Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டிசம்பர் 05, 2006 சென்னை: பரங்கிமலை மேல் உள்ள சர்ச் வளாகத்தில் சமீபத்தில் நடந்த கொலை தொடர்பாக கைதாகியுள்ள 'சைக்கோ சாமி' ரமேஷ் பாபுவின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து போலீஸார் இப்போது படு தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். பரங்கிமலையின் மீது அமர்ந்துதான் இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர் (செயின்ட் தாமஸ்) கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை மேற்கொண்டார். கி.பி. 72ம் ஆண்டு அவரை ஈட்டியால் குத்தி ஒருவர் கொலை செய்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் ஒரு அப்பாவியின் ரத்தம் பரங்கிமலையை நடுங்க வைத்துள்ளது. நவம்பர் 26ம் தேதி சர்ச் வளாகத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளரான ஜேக்கப்பை ஒரு நபர் வெறித்தனமாக குத்திக் கொன்றான். மாலையில் நடந்த கொடூரக் கொலை, பல நூ…

  2. இராக்கில் வெற்றிபெறவில்லை, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஒப்புதல் அமெரிக்காவின் புதிய பாதுகாப்புத் துறைச் செயலராக அமெரிக்க அதிபர் புஷ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராபர்ட் கேட்ஸ், அமெரிக்க செனட் குழுவின் முன் ஆஜராகி இராக்கில் நடைபெறும் போரில் அமெரிக்கா வெற்றிபெறவில்லை என்று கூறியுள்ளார். இராக் தொடர்பாக கேட்ஸ் ஒரு புதிய சிந்தனையைக் கொண்டு வருவார் என்பதற்காக அவர் தெரிவு செய்யப்பட்டார் என்று புஷ் அவர்கள் முன்னர் தெரிவித்திருந்தார். இராக்கினை ஒரு கடுமையான குழப்ப நிலையில் விட்டு விட்டு வருவது வருகின்ற ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனத் தான் நம்புவதாக ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் கேட்க விரும்புவதை மட்டும் சொல்லக…

  3. ஹூஸ்டன்: கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்குச் செல்லும் 2வது இந்திய வீராங்கனை என்ற பெருமை படைத்த சுனிதா வில்லியம்ஸ் வெள்ளிக்கிழமை விண்வெளிக்குப் பயணமாகிறார். இந்தியாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா கடந்த 2003ம் ஆண்டு கொலம்பியா விண்கலம் மூலம் விண்ணுக்குப் பறந்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையைப் படைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விண்ணிலிருந்து பூமிக்குத் திரும்புகையில், கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறி கல்பனா சாவ்லா மரணத்தைத் தழுவ நேரிட்டது. இந்த நிலையில் விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பு இன்னொரு அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான சுனிதா வில்லிம்யஸுக்குக் கிடைத்துள்ளது. சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா, தாயார் உர்சலின் பா…

  4. சில்மிஷ பாதிரியார் 'எஸ்கேப்'போராட்டம் டிசம்பர் 05, 2006 சென்னை: சிறுமிகளிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதராக சர்ச்சையில் சிக்கியுள்ள பாதிரியார் தலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள், பெண்கள் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் போபர்ஸ் ஜெயராஜ். 60 வயதாகும் இவர் ஒரு பாதிரியார். அப்பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகள் உள்பட பல சிறுமிகளை தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்று தனது காம வெறியைக் காட்டியதாக ஜெயராஜ் மீது மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சகாயமேரி என்பவர் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை உதவி ஆணையர…

  5. பீஜித்தீவின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது பசுபிக் சமுத்திரத்தில் உள்ள நாடான பீஜித் தீவின் ஆட்சி அதிகாரத்தை அந்த நாட்டு இராணுவம் நேற்று கைப்பற்றியது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதிகாரபூர்வமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்த அரச மெய்ப்பாது காவலர்கள் மற்றும் பொலிஸாரிடமிருந்து அவற்றைக் களைந்துள்ளனர். 6 ஆண்டுகளுக்கு முன்னர் அரசைக் கவிழ்த்த தேசியவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திட்டமிட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் இராணுவத் தளபதி அரசைக் கவிழ்க்கப்போவதாக தொடர்ந்து எச்சரித்து வந்தார். இந்நிலையில் நேற்று பொலிஸா…

