Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தென் கொரிய விமான விபத்து; முவான் விமான நிலையத்திலிருந்து அகற்றப்படும் கொன்கிரீட் சுவர்! 179 பேரைக் கொன்ற ஜெஜு விமான விபத்தின் எதிரொலியாக முவான் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட கொன்கிரீட் சுவரினை அகற்றுவதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை (22) தெரிவித்தது. போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்தில் இருந்து தென்மேற்கில் உள்ள முவானுக்கு டிசம்பர் 29 ஆம் திகதி 181 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்தது. பின்னர், அது தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் முடிவிலிருந்த கொன்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவானது தென்கொரியாவில் இடம்பெற்ற மோசமான விமான வி…

  2. ரஷ்யாவின் அச்றுத்தலுக்கு மத்தியிலும்... உக்ரைனுக்கு, நீண்டதூர ஏவுகணைகளை... அனுப்பும் பிரித்தானியா! மேற்கு நாடுகளுக்கு ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் தொகுதி நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். எம்.270 பல ஏவுகணை ரொக்கெட் அமைப்பு ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் தன்னை தற்காத்துக் கொள்ள உதவும் என அவர் கூறினார். ஆனால், எத்தனை ஆயுதங்கள் அனுப்பப்படும் என்பதை பிரித்தானியா அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அது ஆரம்பத்தில் மூன்றாக இருக்கும் என கூறப்படுகின்றது. அமெரிக்காவுடன் உறுதியளிப்புக்கு பின்னதாக, கடந்த வாரம் ரொக்கெட் அமைப்பை வழங்குவதாக பிரித்தானியா அறிவித்தத…

  3. ChatGPT தந்த OpenAI நிறுவனத்தில் குழப்பம் - 500 ஊழியர்கள் திடீர் ராஜினாமா மிரட்டல் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ் வாலன்ஸ், அன்னாபெல் லியாங் & ஜோ க்ளீன்மேன் பதவி, தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப செய்தி ஆசிரியர் 21 நவம்பர் 2023 ஓபன் ஏஐ(OpenAI) நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனின் அதிர்ச்சியளிக்கும் பணி நீக்கத்திற்கு எதிராக அந்நிறுவனத்தின் ஊழியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளனர். ஊழியர்கள் வெளியிட்டுள்ள ஒரு …

  4. ஷங்காயில்... கொவிட் முடக்கநிலை, ஏப்ரல் 26ஆம் திகதி வரை நீடிப்பு! 26 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் நிதி மையமான ஷங்காயில், மேலும் 11 இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், கொவிட் முடக்கநிலை ஏப்ரல் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் படி, சீனா வியாழக்கிழமை உள்நாட்டில் 2,119 உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் 1,931 ஷங்காயில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் ஷங்காய் 17,629 புதிய தொற்றுகளை பதிவுசெய்துள்ளது. இது ஒரு நாளுக்கு முந்தையதை விட 4.7 சதவீதம் குறைவு. நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, மார்ச் …

  5. Published By: RAJEEBAN 07 JUL, 2024 | 10:28 AM புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும் ரிசி சுனாக் அரசாங்கத்தின் திட்டத்தினை தனது அரசாங்கம் தொடராது என பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டர்மெர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டம் அது ஆரம்பமாவதற்கு முன்னரே உயிரிழந்து புதைக்கப்பட்டுவிட்டது அது ஒரு போதும் ஒரு தடுப்பு நடவடிக்கையில்லை என அவர் தெரிவித்துள்ளார். குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களின் வருகையை உண்மையில் கட்டுப்படுத்த எந்த போலியான நடவடிக்கைகளையும் தொடர்வதற்கு நான் தயாரில்லை என அவர் தெரிவித்துள்ளார். ருவாண்டா திட்டத்தினை நாங்கள் உள்வாங்கும் பிரச்சினை என அவர் விபரித்துள்ளார். ருவாண்டா திட்டம் தோல்வியட…

  6. திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீத வரியை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். அமெரிக்க திரைப்படத்துறையை வௌிநாடுகள் திருடியுள்ளதாக அவர் கூறியுள்ளது. இது குழந்தையிடம் இருந்து மிட்டாயினை பறிப்பது போன்ற செயலாகும் என குறிப்பிட்டுள்ளார். எனவே அமெரிக்காவுக்கு வௌியில் வௌிநாடுகளில் தயாரிக்கப்படும் அனை…

