Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: SETHU 06 JUN, 2023 | 04:14 PM ஈரானின் புரட்சிகர காவல்படையானது, ஒலியைவிட 15 மடங்கு அதிக வேகத்தில் செல்லக்கூடிய தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணையொன்றை ஈரான் இன்று (06) காட்சிப்படுத்தியுள்ளது. ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு அதிக வேகமானது ஹைப்பர்சோனிக் வேகம் எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏவுகணை மணித்தியாலத்துக்கு 1400 கிலோமீற்றர் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என ஈரானின் ஐஆர்என்ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 'பத்தாஹ்' என இந்த இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இந்த ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் ஆற்றலை புகழ்ந்துள்ளதுடன், இது ஈரானின் தடுப்பாற்றலை அதிகரிக்கும் எனவும பிராந்திய …

  2. நொவா கக்கோவா அணை ரஸ்ய படையினரால் தகர்ப்பு - பெரும் வெள்ள அபாயம்-உக்ரைன் Published By: RAJEEBAN 06 JUN, 2023 | 11:46 AM ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் நகரமான கேர்சனில் நிப்பர் ஆற்றின் மீதுஉள்ள நொவா கக்கோவா அணைக்கட்டை ரஸ்ய படையினர் தகர்த்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் பாரிய வெள்ள ஆபத்துள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அணையின் சுவர்கள் நீரில் வீழ்ந்து கிடப்பதையும் பெருமள நீர் வெளியேறிக்கொண்டிருப்பதையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரஸ்ய ஆக்கிரமிப்பு படையினர் நீர்மின் அணைக்க…

  3. Published By: SETHU 06 JUN, 2023 | 10:07 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்திய களமுனையில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பக்முக் நகரைச் சூழ்ந்த பகுதிகளில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளனர் என உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஹனான மலியர் கூறியுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும், கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் புதிய தாக்குதலை தான் முறியடித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, உக்ரேனிய படையினரின் முன்னேற்றத்துக்காக அ…

  4. Published By: SETHU 05 JUN, 2023 | 06:45 PM உக்ரேனுக்கு எதிரான யுத்தத்தில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபட்டுள்ள வாக்னர் தனியார் கூலிப்படையினர், ரஷ்ய இராணுவ சிப்பாய் ஒருவரை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட உக்ரேனிய பிராந்தியத்தில் தனது குழுவினரை தாக்குவதற்கு முயற்சித்ததாக மேற்படி சிப்பாய் மீது வாக்னர் குழு குற்றம் சுமத்தி வருகிறது. உக்ரேனில் தமது போராளிகளின் அதிக மரணங்களுக்கு ரஷ்ய இராணுவத் தளபதிகள் காரணம் என வாக்னர் குழுவின் ஸ்தாபகர் யெவ்ஜெனி பிரிகோஜின் பல மாதங்களாக குற்றம் சுமத்தி வருகிறார். உக்ரேனியப் படையினரின் தாக்குதல்கள் காரணமாக பின்வாங்கும் வாக்னர் குழுவினர் வெளியேறக்…

  5. 05 JUN, 2023 | 01:00 PM அவுஸ்திரேலியாவின் மிகவும்மோசமான பெண் தொடர் கொலையாளி என அழைக்கப்படும் பெண்ணிற்கு நீதிமன்றம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. கத்திலீன்பொல்பீளிக் என்ற அந்த பெண்மணி தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்யவில்லை என்பதற்கான புதியஆதாரங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. கத்திலீன் பொல்பீளிக் தனது நான்கு பிள்ளைகளையும் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு முன்னர் நீதிபதியொருவர் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்திருந்தார். எனினும் சமீபத்தைய விசாரணைகளின் போது அவரது பிள்ளைகள் இயல்பாகவே மரணத்தை தழுவியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 55 வய…

  6. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. \ உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அதை பராமரிப்பதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இயற்கையை மனிதன் பாதுகாப்பதை விடவும் அதை தொந்தரவு செய்யாமல் இருப்பதே நலம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மனிதன் தேர்ந்தெடுக்காமல் போனால் எதிர்காலத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் அபாயகரமானதாக இருக்கும். சங்கால தமிழர்கள் இயற்கையை அடிப்படையாக கொண்ட வாழ்க்கையே மேற்கொண்டனர். ஆனால் தேவைகள் பெருகும்போது இயற்கையின் அழிவும் …