    • 3 replies
    • 1.2k views
  6. சிகாகோ: அமெரிக்காவின் மினசோட்டா நகரில் 6 முஸ்லீம் இமாம்களை, கைவிலங்கிட்டு வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் முஸ்லீம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரத்திற்குச் செல்லும் விமானத்தில் 6 இமாம்கள் பயணம் செய்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் 6 இமாம்களையும் வலுக்கட்டாயமாக விமானத்திலிருந்து இறக்கினர். அவர்களை கைவிலங்கிட்டு கீழே இறக்கிக் கொண்டு வந்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அதே விமானத்தில் பயணம் செய்ய…

    • 37 replies
    • 4.4k views
  7. கிரெம்ளினால் நஞ்சூட்டியதாக கருதப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மரணம் [25 - November - 2006] [Font Size - A - A - A] கிரெம்ளினால் நஞ்சூட்டப்பட்டவர் என சந்தேகிக்கப்பட்ட ரஷ்யாவின் முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டர் லிட்வினென்கோ மூன்று வாரகால மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் லண்டன் மருத்துவமனையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர கண்காணிப்புப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த 43 வயது லிட்வினென்கோ வியாழக்கிழமை காலமானதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் எனினும், அவரது மரணத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்த தவறியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழு அவரை காப்பாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. பொலிஸார் மரணத்திற்…

  8. ஈராக்கில் 14 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய அமெரிக்க படை வீரருக்கு 90 ஆண்டு கால சிறை [18 - November - 2006] ஈராக்கில் 14 வயதுச் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் குடும்பத்தினருடன் சேர்த்து கொலை செய்த அமெரிக்க இராணுவ வீரருக்கு 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வரில் ஒருவரான ஜேம்ஸ் பார்க் கருக்கே 90 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அபீர் காசிம் அல்-ஜனாபி எனும் இந்த சிறுமியினதும் குடும்பத்தினதும் படுகொலைகளில் தனக்கு தொடர்புள்ளதை பார்க்கர் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும், தனது முன்னாள் சகாக்களுக்கு எதிராக சாட்சியமளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்…

    • 1 reply
    • 1.2k views
  9. ¦துச்சேரி: புதுச்சேரியில் கல்யாணம் செய்து கொண்ட ஒரு மணி நேரத்தில் 'புத்தம் புது' கணவருடன் பரீட்சை எழுத கல்லூரி மாணவி வந்ததால் கல்லூரி வளாகத்தில் வியப்பு கலந்த பரபரப்பு நிலவியது. புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் படித்து வருபவர் செல்வி. கடலூரைச் சேர்ந்த இவருக்கும், புதுவை முத்தியால்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்களது திருமணம் நேற்று காலை முத்தியால்பேட்டையில் நடந்தது. கல்யாணம் முடிந்ததும் மணமக்கள் இருவரும் வேகம் வேகமாக பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டு காரில் செல்வியின் கல்லூரிக்கு விரைந்தனர். செல்விக்கு நேற்று பரீட்சை இருந்தது. இதனால்தான் கல்யாணம் முடிந்த கையோடு கணவரையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தார்…

    • 1 reply
    • 1.3k views
  10. பீகாரில் ஓடும் ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து: 47 பேர் பலி பகல்பூர், டிச.3-:ஓடும் ரெயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 37 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 55 பேர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிழக்கு ரெயில்வே பிரிவில் அமைந்துள்ள அந்த ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம், பழுதடைந்து இருந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம், படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி இடிக்கப்படாமல் இருந்தது. அதிவேக ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்ததால், அதிர்வு காரணமாக அது இடிந்து விழும் நிலையில் இருந்திருக்கிறது. இந்த நிலையி…

  11. டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. அவர் எதைச் செய்தாலும் பிரச்சனையாகிவிடுகிறது. ராஜ வம்சத்து பெண்ணான வசுந்தராவும் இந்திய பயோடெக்னாலஜி தொழில்துறையின் 'ராணி'யான கிரன் மசூம்தாரும் ஒரு நிகழ்ச்சியில் மௌத் கிஸ் கொடுத்து அன்பைப் பரிமாறியது இப்போது பிரச்சனையாகியுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தில் ஊறித் திளைத்த இருவரும் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நேருக்கு நேர் சந்தித்தபோது கை கோர்த்துக் கொண்டு, கட்டிப் பிடித்துக் கொண்டனர். அப்படியே இருவரும் இதழோடு இதழ் பதித்து ஒரு 'பச்சக்' கொடுத்துக் கொண்டனர். வெஸ்ட்டர்ன் கலாச்சாரப்படி அவர்கள் அதை சர்வசாதாரணமாக செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டாலும் இந்த லிப்டுலிப் விவ…

