உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26995 topics in this forum
-
மீனவ பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இந்திய கடற்படை வீரர் மார்ச் 24, 2007 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மீனவப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் இந்திய கடற்படை வீரர். அவரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் முகுந்தராயர் சத்திரம் என்ற இடத்தில் கடற்கரையில் குடிசைகள் உள்ளன. மீனவர்கள் வசிக்கும் இந்த குடிசை வீடுகளில் ஒன்றில் சங்கர் என்பவரும் அவரது மனைவி தனலட்சுமியும் (27) வசித்து வருகின்றனர். இரவு வீட்டின் வெளியில் சங்கர் படுத்திருந்தார். வீட்டுக்குள் தனலட்சுமி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் கடற்கரை செக்போஸ்ட் பணியில் இருந்த இந்திய கடற்படை வீரரான…
-
- 2 replies
- 1.1k views
-
-
மேலதிக விபரம் விரைவில்......... மண்டபம் பகுதியிலையே இது அமைக்கப்பட்டு வருவதாகவும் ஆயத கடத்தலை தடுப்பதற்காக இது நிறுவப்படுவதாகவும் கூறப்பட்டு இருக்கின்றது.... அப்ப இலங்கை விமானப்படை குண்டு வீச இன்னும் வசதி செய்து கொடுக்கிறாங்கள்...
-
- 0 replies
- 714 views
-
-
பாரிஸ் விமான நிலையத்தில் சுங்கத் தீர்வையில்லாத பொருட்களை வாங்குவதில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்து ஒரு சீனர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் பாரிசின் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தின் வணிக வளாகத்தில் , 15 நிமிட நேரத்தில், 30,000 டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள ஒயின் மற்றும் மது வகைகளை வாங்கிய அவர் அவைகளை விமானத்தின் கேபினில் தன்னுடன் எடுத்துச்செல்லும் பெட்டியில் எடுத்துச் சென்றுவிட்டார். அவர் வாங்கிய ஒரு பாட்டில் கொன்யாக் மது , பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் காலத்தியது. அவர் வாங்கிய மற்றொரு பாட்டில் ஒயின் மட்டும் 18,000 டாலர் மதிப்புள்ளதாகும். இவர் வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று கூறும் விமான நிலையப் பணியாளர்கள், இவர் ஒரு தன்னை ஒரு கலைஞர் என்று கூறியதாக தெரி…
-
- 0 replies
- 577 views
-
-
பிரிட்டனின் கடற்படையைச் சேர்ந்தவர்கள் 15 பேர் வடக்கு வளைகுடாப் பகுதியில் இரானியர்களால் கைது செய்யப்பட்டதாக பிரிட்டன் கூறியுள்ளது. இராக்குக்குள் ஆயுதங்களும், போராளிகளும் கடத்தப்படுவதை தடுப்பதற்கான, கூட்டணிப் படையின் ஒரு அங்கமாக செயற்பட்ட இந்த கடற்படையினர் இரு சிறு படகுகளில் சென்றுகொண்டிருந்தனர். இராக்கியக் கடற்பரப்பில் வணிகக் கப்பல்களை சோதனை செய்யும் வழமையான ஒரு நடவடிக்கையை முடித்துக்கொண்டு வந்த போது இரானிய கலங்களால் சூழப்பட்டு, துப்பாக்கி முனையில் இரானியக் கடற்பரப்புக்குள் அவர்கள் கொண்டு செல்லப்பட்டதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இங்கு, லண்டனில் இரானிய தூதரை வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு அழைத்து, பிரிட்டன் அதிகாரிகளும் அவர்களது உபகரணங்…
-
- 0 replies
- 633 views
-
-
சோமாலியாவின் தலைநகரில் தொடர்ந்து மோதல்கள் இராணுவத்தினரின் சடலங்களை இழுத்துச் செல்லும் கிளர்ச்சியாளர்கள் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வரும் அதேவேளை, கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் வீதிகளில் இழுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. சோமாலிய அரச படையினரது அல்லது எத்தியோப்பிய இராணுவத்தினரது உடல்களே இவ்வாறு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் காலில் பிடித்து இழுத்துச் செல்வதாகவும் சிலர் அதனை கல்லால் அடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில உடல்களை கயிற்றினால் கட்டிய பின்னர் அவற்றிற்கு காலால் உதைத்துள்ளதுடன் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இவை 1993 இல் அமெரிக்க …
-
- 1 reply
- 849 views
-
-
இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இந்தியா சம்மதிக்கக் கூடாது: ஜெயலலிதா வற்புறுத்தல் சென்னை, மார்ச்.23-: இலங்கையுடன் கூட்டு ரோந்துக்கு இந்தியா சம்மதிக்கக் கூடாது என்று ஜெயலலிதா கூறினார். தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:- கேள்வி:- தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபையில் உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன? பதில்:- தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளது. பட்ஜெட்டை தாக்கல்…
-
- 1 reply
- 771 views
-
-
வடதுருவத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்ற நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது வடதுருவ கடலில் அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று விபத்துக்குள்ளானவை இதில் பயணஞ் செய்த இரு மாலுமிகள் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியப் படையினர் அணு ஆயுதங்களை ஏற்றிய நீர்மூழ்கி கப்பலில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் . இதில் HMS எனும் நீர் மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானது . எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பலில் அணு ஆயுதங்களை ஏற்றிச் செலவதற்கு ஏற்ற வகையில் வடிமைக்கப்பட்ட்மையை அவதானிக்கமால் அணு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற மையாலே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் http://www.tamilwin.com/article…
-
- 0 replies
- 682 views
-
-
பிணத்துடன் பல மணி நேரம் விமானப் பயணம் பயணியிடம் மன்னிப்பு கேட்டது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் [21 - March - 2007] பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது அருகே பிணம் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தாலும் வேறு வழி இல்லாததால், பிணத்துடன் அவர் பல மணி நேரம் பயணம் செய்ய நேரிட்டது. இதனால், ஏற்பட்ட சிரமத்துக்கு விமான நிறுவனம் அவரிடம் மன்னிப்புக் கேட்டது. கடந்த வாரம் டில்லியில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் விமானம் ஒன்று சென்றது. இந்த விமானத்தில் வயதான பெண் ஒருவரும் அவரின் மகளும் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், வயதான பெண் திடீரென மரணம் அடைந்தார். இது குறித்து விமான பணியாளரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பெண்ணின் பிணத்த…
-
- 7 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் சமஷ்டி புலனாய்வு பணியகம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மின்னஞ்சல் மற்றும் நிதி செயற்பாடுகள் குறித்த தகவல்களை பெறுவதற்கான அதன் அதிகாரத்தை அந்த அமைப்பு இழக்கலாம் என தெரிவித்துள்ளனர். எப்.பி.ஐ. தனது தவறுகளை திருத்துவதற்கான முயற்சிகளை வேகமாக மேற்கொள்ளாவிட்டால் உள்நாட்டில் புலனாய்வு பணிகளை மேற்கொள்வதற்கு அதற்கு அதிகாரம் வழங்கப்படாது என குடியரசுக் கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். எப்.பி.ஐ.க்கு இது ஒரு பாடமாக அமையும். அவர்கள் இதிலிருந்து தப்ப முடியாது. இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையட்டும் என குடியரசு கட்சியினர் தெரிவித்துள்ளன…
-
- 1 reply
- 794 views
-
-
பாகிஸ்தானில் அல்ஹைதா பழங்குடியினர் மோதலில் 50 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில் உள்ளது வாகிர்ஸ்தான். ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பின்லேடனின் அல்ஹைதா தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கியுள்ளனர். இந்த பகுதியில் ஏற்கனவே உள்ள பழங்குடியினர் அந்த தீவிரவாதிகளுக்கு முதலில் உதவி செய்து வந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் உருவானது. செவ்வாய்க்கிழமை பழங்குடி இனத்தவர்களுக்கும் அல்ஹைதா தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சரமாரியாக ராக்கெட்டுகளை வீசினார்கள். பல மணி நேரம் நடந்த இந்த தீவிர சண்டையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அல்ஹைதா மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான் தீவிரவாதிக…