  7. பட மூலாதாரம்,JOHNNY STOCKSHOOTER/ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ட்ரேசி டியோ பதவி,பிபிசி செய்திகள் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கடலின் மேற்பரப்பில் அற்புதமான பொறியியலின் துணை கொண்டு சுமார் 181 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சாலை நம்மைப் பிரமிக்கவைக்கிறது. மெக்சிகோ வளைகுடாவுக்கும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நான் காரில் பயணம் மேற்கொண்ட சென்றபோது, எனது தலைக்கு மேல் கடற்பறவைகள் கீச்சிட்ட சத்தம் மட்டுமே கேட்டது. ஆழமற்ற கடற்பகுதியான அங்கே, பவளம் மற்றும் சுண்ணாம்பு தீவுகளுக்கு இடையே, நீலவண்ண வானமே கடலில் மூழ்கியது போல் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை …

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டுரை தகவல் எழுதியவர்,ரெஹான் ஃபசல் பதவி,பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இரானின் மதத் தலைவர் அயதுல்லா ருஹோல்லா மௌசவி கொமேனி 1989 ஜூன் 3 ஆம் தேதி காலமானார். கடந்த 80 ஆண்டுகளில் இயற்கையாக காலமான இரானின் முதல் தலைவர் இவர்தான். அவருக்கு முன் இருந்த இரானிய அரசுத் தலைவர்கள் நாடுகடத்தப்பட்ட அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அல்லது ஆயுதமேந்திய கொலையாளிகளின் கைகளில் அவர்கள் இறந்தனர். கொமேனி இறந்தபோது, இரான் அரசு அவரை ஹஸ்ரத் முகமது மற்றும் இமாம்களுக்குப் பிறகு அற்புத சக்தி வாய்ந்த நபர் என்று அழைத்தது. …

  9. எவரெஸ்ட் சிகர மலையேற்றத்தின்போது, ஆபத்தில் மாட்டிக்கொண்ட ஒரு மலையேற்ற வீரரை, நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார் .அவருடைய பெயர் கெல்ஜி ஷெர்பா இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார். இந்த மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தன்னுடைய பயணத்தை கெல்ஜி கைவிட்டிருக்கிறார்.ஆபத்தில் இருந்த மலையேற்ற வீரரை, கெல்ஜி ஷெர்பா தன்னுடைய தோளில் சுமந்துகொண்டு, கீழே பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்துள்ளார். எவரெஸ்ட்ட…

  10. பட மூலாதாரம்,தாரா ஷா கட்டுரை தகவல் எழுதியவர்,பிரஜக்தா போல் பதவி,பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "எனது குட்டிக் குழந்தை, பெற்றோர் இருந்தாலும், அனாதை மாதிரி வாழ வேண்டிய நிலையில் தவிக்கிறாள். இரண்டு ஆண்டுகளாக அவளை விட்டு நாங்க பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைக்கு என்ன வேண்டும் என்பதில் பெற்றோர்களுக்கே அதிக அக்கறை இருக்கும் நிலையில், அவளுக்கு தாயின் அரவணைப்புடன் யார் சாப்பாடு ஊட்டிவிடுவார்கள்?" "மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, என்னிடம் இருந்து செவிலியர் அவளைப் பறித்துக்கொண்டார். அழுதுகொண்டே இருந்த அவளை செவிலியர் எடுத்துச் சென்றுவிட்டார்." "எனது மகளை மீட்க உதவும…

  11. அமெரிக்காவின் போர் கப்பலை நோக்கி நெருங்கி வந்த சீனாவின் நாசகாரி - தாய்வான் நீரிணையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது 04 JUN, 2023 | 12:51 PM அமெரிக்காவும் அதன் சகாக்களும் இந்தோ பசுபிக்கின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என சீனா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவினதும் சீனாவினதும் யுத்தகப்பல்கள் கிட்டத்தட்ட ஒன்றுடன் ஒன்று மோதுவதற்கு நெருங்கி வந்த சம்பவத்தின் பின்னர் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் இடம்பெறும் சங்கிரிலா உரையாடல் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் சீனாவி;ன் பாதுகாப்பு அமைச்சர் அமெரிக்கா சுயநலத்திற்காக …

    • 3 replies
    • 561 views
  12. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர நாடுகளை ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி புதியதாக பலதரப்பு ஆயுத கட்டுப்பாட்டு முயற்சிகளில் ஈடுபட அமெரிக்கா தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய 5 நாடுகளும் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இடையே அமெரிக்கா-ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை அறிவிப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜேக் சல்லிவன், இந்த விவகாரத்தில் அதிக முயற்சிகள் செய்யப்பட வேண்டும் எனவு…