  12. கியூபெக் தனியான `தேச இனம்' கனடிய பாராளுமன்றம் அங்கீகாரம் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான `தேச இனம்' என்ற அங்கீகாரத்தை கனடியப் பாராளுமன்றம் திங்கட்கிழமை வழங்கியுள்ளது. ஒன்றுபட்ட கனடாவுக்குள் கியூபெக்கைச்சேர்ந்தவர்கள் தனியான தேசத்தவரென அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய யோசனையில் கனடாவில் ஆட்சியிலுள்ள சிறுபான்மை கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பதவியை துறந்திருந்தார். ஆயினும், திங்கட்கிழமை கனடிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் கியூபெக்கைச் சேர்ந்த மக்களை தனியான தேசத்தவர் என்ற பிரேரணைக்கு 216 வாக்குகள் ஆதரவாகவும் 16 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டு பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்க…

  13. கண்ணீருடனும் ஆழ்ந்த கவலையுடனும் இந்த பதிவை எழுதுகிறேன். நாம் வசதியாக வேளா வேளைக்கு நல்ல உணவை சாப்பிடுகிற இந்த வேளைகளில் தமிழீழ மண்ணில் பட்டினியால் குழந்தைகள், தாய்மார்கள், வயோதிகர்கள் என செத்துக்கொண்டிருக்கிறார்கள

    • 4 replies
    • 1.4k views
  14. சென்னை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34 http://www.alaikal.com/index.php?option=co...2&Itemid=34

    • 0 replies
    • 934 views
  15. ஏ-9 வீதி திறப்பது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஆராய்வதாக வைகோவிடம் மன்மோகன் சிங் உறுதி [25 - November - 2006] [Font Size - A - A - A] இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுடன் ஏ-9 பாதையை திறப்பது குறித்து ஆராயப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவிடம் உறுதியளித்துள்ளார். புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமருக்கும் வைகோவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் குறித்து வைகோ இந்த சந்திப்பின் போது எடுத்துக் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொ…

    • 0 replies
    • 687 views
  16. நாராயணன், மேனன் சென்னையில் கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை [25 - November - 2006] இலங்கையின் போர்ச்சூழல் தொடர்பாக தனது வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் மூலம் கொழும்புக்கு கடும் கவலையைத் தெரிவித்திருக்கும் இந்தியா, மேனன் எடுத்துவரும் செய்தியை தமிழக முதலமைச்சர் கருணாநிதியுடன் கலந்தாராய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை நேற்று வெள்ளிக்கிழமை சென்னைக்கு அனுப்பியுள்ளது. கொழும்பிலிருந்து நேற்றுக்காலை சென்னைக்குச் சென்ற சிவ்சங்கர் மேனனும், எம்.கே. நாராயணனும் இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கருணாநிதியுடன் கலந்தாலோசனை நடத்தினர். சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இலங்கைத் தலைவர்களுடன் தான் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தொடர்பாக …

    • 0 replies
    • 748 views
  17. ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம் ரணில் திங்கள் கொல்கத்தாவுக்கு பயணம் [25 - November - 2006] [Font Size - A - A - A] ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவாரகாலப் பயணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கிறார். உத்தராஞ்சல் மாநிலத்தின் தெஹ்ராடூனில் இடம்பெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுக்காக அங்கு செல்லும் ஜனாதிபதி ராஜபக்‌ஷ பின்னர் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதியின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை …

    • 0 replies
    • 643 views
  18. நவம்பர் 24, 2006 சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க கேரள அரசு தவறினால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி வாபஸ் பெற வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி யோசனை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உச்சநீதிமன்றமே 142 அடி வரை அணையில் நீர் தேக்கலாம் என கூறி விட்டது. அப்படி இருக்கையில், தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்த ஏன் தயங்குகிறது என்பது புரியவில்லை. நெய்வேலி அனல் மின் கழக பங்குகளை தனியாருக்கு விற்றால் ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை திமுக வாபஸ் பெறும் என கருணாநிதி முன்பு மிரட்டி மத்திய அரசைப் பணிய வைத்தார். கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்த மத்திய அரசும்,…