-
- 0 replies
- 705 views
-
-
இறந்தவரென கருதப்பட்டவர் 2 வருடங்களுக்கு பின்பு திரும்பிய அதிசயம் [21 - March - 2007] இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீதி விபத்தில் இறந்து விட்டதாகக் கருதப்பட்டவர் மீண்டும் தன் குடும்பத்தாருடன் சேர்ந்த அதிசய சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மலேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி விபரம்: மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் சாமிபிள்ளை (வயது 50). இவருக்கு மனைவியும், ஒன்பது குழந்தைகளும் உள்ளனர் .கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாமிபிள்ளை சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதியது. சைக்கிளின் அருகே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒருவரது பிணம் இருந்தது. இறந்தவர் பிள்ளைதான் என்று நம்பிய அவரது…
-
- 11 replies
- 2k views
-
-
-
- 26 replies
- 4.1k views
-
-
அன்டார்டிகாவில் "ஸ்கை டைவிங்' தமிழக ராஜேஷ்குமார் சாதனை சென்னை: கடும் குளிர் நிலவும் அன்டார்டிகா பகுதியில் "ஸ்கை டைவிங்' விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஷ் குமார் நந்தகோபால் சாதனை புரிந்துள்ளார். கடற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக பணிபுரியும் இவர் புதியவர் ஒருவரை விளையாட்டில் பங்கேற்க வைத்து நடுவானில் அதற்கான பயிற்சி அளித்தும் சாதனை புரிந்துள்ளார். "ஸ்கை டைவிங்' விளையாட்டில் பலவகைகள் உண்டு. அதில் ஒன்று தான் ஆக்சிலேட்டர் ப்ரி பால்'(ஏ.எப்.சி.,) என்ற விளையாட்டு. பொதுவாக பறக்கும் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதிப்பர். ஆனால், ஏ.எப்.சி., விளையாட்டில் விமானத்தில் இருந்து கீழே குதித்த உடன் பாராசூட்டை விரிய வைக்காமல் சிறிது துõரத்துக்கு அப்படியே கீழே இ…
-
- 0 replies
- 952 views
-
-
ஜ21 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ நாளை வியாழக்கிழமை உலக நீர் தினமாகும். ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாக (றுழசடன றுயவநச னுயல) அனுஷ்டிப்பதற்கான தீர்மானத்தை 1992 டிசம்பர் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நிறைவேற்றியது. 2007 உலக நீர் தினத்துக்கான தொனிப்பொருள் ஹநீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்தல்' (ஊழிiபெ றiவா றுயவநச ளுஉயசஉவைல) என்பதாகும். உலகளாவிய ரீதியில் காணப்படும் நீர்ப்பற்றாக்குறையின் பாரதூரத் தன்மையை இத்தொனிப்பொருள் உணர்த்துகிறது. குறைவடைந்து வரும் நீர்வளங்களை உலகளாவிய ரீதியிலும் உள்ளூர் மட்டத்திலும் பயனுறுதியுடைய முறையிலும் ஒப்புரவாகவும் முகாமை செய்வதை உறுதிப்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புச் செயற்பாடுகளி…
-
- 0 replies
- 1.1k views
-
-
சீனப் பெருஞ்சுவர் அருகே வியாபாரம் செய்ய தடை சிறப்புமிக்க சீனப் பெருஞ்சுவர் அருகே வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளால் சுவர் பாதிக்கப்பட்டதால் அந்நாட்டு அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனப் பெருஞ்சுவர். இதன் நீளம் சுமார் 5,000 கிலோமீற்றர். உலகில் உள்ள சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. சீனப் பெருஞ்சுவரை பார்வையிட பல்வேறு நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். ஆண்டுக்கு 13 கோடி பேர் வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை இலக்காக வைத்து அங்கு 60 இற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பெரும்பாலும் இந்த கடைகள் அனைத்தும் சுவரை ஒட்டியே உள்ளன. இதனால், சுவர் அ…
-
- 0 replies
- 916 views
-
-
