உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
நியூசிலாந்து நாட்டில் விமானிகளை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார் ஒரு பெண். அவரை பிற பயணிகள் மடக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நியூசிலாந்திந் பிளன்ஹீன் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து விமானியின் அருகே சென்றார். தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் மிரட்டினார். ஆனால் மிரட்டலுக்கு விமானி பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். விமானி அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர். ரத்தம் சொட்டிய நி…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான ஹெராயின் பறிமுதல் 2/7/2008 8:28:36 PM வீரகேசரி நாளேடு - கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான மதிப்புள்ள ஹெரோயினை அதிகாரிகள் கைப்பற்றினர். கோவையில் இருந்து முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் எயார் வேய்ஸ் விமானத்தில் கோடிக் கணக்கான மதிப்புய்ய போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுஎஸ் சூறாவளி: 52 பேர் பலி 07.02.2008 / நிருபர் எல்லாளன் அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் வீசிய கடும் சூறாவளி காற்றில் சிக்கி 52 பேர் உயிரிழந்தனர். டென்னசி மாகாணத்தில் 28 பேரும், அர்கன்சாசில் 13 பேரும், கென்டக்கியில் 7 பேரும், அலபாமாவில் 4 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூறாவளி காற்றில் சிக்கி ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சூறாவளி காற்றின் தாக்குதல் இருந்ததாக டென்னசி மாகாணத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த காற்று தமது வீட்…
-
- 1 reply
- 970 views
-
-
இங்கிலாந்து உருவாக்கும் புதிய சூப்பர் விமானம் மணிக்கு 6100 கி.மீ வேகம் ! February 7, 2008 கொன்கோட் விமானங்களின் வரிசையில் அவற்றைவிட சிறந்த தரமுள்ள புதிய இரக சூப்பர் விமானத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்திற்கு ஐந்தே ஐந்து மணி நேரத்தில் பயணிக்கக் கூடிய அசுர வேகம் கொண்டதாக இந்த விமானம் இருக்கும். இதனுடைய வேகம் மணிக்கு 6100 கி.மீ என்றும் இது ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகம் என்றும் விஞ்ஞானிகள் தகவல் தந்துள்ளனர். கடுமையான தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கொன்கோட் விமானங்கள் நூதனசாலைக்கு போனாலும் கவலைப்பட வேண்டாம் இதோ அந்த இடத்திற்கு புதிதாக வருகிறது சூப்பர் விமானம் என்றும் அறிவித்துள்ளனர். தற்போது விண்வெளிக…
-
- 2 replies
- 1k views
-
-
பாகிஸ்தான் தலிபான் போராளிகளால் வரையறையற்ற யுத்த நிறுத்தம் பிரகடனம் 2/7/2008 6:36:39 PM வீரகேசரி இணையம் - பாகிஸ்தானின் எல்லைப் பிராந்தியத்தில் படையினருடன் மோதல்களில் ஈடுபட்டு வரும் தலிபான் போராளிகள் முன்தினம் புதன்கிழமை யுத்த நிறுத்தமொன்றை பிரகடனப் படுத்தியுள்ளனர். தென் வாஸிரிஸ்தானிலும் அதற்கு அயலிலுள்ள பிராந்தியங்களிலும் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வரும் உக்கிர மோதல்களையடுத்து தலிபான் போராளி குழுத் தலைவர் பெய்துல்லா மெஹ்சுத் வரையறையற்ற யுத்த நிறுத்த மொன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாக போராளி குழு பேச்சாளர் மௌலவி ஒமர் தெரிவித்தார். வாஸிரிஸ்தானிலிருந்து சுவாட் பள்ளத்தாக்கு வரையிலான பிரதேசங்களிலும் ஏனைய பாகிஸ்தானிய பகுதிகளிலும் பாகிஸ்தானிய படையிருடனான தாக்குதல்…
-
- 0 replies
- 619 views
-
-
