வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
பிரான்சில் 2012 / 2013 யில் நடைபெற்ற தமிழ்- குர்திஸ்தான் விடுதலை போராட்ட போராளிகளின் படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் - நீதி கேட்டு குர்திஸ்தான் மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம். இந்த நாளில் பரிதி அண்ணன்- நாதன்- கஜன் ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கேட்டு ... இடம்: Gare de Nord நேரம் : 11H45 மெட்ரோ: ligne 5 - 4 RER : D- B- E தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு Tel: 06 52 72 58 67 (facebook)
-
- 1 reply
- 475 views
-
-
சம்பந்தப்பட்ட அந்த ஈழத்தமிழர் சிறீலங்கா அரசாங்கத்துடன் நிர்வாக ரீதியாக தொடர்பு வைத்துக்கொண்டதே இதற்கு காரணம் என்றும் OFPRA தெரிவித்துள்ளது. 2007 ம் ஆண்டு பிரான்சுக்கு வந்த அந்த ஈழத்தமிழர் 2008ம் ஆண்டு அகதியாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் தனது மனைவியை பிரான்சுக்கு அழைத்துள்ளார். அவரது மனைவிக்கு தற்காலிக வதிவிட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு கடவுச் சீட்டு எடுப்பதற்காக அவர் பாரிசிலுள்ள சிறீலங்கா தூதரகத்துக்கு மூன்று தடவைகளுக்கு மேல் சென்றுவந்துள்ளார். அத்துடன் சிறீலங்கா தூதரக அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஊரில் இருக்கும் தனது உறவினர்கள் மூலமாக தனது பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையும் சிறீலங்கா அரசாங்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
அதிபர் ஒல்லாந்த் தொடர்ந்தும் இரவுப் பொழுதை நடிகையுடன் கழிப்பதாக சஞ்சிகை கூறுகிறது பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந், நடிகை ஜூலி காயெயுடன் உறவு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள பாரிஸிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதாக அதிபர் தெரிவித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் குறித்த சஞ்சிகை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை தொடர்பில் அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எலீஸி பேளஸுக்கு அருகே உள்ள ஃபிளாட் வீடொன்றில் அதிபர் ஒல்லாந் நடிகை காயெயுடன் தொடர்ந்தும் இரவுப்பொழுதைக் கழித்துவருவதாக பரவிவந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக க்ளோஸர்- சஞ்சிகை பல படங்களை வெளியிட்டுள்ளது. சாரதி …
-
- 0 replies
- 565 views
-
-
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு T20 போட்டியில் அதிரடி வீரம் காட்டிய யுவ்ராஜ் சிங் அதன் பிறகு ஒருநாள் போட்டித் தொடரில் மிட்செல் ஜான்சனிடம் மண்ணைக்கவ்வினார். இதனால் அவரது ஆட்டம் மீது சந்தேகம் எழ நியூசீ.தொடரிலிருந்து யுவ்ராஜ் நீக்கப்பட்டார். ஆனால் அவர் அணியில் வேண்டும் என்று தோனி நிற்கவில்லையாம்! யுவ்ராஜ் சிங் வேண்டாம் என்று தோனி கூறியதாக பிசிசிஐ-யின் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று கிசுகிசுக்கிறது. ஆஸ்ட்ரேலியாவுடன் சரியாக ஆடாவிட்டாலும் தோனி அவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் அவரை தேர்வு செய்தார். ஆனால் பலன் இல்லை. அதே அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை அவரிடம்…
-
- 0 replies
- 853 views
-
-
பரிசிலிருந்து செல்வதற்கு இப்பொழுதே முன்பதிவு செய்யுங்கள். (facebook)
-
- 2 replies
- 707 views
-
-
மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் யேர்மனியில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் மண்ணின் மைந்தர்களின் நினைவு சுமந்து ஐரோப்பிய ரீதியிலான கரபந்தாட்டச் சுற்றுப்போட்டியினை லண்டவ் நகர உள்ளரங்கமைதானத்தில் நடாத்தியது. போட்டிகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி வெற்றிபெற்ற அணிகளுக்கான மதிப்பளிப்பையடுத்து நன்றியுரையுடன் போட்டிகள் இனிதே நிறைவுற்றன. போட்டியில் சுவிஸ், இலண்டன், நெதர்லாண்ட், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த பேர்ன் ஏளூபீ, பிரான்ஸ் வள்ளுவன் வி.க. ஏளூபீ, தாய்மண் வி.க, சூரிச் த.வி.க, இலண்டன் ஈழம் வி.க. சூரிச் உஸ்ரர் வி.க, நெதர்லாண்ட் தமிழர் ஒன்றியம்,நியூஸ்ரார் ஏளூபீ, யேர்மன் காஸ்ரொ…
