Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உடல் பருமனைக் குறைக்கும் நவீன அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் சிகிச்சை தெற்காசியா முழுமைக்கும் உடற்பருமனால் பாதிக்கப்படும் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பருமன் மன அழுத்தத்தை தோற்றவிப்பதுடன், மனித வளத்தை முற்றாக அழிக்கும் காரணியாகவும் மாறிவிடுகிறது. அத்துடன் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகவும் காரணமாக அமைந்துவிடுகின்றன. அதே சமயத்தில் உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் உடல் எடையை குறைக்க தீர்மானிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதற்காக எளிய சிகிச்சை முறையை எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் உடற்பருமனை குறைக்க நவீன சிகிச்சையாக அல்ட்ரா சவுண்ட் கேவிட்டேசன் என்ற சி…

  2. புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினைக்கு தீர்வு.! வயதானவர்கள் சந்திக்கும் சிக்கலான சிறுநீரக பிரச்சனை புரோஸ்டேட் சுரப்பி பிரச்சினை. இதன்போது வயதான ஆண்களுக்கு சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். பலரும் இந்த நோயை அலட்சியம் செய்துவிடுகிறார்கள். இந்த நோய்க்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோய்க்கும் ஒரேவிதமான அறிகுறிகள்தான். வயதான ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்நோயை 80 சதவீதம் சாதாரண மருந்துகளால் குணப்படுத்திவிடலாம். சிறுநீர் கழிக்கவே முடியவில்லை என்ற நிலை தோன்றினால் மட்டும் எண்டாஸ்கோப்பி சிகிச்சையை மேற்கொள்ளலாம். சில ஆண்களுக்கு விதைப்பையில் வீக்கம் தோன்றலாம். …

  3. எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பற்றி நாம் தெரிந்துக் கொள்வோம். *பால் மற்றும் பழங்கள் பழங்கள் சாப்பிடால் அது விரைவாக செரிமானம் ஆகிவிடும். ஆனால் பால் உணவுகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இந்த இரண்டு பொருட்களாயும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அசிடிட்டி பிரச்சனைகள் ஏற்படும். *பால் மற்றும் முள்ளங்கி பால் வகை உணவுகள் குளிர்ச்சியானவை, முள்ளங்கி சூடான உணவு வக…

  4. இருமல் , சளி குணமாக : கொஞ்சம் தேனை ( Honey ) ஒரு தேக்கரண்டி எடுத்து அப்படியே வாயில் விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து ஆச்சரியமடைவீர்கள். குழந்தைகளுக்குக் கூட நம்ம ஊரில் இதனைக் கொடுப்பதுண்டு.இகுருவி இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச் சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப் போய் விடும். கூடவே சாதாரண காய்ச்சல் இருப்போர் நம்மூர் மிளகு ரசத்தையும் வைத்துச் சாப்பிடலாம். நம்மூர் மிளகு ரசம் தேவையான பொருட்கள் o புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு o மிளகுப் பொடி - 2 1/2 தேக்கரண்டி o துவரம்பருப்பு - 6 மேசைக்கரண்டி o பெருங்காயம் - ஒரு சிறு …

    • 11 replies
    • 17.2k views
  5. இஸ்கிமிக் கார்டியோமயோபதி ( Ischemic Cardiomyopathy)க்குரிய சிகிச்சை இதயத்தில் எந்த கோளாறுகள் ஏற்பட்டாலும் எமக்கு பயம் வருவது இயற்கையே. அது என்னவென்று தெரியவரும் போது தான் நாம் அதனை எதிர்கொள்வதற்குரிய மனதிடத்தை பெறுகிறோம் என்பதும் உண்மை. இந்நிலையில் இதய தசைப் பகுதியில் ஏற்படும் சில பாதிப்புகளைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். இதயப்பகுதியில் உள்ள தசைகள் தங்களின் இயல்பான வலுவினை இழ்ந்திருந்தாலோ அல்லது இதய தசை மெலிந்திருந்தாலோ அல்லது ஓரிடத்தில் மெலிந்து பிறகு வேறொரு இடத்தில் பெரிதாக இருந்தாலோ இதயத்திற்கு இரத்தம் சீராக பம்ப் செய்ய இயலாத நிலை உருவாகும். அத்துடன் உடலுக்கு போதிய அளவில் இரத்தம் அனுப்பப்படுவதிலும் சிக்கல்கள் எழக்கூடும். …