  7. பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, மலையேற்றத்தின் போது எரிமலையில் தவறி விழுந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் ஜூலியானா மரின்ஸ். கட்டுரை தகவல் ஃப்ளோரா ட்ரூரி & ரேச்சல் ஹேகன் பிபிசி செய்திகள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவில் உள்ள எரிமலையின் பள்ளத்துக்கு அருகே மலையேற்றம் செய்தபோது தவறி விழுந்த பிரேசிலிய சுற்றுலாப் பயணி, உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். அதிகாலை, ரிஞ்சானி மலையின் ஒரு செங்குத்தான பாதையில் குழுவாக மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, ஜூலியானா மரின்ஸ் என்பவர் ஒரு குன்றிலிருந்து தவறி விழுந்தார். குன்றில் இருந்து விழுந்தபோது உயிர் தப்பிய அவர், சனிக்கிழமையன்று உதவிக்காக அல…

  8. 10 JUL, 2024 | 01:06 PM (ஆர்.சேது­ராமன்) 737 மெக்ஸ் ரக விமா­னங்கள் தொடர்பில் அமெ­ரிக்க அரசை ஏமாற்­று­வ­தற்கு சதி செய்தமை தொடர்­பான வழக்கின் குற்­றச்­சாட்டு ஒன்றில், தான் குற்­ற­வாளி என ஒப்­புக்­கொள்­வ­தற்கு போயிங் நிறு­வனம் சம்­ம­தித்­துள்­ளது என அமெ­ரிக்க நீதித் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. டெக்ஸாஸ் நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்த மனுவில் நீதித் திணைக்­களம் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளது. விமான அனர்த்­தங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு 487 மில்­லியன் டொலர் இழப்­பீடு வழங்­கவும் அந்­நி­று­வனம் சம்­ம­தித்­துள்­ளது. போயிங் நிறு­வனம் தயா­ரித்த 737 மெக்ஸ் ரக விமா­னங்கள் 2018…

  9. பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் பென்-கவிர் இருவரும் அமெரிக்காவின் முன்மொழிவை புறக்கணித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஜராஸ்லாவ் லூகீவ் பதவி, பிபிசி நியூஸ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட காஸா போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக்கொண்டால் அமைச்சரவையிலிருந்து விலகி, கூட்டணி ஆட்சியை கவிழ்ப்போம் என இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பெஸோலெல் ஸ்மாட்ரிக் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஈடமார் ப…

  10. உலக அமைதி- வளர்ச்சியைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்ட சீனா இணக்கம்! உலக அமைதி மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்க சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செல்வதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்று சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் கூறியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாய்வான் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் போரைக் சீனா கண்டிக்க மறுப்பது குறித்து அமெரிக்கா என்ன கருதுகிறது என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையே பல மாதங்களாக பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், சீன ஜனாதிபதியின் இந்த சமரச கருத்து வந்துள்ளது. சீன ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தாய்வானில் ‘வெளிநாட்டு தலையீடு’ என்று கூறிய…

  11. "87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைREUTERS கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் …

  12. நைஜீரியாவில், சிறை உடைப்பு: கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443 பேரை இன்னும் காணவில்லை என நைஜீரிய சீர்திருத்த சேவையின் செய்தித் தொடர்பாளர் உமர் அபுபக்கர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கானவர்கள் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிலர் தாங்களே பொலிஸ் நிலையங்களில் சரணடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தப்பியோடிய அனைத்து கைதிகளையும் கண்காணித்து, அவர்களை அதிகாரிகள் காவலில் வைப்பார்கள் என அபுபக்கர் மேலும் கூறினார். செவ்வாய்கிழமை இரவு அபுஜாவில் உள்ள குஜே உச்ச சிறைச்சாலை இஸ்லாம…

