Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி. திவாரி காலமானார்: பிறந்தநாளில் உயிர் பிரிந்தது October 19, 2018 காங்கிரஸ் மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான என்.டி. திவாரி இன்று காலமானார். அவருக்கு வயது 93. இன்று அவரது பிறந்த நாளாகும். உத்தராகண்ட் மாநிலம் நைனிதால் மாவட்டத்தில் 1925-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி பிறந்தவர் என்.டி. திவாரி. சுதந்திரப் போராட்ட வீரரான இவர், தனது சிறு வயதிலிருந்தே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். நாடு சுதந்திரமடைந்ததும் முதன்முதலில் 1952-ம் ஆண்டு நைனிதால் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பலமுறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட அவர், ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் மத்திய அம…

  2. உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்திய பாதுகாப்புப் படையின் ஆயுதங்கள்! ஒபரேஷன் சிந்தூரின் போது, இந்திய நிறுவனங்கள் தயாரித்த ஆயுதங்கள், பாகிஸ்தானின் ஆயுதங்களை விட சிறப்பாக செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இது துருக்கி மற்றும் சீன ஆயுதங்களையும் விட சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பாதுகாப்புத்துறையின் ஆயுதங்கள் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அதன்பிறகு, பல நாடுகள் இந்திய பாதுகாப்பு உபகரணங்களில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளன. அந்தவகையில் இந்தியாவின் ஆயுத உற்பத்தித்துறையில் சிறந்து விளங்கும், நைப் லிமிட்டெட் (Nibe Limited) நிறுவனம் தற்போது இஸ்ரேலின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிடமிருந்து பெரிய ஒப்பந்தம் ஒன்றை…

  3. அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்த படை தளபதிகளுக்கு அனுமதி! லடாக்கில் நடந்த மோதலைத் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 1996 மற்றும் 2005ம் ஆண்டுகளில் இந்தியா – சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டு கிலோ மீட்டருக்குள் துப்பாக்கிகள் அல்லது வெடிக்கும் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது லடாக்கில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இந்த விதிகளில் இந்திய இராணுவம் மாற்றம் செய்துள்ளது. இதன்படி அசாதரண சூழ்நிலைகளில் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொள்ள படை தளபதிகளுக்கு இந்திய ரா…

  4. முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடியில் போர் தளவாடங்கள் - மத்திய அரசு ஒப்புதல் சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் முப்படைக்கு ரூ.39 ஆயிரம் கோடிக்கு போர் தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு: ஜூலை 03, 2020 05:30 AM புதுடெல்லி, லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியதால் இருநாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் 15-ந்தேதி இருதரப்புக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் அங்கு அம…

  5. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானப் பணி இன்று ஆரம்பம்! August 8, 2020 இந்தியா: அயோத்தியில் இராமர் கோயிலுக்கான பூமி பூஜை கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற நிலையில் இன்று கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணியானது மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு அந் நாட்டின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கோயில் திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://thinakkural.lk/article/60866

  6. கோதுமை ஏற்றுமதி மீதான... தடையை நீக்க, இந்தியாவிடம் வேண்டுகோள்! கோதுமையின் ஏற்றுமதி மீதான தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியாவிடம் சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா பங்காற்ற முடியும் என்றும் தெரிவித்துள்ளது. 135 கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டி இந்தியா எடுத்த இந்த முடிவை பாராட்டுவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஏற்றுமதி தடையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். https://athavannews.com/2022/1283727

  7. பேகம் ஹஸ்ரத் வரலாறு: ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ஆங்கிலேயர்களை அலற விட்ட வீரக்கதை ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஜூலை 3, 1857. லக்னெளவில் உள்ள கைசர்பாக் அரண்மனை தோட்டத்தில் சாந்திவாலி பராத்ரியை நோக்கி ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தின் நடுவே, 14 வயதுடைய மெலிந்த, கருமை நிறமுள்ள சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான். பையனின் பெயர் பிர்ஜிஸ் கத்ரு. ஓராண்டு முன்பு நாடு கடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் மகன். லக்னெளவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாஜித் அலி ஷா விவாகரத்து செய்த ஒன்பது பெண்களில் பிர்…

  8. 56 வகை உணவு.. ரூ. 8.5 லட்சம் பரிசு- பிரதமர் மோடியின் பிறந்தநாளில் வித்தியாசமான உணவுப் போட்டி பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாளை (செப்டெம்பர் 17-ம் திகதி) கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக உணவு தட்டு வழங்கப்படுகிறது. இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது. இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமித் கல்ரா பேசியதாவது:- பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நம் நாட்டின் பெருமைக்குரியவர். அவருடைய …