ஐரோப்பாவை பிளவுபடுத்த வேண்டாம் அமெரிக்காவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சிக்கக்கூடாது என்று ஜேர்மனி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெய்ன் மெய்ர் நிருபர்களிடம் கூறி யிருப்பதாவது: பனிப்போர் முடிந்து போய் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஐரோப்பாவில் புதிய ஆயுதப் போட்டியை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஆயுத குறைப்பு தான் இப்போது நம் முன்னால் உள்ள முன்னுரிமை திட்டம் ஆகும். ஆயுதக் குவிப்பு நமது முன்னுரிமை திட்டம் அல்ல. ஐரோப்பாவில் ஆயுதப் போட்டி நடக்கக்கூடாது. ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு திட்டத்தை ஐரோப்பாவில் சில இடங்களில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐரோப்…
-
- 0 replies
- 875 views
-
-
ராஞ்சி: வங்கதேசத்திடம் இந்திய அணி கேவலமாக ஆடி தோல்வியுற்றதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியின் வீட்டை 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் தாக்கி சேதப்படுத்தினர். உலகக் கோப்பைப் போட்டியில் சாதாரண வங்கதேச அணியிடம் இந்தியா தோற்றுப் போனதால் இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. ஷேவாக், டிராவிட், சச்சின், டோணி உள்ளிட்ட முன்னணி வீரர்களின் போஸ்டர்களையும், கொடும்பாவிகளையும் எரித்து ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள விக்கெட் கீப்பர் டோணியின் வீட்டை ரசிகர் கும்பல் ஒன்று தாக்கி சேதப்படுத்தியது. டோனி தனது பெற்றோருடன் …
-
- 0 replies
- 780 views
-
-
.சுற்றுலாப் பயணிகளை கவர மெழுகில் "மெகா' சிற்பம் ஊட்டி: ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர், மெழுகில் தத்ரூபமாக பல்வேறு சிலைகளை வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.ஊட்டி குன்னுõர் சாலையில் "வேக்ஸ் மியூசியம்' என்ற பெயரில் மெழுகு சிற்பங்களின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த இன்ஜினியர் ஸ்ரீஜி பாஸ்கரன் மெழுகு சிலை கண்காட்சியை துவக்கியுள்ளார்.இங்கு ஜனாதிபதி அப்துல் கலாம், மகாத்மா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அன்னை தெரசா, இயேசு கிறிஸ்து, மராட்டிய சிவாஜி, சந்தன வீரப்பன் ஆகியோரின் ஆளுயர மெழுகு சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைத்துள்ளார். ஒவ்வொரு சிலையையு…
-
- 0 replies
- 1k views
-
-
சூரிய கிரகணம்நாடு முழுவதும் கோவில்கள் மூடல் மார்ச் 19, 2007 சென்னை: இன்று காலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி காலை 6.08 மணி முதல் 9.55 மணி வரை இந்த கிரகணம் நீடித்தது. இதனை மத்திய ஆசியா, கிழக்காசியா மற்றும் அலாஸ்கா ஆகிய பகுதிகளில் காண முடிந்தது. இந்தியாவில் இதை பாதியளவே காண முடிந்தது. இந்தியாவில் இன்று காலை 6.45 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 7.23 வரை நீடித்தது. இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதால் தொலைநோக்கி உதவியுடன் மக்கள் இதைப் பார்த்து ரசித்தனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சூரிய கிரகணத்தைக் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்…
-
- 1 reply
- 758 views
-
-
8.5 அடி நீள மீசை வளர்த்து "கின்னஸ்' சாதனைக்கு முயற்சி ஈரோடு: ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரியும் அலுவலர், 8.5 அடி மீசை வளர்த்து கின்னஸ் சாதனை புரிய ஆவலுடன் காத்திருக்கிறார்.ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் வசிப்பவர் தங்கவேல் (58). ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரிகிறார். மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். தங்கவேலுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்று லட்சியம். இளம் வயதில் சாதனை செய்ய முடியவில்லை என்றால் என்ன? தற்போது சாதனை புரிவோமே என்று தனது மீசையை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்ததன் விளைவாக 8.5 அடிக்கு இவரது மீசை வளர்ந்திருக்கிறது.அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் துõத்துக்குடி மாவட்டம் சி…
-
- 1 reply
- 1.6k views
-
-