ஏழு விண்வெளி வீரர்களுடன் அட்லாண்டிக் விண்கலம் இன்று புறப்படுகிறது [07 - February - 2008] [Font Size - A - A - A] வாஷிங்டன் : அட்லாண்டிக் விண்கலம் ஏழு விண்வெளி வீரர்களுடன் இன்று விண்ணுக்குப் புறப்படத் தயாராக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் இக்கலத்தின் பயணம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகின்றது. நாசாவால் விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்காக கட்டுமானப் பொருட்கள், ஆய்வகக் கருவிகள், விண்வெளி வீரர்களைக் கொண்டு செல்ல அட்லாண்டிக் விண்வெளி ஓடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த ஓடம் பலமுறை விண்ணுக்கு…
-
- 3 replies
- 1.7k views
-
-
தலிபான்களுக்கு பயிற்சி வழங்க பிரிட்டன் அரசு திட்டம் [06 - February - 2008] தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த தலிபான்களுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனநிலை மாற்றமடைந்து தீவிரவாதிகளுக்கெதிராக போராடவுள்ள 2000 தலிபான்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு அந்நாடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப் பயிற்சியின் மூலம் 1800 போர் வீரர்களையும் குறைந்த அதிகாரம் கொண்ட 200 தளபதிகளையும் உருவாக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் இப் பயிற்சிக்காக 1,25,000 அமெரிக்க டொலர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத ஆப்கான் அதிகாரியொருவர் தெரிவித்தார்…
-
- 0 replies
- 734 views
-
-
இந்து சமுத்திரப் பகுதியில் மீண்டும் கடல்கோள் தாக்கினால் பேரழிவு ஏற்படும் அபாயம் [06 - February - 2008] * அமெரிக்க ஆய்வாளர்கள் இந்து சமுத்திரப் பகுதியில் மீண்டும் கடல்கோள் தாக்கினால் பேரழிவு ஏற்படுமென நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் சுமாத்ராத் தீவின் அருகே நடுக்கடலில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின் காரணமாக கடல்கோள் அலைகள் ஏற்பட்டு நிலப்பகுதிக்குள் கடல் நீர் புகுந்ததால் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தோனேசியாக் கடற் பகுதியில் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. சில சமயங்களில் லேசான அளவில் கடல்கோள் அலைகள் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படுவதும் இல்லை. இந்நிலையில் கடல்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலுக்கு அல்- ஹைதா உரிமைகோரியது [06 - February - 2008] மொரிடோனியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல்- ஹைதா தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. மொரிடோனியாவிலுள்ள இஸ்ரேலின் தூதரகம் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயமடைந்திருந்ததுடன் தூதரகமும் சேதங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக முதலில் செய்தி வெளியிட்ட அல்- ஜஸீரா தொலைக்காட்சிச் சேவை இஸ்ரேல் தூதரகம் மீது அல்-ஹைதா தாக்குதல் என்ற செய்தியை மட்டும் ஒளிபரப்பியது. இதனைத் தொடர்ந்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சில நாட்களின் பின்னர் அல்-ஹைதா அமைப்பு உரிமை கோரியுள்ளது thinakural.com
-
- 0 replies
- 678 views
-
-
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. சென்னை விமான நிலையம் அருகே இதற்கான இடத்தை வாங்கியுள்ளார் ரஹ்மான். சென்னையில் இளம் இசைப் பிரியர்களுக்கென தனியாக இசைப் பள்ளி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார் ரஹ்மான். இதற்காக சென்னை விமான நிலையம் அருகே இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தில் இசைப் பள்ளிக்கான கட்டடங்கள் எழிலுற விரைவில் எழும்பவுள்ளன. இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், சென்னை விமான நிலையத்திற்கு அருகே இடம் பார்க்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இசைப் பள்ளியைத் தொடங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். எனது கனவு நனவாகப் போகிறது. இதில் சந்தோஷம். நமது நாட்டில் இளம் திறமையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். ம…
-
- 1 reply
- 1.1k views
-
-
