நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர். ' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது. வ…
-
- 0 replies
- 453 views
-
-
Drinking water at the correct time. Another little tidbit that's news to me. Always knew to drink a lot of water, but who knew the timing effected things. Drinking water at the correct time maximizes its effectiveness on the Human body: 2 glasses of water after waking up helps activate internal organs 1 glass of water 30 minutes before a meal - helps digestion 1 glass of water before taking a bath - helps lower blood pressure 1 glass of water before going to bed - avoids stroke or heart attack Please pass this to the people you care about......
-
- 11 replies
- 1.6k views
-
-
எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்?? வணக்கம். எல்லோருக்கும் தமது உடம்பை கவனமாக நோய் நொடி வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆசை இருக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள். இன்னும் சிலர் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பார்கள். ஆனால் இந்த இயந்திர உலகில் வாழும் நாம் எவ்வளவு தூரம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.நன்றி. நான் கிழமை நாட்களில் வேலையின் பின்னர் 3 நாட்களாவது உடற்பயிற்சி நிலையத்தில் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செலவளிப்பேன்.சனி, ஞாயிறு அதிகாலையில் யோகா செய்வதுண்டு.
-
- 21 replies
- 4.7k views
-
-
பதினைந்து வருட ஆராய்ச்சியின் பின்னர் ஒரு விதமான ( Retinitis pigmentosa ) விழிப்புலன் அற்றவர் அதை மீள் பெற்றார் ! உலகில் பத்து வீதமானோர் இது சம்பந்தமான கண் குறைபாடு உள்ளவர்கள் ஜெர்மனியில் நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின்னர் கண்ணுக்குள் வைக்கப்பட்ட ஒரு வித "மைக்ரோ சிப்பின்" உதவியுடன். (படங்கள் இணைக்கப்படுள்ளன) http://edition.cnn.com/2010/HEALTH/11/03/retina.implant.trial/?hpt=T2 http://www.bbc.co.uk/news/health-11670044
-
- 0 replies
- 532 views
-
-
வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும் வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார். மிகுதி இங்கு சென்று பாருங்கள் மிக்வும் பயன் உள்ளது...http://hainallama.blogspot.com/
-
- 0 replies
- 589 views
-
-
தடிமன் (common cold) என்பது தீவிரமாகத் தொற்றக்கூடிய ஒரு தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். இது மேல் மூச்சுத் தொகுதியைத் தாக்குகிறது. தொண்டைக் கமறல், மூக்கு வடிதல், தும்மல், இருமல் என்பன இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். சில சமயங்களில் மேற்கண்ட அறிகுறிகள், கண் சிவத்தல், தசைநார் வலி, தலைவலி, பசியின்மை போன்றவற்றுடன் சேர்ந்து காணப்படும். பொதுவாக இதன் அறிகுறிகள் ஒரு கிழமையில் நீங்கிவிடுமாயினும் சில சமயங்களை இரண்டு கிழமைகள் வரை நீடிக்கவும் கூடும். இந் நோயின் அறிகுறிகள் குழந்தைகளிலும், சிறுவர்களிடத்தும் கூடுதலாகக் காணப்படும். வாழ்நாளில் ஒருவருக்கு சராசரியாக இருநூறு தடவை தடிமன் பிடிக்கிறது. அது சராசரியாக ஒன்பது நாட்கள் நீடிக்கிறது. இப்படிப்பார்க்கையில் ஒருவர் தனது வாழ்நாளி…
-
- 6 replies
- 4k views
-
-