  13. அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்ற அல்-காய்தா தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை: வாஷிங்டன் நீதிமன்றம் உத்தரவு YouTube இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆதம் ஹாரூண். அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்ற அல்-காய்தா தீவிரவாதிக்கு வாஷிங்டன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அல்-காய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் இப்ராஹிம் சுலைமான் அட்னான் ஆதம் ஹாரூண். நைஜீரியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது குண்டுவீசியது, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் பணியிலிருந்த அமெரிக்க ராணுவ அதிகாரிகளைக் கொன்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது தொடரப்பட்டன. இந்த வழக்குகளை வாஷிங்டனிலுள்ள அமெரிக்க நீதிமன்றம் விசாரித…

  14. இஸ்ரேலில் ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள்! இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் புறநகர் பகுதியில், ஒரு வாரத்தில் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களினால், மொத்தமாக 11பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய அரேபியர்களின் தாக்குதல்களில் 6பேர் கொல்லப்பட்டதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருந்தனர். துப்பாக்கிதாரி, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த மருத்துவ உதவியாளர் தெரிவித்தார். இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்த…

  15. ரஷ்யாவின்.... தாக்குலுக்கு உள்ளான, உக்ரைனிய பகுதிகளை பார்வையிட்ட... 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்ங், ஜேர்மனி அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி, ருமேனியா ஜனாதிபதி க்ளாஸ் லொஹானிஸ் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தனர். போலந்திலிருந்து வீதி வழியாக தலைநகர் கீவ்வுக்கு வந்த அவர்கள், ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து, பின்னர் அவர்கள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளைப் பார்வையிட்டனர். முதலில் கீவ…

  16. தலிபான்கள் பதவியேற்றதற்கு பிறகு... ஆப்கானில் முதல் குண்டுவெடிப்பு: 12பேர் உயிரிழப்பு- 32பேர் காயம்! ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆப்கானிய உட்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் காரி சயீத் கோஸ்டி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காபூலின் ஈட்கா மசூதியில் மக்களின் அதிக நடமாட்டம் இருந்த வேளையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றது. தலிபான்கள் இரண்டு தசாப்த கால மோதலில் தங்கள் வெற்றியை கொண்டாடுவதற்காக நகரத்திற்கு வெளியே முதல் பெரிய கூட்டத்தை நடத்தியபோது ஈட்கா மசூதியின் நுழைவாயிலுக்கு வெளியே இந்…

  17. இஸ்ரேலிய யுவதியை ஹமாஸ் விடுதலை செய்யும் வரை காசாவின் வடபகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை - இஸ்ரேல் 26 Jan, 2025 | 11:54 AM ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் முக்கிய வீதியொன்றை மூடியுள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் காசா பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் பகுதிகளிற்கு வரமுடியாத நிலையேற்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகளையும் இஸ்ரேல் 200 பாலஸ்தீனியர்களையும் விடுதi செய்துள்ள நிலையிலேயே இந்த முட்டுகட்டை நிலை எழுந்துள்ளது. ஆர்பெல் யெகுட் என்ற இஸ்ரேலிய பெண்ணை விடுதலை செய்வது குறித்த திட்டத்தினை ஹமாஸ் வெளியிடும் வரை பாலஸ்தீனி…

  18. டமாஸ்கஸ் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் – சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை நோக்கி இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரியாவின் வான் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டமாஸ்கஸைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள தளங்களை குறிவைத்து தாக்கப்பட்ட ஏவுகணைகள் சிலவற்றை அழித்ததாக சிரிய வான் பாதுகாப்பு இராணுவ அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் சில பொருள் இழப்புகள் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் லெபனானுக்குச் செல்லும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளின் கப்பலை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக மனித உ…

  19. நியூயோர்க் நகரில் துப்பாக்கி சூட்டுக்கு ஐவர் பலி. ஒரு பொலிசாரும் இறந்துள்ளார். Five killed, including NYPD officer, in shooting at Park Ave. skyscraper housing Blackstone, NFL. police officer and three other people were killed after a gunman opened fire Monday evening at a Midtown Manhattan office building that houses The Blackstone Group and NFL headquarters, police said. The “lone shooter” was later “neutralized,” NYPD Commissioner Jessica Tisch said. Police sources said the man shot and killed himself. Police sources identified the suspect as Shane Tamura, 27, of Las Vegas. Tamura was issued a concealed firearms permit by Las Vegas police in 2022. The motive remained…