தன் நண்பனை ஏமாற்றி அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்த கொடூர சம்பவம் மேற்கு டில்லியில் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் மங்கேல்புரியைச் சேர்ந்தவர். அம்பேத்கர் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். திருமணமாகாதவர். அவருடைய நண்பர் பன்டி. இவர் ஒரு ரிக்ஷாக்காரர். ஜனவரி 12ம் தேதி சோனுவிற்கு பன்டி சாராயம் வாங்கி கொடுத்தார். அதனால் மயக்கமடைந்த சோனுவை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்களிடம், விருப்பப் பட்டே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்புவதாகவும் பன்டி கூறியிருக்கிறார். டாக்டர்களும் அவ்வாறே செய்தனர்.குடும்பக் கட்டுப் பாட்டிற்காக ஊக்கத்தொகையாகக் கொடுத்த ரூபாய் 1,100ம், அழைத்துக் கொண்டு வந்ததற்கான தொகை ரூ.200ம் பெற்ற…
-
- 14 replies
- 3.6k views
-
-
வெள்ளிக் கொலுசுக்கு ஆசைப்பட்டு, பாழும் கிணற்றில் வீசப்பட்ட குழந்தை, நடுங்கும் குளிரில் 30 மணி நேரம் போராடி உயிர் பிழைத்த அதிசய சம்பவம் டில்லி அருகே நடந்தது. டில்லியை அடுத்த அலிபூர் அருகே டீகரீகுர்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி சஞ்சனா. இவள், தன் அம்மாவில் கால் கொலுசுடன் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற இரண்டு பேர், கொலுசைத் திருட, குழந்தையை அழைத்துச் சென்றனர். கொலுசுகளைப் பிடுங்கிக் கொண்டு, குழந்தையை அருகில் உள்ள கிணற்றில் வீசித் தப்பினர். பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இது குறித்து அலிபூர் போலீசில் புகார் கொடுத்தனர்.இதற்கிடையே குழந்தையின் அழுகைக்குரல் கேட்டு அந்தப் பகுதி கிராம மக்கள், கிணற்றில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மலேசியாவின் கிளாங் நகரில் உள்ள இந்துக் கோவிலை இடித்தது தவறு. அதற்காக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் கூறியுள்ளார். மலேசியாவில், ஆளுங்கூட்டணி மீது தமிழர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த அதிருப்தியின் விளைவு, வருகிற பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும் என்ற பயத்தில் ஆளுங்கூட்டணி உள்ளது. இதனால் தமிழர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் ஒரு பகுதியாக கிளாங்கில் உள்ள பழம்பெரும் இந்து கோவில் இடிக்கப்பட்டதற்கு மலேசிய துணைப் பிரதமர் ரஸ்ஸாக் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாங்கில் உள்ள கோவில் இடிக்கப்பட்டது, அதிலும் தீபாவளிக்கு முன்பு இடிக்கப்பட்டது தவறு என்ப…
-
- 0 replies
- 874 views
-
-
சென்னை: சென்னையில் 14 வயது சிறுமியைக் கற்பழித்த இரு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை ஆணையரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் புகார் கொடுத்தார். சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ள மூவரசம் பேட்டையை சேர்ந்தவர் ரபியா. கணவர் இறந்து விட்டதால் மகள்கள் கைரூன் (14), பர்வீன் ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த பெயிண்ட் வேலை செய்யும் செல்வம், வெங்கடேசன் ஆகிய இரு வாலிபர்கள் குடியோதையில் வீட்டுக்குள் நுழைந்து சிறுமி கைரூனை கற்பழித்தனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் கண்டுகொள்ள…
-
- 0 replies
- 900 views
-
-
பிரிட்டனுக்கு கடத்தப்படும் நூற்றுக்கணக்கான ஆபிரிக்க குழந்தைகள் கொத்தடிமைகளாக வாழும் அவலம் [04 - February - 2008] லண்டன் : ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான குழந்தைகள் ஆபிரிக்காவிலிருந்து பிரிட்டனுக்கு கடத்திச் செல்லப்பட்டு அடிமைகளாக பயன்படுத்தப்படுவது விசாரணையொன்றில் தெரியவந்துள்ளது. நைஜீரியா போன்ற நாடுகளில் குழந்தைகளை கடத்துவதற்கென்றே கும்பல்கள் செயற்பட்டு வருகின்றன. மூன்று அல்லது நான்கு வயதுச் சிறுவர்களின் விலை 8 இலட்சம் ரூபாவென புலனாய்வு விசாரணையொன்றில் தெரிய வந்துள்ளது. பணம் கிடைக்கும் என்பதற்காக கர்ப்பமாகவுள்ள இளம் வயது பெண்கள் கூட தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளை விற்பனை செய்யத் தயாராகவுள்ளனர். ஆட்கடத்தல்களில் ஈடுபடும் கும்பல்களால் இக் குழந்தைகள…
