை பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாள் விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தந்துள்ள ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்க விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்க நேசிக்கிறது எனவும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த ட…

  12. படத்தின் காப்புரிமை MANAN VATSYAYANA/getty images மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது. மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) …

    • 0 replies
    • 369 views
  13. டெல்லியில் ட்ரம்ப்புடன் விருந்து: முதல்வர் எடப்பாடி பழநிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு! இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் ட்ரம்ப்புடனான விருந்தில் கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விருந்தில் பங்கேற்க எடப்பாடி பழநிசாமியும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வரும் 25ஆம் திகதி நடைபெறும் இந்த விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் நாளைய தினம் டெல்லிக்கு பயணிப்பார் என தகவல் வெளி…

  14. வி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது பற்றி மீள் பரிசீலனை செய்யும்படி மலேசியாவின் சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் கேட்டுக்கொண்டதை அந் நாட்டின் உள்துறை அமைச்சர் முஹிதீன் யஸின் கண்டித்திருக்கிறார். ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென வகைப்படுத்தும் அதிகாரம் மலேசியாவின் உள்துறை அமைச்சருக்கு மட்டுமே உண்டே தவிர சட்டமா அதிபருக்கு அதில் தலையிடும் அதிகாரம் இல்லை என அமைச்சர் யஸின் தெரிவித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வை…

  15. நாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் : ஏற்பாடுகள் தீவிரம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாளை (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளையும், நாளை மறுநாளும் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லவுள்ளார். இந்தியா வரும் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோருக்கு சங்க்நாத் எனப்படும் சங்க நாதம் இசைத்து வரவேற்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 150 அடி நீள செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படவுள்ளதுடன், நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. பின்னர் அ…

  16. சிங்கப்பூருக்கான பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு வேண்டுகோள்! சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு நடவ‌டிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்தே மத்திய அரசு மேற்படி வலியுறுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனாவைத் தவிர்த்து ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா ப…

  17. அயோத்தியில் ராமர் சிலை தற்காலிகமாக இட மாற்றம் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் கோயில் கட்டும் பணி, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து, கோயில் கட்டப்படவுள்ள இடத்தை, அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதன்போது, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில், “ரா…

  18. 1947ம் ஆண்டிலே முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முக்கிய இடம் வகிக்கும் கிரிராஜ் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் பூர்ணியா பகுதியில் புதன்கிழமையன்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியதாவது, தேசத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது, 1947க்கு முன்பு ஜின்னா இஸ்லாமிய நாடு வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, நமது முன்னோர்கள் செய்த பெரும் தவறால், அதற்கான பலனை தற்போது நாம் அனுபவிக்கிறோம். அப்போது, முஸ்லிம் சகோதரர்கள் அந்த நாட்டிற்கும், இந்துக்கள் நம் நாட்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தால், நாம் தற்போது இந்த நிலைமையிலிருந்திருக்க மாட்டோம் …

    • 0 replies
    • 426 views
  19. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஆயிரம் டன் (30 லட்சம் கிலோ) எடை கொண்ட தங்க சுரங்கத்தை இந்திய புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சோன்பத்ரா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த தங்க சுரங்கத்தின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மத்திய அரசு இருப்பில் வைக்கும் நிதியை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள சோன் பஹதி மற்றும் ஹர்தி பகுதியில் சுரங்கத்திற்குள் தங்கம் கொட்டிக் கிடப்பதாக மாவட்ட கனிம வள அதிகாரி கே.கே. ராய் தெரிவித்துள்ளார். இந்த பகுதியில் கடந்த 1992 - 93-ம் ஆண்டிலேயே தங்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிக்கும் பணியை புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள்…

    • 0 replies
    • 322 views
  20. பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் – ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. படித்த பட்டதாரிகள் தான் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலம் குருஷேத்ராவில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “பயங்கரவாதிகள் ஒன்றும் படிக்காதவர்கள் அல்ல. நன்கு படித்த பட்டதாரிகளும், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்களுமே பயங்கரவாதிகள் ஆகின்றனர். அவர்கள் வயது குறைந்தவர்களாக உள்ளனர். அதனால் வாழ்வில் எதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். அதனால் இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து பயங்கரவாதி அமைப்பு…

  21. நிர்பயா குற்றவாளி.... தற்கொலை முயற்சி? நிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை இரத்து செய்யவும் தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. இந்நிலையில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதற்கு முன்னர் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும்…

  22. தீவிரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்கும்படி பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATF வலியுறுத்தியுள்ளது. பாரீசில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. FATF அளித்திருந்த 27 பரிந்துரைகளில் 14 அம்சங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதி உதவி கிடைப்பதைத் தடுக்க பாகிஸ்தான் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் குறித்து FATF முடிவெடுக்க உள்ள நிலையில், அந்நாட்டிற்கு விதிக்கப்பட்ட சாம்பல் பட்டியல் நீடிக்கும் என்றே தற்போதைய சூழ்நிலை உணர்த்துகிறது. …

    • 0 replies
    • 316 views
  23. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் 12½ கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து: அதிர்ச்சி தகவல் இந்தியா – பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் மூண்டால் 12½ கோடி பேர் உயிரிழக்கும் ஆபத்து உள்ளதாக ஜேர்மன் நாட்டின் ஆய்வு அறிக்கையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கா‌‌ஷ்மீரில் உள்ள புல்வாமாவில், விடுமுறை முடிந்து கடந்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பணிக்கு திரும்பிக்கொண்டிருந்த துணை இராணுவத்தினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர். ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மனித வெடிகுண்டைக்கொண்டு நடத்திய தாக்குதலில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வருகிற ஜெய்‌‌ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய இந்த …

  24. 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம் February 18, 2020 2019ம் ஆண்டு நிலவரப்படி இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி இருப்பதாக அமெரிக்காவில் உள்ள உலக மக்கள் தொகை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வருகின்ற அதேவேளை பல்வேறு சிறு-குறு தொழில்களில் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் கடும் சரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த சரிவு 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் தற்போது இந்திய பொருளாதாரம…

  25. அமெரிக்க ஜனாதிபதிக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மனநிலையைக் காட்டுகிறது – சிவசேனா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மனநிலையைக் காட்டுகிறது என சிவசேனா விமர்சித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2 நாட்கள் அரசு பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் ட்ரம்ப் பயணிக்கும் வழிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.