  20. வேல்ஸில்... கொவிட் கால அனுமதி பத்திர சட்டம் நிறைவுக்கு வருகின்றது! வேல்ஸில் பெரிய நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குள் நுழைய, விதிகள் நீக்கப்பட்டதால், மக்கள் கொவிட் கால அனுமதி பத்திரத்தை காட்ட வேண்டியதில்லை. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இரண்டு கொவிட் தடுப்பூசி அல்லது சமீபத்திய எதிர்மறையான சோதனை முடிவுக்கான ஆதாரத்தை வாடிக்கையாளர்களிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க கொவிட் கால அனுமதி பத்திரங்கள் உதவும் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஆனால் விமர்சகர்கள் நெறிமுறைகள் குறித்து கவலைகளை எழுப்பினர். 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் சில நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குச் செல்வதற்கு, கடந்த 48 மணி நேரத்த…

  21. பிரித்தானியாவில்... வேலை காலியிடங்கள், சாதனை அளவை எட்டியுள்ளன! பிரித்தானியாவில் தொழிலாளர் சந்தை வலுவாக மீண்டு வருவதால், சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, வேலை காலியிடங்கள் சாதனை அளவை எட்டியுள்ளன. ஜூலை முதல் மூன்று மாதங்களில் காலியிடங்களின் எண்ணிக்கை 953,000ஐ எட்டியது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்கான மூன்று மாதங்களில் வேலையின்மை வீதம் 4.7 சதவீதமாக குறைந்தது. அதே நேரத்தில் சராசரி ஊதியத்தின் ஆண்டு வளர்ச்சி 7.4 சதவீதம் ஆகும். தேசிய புள்ளியியல் அலுவலக துணைப் புள்ளியியலாளர் ஜொனாதன் அதோவ் கூறுகையில், ‘சராசரி ஊதிய உயர்வு நீண்ட காலமாக அந்த அளவுக்கு அதிகமாக இல்லை என்றாலும், கடந்த ஆண்டு மில்லியன் கணக்கான மக்…

  22. நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600பேரைக் கடந்துள்ளது என்று நாட்டின் மனிதாபிமான விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கன மழை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 603ஆக அதிகரித்துள்ளது. அமைச்சின் கூற்றுப்படி, 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு நாட்டின் தெற்கின் சில பகுதிகளில் பரவியுள்ளது. 200,000க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்…

  23. லண்டன் மேயரை கைது செய்ய முயன்ற ட்ரம்ப் ஆதரவு வலதுசாரி கும்பல்: மக்கள் சிரிப்பு லண்டன் மேயரைக் கைது செய்வோம் என்று அரங்கத்துக்குள் நுழைந்தவர்களை அப்புறப்படுத்தும் போலீஸார். - படம். | ராய்ட்டர்ஸ். இஸ்லாமிய விரோத மனப்பான்மை கொண்ட சிறு கும்பல் வீட்டில் செய்யப்பட்ட தூக்குமேடையைச் சக்கரம் கட்டி இழுத்து வந்து, லண்டனின் முதல் இஸ்லாமிய மேயரைக் கைது செய்வதாக நடத்திய நாடகம் மக்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான செய்தி வருமாறு: லண்டன் மேயர் சாதிக் கான் சனிக்கிழமையன்று அங்கு உரை நிகழ்த்தவிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. எந்த போல…

  24. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எதிரிகளின் சதி இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, "இஸ்லாமியக் குடியரசில் (இரானில்) பிரச்சனைகளை உருவாக்க பணம், ஆயுதங்கள், அரசியல் மற்றும் உளவு உள்ளிட்ட பல கருவிகளை எதிரிகள் பயன்படுத்தியுள்ளனர்." என்று கூறி இருந்தார். இதை `அர்த்தமற்றது` என்று வர்ணித்துள்ளது அமெரிக்கா. ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர், இந்த போராட்டங்கள் எல்லாம் தன்னிச்சையானது என்று கூறியுள்ளார். மேலும், இந்த போராட்டங்கள் தொடர்பாக ஐ.நா வில் அவசர கூட்டத்தை கூட்ட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பெரும்புயல் மணிக்கு 145 கி.மீ …

  25. 01 Oct, 2025 | 12:39 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார். நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார். அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.