-
- 0 replies
- 592 views
-
-
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்ப்பதுடன் பிரிட்டனையும் அழிப்போம் [04 - February - 2008] *தலிபான்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைத் தகர்த்தளிப்போம் என பாகிஸ்தானின் தலிபான் அமைப்பின் தலைவர் பையத்துல்லா மசூத் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் பிரிட்டனையும் அழிப்போமெனத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பழங்குடி இன மக்கள் அதிகம் வசிக்கும் வசீரிஸ்தான் பகுதியில் வசிக்கும் மதகுரு பையத்துல்லா மசூத். இவர் தான் பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஆவார். இவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். பெனாசிர் கொலைக்கு இவர்தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் குற்றச்சாட்டியது. இதை அவர் மறுத்த போதிலும் பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல்கள்…
-
- 0 replies
- 888 views
-
-
9 கிலோ தேனீக்களை நான்கு மணிநேரம் சுமந்து சாதனை 2/4/2008 6:49:12 PM வீரகேசரி இணையம் - கோவையில் முன்தினம் நடைபெற்ற லிம்கா உலக சாதனை நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் 9 கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உடலில் மோய்க்கச் செய்து பார்வையாளர்களை வியக்கவைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (27) என்பவரே இச்சாதனையை புரிந்துள்ளார். இவர் தேனிவளர்ப்பு பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். நேச்சுரல் ஹனி என்ற தேன் தயாரிப்பு நிறுவன உரிமையாளரான இவர் 2005 ஆம் ஆண்டில் 80 ஆயிரம் தேனீக்களை உடலில் மொய்க்கச்செய்து சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து முன்தினம் ஒன்பது கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உ…
-
- 0 replies
- 1k views
-
-
ரூபாண்டா-காங்கோ நாடுகளில் கடும் நிலநடுக்கம்: 39 பேர் பலி திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 கிகாலி: ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் காங்கோ நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில் நேற்று காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காங்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நடந்த அடுத்த மூன்றரை மணி ந…
-
- 0 replies
- 663 views
-
-
புலிகளை ஆதரிப்பதாக வீண்பழி ஆட்சி மாற்றத்துக்கும் தயார் தமிழக முதல்வர் கருணாநிதி அறிவிப்பு 2/3/2008 9:24:42 PM வீரகேசரி நாளேடு - சென்னை, விடுதலைப் புலிகளை தமிழக அரசாங்கம் ஆதரிப்பதாக வீண் பழி சுமத்தப்படுகிறது. எங்கள் மீது இப்படி ஒரு பழியை போட் டுத்தான் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றால் அந்த ஆட்சி மாற்றத்தை சந்திக்கத் தயார் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் இல்லத்திருமணம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு முதலமைச்சர் கருணாநிதி மேலும் கூறியதாவது: சட்டமன்றத்தில் இப்போது நடந்துள்ள சிலவிஷயங்களை தமிழக மக…
-
- 0 replies
- 816 views
-
-
">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 2.2k views
-
-