Oct 20, 2010 / பகுதி: மருத்துவம் / மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின…
-
- 0 replies
- 534 views
-
-
ஹெராயினை விட தீங்கு நிறைந்தது ஆல்கஹாலே - பேராசிரியர் டேவிட் நட் திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010 11:15 போதைப்பொருட்களில் உயர்ந்ததாக கருதப்படும் ஹெராயின், கஞ்சா போன்றவற்றை விட அதிகம் தீங்கு விளைவிப்பது ஆல்கஹாலே என அடித்துக் கூறியுள்ளார் இது தோடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் டேவிட் நட். இவர் தனது ஆராய்ச்சி அறிக்கையை பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழான " தி லான்செட்டில் " வெளியிட்டுள்ளார். மொத்தமுள்ள 20 போதைப் பொருட்களில் 16 தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியது என அடையாளப்படுத்தியுள்ளார். டொபாக்கோ, கோக்கெய்ன், ஆல்கஹால் ஆகியவை இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பிரிட்டன் போதைப் பொருள் தலைமை ஆலோசகராக பணியாற்றி…
-
- 4 replies
- 703 views
-
-
இறந்தும் வாழும் உன்னதம்... தமிழ்நாட்டில் மூளைச்சாவுக்கு ஆளானவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் பெற்று, தேவையானவர்களுக்குப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தமிழகம் இதில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது பாராட்டுக்குரியது. மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் மட்டுமன்றி, இரண்டு அரசு மருத்துவமனைகளும்கூட சாதனைகள் நிகழ்த்தியுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொது சுகாதாரத் துறைச் செயலர் வி. கே. சுப்புராஜ் கூறியுள்ள குறிப்புகளின்படி, தமிழக மருத்துவமனைகளில் மொத்தம் 716 பேருக்கு மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த அளவுக்கு சாதனை…
-
- 0 replies
- 546 views
-
-
நான் சிறுவனாக இருந்தபோது பக்கத்து வீட்டில் ஒரு உறவுப் பெண்மணி இருந்தாள். ஒரு நாள் அவரது வீட்டிற்குச் சென்றபோது அவர் தரையில் அமர்ந்து கொண்டு தனது கெண்டைக் கால்களைத் தடவிக் கொண்டிருந்ததைக் கண்டேன். முகத்தில் வாட்டம்!சேலை முழங்கால் வரை உயர்ந்திருந்தது. எதைத் தடவுகிறார் எனப் பார்த்தபோது பால் போன்ற வெண்மையான அவரது அழகான மொழுமொழுவென்ற கால்கள் இரண்டிலும் கமபளிப் பூச்சிகள் சுருண்டு திரண்டு கிடப்பது போல கருநீலத்தில் வீக்கங்கள் படர்ந்திருந்தன. பார்க்க அருவருப்பாக இருந்தது. விளையாடப் போன நான் போன போக்கிலேயே திரும்பி ஓடி வந்துவிட்டேன். அப்பொழுது அவரது வயிற்றில் இருந்த குழந்தை பிறந்த சில காலத்தின் பின் அவரது கால்களில் வீக்கம் காணமல் மறைந்து விட்டிருந்தது. இன்ன…
-
- 2 replies
- 1.2k views
-
-
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்? சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடு நெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன. நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது. இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும். காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்ப…
-
- 2 replies
- 5.6k views
-
-