    • 1 reply
    • 354 views
  13. உண்மை காதலுக்கு அர்த்தம் காட்டிய திருமணம் ஜோர்டான் நாட்டு இளவரசர், சவுதியின் கட்டிடக் கலை நிபுணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டது வளைகுடா நாடுகளில் பேசும் பொருளாகி உள்ளது. ஜோர்டானின் இளவரசர் ஹூசைன் (28) - சவுதியின் கட்டிடக்கலை கலை நிபுணர் ராஜ்வா அல் சைஃப் (29) திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. தலைநகர் அம்மானில் நடைபெற்ற இந்த திருமணத்தில் உலகப் பிரபலங்கள், அரசக் குடும்பங்கள் என பலரும் கலந்து கொண்டனர். இளவரசரின் திருமணத்தை முன்னிட்டு இன்று ஜோர்டானில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, அரசு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது. இந்த திருமணம் ஜோர்டான் - சவுதி இடையே அரசியல் ரீதியிலான உறவை மேலும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது. திரும…

    • 4 replies
    • 489 views
  14. கனடாவில் விற்பனையாகும் சிகரெட் பெட்டிகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும் சுகாதார எச்சரிக்கை வாசகங்களை அச்சிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பொது மக்கள் மத்தியில் சிகரெட் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கனடா அரசு விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது. சிகரெட் பெட்டிகளின் மேல் சுகாதார எச்சரிக்கை வாசகம் அச்சிடப்பட்டிருக்கும். அதுவே தற்போது ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒவ்வொரு எச்சரிக்கை வாசகம் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகையிலையின் புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், புகையிலை புற்றுநோய் உருவாவதற்கு ஒரு காரணம், ஒவ்வொரு புகைச்சலிலும் விஷம் உள்ளது போன்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. …

  15. Published By: DIGITAL DESK 5 02 JUN, 2023 | 06:53 PM (நா.தனுஜா) கனடாவில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தொலைபேசி மூலமான மோசடிச்சம்பவங்கள் அதிகரித்துவருவதாகத் தெரிவித்துள்ள கனேடிய அரசாங்கம், தொலைபேசி வாயிலாக தாம் எந்தவொரு கட்டணத்தையும் கோருவதில்லை என்றும், எனவே இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் பலர் கனடாவில் கல்விபயின்று வருவதுடன், குறிப்பாக பெருமளவான இலங்கையர்கள் கனடாவில் உயர்கல்வி பயில்கின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்டவாறான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருக்கும் கனேடிய …

  16. ரஷ்ய ரகசியங்களை அறிந்து கொள்ளும் அமெரிக்க நாட்டின் சதித்திட்டத்தை ரஷ்ய பாதுகாப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது. அதன்படி ரஷ்யாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐபோன்களை பிரத்யேக உளவு மென்பொருள் மூலம் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சாதனங்கள் இந்த உளவு நடவடிக்கையில் பாதிக்கப்பட்டு இருப்பதாக மொஸ்கோவை சேர்ந்த கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் தெரிவித்து இருக்கிறது. மேலும் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் அதிக ஐபோன்களில் இந்த பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் ரஷ்யாவை சேர்ந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளின் சாதனங்களும் அடங்கும். “ஆப்பிள் மொபைல் சாதனங்களில் அமெரிக்க சிறப்பு சேவைகளின் உளவு நடவடிக்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்…

  17. Published By: RAJEEBAN 02 JUN, 2023 | 06:25 AM அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜோபைடன் நிலத்தில் வீழ்ந்த சம்பவம் ஊடகங்களில் கவனத்தை பெற்றுள்ளது. அமெரிக்க விமானப்படை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தவேளை ஜோ பைடன் கால்தடுக்கி நிலத்தில் வீழ்ந்துள்ளார். அமெரிக்காவின் ஜனாதிபதிகளில் வயது கூடியவரான( 80) பைடனை அங்கிருந்தவர்கள் தூக்கிவிட்டனர் அவருக்கு காயங்கள் ஏற்பட்டதாக தெரியவில்லை. பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 921பேருடனும் கைகுலுக்குவதற்காக ஒரு மணித்தியலாத்திற்கு ஜனாதிபதி நின்றபடி காணப்பட்டார். ஜனாதிபதிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வெள்ளை மாளிகையின் தொட…

  18. Published By: RAJEEBAN 02 JUN, 2023 | 11:01 AM மெக்சிக்கோவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரமொன்றில் அதிகாரிகள் மனித எச்சங்கள்அடங்கிய 45 பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். கடந்தவாரம் காணாமல்போன இளைஞர்கள் சிலரை தேடிச்சென்றவேளை குவாடலஜரா என்ற நகரில் மனித எச்சங்கள் அடங்கிய 45பைகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஆண்களினதும் பெண்களினதும் உடல்கள் காணப்படுகின்றன - இன்னமும் எத்தனை உடல்கள் காணப்படுகின்றன என்பது தெரியவில்லை . மனித எச்சங்கள் நிலப்பகுதி மிகவும் சவாலான ஒன்று என்பதாலும் போதிய வெளிச்சம் இன்மையாலும் தேடுதல் நடவடிக்கைகள் பல நாட்கள் தொடரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏழுபேர் காணாமல்போ…