  19. திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மிரட்டல் விடுப்பது போல பேசியிருப்பதைக் கண்டு நானோ, கேரள அரசோ பயப்பட மாட்டோம் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை கடற்படையை விட்டு கேரளா ஆய்வு செய்ய முயன்றதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசரக் கடிதம் அனுப்பினார். அதில், கேரள அரசின் செயல் சட்டவிரோதமானது, அப்பட்டமான அத்துமீறல். கேரள அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் டெல்லி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மாட்டோம் என எச்சரித்திருந்தார். இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்யவிருந்தது குறித்து ஏற்கனவே த…

  20. எல்லாத் திட்டங்களும் என் கல்லாவை நோக்கி! Saturday, 25 November 2006 aமெரிக்காவின் Forbes Magazine (www.forbes.com) பற்றி நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அறியாதவர்களுக்கான அறிமுகம் யாதெனில், அப்பத்திரிகை மிகப் பெரும் அமெரிக்கச் செல்வந்தர்களில் ஒருவரான ஸ்டீவ் •போர்ப்ஸ் (Steve Forbes) என்பவரால் நடத்தப்பட்டு வருகிற, உலகெங்கிலும் பல்லாயிரக் கணக்கான வாசகர்களைக் கொண்ட, விஸ்தாரமான வியாபார நுணுக்கங்களை, தகவல்களை உள்ளடக்கிய ஒரு புகழ் பெற்ற பத்திரிகை என்பதாம். ஸ்டீவ் •போர்ப்ஸ் 2000-ஆம் ஆண்டிற்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, ஆரம்பச் சுற்றுகளிலேயே தோற்றுப் போனவர் என்பது ஒரு சிறிய உப தகவல். Forbes சஞ்சிகையானது வியாபாரத் தகவல்களுக்காக மட்டு…

    • 0 replies
    • 830 views
  21. கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்,ராதாரவி நவம்பர் 24, 2006 சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார். தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர். நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலைய…

    • 0 replies
    • 933 views
  22. குண்டு புரளி: சிக்கிய 6 வயது சிறுமி, சிறுவன்!!! நவம்பர் 21, 2006 சென்னை: சென்னை பொழிச்சலூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது வெடித்துச் சிதறப் போவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2வது வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியும், 5வது வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் 10 வயது அண்ணனும் போலீசாரிடம் மாட்டினர். சென்னை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது. தீவிரவாதிகளை விட விளையாட்டுக்காக மிரட்டல் விடுப்போர்தான் அதிகரித்து வருகின்றனர். இதனால் போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டபோது, சென்னை காவல்துறை கலங்கி…

  23. கடன் அட்டை மோசடி 6 இலங்கையர் கைது நேற்று சிங்கப்பூரில் கடன் அட்டைகளை பயன்படுத்தி 2 கோடி 50 லட்சம் ரூபாவை மோசடி செய்த 6 இலங்கையர்களுக்கு 11 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இருந்து சிங்கபூருக்கு உல்லாசபயண விசா அனுமதியின் அடிப்படையில் சென்ற இவர்கள் கடந்த மே மாதத்தில் கைதுசெய்யப்பட்டனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  24. மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது. இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது. பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களா…

  25. நேபாளத்தில் அரசுக்கும் மாவோஜிட் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய உடன்படிக்கை ஒன்று கைசாத்தாகியுள்ளது. இதன்படி மாவோஜிட்டுக்கள் உள்ளடக்கப்பட்ட இடைக்கால அரசு உருவாக்கப்படுவதோடு மாவோஜிட்டுக்களின் ஆயுதங்கள் ஐநாவின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படவும் உள்ளன. நேபாளத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த மாவோஜிட்டுக்களின் போராட்டம் இதன் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போராட்டத்தின் போது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6169746.stm இலங்கைக்கு இது ஒரு பாடமாகுமா? ஆனால் சிறீலங்கா சிங்கள அரசு இஸ்ரேல் பாணியிலான தாக்குதலை இஸ்ரேலிய ஆதரவுடன் நடத்தும் வரை இலங்கைப் பிரச்சனை என்பது பலஸ்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.