  6. தாய்ப்பால் அதிகமா கொடுத்தா அழகு குறைஞ்சிடுமாமே’ என்னும் தவறான செய்திகள் இப்போது பெரும்பாலும் நம்பப்படுவதில்லை. நேர்மாறாக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உற்சாகமாக இருப்பதுடன், மார்பகப் புற்றுநோய் வராது என்னும் செய்தி பல அம்மாக்களை எட்டியிருக்கிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவந்தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறது இன்றைய ஆராய்ச்சி. ஒளவையாரின் வாக்கு `பீரம் பேணி பாரம் தாங்கும்’ எனும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் பாடல் (12-ம் நூற்றாண்டு), தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள் என்பதை உணர்த்து…

  7. பைப்றோ மையால்ஜியாக்குரிய சிகிச்சை நீண்ட நாள்களுக்கு தலை முதல் கால் வரையில் பகுதிகளில் வலி இருந்தாலும், அந்த வலி நாளுக்கு நாள் புதிய புதிய இடங்களில் தோன்றினாலும், சோர்வு, தலைவலி, ஞாபக மறதி, தூக்கமின்மை, காலையில் எழும்போதே உற்சாகமேயில்லாமல் எழுவது ஆகியவை தோன்றினாலும் உங்களுக்கு பைப்றோ மையால்ஜியா பாதித்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். உடனே சிலர் அது என்ன பைப்றோ மையால்ஜியா? என கேட்பர். மருத்துவத்துறையினர் இதற்கு முன்பு பைப்றோ சைட்டீஸ் என குறிக்கப்பட்ட தசை வலி நோய் தான் இந்த பைப்றோ மையால்ஜியா. இது வாழ்க்கை முழுவதற்கும் எம்மோடு பின்னி பிணைந்து வதைக்கும் ஒரு நோயாகவே உலகம் முழுவதும் உள்ளது. இதன் முக்கிய பாதிப்பு தூக்கம் என்பதால், இதனால் …

  8. இந்த வாரக் கேள்விக்குப் பதில் அளிப்பவர் செங்கல்பட்டைச் சேர்ந்த சித்த மருத்துவர் க. சங்கர்: எனக்குத் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. எனக்குக் குழந்தை இல்லை. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில் கரு முட்டை வளர்ச்சி நன்றாக இருக்கிறது. ஆனால், எண்டோமெட்ரிகல் லைன் (கருப்பையின் உட்சுவர்) 6-7 மி.மீ. தான் இருக்கிறது. அதுதான் பிரச்சினை என்கிறார்கள். என்னுடைய கருப்பையின் உட்சுவர் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? - துர்கா, ஊர் குறிப்பிடவில்லை தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை. உங்களுடைய மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இயல்பான முடிவுகளையே தருகிற நிலையில், நீங்கள் சந்தித்துவரும் பிரச்சினை விரைவில் குணமடைய…

  9. கணினியின் முன் அமர்வது எப்படி? தொழில்புரியும் இடங்களில் உடல் உபாதைகள் ஏற்படுவது வழமையானதே. குறிப்பாக நாம் இன்று கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எமது வேலையை கணினி இலகுவாக்கினாலும் தொடர்ச்சியான வேலைகளால் நாம் பல இன்னல்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. கண்பார்வை குறைபாடு, உடல் நோ, கூன் விழுதல், கழுத்து, முதுகு வலி என பல நோய்கள் எம்மை இலகுவில் தொற்றிக்கொள்கின்றன. இவற்றிலிருந்து ஓரளவேனும் விடுபட வேண்டுமெனில் நாம் சில உடல் ஆரோக்கிய முறைகளை பின்பற்றுவது முக்கியம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எமது அன்றாட தொழில் நடவடிக்கைக்காக கணினியை பயன்படுத்தும் நாம், அலுவலகத்தில் வசதியாக, பாதுகாப்பாக, உற்சாகமாக இருக்கும் வழிகாட்டல் முறைகளை பின்…