எனக்கு கன நாட்களாக மூச்சு விடுதலில் சிரமம் அடிக்கடி வந்து போகுது. மூச்சு முழுமையாக விட முடியாமல் அவதிப் பட்டு (short Breath ) பின் சில தடவை முயன்ற பின் முழுமையான மூச்சு வரும். இது முக்கியமாக இரவு படுக்கும் போதே அடிக்கடி ஏற்படுகின்றது. இதனால் நித்திரை எவ்வளவு வந்தாலும் முதல் இரண்டு மணி நேரம் அவதிப் பட்டு மூச்சு சரியாக வந்த பின் தான் நித்திரை கொள்ள முடிகின்றது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றல், சிறிதளவு மது (முக்கியமாக விஸ்கி) அருந்தினால் உடனடியாக பிரச்னை சரியாகின்றது. மருத்துவரிடம் காட்டி எல்லா பரிசோதனை செய்தும் ஒன்றும் இல்லை என்று விட்டார். ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் இல்லை. உயர் இரத்த அழுத்தம் இருந்தாலும், அதுவும் இப்ப தான் எல்லையை தாண்டுவதும் இல்லை பொதுவாக…
-
- 20 replies
- 18.4k views
-
-
இரவு தூக்கம் இனிமையாக அமைய சில தகவல்கள் அழகே உன் தூக்கமும் அழகு தான்! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தில் உள்ள அழகு எப்படிப்பட்டது என்பதை உணர்த்தக்கூடியது அழகான கண்கள்தான். கறுப்பாக இருந்தாலும் களையாக இருக்கிறாயே என்று சில பெண்களை பார்த்துச் சொல்வார்கள். அப்படி, களையாக இருக்கிறாயே என்று பிறரை சொல்ல வைப்பது சாட்சாத் இந்த கண்களே தான்! ஒரு நாள் தூக்கம் இல்லை என்றால் முகமும் வாடிப்போய் இருக்கும். கண்களும் சோர்ந்து போய் இருக்கும். தூக்கத்தைத் தேடித் துடிக்கும் கண்களின் அந்த நேர போராட்டத்தை ஆராய்ச்சி செய்தால் பல புத்தகங்களே எழுதிவிடலாம் என்பது போல் தோன்றும். சிலர் படுக்கையில் படுத்த மாத்திரத்திலேயே தூங்கிவிடுவார்கள். இன்னும் சிலர…
-
- 25 replies
- 4.7k views
-
-
தூக்கமின்மையால் மனோநிலை பாதிக்கும்? பொதுவாக பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்கும். பசி எடுக்கும் போது கண் விழித்து பால் அல்லது திரவ உணவு வகைகளை சாப்பிட்ட பின் மீண்டும் தூங்கும் இயல்பு கொண்டவை. அதுவே ஒரு வயதானால், குழந்தைகளின் தூக்கம் குறையும். திரவ உணவு மாறி, இட்லி, பருப்பு சாதம், பிஸ்கட் போன்ற திட உணவுப் பொருட்களை குழந்தைகள் சாப்பிடத் தொடங்குகின்றன. ஒரு வயது முதல் 3 வயது வரை அன்றாடம் பகல் நேரங்களில் சுமார் 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தைகள் தூங்க நேரிடும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளானால், மதியம் பள்ளிக்கூடம் இல்லாத நேரங்களில் தூங்கும் பழக்கம் கொண்டிருப்பர். மேலும் 12 முதல் 13 மணி நேரம் வரை தூங்கக்கூடும். 5 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு குற…
-
- 8 replies
- 1.3k views
-
-
சிறு நீரகக் கல்... ஒரு சிகிச்சை இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை! அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல்சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார். சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சை…
-
- 0 replies
- 702 views
-
-
தக்காளிப் பழமும் சருமப் பாதுகாப்பும் தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும். தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி க…
-
- 0 replies
- 732 views
-
-
பஞ்சு உள்ளங்கைக்கு எலுமிச்சை பயிற்சி ஆண்களின் கைகளைவிட, பெண்களின் கைகளுக்கு உழைப்பு அதிகம். பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, கரண்டி பிடித்துக் கிண்டுவது, பொரிப்பது, வதக்குவது சமைப்பது என நம் கைகள் ஆல் டைம் ஆன் டியூட்டிதான். ரேகைகள் தேய வைக்கும் இந்த வேலைகளால் 'பட்டுப் போன்ற கைகள்' ஒரு கட்டத்தில் பரிதாபமாக மாறலாம். சிலருக்கு வெடிப்பு, வறட்சி, அரிப்பு, கோடுகள், தோலுரிவது போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நகம் உடைந்து போவது, நிறம் மாறுவது, புள்ளிகள் தோன்றுவது என நகத்திலும் பாதிப்புகள் வரலாம். 'அதுக்காக வேலை பார்க்காம இருக்க முடியுமா..?' என்றால், முடியாதுதான். ஆனால், உங்கள் ஊட்டச்சத்திலும், கைகளின் பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால்... உங்கள் உள்ளங்கையில் தங…