-
- 0 replies
- 500 views
-
-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழர் மரபு திங்கள் சிறப்பு நிகழ்வுகளை முன்னிட்டு கனேடிய மற்றும் உலகத்தமிழ் உள்ளங்களுக்கு கனடா ஒன்ராறியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவ ரிம் கூடாக் அவாகள் ஆசிச் செய்தி வளங்கியுள்ளார். அவர் அனுப்பிவைத்த அந்த ஆசிச் செய்தியின் தமிழாக்கம் கீழே தரப்படுகிறது. ஐனவரி 09. 2014 அன்பு மிக்க தமிழ் மக்களே வணக்கம்! தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையும், தமிழர் மரபு திங்களை இம்மாதம் பூராகவும் கொண்டாடும் உங்கள் ஒவ்வொருவரையும் ஒன்ராரியோ புரோகிரசிவ் கொன்சவர்டிவ் கட்சியின் தலைவராக எனது வாழ்த்துகளையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த சில பத்தாண்டுகளாக, ஒன்ராரியோ தமிழ் சமூகம், குறிப்பா…
-
- 1 reply
- 718 views
-
-
விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவ…
-
- 1 reply
- 952 views
-
-
தமிழர்களின் தைப்பொங்கல் விழாவினை முதன் முதலாக தமிழர் மரபு நாள் என்று மார்க்கம் நகரசபை உறுப்பினர் (வார்ட்7) திரு லோகன் கணபதி அவர்கள் கனடிய நீரோட்டத்தில் பிரகடனப்படுத்தி கடந்த இரண்டு வருடமாய் தமிழர்களின் பாரம்பரியகலாச்சார விழாவாக தைப் பொங்கல் அன்று மார்க்கம் நகரசபை கொண்டாடி வருவது அனைவரின் வரவேற்பையும் உரிய அங்கீகாரத்தையும் தந்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் இந்த ஆண்டும் இங்குள்ள அனைத்துத் தமிழ் சமூகங்களும் பல்லின மக்களும் கலந்து கொண்டு மகிழும் வண்ணம் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எதிர்வரும் 12.01.2014 அன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் மிகச் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாத் தலைவரும் மா…
-
- 3 replies
- 567 views
-
-
கேன்பெர்ரா: அண்டார்டிகா பனிப்பகுதியில் சிக்கிய ரஷ்ய, சீன கப்பல்களில் இருப்பவர்களை மீட்க, அமெரிக்க பனி உடைப்பு கப்பல் அங்கு விரைகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த பனி உடைப்பு கப்பல் அகாடெமிக் சோகல்ஸ்கை மூலம், அந்நாட்டு விஞ்ஞானிகள், அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். இந்த கப்பல் கிறிஸ்துமஸ் முதல் நாளில் இருந்து அங்கு பனிப்பாறையில் சிக்கிக் கொண்டது. பனிப்பாறைகளை உடைக்க முடியாததால் கப்பல் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்த கப்பலை மீட்க உதவி செய்யும்படி, சீன நிறுவனத்திடம் ரஷ்யா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, சீனாவின், ஸ்நோ டிராகன் அண்டார்டிகா பகுதிக்கு விரைந்தது. ஆனால், கடும் பனிப்பாறையில் இந்த கப்பலும் சிக்கிக் கொண்டது. தொடர்ந்து முன்னேற முடியாமல், பனிப்பகுதியில்…
-
- 7 replies
- 1.3k views
-
-
Jim McDonald @jmccdon 23h Ask President #Obama to support an international #warcrimes investigation in #SriLanka. http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/ActionItem.aspx?c=6oJCLQPAJiJUG&b=6645049&aid=15205 (twitter) இறுதிக்கட்ட போரில் இருபகுதியும் குற்றங்கள் புரிந்ததாகவும் அவற்றை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் amnesty international USA அமெரிக்க அரசாங்கத்தை கேட்கிறது. During 2009, thousands of civilians died in the final months of the war in Sri Lanka. Both the Sri Lankan government and the Tamil Tigers committed war crimes and other gross human rights abuses. But no one has been held accountable. Ask th…
-
- 0 replies
- 468 views
-
-