  10. பதின்ம வயது இளைஞரின் வாலை ஒட்ட நறுக்கிய மருத்துவர் தண்டுவடத்தின் கீழ் பகுதியில் 20 சென்டி மீட்டர் நீளத்தில் வால் வளர்ந்திருந்த பதின்ம வயது இளைஞர் ஒருவர், அதனை அகற்றிவிட அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அழகியல் மற்றும் உளவியல் ரீதியாக அவனை தொந்தரவு கொடுப்பதாக இந்த வால் அமைந்து விட்டது தற்போது 18 வயதாகியிருக்கும் இவருக்கு, 14-வது பிறந்த நாளுக்கு பின்னர் தான் இந்த வால் வளர தொடங்கியதாம். நாக்பூரை சேர்ந்த இந்த இளைஞரும், அவரது குடும்பத்தினரும், இவருக்கு வால் இருப்பதை பிறர் அறிந்தால், அனைவரின் கேலி கிண்டலுக்கு ஆளாகலாம் என்று கவலையடைந்ததால், இந்த வால் வளர்வதை ரகசியமாக வைத்துள்ளனர். மிகவும் நீளமாக வளர்ந்த பின்னர், அதில் எல…

  11. கொழுப்பை அகற்றும் நவீன சிகிச்சை எம்மில் பலரும் சுவைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு பதார்த்தத்திற்கோ அடிமையாகி மூன்று வேளையும் அதையே சாப்பிட்டிருப்போம். அளவிற்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு தானே அதனால் நாம் உடற்பருமனுக்கு ஆளாகி வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம். இந்நிலையில் எம்மைப் போன்றவர்களுக்காகவே ஒரு நவீன சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது. BTL Vanquish MEஎன்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிகிச்சையைப் பற்றி காண்போம். இது சத்திர சிகிச்சையற்ற வலியற்ற ஒரு சிகிச்சை ஆகும். இதன் போது, உடலில் எங்கு அதிகப்படியான கொழுப்பு உள்ளதோ அப்பகுதியில் உள்ள சதையை 42 டிகிரி செல்ஷியஸ் வரை சூடு படுத்தியும், அதன் அடியில் இருக்கும் கொழுப்பை 46 டிகிரி வரையிலும் வெப்பமா…

  12. உலக இதய நாள் செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்! நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இ…

  13. பெண்களில் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணங்கள் பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதல் இடத்தைப் பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல்புற்றுநோய் உள்ளது. வெளிநாடுகளில் இக்கர்ப்பப்பை வாசல்புற்று நோயின் தீவிரம் ஒழுங்கான பரிசோதனைகள் மற்றும் தடுப்புமுறைகளால் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொடர்ந்தும் இந் நோயின் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதற்குப் பிரதான காரணம் மக்கள் மத்தியில் இப்புற்றுநோய் தொடர்பான பொது அறிவும் பரிசோதனைகள் மற்றும் தடுப்பு முறைகள் தொடர்பான ஆலோசனைகள் ஏனைய வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளமையே ஆகும். எனவே இப்புற்றுநோய்…

  14. முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கை, கால், அசதி நீங்கும். 2. முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப் பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் அதிகம் வேகவிடாத பொறியலாக சமைத்து உண்ண கழுத்து வலி படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். 4. முருங்கைப் பூ ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தப்படுத்தி, அதை 250 மி.லி. பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து, ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். 5. …

  15. உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும், பிராண வாயுவும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்கு இரத்த அழுத்தம் என்று பெயர். 90 சதவீதம் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ேஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல் போன்றன ஏற்படும். கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்களாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழு…