-
- 0 replies
- 1k views
-
-
. சுய இன்பம் ஆபத்தா? நிறைய பேருக்கு இதில் பெரும் குழப்பமே இருக்கும். ஆனாலும் இது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல என்பதே டாக்டர்களின் கருத்து. காலத்தே பயிர் செய் என்பார்கள்.. இது விவசாயத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட நிறையவே பொருந்தும். இளம் பிராயத்தில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் இந்த சுய இன்பப் பழக்கம் அத்தனை பேரையும் ஆட்டிப்படைத்திருக்கும். இதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. இதுகுறித்து வெட்கப்படவும் தேவையில்லை. அந்த வயதில் டீன் ஏஜினர் சந்திக்கும் பல முக்கியப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. சிலருக்கு 12-15 வயதில் தொடங்கிய சுய இன்பத்தை விட முடியாமல் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வழக்கமும் உண்டு. இதனால் அவர்களுக்கு எதிர்கால செக…
-
- 38 replies
- 16.7k views
-
-
நல்ல கொலச்டோல்...HDL (இப்ப) சொல்லுகினம், கூடாத கொலச்டோல் LDL (100 குறைவாக) கட்டுபாட்டில இருக்கிறவர்களுக்கு, நல்ல கொலச்டோல் HDL குறைவாக (40 க்கு குறைவாக) இருந்தால் அது(தான்) கூடாது எண்டு. என்ன மாதிரி HDL நல்ல கொலஸ் கூட்டலாம் எண்டால். 3 வழிதான் (எனக்கு தெரியும்) 1 . உடற் பயிற்சி. 2 . ஒமேகா 3 fatty அசிட். நல்லா மீன் சாப்பிடட்டாம்..குறைந்தது ஒரு கிழமையில் 3 வேளை ( 1 துண்டு மீன் இல்லை, மீன்தான் சாப்பாடு) 3 . மருந்துகள். கடைசியில். மற்றது கடைகளில் விற்கும் ஒமேகா 3 (USA ) தரக்கட்டுப்பாட்டில் வருவதில்லையாம். பலவும் செயற்கை முறையாலும், தாவரங்களில் இருந்து தயாரிப்பதாலும் அவற்றினால் எதிர்பார்த்த விளைவுகள் இல்லையாம். ஒரே வழி மீனை மூக்கு முட்ட சாப்பிட்டு, வாயை…
-
- 3 replies
- 1.5k views
-
-
புகைப் பிடிக்கும் ஒருவருக்கு தலை முதல் கால் வரை என்னென்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை அறிவது அவசியம். இதன்மூலம் இந்த கொடிய பழக்கத்திலிருந்து விடுபடக் கூடும். புகைப்பிடித்தலை பழக நினைப்பவர்களும் அதை மறக்க நினைப்பவர்களும் உலகத்தில் ஏராளம். புகைப் பிடிக்கும் ஒருவருக்கு எழக்கூடிய குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. முடி: நிற மாற்றம். மூளை: பாரிசவாதம், புகைத்தலுக்கு அடிமையான நிலை. கண்: பார்வைக் குறைபாடு, Cataracts. மூக்கு: மன நுகர்ச்சித் தன்மை குறைதல். தோல்: தோல் சுருக்கம், வயது முதிர்ந்த தோற்றம். பல்: நிற மாற்றம், பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (Gingivitis). வாய் மற்றும் தொண்டை: உதடு, உணவுப் பாதை மற்றும் தொண்டை புற்றுநோய், சுவை நுகர…
-
- 7 replies
- 1.9k views
-
-