  19. 28 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 31 மே 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்தார் ரோஸ். அவர் 13 வயதிலிருந்தே புகைபிடிக்க ஆரம்பித்தார். புகைபிடிக்கக் கூடாது என்று தன் அம்மா மிகக் கண்டிப்பாகச் சொன்னதாக ரோஸ் கூறுகிறார். ஆனால் அதன் மீது இருந்த போதையை விடமுடியவில்லை. அவர் அப்பாவின் சிகரெட்டை திருடுவார். கூடவே பள்ளிக்கூடத்தில் மதிய சாப்பாட்டுக்குக் கிடைக்கும் பணத்தையும் இதற்காக செலவு செய்வார். அடுத்த 45 ஆண்டுகளுக்கு அவர் தினமும் இரண்டு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித்தள்ளினார். பிறகு ஒரு நாள் அவர் காலில் பிரச்சனை ஏற்பட்டது. இது புகை பிடி…

  20. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,மேட் மெக்கிராத் பதவி,சுற்றுச்சூழல் செய்தியாளர் 47 நிமிடங்களுக்கு முன்னர் இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. விலங்குகளின் கொழுப்பு ஒரு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது. விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்…

  21. Published By: RAJEEBAN 01 JUN, 2023 | 04:27 PM சீனாவின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மிகமோசமான சூழ்நிலைகளிற்கும் அலைகள் மிகுந்த கடலை கடப்பதற்கும் தயாராகவேண்டும் என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆணைக்குழுவுடனான சந்திப்பின்போது சீன ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்கொள்ளும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் குழப்பமும் கடும் சவாலும் தற்போது அதிகரித்துள்ளது என சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாங்கள் மிகமோசமானசூழ்நிலைகள் குறித்த சிந்தனையை பின்பற்றவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் பெரும்காற்று கொந்தளிப்பான அலைகள் அலைகள் நிரம்பிய கடல்கள் போன்ற பாரிய சவால்களைஎதிர்கொள…

  22. இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டம்: பரபரப்பை ஏற்படுத்திவரும் தகவல் இளவரசர் ஹரியைப் பிரிய அவரது மனைவியான மேகன் திட்டமிடுவருவதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ள விடயம் தொடர்பிலான செய்திகள் பிரித்தானிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. குழந்தைகளையும் பிரிக்கத் திட்டம் ராஜ குடும்ப எழுத்தாளரான ஏஞ்சலா லெவின் என்பவர், இளவரசர் ஹரியின் மனைவியாகிய மேகன், மெல்ல தன்னை ஹரியிடமிருந்து பிரிப்பதாகவும், தன் பிள்ளைகளையும் தானே பொறுப்பெடுத்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே, ஹரி மேகன் உறவில் பிரச்சினை உருவாகியுள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவிவருகின்றன. உறுதி செய்வதுபோல் நிகழ்ந்த சம்பவம் இதற்கிடையில், வதந்திகளாக பர…

  23. Published By: SETHU 30 MAY, 2023 | 05:19 PM ஆய்வுகூடத்திலிருந்து கொவிட்19 ரைவஸ் கசிந்திருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என சீனாவின் சிரேஷ்ட விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜோர்ஜ் காவோ கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வைரஸியல் மற்றும் நீர்ப்பீடனவியல் பேராசிரியரான ஜோர்ஜ் காவோ, சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரகாக பதவி வகித்தவர். கொவிட்19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அவர், அவ்வைரஸின் மூலத்தை கண்டறிவதற்கான பணிகளிலும் ஈடுபட்டார். கடந்த வருடம் சீன தொற்றுநோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், …

  24. பட மூலாதாரம்,JONO LANCASTER/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “நான் பிறந்தபோது எனது தோற்றத்தை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த 36 வது மணி நேரத்திலேயே அவர்கள் என்னை கைவிட்டனர்” என்கிறார் தற்போது 37 வயது இளைஞரான ஜோனோ லான்காஸ்டர். வடக்கு பிரிட்டனின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன், Treacher Collins syndrome (TCS) என்ற அரிய மரபணு குறைபாடுடன் பிறந்தவர் தான் லான்காஸ்டர். தாயின் வயிற்றில் கருவாக இருக்கும் போதே சில குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள். புரத மூலக்கூறுகள் உருவாவதற்கு காரணமான மரபணுக்களின் பிறழ்சியின் விளைவாக இந்த கோளாறு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறு…

  25. உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – வடகொரியா அறிவிப்பு நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது. வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.