  16. இதய நோய் Heart Attack வராமல் தடுக்கும் சிறந்த வழிகள்! 2020-ம் ஆண்டில், இதயநோய் ஒரு கொள்ளை நோய் போலப் பரவும் என்று ஒரு மருத்துவ ஆய்வு கூறியிருக்கிறது. அந்த அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, இப்போதிலிருந்தே உணவு, உடற் பயிற்சி, வாழ்க்கைமுறை இதிலெல்லாம் கவனம் செலுத்தவேண்டும். உணவுக் கட்டுப்பாடு: முதலாவதாக, உடல் எடையைக் குறைப்பதற்காக. அடுத்து, ரத்தத்தில் கொழுப்பு சத்தைக் குறைக்க, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பாதுகாப்பான சத்துகளைப் பெற… என்று மேலும் பலவித காரணங்களுக்காக உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது. கட்டுப்பாடான உணவால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். கட்டுப்பாடான உணவும் அதன் அளவுகோலும்: …

    • 7 replies
    • 19.7k views
  17. கோலா பானங்கள் புற்றுநோயைத் தூண்டுமா? சில வருடங்களுக்கு முன்பு பிரபல கார்பனேட்டட் குளிர்பானம் ஒன்றின் நூற்றாண்டு கால ரகசியம் வெளிப்பட்டது. அதில், சுவையைக் கூட்ட, திரும்பத் திரும்ப குடிக்கத் தூண்ட ஆல்கஹால் கலக்கப்படுகிறது எனத் தெரியவந்தது. தற்போது, மற்றொரு பிரபல குளிர்பானம் ஒன்றில் புற்றுநோய்க்குக் காரணமான ரசாயனம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் விரும்புவது குளிர்பானங்களைத்தான். பல்வேறு நிறங்களில், சுவைகளில் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், காண்போரை சுலபமாக ஈர்க்கும் தன்மை உடையவை. இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, குளிர்பானங்கள் தயாரிக்க எவ்வளவுதான் வரைமு…

  18. ஏன்... மூக்கில், உள்ள முடியை அகற்றக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியம் சார்ந்து நாம் தினமும் காட்டும் அக்கறையை விட, அழகு சார்ந்து நாம் அன்றாடம் காட்டும் அக்கறை தான் அதிகமாக இருக்கிறது. அழகாக உடை உடுத்த வேண்டும், மிடுக்காக இருக்க வேண்டும், ஷூ பாலிஷ் செய்ய வேண்டும், முடிக்கு க்ரீம் பயன்படுத்துவது, தாடி ட்ரிம் செய்வது, மூக்கின் முடியை கூட மொத்தமாக அகற்றுவது என நாம் இவற்றை தினமும் செய்கிறோம். சமீபத்திய ஆய்வில், தாடியை கிளீன் ஷேவ் செய்வதே தவறு, தாடி இருப்பதால் நல்ல கிருமிகள் வளர்கின்றன.இவை, முகத்தின் சருமத்திற்கு நன்மை விளைவிக்கின்றன என கண்டறியப்பட்டது. அதே போல மூக்கின் முடியை முழுமையாக தினமும் அகற்றுவதும் தவறு என கூறுகின்றனர். உண்மையில் மூக்கின் முடி பாக…

  19. வாழைப்பழத்தோல் தரும் மருத்துவம் வாழைப்பழத்தோல் தரும் மருத்துவம் Posted By: online3@uthayan.comPosted date: July 28, 2016in: மருத்துவம் வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய கொஞ்சம் யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வ…

  20. மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்! உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட …

  21. பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்­குவீர்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல் பகல் பொழுதில் ஒரு மணி நேரம் உறங்கு­வது நீரி­ழிவு பாதிப்பு ஏற்­படும் அபா­யத்தை 45 சத­வீ­தத்தால் அதி­க­ரிப்­ப­தாக ஜப்­பா­னிய ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர். இந்த ஆய்வின் பெறு­பே­றுகள் உல­க­மெங்­கு­முள்ள 307,237 பேரை உள்­ள­டக்கி மேற்­கொள்­ளப்­பட்ட 21 ஆய்­வு­களை அடிப்­ப­டை யாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. பகல் பொழுதில் சுமார் 60 நிமி­டங்கள் உறக்­கத்தில் ஆழ்­ப­வர்­க­ளுக்கு அவ்­வாறு உறங்­கா­த­வர்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் நீரி­ழிவு ஏற்­படும் அபாயம் 45 சத­வீதம் அதி­க­மா­க­வுள்­ள­தாக டோக்­கியோ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வாளர் யமடா த…

