நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
வெற்றிலைப் பாக்கு, பான் பராக் உள்ளிட்ட புகையிலையுடன் கூடிய பாக்கு கலப்புகளை சதா மென்றுக் கொண்டிருப்பவர்களுக்கு வாய் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும். சுயிங்கத்தில் ஆரம்பித்து நாள் முழுவதும் மெல்லும் இப்பழக்கம் உள்ளவர்கள், பின்னாளில் பான் பராக் போன்ற புகையிலை கலந்த பாக்கை மெல்லத் தொடங்குகின்றனர். இவைகளை மெல்லும் போது சுரக்கும் உமிழ் நீருடன் கலக்கும் பாக்குச் சாறு, வாய்க்குள் உள்ள கண்ண உள் சுவர்களை பாதிக்கிறது. வாய் உள் சுவர்களில் உள்ள தசை நார்கள் நாளடைவில் இறுகத் தொடங்குகின்றன. ஒரு கட்டத்தில் அவை மிக இறுக்கமாக ஆகிவிடும் போது, வாயை அசைக்க முற்படும்போது சதை நார்கள் ஒத்துழைக்காது. மாறாக, அவை கடினப்பட்டு, வாயில் இருந்து எச்சில் சுரந்து வெளியே வழியும்போது கூட ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
புரோட்டின் எனும் சொல்லுக்கு முதன்மையானது, அடிப்படையானது என்பது பொருள். எதற்கு முதன்மையானது? எதற்கு அடிப்படையானது? என்றால் உடம்பின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது, முதன்மையானது. புரோட்டினைப் புரதம் என்று கூறுவர். புரோட்டின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் அன்றாடம் உடலில் ஏற்படுகிற தேய்வுக் கழிவுகளை நிரப்பி, உடலை நல்ல நிலையில் வைக்கிறது. இதுதவிர, சில நோய்கள் வராதபடி புரோட்டின் தடுக்கிறது. உம்புக்குச் சக்தி தருகிறது. தோல், சதை, ஜவ்வு முதலியவைகளின் அணுக்களை வளர்த்து அவைகளை உறுதிப்படுத்துகிறது. குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் புரோட்டின் மிகவும் அவசியமானதாக உள்ளது. ஆதலால் உணவில் புரோட்டின் முதன்மைப் பொருளாக அமைகிறது. ஆகவே, புரோட்டின் சத்து எ…
-
- 10 replies
- 3k views
-
-
ஈரலின் பழுதடைந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு புதிய துண்டைப் பொருத்தி மறுவாழ்வு காணும் வைத்தியத்தில் வெற்றி… ! குடிச்சுக் குடிச்சே ஈரல்; போய் இளையதம்பி செத்தான்.. என்று நமது நாட்டில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் மதுவால் இறப்பவர்கள் பற்றிப் பேசிக்கொள்வார்கள். ஈரலில் துளைபட்டு நாசமானாலும், பழுதடைந்த பகுதியை வெட்டி எறிந்து, அந்த இடத்தில் இன்னொருவரின் ஈரலை ஒட்டி வாழ்வை புத்துணர்ச்சியுடன் தொடங்க இப்போது புதுவழி பிறந்திருக்கிறது. பஞ்சரான டயரை ஒட்டி மறுபடியும் காற்றடிப்பது போல வைத்தியத்துறையில் இந்தப் புதுமை எட்டித் தொட்டுள்ளார்கள் அமெரிக்க வைத்தியர்கள். அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் யோனத்தன் நுஸ் என்ற குழந்தை பிறந்த எட்டு மாதங்களில் ஈரல் பழுதடைந்து இறக்கும்…
-
- 0 replies
- 713 views
-
-
மாதுளை மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க விரும்புகிறீர்களா? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், தினமும் இரவில் ஒழுங்காக நித்திரை கொண்டாலே போதும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டியூட் பேராசிரியர் ஜான் ஆக்ஸல்சன் தூக்கத்திற்கும் அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினார். தற்போதைய இயந்திர வாழ்வில் மக்கள் தூக்கமின்றி தவிப்பதும், நிம்மதியான தூக்கம் இல்லாமல் இருப்பதும் அதிகரித்து வரும் வேளையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் 18 முதல் 31 வயது வரையுள்ள 23 பேர் கலந்து கொண்டனர். அவர்களை பிற்பகல் 2 மணி மற்றும் 3 மணி அளவில், நல்ல தூக்கம், தூக்கமின்மை ஆகிய 2 தருணங்களில் புகைப்படம் எ…
-
- 0 replies
- 558 views
-
-
எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்தும் மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஜேர்மனியிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பேர்லின் நகரைச் சேர்ந்த இம்மருத்துவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த எச்.ஐ.வி. மற்றும் இரத்தப் புற்றுநோய்குள்ளான நோயாளியுடன் பணியாற்றிவந்தனர். இந்நிலையில் இவ்விரு நோய்களையும் குணப்படுத்தும் மருந்தை தாம் கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எயிட்ஸ் நோயைப் பரப்பும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நோயாளியொருவர் குணப்படுத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். எனினும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானோருக்கான பொதுவான சிகிச்சையாக இதை பயன்படுத்துவதற்கு முன்னர் பல வருடகால வேலைகள் எஞ்சியிருக்கின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குணப்படுத்தல் என்பது பலமான ஒரு வார்த…
-
- 3 replies
- 614 views
-
-
பசுமதி / Basmati அரிசி சோறு உண்டால் குறிப்பிட்ட அரிசியின் மெலிந்த தோற்றம் போன்றே ஆட்களும் உடல் மெலிவார்களாம் என்று கூறுகின்றார்கள். Glycemic index According to the Canadian Diabetes Association, basmati rice has a "medium" glycemic index (between 56 and 69), thus making it more suitable for diabetics as compared to certain other grains and products made from white flour.