சீனா: நடுக்கடலில் கப்பல்கள் மோதல் - 23 பேர் பலி 19 மார்ச் 2007 Blog this story சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டதில் 23 பேர் பலியானார்கள். சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் நேற்று இரு சரக்கு கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதியில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த இரு சரக்கு கப்பல்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன. இதில் கப்பலில் இருந்த 23 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். 4 பேர் மட்டும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டார்கள். கப்பலில் இருந்த சரக்குகள் அனைத்தும் கடலில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://content.msn.co.in/Tamil/News/Intern...l/0703-19-5.htm
-
- 0 replies
- 557 views
-
-
சேலம்: காதலியை பதிவுத் திருமணம் செய்வதற்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்த தனது முறை மாப்பிள்ளையை உறவினர்களுடன் வந்து அடித்து, இழுத்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற முறைப்பெண்ணான வழக்கறிஞரையும், அவரது உறவினர்களையும் போலீஸார் கைது செய்தனர். சேலம் அருகே உள்ள சிவதாபுரம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. சொந்தத் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், மல்லூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இந்தக் காதலுக்கு ராஜாவின் குடும்பத்தார் அனுமதி தரவில்லை. மேலும், முறைப் பெண்ணான வழக்கறிஞர் இந்திராணிக்கும், உனக்கும் தான் கல்யாணம் என்றும் ராஜாவிடம் கூறினர். ஆனால் ராஜா இதை ஏற்கவில்லை. இப்படியே விட்டால் சரிப…
-
- 4 replies
- 1.3k views
-
-
முக்கிய பிரமுகர் பிடிபட்டார்! இலங்கைக்கு உலோக உருளை கடத்தல்! நவீன படகு பறிமுதல்; டிரைவர் கைது. விடுதலைப்புலிகளுக்கு உலோக உருளை கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக பல முறை கடத்தலில் ஈடுபட்ட படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். நவீன படகு பறிமுதல் செய்யப்பட்டது. படகு டிரைவரும் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு நடைபெறும் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் கியூ பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தேசிய பாதுகாப்பு தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் சென்னை வேப்பேரியில் ஒரு குடோனில் இருந்து உலோக உருளைகள் பறிமுதல…
-
- 0 replies
- 698 views
-
-
காவிரி பிரச்சனை: மார்ச் 18ல் ஜெ. உண்ணாவிரதம் 09 மார்ச் 2007 Blog this story காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் 18ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வெள்ளியன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என்றும், அதே நாளில் மாவட்ட தலைநகரங்கள், மாநிலத்தின் இதர பகுதிகளில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த போராட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி விவசாயிகளும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரி நடுவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
கருநீல லிப்ஸ் டிக் உதடுகளில் அவள் சிகரெட்டை செருக, அருகில் நின்றிருந்தவர் `லைட்டரை' உயிர்ப்பித்து தீவைத்தார். இரண்டு இழுப்பு இழுத்து புகையை உள்ளும்-புறமும் விட்டாள். ஏதோ சிந்தித்தவளாய் சிகரெட்டை கீழே போட, ஹைஹீல்ஸ் நசுக்க, இருவரும் அந்த ஷாப்பிங் சென்டருக்குள் நுழைந்தார்கள். ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை விலைபேசி வாங்கி, அதற்கு உயிரூட்டினாள். வெண்டைக்காய் விரல்களால் யாருக்கோ நம்பர் அழுத்தினாள். "ம்...'' என்ற முணகலோடு ஒரு சிரிப்பை உதிர்த்தாள். "இதுதான் என் புது நம்பர். நீங்க மட்டும் எப்போ வேணும்னாலும் போசலாம். உங்க அன்பளிப்பா நானே இதை வாங்கிட்டேன்... 16 ஆயிரம்தான். கொடுத்தனுப்பிடுங்க... பை...''-நிறைய வழிந்தாள். பக்கத்தில் நின்றிருந்தவர் அவள் கன்னத்தில் கிள்ளி உ…
-
- 1 reply
- 947 views
-