  22. குறுந்தொடர்- 1: புரதச் சுரங்கம் நீயென்ன பெரிய பருப்பா?‘ என்று உதிரியாகத் திரிபவர்கள், சிறுரவுடி களைப் பார்த்துச் சினிமாவில் கேட்பதைப் பார்த்திருக்கலாம். மனிதர்கள் எப்படியோ தெரியாது, நிச்சயமாகச் சாப்பிடப்படும் ‘பருப்பு’, பார்க்கச் சிறிதாக இருந்தாலும் பெரிதுதான். காரணம் அதில் இருக்கும் அபரிமிதச் சத்து, அதிலும் தசைகளையும் உடலையும் ஊட்டி வளர்க்கும் புரதச் சத்து. பருப்பு வகைத் தாவரங்களின் காய்களையும் விதைகளையும் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகிறார்கள். குழந்தைக்குச் செரிமானத் திறன் மேம்பட்டவுடன், முதலில் தரப்படுவது சோறும் மசிக்கப்பட்ட பருப்பும் சேர்ந்த பருப்புச்சோறுதான் (கொங்கு பகுதி அரிசி பருப்பு சாதம் கதை தனி). அதேபோலத் …

  23. நாற்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ இதயம் பாதிக்கப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் இதய பாதிப்பிற்காக சிகிச்சை எடுக்கும் போது சத்திர சிகிச்சையை தெரிவு செய்வதில்லை. மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினாலும் இதயத்தில் சத்திர சிகிச்சையை மனமுவந்து செய்துக்கொள்வதில்லை. இதனை கருத்தில் கொண்டே மருத்துவ உலகம் இதய பாதிப்பிற்கு தற்போது சத்திர சிகிச்சையில்லாமல் பல புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறர்கள். அதில் ஒன்று தான் கீலேசன் தெரபி. எம்முடைய உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைகளில் குளுக்கோஸ் ஏற்றுவார்களே அதே போன்றது தான் இந்த கீலேசன் தெரப…

  24. மத்தியத்தரைக்கடல் பகுதி உணவு வகைகள் இதய நோயாளிகளின் ஆயுட்காலத்தை இது நீட்டிக்கிறது என இத்தாலியில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது. பழங்கள், காய்கறிகள், மீன், கடலை வகைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை ஆகியவை இவற்றில் அடங்கும்.சிவப்பு இறைச்சி மற்றும் வெண்ணையை உண்பவர்களை விட இவற்றை உட்கொள்பவர்கள் 37 சதவீதம் கூடுதலாக உயிர்வாழும் வாய்ப்பு உள்ளதாம். BBC

  25. ஆரோக்கியம் காக்கும் 6 உணவுகள் ஃபேஷன், டிரெண்ட் எனக் கருதி, தெருவோரக் கடைகளிலும் ஃபாஸ்ட்ஃபுட் கடைகளிலும் கிடைப்பதை உண்டு, உடலை நோய்க்காடாக மாற்றி இருக்கிறோம். பாரம்பரிய உணவுகளில்தான் ஆரோக்கியம் நிறைந்திருக்கிறது. அவற்றை உண்டுதான் நம் முன்னோர் உடல் வளர்த்து; உயிர் வளர்த்து இன்புற்று வாழ்ந்தனர். அப்படி, ஆரோக்கியம் காக்கும் ஆறு உணவுகள் பற்றி இங்கே பார்ப்போம்... சோளம்: சோளத்தில் புரதம்,கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, தயமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. வயிற்றுப்புண்ணுக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை நோய் , ரத்தச்சோகை உள்ளவர்களுக்கு சோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.