தமிழக அரசியலைக் கலக்கும் ஜெ. - விஜயகாந்த் மோதல் வாயைக்கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்வது தமிழ் சினிமாவில் வடிவேலு காமெடியில் அடிக்கடி நடப்பதுதான். அதுபோல தமிழக அரசியலில் தலைவர்களுக்குள்ளும் எப்போதாவது அப்படியோர் வம்படிக் காமெடி நடப்பதுண்டு. இப்போது அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும் அப்படியோர் சீரியஸான உரசலே ஆரம்பமாகிவிட்டது. `குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு! என்று ஒருமுறை விஜயகாந்துக்கு எதிராக அஸ்திரம் தொடுத்தார் ஜெ. `இவங்கதான் கூட இருந்து எனக்கு ஊற்றிக்கொடுத்தது போல...!' என்று பதிலடி கொடுத்து அரசியல்வானில் ஒரு புதிய பரபரப்பை ஆரம்பித்து வைத்தார் விஜயகாந்த். இந்தப் பிரச்சினை தமிழக அரசியலில் மாதக்கணக்கில் விமர்சனங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தடையை மீறி ஈராக் செல்லும் இந்தியர்கள் [03 - February - 2008] [Font Size - A - A - A] டுபாய்: ஈராக்குக்கு வேலைக்குச் செல்ல இந்திய அரசு விதித்துள்ள தடையையும் மீறி அங்கு ஏராளமான இந்தியர்கள் ஆர்வமாக வேலைக்குச் செல்கின்றனர். ஈராக்குக்கு வேலைக்குச் செல்ல விரும்பும் இந்தியர்கள் முதலில் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்கின்றனர். அங்கு சில மாதங்கள் தற்காலிகமாக மறைந்திருந்து பணியாற்றுகின்றனர். பின்னர், அங்கிருந்து ஈராக்குக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் மூலம் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். இவ்வாறு ஈராக்கில் வேலை வாங்கித் தரும் முகவர்களுக்கு இந்தியர்கள் ரூபா 1-1/2 இலட்சம் வரை பணம் கொடுப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளிய…
-
- 0 replies
- 645 views
-
-
1300 கி.மீ.வரை சென்று தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி [03 - February - 2008] [Font Size - A - A - A] * பாகிஸ்தான் பெருமிதம் இஸ்லாமாபாத் : ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று இலக்குகளை தாக்கும் `காவ்ரி' ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. பாகிஸ்தான் கடந்த வாரம் 700 கிலோ மீற்றர் வரை சென்று தாக்கும் `ஷாஹீன்' ஏவுகணையை சோதித்து பார்த்தது. இதன் பின்னர் ரகசியமான இடத்தில் ஆயிரத்து 300 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய `காவ்ரி' ஏவுகணையை சோதனை செய்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி முஷாரப்பும் இராணுவத் தளபதி அஷ்பக் கயானியும் கலந்து கொண்டனர். இது குறித்து முஷாரப் குறிப்பிடுகையில், `பாகிஸ்தான் இராணுவத்தினர் நன்கு பயிற்சி பெற்…
-
- 0 replies
- 770 views
-
-
பாலஸ்தீனர்களை கட்டுப்படுத்தும் முயற்சி [03 - February - 2008] கெய்ரோ : பாலஸ்தீனத்தின் காஸாப் பள்ளத்தாக்கிற்கும் எகிப்திற்குமிடையிலான எல்லைச் சுவர் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து தனது நாட்டுக்குள் நுழையும் பாலஸ்தீனியர்களை கட்டுப்படுத்தும் முயற்சிகளை எகிப்து ஆரம்பித்துள்ளது. இவ் எல்லையினூடாக எகிப்துக்குள் நுழையும் பாலஸ்தீன வாகனங்களை எகிப்திய படைகள் தடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் எல்லைப் பிரச்சினை குறித்துப் எகிப்திய அதிகாரிகளும் ஹமாஸ் இயக்கத் தலைவர்களும் கெய்ரோவில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமது நடவடிக்கைகளை எகிப்து அங்கீகரிக்ககாவிட்டால் இவ் எல்லையை மூடும் எகிப்தின் நடவடிக்கைகளை தாம் தடுக்கக் கூடுமென ஹமால் …
-
- 0 replies
- 629 views
-
-
'Super Tuesday' may not settle it all Sheldon Alberts, Washington Correspondent, Canwest News Service Brian Snyder/ReutersThe race between Hillary Clinton and Barack Obama might not be over after Super Tuesday. WASHINGTON -- Advantage, John McCain. Hillary Clinton? Maybe not so much. In a presidential primary season that has repeatedly turned conventional wisdom on its head, American voters find themselves confronting another big surprise as the campaign sprints towards Super Tuesday, the biggest day so far on the 2008 election calendar. The Republican party -- divided by competing factions and searching for a post-Bush era identity, suddenly i…
-
- 0 replies
- 778 views
-