-
- 13 replies
- 1.9k views
-
-
நோயாளியை தொடாமல், மருந்து கொடுக்காமல் வருத்தத்தை குணப்படுத்தலாம், அதிசயம் ஆனால் உண்மை! வெள்ளி, 10 டிசம்பர் 2010 19:41 பிராண சிகிச்சை முறை மூலம் நோயாளிகளை தொடாமல், மருந்துகள் கொடுக்காமல் முழுமையாக எந்த நோயையும் குணப்படுத்த முடியும் என்கிறார் இலங்கையின் மூத்த பிராண சிகிச்சையாளர்களில் ஒருவரான தேவா சோமசுந்தரம். இவர் கொழும்பை வசிப்பிடமாக கொண்டவர். ஓய்வு பெற்ற சிவில் பொறியியலாளர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவை தளமாக கொண்டு உலகின் பல நாடுகளிலும் இயங்கி வருகின்றன பிராண சிகிச்சை நிலையங்கள். இலங்கைக் கிளைக்குப் பொறுப்பானவராக இவர் இருக்கின்றார். தமிழர்கள் செறிந்து வாழும் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது இச்சிகிச்சை நிலையம். அண்மையில் இங்கு செல்லும் வாய்ப்பு எமத…
-
- 1 reply
- 4.7k views
-
-
வழுக்கைக்கு மருந்து கிடையாது என்று சொல்லுவார்கள். ஒரு விதத்தில் அது உண்மையே. ஆனால் சில மருந்துகள் ஒரு சிலருக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் அரைத்து தண்ணீருடன் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்துவாருங்கள். அந்த இடத்தில் ஊருவதுபோல் தோன்றும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர் வளருவதை ஊக்கப்படுத்தும். ஆலமர விழுது, தாமரை வேர்கள் இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த பொடியில் சமஅளவு சுமார் 200 கிராம் எடுத்து 400 கிராம் தேங்காய் எண்ணெயில் பொடி கருமை நிறம் அடைவதுவரை காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தினசரி ஒன்றிரண்டு தடவை மச…
-
- 5 replies
- 5.4k views
-
-
போலிக் அசிட் எனப்படுவது ஒருவகை விட்டமின். இது கர்ப்பம் தரிக்கும் நேரத்திலே உடம்பில் போதிய அளவிலே இருக்க வேண்டும். இது குறைபாடாக உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது கருவிலே உள்ள குழந்தையின் மூளை மற்றும் முன்னான் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் கரு அழிந்து போவதற்கோ அல்லது அங்கக் குறைபாடான குழந்தை பிறப்பதற்கோ சந்தர்ப்பம் அதிகம். இதைத் தடுப்பது மிகவும் இலகு. கருத்தரிப்பதற்காக எதிர் பார்த்திருக்கும் பெண்கள் போலிக் அசிட் மாத்திரை ஒன்றை ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொண்டாலே போதுமானது. கருத்தரிக்க மூன்று மாதத்திற்கு முன்னமே இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரையை வைத்தியரின் அனுமதி இல்லாமலேயே நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். விலையும் மிகவும் குறைவு.…
-
- 0 replies
- 1.7k views
-
-
மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் [ multiple sclerosis (MS) ] என்று சொல்லப்படுகின்ற மூளைக் கோளாறினால் மூளையின் நரம்புகளில் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்தி சரிசெய்யக்கூடிய வழியொன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டனிலுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எம். எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நரம்பு நார்களுக்கான மூளை குறுத்தணுக்களை தூண்டிவிடுவதன் மூலம் புத்துயிர் தர முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர். மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் பற்றி பல விஷயங்களை நாம் அறிந்தாலும் அந்த நோய் எதனால் வருகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. எம்.எஸ். வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்பு என்பது நரம்பு நார்களைப் சுற்றிப் படிந்துள்ள மைலீன் எ…
-
- 0 replies
- 556 views
-
-
ரசித்து… ருசித்து சாப்பிட வேண்டும் ஏன்? தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம். சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது. துபாயிலிருக்கும் ஒரு நண்பர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவார். கள்ளக்குறிச்சியில் இருக்கும் இன்னொரு நண்பர் ஒவ்வ…