  9. இந்திய விடுதலைக்குப் பிறகும் அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காத வரலாறு சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி நிருபர் 18 டிசம்பர் 2022, 11:59 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PRINT COLLECTOR/GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ்.) இந்திய உச்ச நீதிமன்றம், 1967ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பது…

  10. நாடுகளை இழுக்க சீனாவும் இந்தியாவும் பனிப்போர் – மாலைதீவு முன்னாள் அதிபர் நாடுகளைத் தமது பக்கத்துக்கு இழுத்துக் கொள்வதற்காக, இந்தியப் பெருங்கடலில் சீனாவும் இந்தியாவும் பனிப்போரில் ஈடுபட்டுள்ளதாக மாலைதீவின் முன்னாள் அதிபர் மொகமட் நசீட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், “நான் இந்த உண்மைகளை மறைக்க முயற்சிக்கவில்லை. மாலைதீவில் சீனாவுக்கு நிறைய நலன்கள் உள்ளன. எனவே மாலைதீவில் தனது நலன்களை காப்பாற்றிக் கொள்வதற்கு, தற்போதைய அதிபர் அப்துல்லா யமீன் தொடர்ந்து பதவியில் இருப்பதையே சீனா விரும்புகிறது. மாலைதீவில் நாளை நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் யமீன் வெற்றி பெற முடியாது. எனினும் அதிகாரத்தை தக்கவைத்துக…

  11. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று நடந்த தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டதோடு, அரசமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டுமா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. "ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 370 சட்டப்பிரிவை நீக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ராணுவ ஜெனரல் விகே சிங் ஆகியோர் கூறியுள்ளனர். இந்திய அரசமைப்பின் 370 சட்டப்பிரிவு என்றால் என்ன? ஏன் இதில் இவ்வளவு சர்ச்சை? மற்றொர…

  12. “அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி August 15, 2025 11:20 am “இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்க…

  13. நிர்பயா கொலை வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட தயாராகுமாறு சிறை நிர்வாகம் உத்தரவு நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 20ஆம் திகதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களைத் தூக்கிலிடும் பணியில் ஈடுபட மூன்று நாட்களில் தயாராகுமாறு மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012இல் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகேஷ் குமார் சிங் (22), பவன் குமார் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு எதிர்வரும் 20ஆம் திகதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் அண்மையில்…

  14. கொரோனா வைரஸ்: தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியின் நிலை என்ன? படத்தின் காப்புரிமை Photography Promotion Trust கொரோனா வைரஸால் இந்தியாவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக மும்பை இருக்கிறது. அங்கு இதுவரை 35,000க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்க கூடிய பகுதிகளில் ஒன்றான தாராவியில் மட்டும் இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றான தாராவியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நீண்டகாலமாக வசித்து …

  15. இராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நாளை ஆரம்பம்! அயோத்தியில் இராமர் கோயிலுக்கான கட்டுமானப் பணிகள் நாளை (புதன்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அயோத்தியில் தற்போதுள்ள இராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் திகதியில் இருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் ஜூன் 10-ஆம் திகதி தொடங்கவுள்ளதாக கோபால்தாஸின் செய்தித் தொடர்பாளர் மஹந்த் கமல் நாராயண் தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”இராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக சிவபெருமானுக்கு வழிபாடு நடத்தப்படவுள்ளது. சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன்னதாக சிவபெருமா…

  16. கோவிட் 19 எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுதும் என்பதற்கு இந்தியா உதாரணம் -WHO 24 Views கோவிட் 19 வைரஸால் எந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உணர்த்துவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் உலகில் முன்னொருபோதும் இல்லாத வகையில் 3 இலட்சத்து 46 ஆயிரத்து 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 2,624 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து கருத்து தெரிவித்துள…

  17. பொருளாதாரத்தில்... சீனாவை, பின்தள்ளும் இந்தியா! இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த ஆண்டில் 10.1 வீதமாக அதிகரிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நாவின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் அறிக்கை புதிப்பிக்கப்பட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவ்வருடத்தில் 7.5 வீதமாக இருக்கும் எனத் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் சீனாவை பின் தள்ளும் பொருளாதார வல்லமை மிக்க நாடாக இந்தியா உருவெடுக்கும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1215250