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நடைபெற்ற கலை நிகழ்வொன்றின்போது அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல இசைக் கலைஞர்கள் இருவர் மேடையில் தோன்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை அப்படியும் இப்படியுமாக அசைத்துக்காட்டியும், போராளிகளை ஆதரித்துப் பேசியும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதாக கொழும்பை தள மாகக் கொண்ட ஆங்கில இணையத்தளமொன்று தெரி வித்துள்ளது. போர்க்குணம்மிக்க சமூக நீதி மற்றும் அனைத்தும் ஆபிரிக்கத்துவம் ஆகிய இரண்டையும் கருத்தூன்றி வெளிப்படுத்தும் சமூகம்சார் இசைக் காவியங்களுடன் எதிரெதிரே பாடும் தங்கள் பாடல் நடைக்கு பெயர்பெற்றுள்ள "டெட்பிரெஸ்" எனும் பிரபல அமெரிக்க பின்புல இசைக்குழுவின் கலைஞர்களே இவ்வாறு சர்ச…
-
- 2 replies
- 994 views
-
-
Tamil Canadians plan series of rallies to bring awareness of Tamil's plight ahead of 25th UNHRC Session: First rally to start on Friday January 17th கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள் ! தொடர்ச்சியான போராட்டம் ! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள் ! முதலாவது போராட்டம்: இடம்: அமெரிக்கத்துணைத் தூதரகத்திற்கு முன்பாக காலம்: வெள்ளிக்கிழமை ஜனவரி.17 2014 நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள் • வெள்ளி Jan 24th - American Consulate, University Avenue • செவ்வாய் Feb 4th - Sri-Lankan Consulate • வெள்ளி Feb 14th - British Consulate • வெள்ளி Feb 21st - Ind…
-
- 1 reply
- 433 views
-
-
கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) . குளிரான கா…
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம் தமிழர்கள் பொங்குவதற்காக கூடுவதும், கூடுமிடங்களில் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பதும் சாதாரண நிகழ்வு. அதேவேளையில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாமும்; ஒருத்துவத்துடன் கொண்டாடக்கூடியதும் இத்தைப்பொங்கல் நாளாகும். இந்நாளில் வாழ்வியல் சுழற்சியான ‘பழையன களைந்து புதியன புகல்’ எனும் வழமையையும், வாழ்வுக்கு தென்பூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்னும் நம்பிக்கையும் முக்கியமானவையாகும். அத்துடன் மனிதருடன் இணைந்துள்ள உழைப்பை வழங்கும் கால்நடைகளுக்கு அன்பைப் பொழியவும், வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசிக்கவும், அவற்றை போற்றவும், நன்றி செலுத்தவும் கூடியதான பண்பாட்டு கூறுகள் இந்த பொங்கல் நாளில் அடங்கி உள்ளன. இந்த உயரிய பண்புகளாலேயே இப்பொங்கல் நாள் குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
- 0 replies
- 980 views
-
-
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மத…
-
- 1 reply
- 389 views
-
-
தமிழர்களின் வீரத்தை வெளிச்சம் போட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 255வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1760ஆம் ஆண்டு ஜனவரி 3 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். இவருக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் சுதந்திர போராட்டம்: கும்பினியார் (ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி) கி.பி. 1793யில் கப்பம் கேட்டனர். கி.பி. 1797யில் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்ச…
-
- 0 replies
- 565 views
-
-
பிரான்சின் தலைநகர் பரிசின் புறச்சுற்றுச் சாலையான Périphérique (ring road) இன் வேகம் எதிர்வரும் சனவரி 10ம் நாள் முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களாகக் குறைக்கப்படுகின்றது. இதுவரை காலமும் அதிகூடிய வேகமாக மணிக்கு 80 கிலோமீற்றர்களாக இருந்தது. இது அன்றாடம் இச்சுற்று வீதியை உபயோகிக்கும் 1,3 மில்லியன் வாகனப் பயன்பாட்டாளர்களின் வேகத்தினைக் குறைக்கும். இந்த புறச்சுற்று வீதியிலிருக்கும் 16 வேகக் கண்காணிப்பு ரடார்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களிற்கு மாற்றியமைக்கப்படும். ஆனாலும் வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் முதல் ஒரு கிழமைக்குப் பெருமளவு தண்டிக்கப்படமாட்டார்கள் எனவும் ஒரு கிழமையின் பின்னர் சாரதிகள் இந்த வேகக் கட்டுப்பாட்டிற்குப் பழக்கப்பட் பின்னர் கட்டுப்…