-
- 0 replies
- 698 views
-
-
வணக்கம் நண்பர்களே, எனக்கு தெரிந்த ஒரு நண்பனுக்கு Histrionic personality disorder என்னும் உளவியல் பிரச்சனை உண்டு. அவருக்கு உதவுவதற்கு, அந்த நோயைப்பற்றி தமிழில் தகவழ் தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த மன நல மறுத்துவர்கள் இருந்ந்தால் தயவுசெய்து அறியத்தரவும். அல்லது அந்த நோய் பற்றி எதாவது தகவள் தெறிந்தால் சொல்லவும். நன்றி
-
- 0 replies
- 1.1k views
-
-
நோயின் அறிகுறியை நகங்களில் காணலாம்! நகங்கள் தேவையற்ற ஒன்றல்ல. அவை அழகிலும், ஆரோக்கியத்திலும் பங்கு வகிக்கின்றன. நகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. * நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது. * இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம். * சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை த…
-
- 0 replies
- 643 views
-
-
அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின…
-
- 2 replies
- 461 views
-
-
வை-பை ( wi-fi) கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் , சிலவேளைகளில் இவை மனிதர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வெகனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர். இதன்போது வை-பை கதிர்களுக்குஅண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது…
-
- 0 replies
- 625 views
-
-
மனித ஆயுளை சுமார் 10 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய மருந்துவில்லையைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் ஆய்வு நிலையில் உள்ள இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. முதுமையைத் தடுத்து மனிதனின் ஆயுளை நீடிப்பதற்கான வழிமுறைகள் பற்றி அமெரிக்காவின் ஹாவர்ட் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றனர். ' செர்டுயின் ' என்ற ஜீனே முதுமையை கட்டுப்படுத்துகின்றது. இதனைத் தூண்டும் மருந்தினையே ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர். ஒரு மாத்திரையை உட்கொள்ளும் போது, வயதானாலும் நினைவாற்றல் குறையாது, உடல் உறுப்புகள் தளராது, மாரடைப்பு ஏற்படாது என ஆய்வில் தெரிவிக்கப்படுகின்றது. வ…
-
- 0 replies
- 459 views
-
-
Drinking water at the correct time. Another little tidbit that's news to me. Always knew to drink a lot of water, but who knew the timing effected things. Drinking water at the correct time maximizes its effectiveness on the Human body: 2 glasses of water after waking up helps activate internal organs 1 glass of water 30 minutes before a meal - helps digestion 1 glass of water before taking a bath - helps lower blood pressure 1 glass of water before going to bed - avoids stroke or heart attack Please pass this to the people you care about......
-
- 11 replies
- 1.6k views
-
-
எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள்?? வணக்கம். எல்லோருக்கும் தமது உடம்பை கவனமாக நோய் நொடி வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆசை இருக்கும் என்பதை மறுக்க மாட்டீர்கள். இன்னும் சிலர் உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டும் என்று அல்லும் பகலும் உழைப்பார்கள். ஆனால் இந்த இயந்திர உலகில் வாழும் நாம் எவ்வளவு தூரம் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை எல்லோரிடமும் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.நன்றி. நான் கிழமை நாட்களில் வேலையின் பின்னர் 3 நாட்களாவது உடற்பயிற்சி நிலையத்தில் குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செலவளிப்பேன்.சனி, ஞாயிறு அதிகாலையில் யோகா செய்வதுண்டு.