  18. உதய்பூர் படுகொலை: தலைவெட்டி வெட்டிக்கொல்லப்பட்ட நபர்; பிரதமர் மோதிக்கும் மிரட்டல் - நடந்தது என்ன? 32 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு, கன்ஹையா லால் தேலி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், நேற்று (செவ்வாய்கிழமை) மாலை தையல்கடை நடத்தி வரும் ஒருவரை கடைக்குள் புகுந்த இருவர் கத்தியால் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் தாங்கள் வெளியிட்ட காணொளியில், பாஜகவின் முன்னாள் உறுப்பினர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்த கொலை ஒரு பதிலடி என்று குறிப்பிட்டுள்ளன…

  19. கடவுசீட்டு மோசடி ; இலங்கையர்கள் ஐவர் பெங்களூரில் கைது 11 NOV, 2022 | 04:24 PM போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி மத்திய கிழக்கிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த ஐவர் பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டிற்காக 50,000 முதல் 150,000 வரை செலுத்த தயாராகயிருந்த ஐந்து இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வி எஸ் ரவிகுமார், மணிவேலு, சிஜூ, நிரோசா மற்றும் விசால் நாரணயணன் என்ற ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெங்களூர் மற்றும் மங்களுரை சேர்ந்த இருவரே போலி கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என பொலிஸார் தெரி…

  20. சமீர் அத்மஜ் மிஸ்ரா பிபிசி இந்திக்காக உன்னாவ் பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் எரித்துக் கொலை செய்யப்பட்டு அவரது இறுதிச் சடங்குகள் நடந்ததைத் தொடர்ந்து, இந்துநகர் கிராமத்தில் நிலவிய பதற்றம் மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிப்பதில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மட்டுமே இப்போது அந்தக் கிர…

  21. இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம் – இந்திய அமைச்சரவை அனுமதி இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 ஜனவரியில் கையெழுத்திடப்பட்டு அதே ஆண்டு ஒக்டோபரில் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருமான வரி மீதான நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் நெறிமுறையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். …

  22. கர்நாடகாவில் கொரோனா காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் ஜிபிஎஸ் இணைப்புடன் ஒரு மணி நேரத்துக்கு ஒரு செல்பி எடுத்த அரசுக்கு அனுப்ப வேண்டும் என மாநில மருத்துவ கல்வி மந்திரி தெரிவித்துள்ளார். கோப்பு படம் பெங்களூரு: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை 251 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் கட்டாயம் தங்கள் வீடுகளில் தங்களை தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும், சிலர் ஊ…

  23. கரோனாவுடனே குடித்தனம் நடத்தப் பழகுவோம்! கரோனா பொதுமுடக்கம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நமக்கு வெவ்வேறு பாடங்களைத் தந்திருக்கிறது. அது கரோனாவைத் துரத்துவதையும், போரிடுவதையும் தாண்டி அதனுடனே இரண்டறக் கலந்து வாழ்வதைப் பற்றிய பாடத்தையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நிலை நீடிக்கும் என்பதே பேருண்மை. முடங்கிப்போன வாழ்க்கை எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி கரோனா செலவினங்களுக்காக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அடுத்தது ரயில் பெட்டிகள் கரோனா தனிமை வார்டுகளுக்கான படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி பூட்டப்பட்டுவிட்டன. இ…

  24. பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது – நரேந்திர மோடி by : Krushnamoorthy Dushanthini http://athavannews.com/wp-content/uploads/2020/09/மோடி-1-720x450.jpg பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பழைய நிலைக்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “ பொருளாதாரத்தைத் தொடர்ந்து மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மத்திய அரசு உறுதி செய்யும். நிலக்கரி, வேளாண்மை, தொழிலாளர், ப…

    • 0 replies
    • 449 views
  25. மிரட்டல்... மற்றும் அச்சுறுத்தலுக்கு, பயப்பட மாட்டோம் – சோனியா காந்தி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்பட மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ” நாம் புத்துயிர் பெற வேண்டியது நமக்கு மட்டும் முக்கியம் அல்ல. அது நமது ஜனநாயகம் மற்றும் சமூகத்திற்கு அவசியம். மக்களை பிரித்தாளும் கொள்கையில் ஆளுங்கட்சியும், அதன் தலைவர்களும் மாநிலத்திற்கு மாநிலம் செய்து வருகின்றனர். வரலாறு சிதைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நமது பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தை நிலைநிறுத்தி வளப்படுத்திய நல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.