குழந்தைக்கு வரும் காது வலி: காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும்,பாட்டில் பால் தருவதும் ஆகும். வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும். காது மடலை தொட்டால் வலி அதிகாமாகும். மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும். எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும். காதுக்கு பட்ஸ் போடவே கூடாது. அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே தள்ளப்படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல திரித்து துடைத்து எடுக்க வேண்டும். தாய்ப்பால் படுத்து கொண்டு தரக்கூடாது, குழந்தையின் தொண்டைக்கும் நடுக்காதிற்கும் உள்ள இணைப்பு வழியே பால் உள்ளே சென்று கீழ் பிடிக்கும். அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும். மூக்கு அடைப்…
-
- 0 replies
- 793 views
-
-
பாலுறவு குறித்து பல்வேறு தகவல்களை இப்பகுதியில் அறிந்து வருகிறோம். சிலர் (ஆண்/பெண்) திருமணத்திற்கு முன்பே அறிந்தோ அல்லது அறியாமலோ சிலருடன் பாலுறவு தொடர்பு வைத்திருந்திருக்கலாம். அல்லது `அந்த உறவு' எப்படித்தான் இருக்கும்? அதையும் தெரிந்து கொள்வோமே என்ற எண்ணத்தில் கூட யாருடனாவது பாலுறவு புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கலாம். அப்படி உறவு வைத்துக் கொண்ட பலர் தங்களுக்குள் தேவையில்லாத பயம் கொண்டிருப்பார்கள். வேறு சிலரோ பாலுறவு வைத்துக் கொள்வதற்குப் பயந்து, சுயஇன்பம் அனுபவித்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு சுயஇன்பம் அனுபவிப்பதால், எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் போது ஏதாவது பாதிப்பு வருமோ என்ற அச்ச உணர்வு இருக்கக்கூடும். உதாரணத்திற்கு இந்த சம்பவத்தை எடுத்துக் கொள்வோம…
-
- 7 replies
- 1.4k views
-
-
தண்ணீர் அதிகம் குடித்தால் சுருக்கம் மறையும்: ஆராய்ச்சி முடிவு செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 21, 2010, 17:10[iST] Ads by Google Anti Wrinkle Treatment www.Qesthetics.com/laser-clinic Great results and great prices. Multi options. 3 locations.Call us லண்டன்: அழகான தோல் வேண்டும் என்று விரும்பாதவர்களே இருக்க முடியாது. அந்தத் தோலை பாதுகாக்க என்னென்னவோ செய்கின்றனர். சிறிது சுருக்கம் விழுந்துவிட்டால் போதும், அயயோ போச்சே என்று கவலை அடைகின்றனர். அவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். தோல் சுருக்கத்தை குறைக்க அல்லது அப்படியே காணாமல் போகச் செய்ய, நிறைய தண்ணீர் குடித்தால் போதுமாம். அவ்வாறு குடித்தால் தோல் சுருக்கம் மறைவதோடு, தோலுக்கு ஈரப்பதமும் கிடைக்கிறது. இதனால் இளமையாகத் …
-
- 0 replies
- 556 views
-
-
தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது: தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். மேலும் வீடு திரும…
-
- 2 replies
- 695 views
-
-
தசை தளர்வு ஏற்படாமல் இருக்க பெண்கள் தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும் என தெரிய வந்துள்ளது. பால் குடிப்பது உடல் நலத்துக்கு சிறந்தது என அனைவரும் அறிந்ததே. அதே வேளையில் பால் குடித்தால் உடல் தசையில் தளர்வு ஏற்படாது என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தினசரி 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்தால் அவர்களின் உடல் தசைகளில் தளர்வு ஏற்படாமல் இறுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வை மேற்கொண்டனர். பெண்கள் தினமும் குடிக்கும் 2 டம்ளர் பாலில் மிக அதிக அளவில் வைட்டமின் டி, மற்றும் கால்சியத்தின் அளவுகள் உள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாமல் சராசரி அளவ…
-
- 0 replies
- 1.1k views
-