-
- 21 replies
- 4.7k views
-
-
பதினைந்து வருட ஆராய்ச்சியின் பின்னர் ஒரு விதமான ( Retinitis pigmentosa ) விழிப்புலன் அற்றவர் அதை மீள் பெற்றார் ! உலகில் பத்து வீதமானோர் இது சம்பந்தமான கண் குறைபாடு உள்ளவர்கள் ஜெர்மனியில் நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின்னர் கண்ணுக்குள் வைக்கப்பட்ட ஒரு வித "மைக்ரோ சிப்பின்" உதவியுடன். (படங்கள் இணைக்கப்படுள்ளன) http://edition.cnn.com/2010/HEALTH/11/03/retina.implant.trial/?hpt=T2 http://www.bbc.co.uk/news/health-11670044
-
- 0 replies
- 539 views
-
-
வலிநிவாரணிகள் (Pain Killers) - நல்லதும் கெட்டதும் வலி நிவாரணிகள் பற்றி நிறையத் தப்பபிப்பிராயங்கள் இருக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவர் கடுமையான இடுப்புவலியால் துன்பப் பட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தனக்கு Pain Killer மருந்து வேண்டவே வேண்டாம் என அடம்பிடித்தார். மிகுதி இங்கு சென்று பாருங்கள் மிக்வும் பயன் உள்ளது...http://hainallama.blogspot.com/
-
- 0 replies
- 595 views
-
-
தடிமன் (common cold) என்பது தீவிரமாகத் தொற்றக்கூடிய ஒரு தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். இது மேல் மூச்சுத் தொகுதியைத் தாக்குகிறது. தொண்டைக் கமறல், மூக்கு வடிதல், தும்மல், இருமல் என்பன இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். சில சமயங்களில் மேற்கண்ட அறிகுறிகள், கண் சிவத்தல், தசைநார் வலி, தலைவலி, பசியின்மை போன்றவற்றுடன் சேர்ந்து காணப்படும். பொதுவாக இதன் அறிகுறிகள் ஒரு கிழமையில் நீங்கிவிடுமாயினும் சில சமயங்களை இரண்டு கிழமைகள் வரை நீடிக்கவும் கூடும். இந் நோயின் அறிகுறிகள் குழந்தைகளிலும், சிறுவர்களிடத்தும் கூடுதலாகக் காணப்படும். வாழ்நாளில் ஒருவருக்கு சராசரியாக இருநூறு தடவை தடிமன் பிடிக்கிறது. அது சராசரியாக ஒன்பது நாட்கள் நீடிக்கிறது. இப்படிப்பார்க்கையில் ஒருவர் தனது வாழ்நாளி…
-
- 6 replies
- 4k views
-
-
Oct 20, 2010 / பகுதி: மருத்துவம் / மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின…
-
- 0 replies
- 545 views
-
-
ஹெராயினை விட தீங்கு நிறைந்தது ஆல்கஹாலே - பேராசிரியர் டேவிட் நட் திங்கட்கிழமை, 01 நவம்பர் 2010 11:15 போதைப்பொருட்களில் உயர்ந்ததாக கருதப்படும் ஹெராயின், கஞ்சா போன்றவற்றை விட அதிகம் தீங்கு விளைவிப்பது ஆல்கஹாலே என அடித்துக் கூறியுள்ளார் இது தோடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் டேவிட் நட். இவர் தனது ஆராய்ச்சி அறிக்கையை பிரிட்டனிலிருந்து வெளியாகும் மருத்துவ இதழான " தி லான்செட்டில் " வெளியிட்டுள்ளார். மொத்தமுள்ள 20 போதைப் பொருட்களில் 16 தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கக் கூடியது என அடையாளப்படுத்தியுள்ளார். டொபாக்கோ, கோக்கெய்ன், ஆல்கஹால் ஆகியவை இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. பிரிட்டன் போதைப் பொருள் தலைமை ஆலோசகராக பணியாற்றி…
-
- 4 replies
- 712 views
-
-
இறந்தும் வாழும் உன்னதம்... தமிழ்நாட்டில் மூளைச்சாவுக்கு ஆளானவர்களின் உடல் உறுப்புகளைத் தானம் பெற்று, தேவையானவர்களுக்குப் பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் மாதத்துடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. தமிழகம் இதில் முன்னோடியாகத் திகழ்கிறது என்பது பாராட்டுக்குரியது. மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் மட்டுமன்றி, இரண்டு அரசு மருத்துவமனைகளும்கூட சாதனைகள் நிகழ்த்தியுள்ளன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொது சுகாதாரத் துறைச் செயலர் வி. கே. சுப்புராஜ் கூறியுள்ள குறிப்புகளின்படி, தமிழக மருத்துவமனைகளில் மொத்தம் 716 பேருக்கு மாற்று உறுப்புகள் பொருத்தும் சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த அளவுக்கு சாதனை…
-
- 0 replies
- 557 views
-