-
- 0 replies
- 750 views
-
-
காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது. வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்…
-
- 0 replies
- 595 views
-
-
Sri Lanka Campaign Newsletter <srilankacampaign@lists.srilankacampaign.org> 9:53 AM (8 hours ago) to Sri Dear friends, We previously wrote about our attempt to prevent the deportation of Mr Jeyaseelan. On that occasion the deportation was stopped. We initially reported that he had received an emergency injunction, but it later emerged that this was not the case. What actually happened was that the Home Office cancelled the removal of their own volition, claiming that Mr Jeyaseelan was too disruptive to be removed. But to our knowledge Mr Jeyaseelan was not being disruptive at all and so it appears that this was simply a convenient excuse. There are two potentia…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம். ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன. ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன. அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடு…
-
- 7 replies
- 1.2k views
-
-
அண்டார்க்டிக்காவில் பனிப் பாறைகளிடையே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த கப்பலில் இருந்த பெரும்பாலான பயணிகளும் சிப்பந்திகளும் சீன ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. மீட்கப்பட்டுள்ள 52 பயணிகளும் 4 சிப்பந்திகளும் வானிலை சீரடைந்தால் விமானம் மூலம் மீள அழைத்து வரப்படுவார்கள் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பனிப் பாறைகளை உடைத்துச் செல்லக் கூடிய ஆஸ்திரேலிய கப்பலால் கூட, இந்த ரஷ்ய விஞ்ஞான ஆய்வுக் கப்பலை நெருங்கமுடியாமல் உள்ளது. ஆஸ்திரேலிய மீட்புக் கப்பல், பனிக்கட்டிகள் சூழ்ந்த கடற்பரப்பிலிருந்து சற்று திரும்பி, தெளிவான கடற்பரப்பில் நிற்கிறது. தடிமனான பனிக்கட்டிகள் சூழ்ந்த கடற்பரப்பில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்யக் கப்ப…
-
- 7 replies
- 805 views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லர் போல நடந்துகொள்கிறது – புருஸ் ஹெய்க் குற்றச்சாட்டு! இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லரை போல நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ராஜதந்திரி புருஸ் ஹெய்க் இதனைத் தெரிவித்துள்ளார். ஹிட்லர் காலத்தில் யூதர்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல், அவர்கள் அழிக்கப்பட்டனர்.அதேபோன்று தற்போது அவுஸதிரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளை கேள்விகள் இன்றி நாடுகடத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தினார். அத்துடன் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=25248
-
- 0 replies
- 453 views
-
-
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து 60 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் அங்கு தமது மத வழிபாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அங்கு கடாஸ்ராஜ் என்னும் இடத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் மிக்க ஆலயத்தை திருத்தி அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்துக்கள் அங்குள்ள சிவன் ஆலயத்தில் தமது வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்த காணொளி. VIDEO in Tamil http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140102_pakistantemple.shtml
-
- 0 replies
- 961 views
-