உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26851 topics in this forum
-
மேற்குலகில் உள்ள வளர்ந்த நாடுகளில் 5வது பணக்கார நாடக பட்டியலிடப்பட்டுள்ள பிரிட்டன் சிறுவர்கள் கவனிப்பில் இறுதி இடத்தில் உள்ளது. இத்தகவலை யுனிசெவ் வெளியிட்டுள்ளது. மண முறிவுகளால் எற்படும் குடும்பப் பலவீனங்கள் மற்றும் அம்மா அப்பா அடிக்கடி தங்கள் துணைகளை மாற்றிக் கொள்ளுதல் சிங்கிள் மதர் என்று தங்கட பாட்டையே பார்க்க எண்ணும் பெண்கள் என்போரால் குழந்தைகள் பராமரிப்பற்று அன்பற்று விடப்படுவது பிரித்தானியாவில் மிக அதிகரித்துள்ளது. 1. வறுமை 2. 11 - 15 வயதுள்ள சிறுவர்களிடம் பாலியல் போதைப்பொருள் பாவனை வன்முறை மிக அதிகரித்துள்ளமை 3. கல்வியை இடைநடுவில் கைவிடும் தன்மை 4. அன்பற்ற சூழலை எதிர் கொள்ளல் 5. சரியான நிர்ப்பீடணம் வழங்காமல் இறக்கும் குழந்தைகள் நிலை …
-
- 22 replies
- 2.9k views
-
-
கறுப்பினத்தவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியுமா? ஒபாமா வெற்றிபெறுவாரெயானால், அது பயங்கரவாதிகளின் வெற்றியாக அமையும் அவுஸ்திரேலிய - ஒபாமாவின் தந்தையார் ஒரு முஸ்லிம் [Wednesday February 14 2007 07:04:03 AM GMT] [thinakkural.com] அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டி ஆரம்பமாகிவிட்டது. அதில் உலகின் கவனத்தை இப்போது வெகுவாக ஈர்த்திருப்பது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியும் நியூயோர்க் மாநில செனட்டருமான ஹிலாரி கிளின்டனுக்கும் கறுப்பினத்தவரான இலினோயிஸ் மாநில செனட்டரான பராக் ஒபாமாவுக்கும் இடையே மூண்டிருக்கும் போட்டியாகும். இந்த இருவரில் எவருக்கென்றாலும் ஜனநாயகக் கட்சியின் நியமனம் கிடைத்து 2008 நவம்பரில் நட…
-
- 8 replies
- 1.7k views
-
-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 பிப்ரவரி, 2007 - பிரசுர நேரம் 16:39 ஜிஎம்டி தமிழோசை இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல் காதலர் தினத்தில் வெளிப்படையாக தமது காதல் உணர்வை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு அடி கிடைக்கும் என்று இந்தியாவில் உள்ள பல இந்து கடும் போக்கு அமைப்புக்கள் மிரட்டியுள்ளன. மேற்கத்தைய நாகரிகத்தின் உள் நுழைவை வெறுக்கும் இந்த அமைப்புக்கள், இந்தக் காதலர் தினம் அங்கு அனுட்டிக்கப்படுவதை வெறுக்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த தினம் வெகுவாக பிரபலமடைந்து வருகின்றது. இதய வடிவில் பலூன்கள் மற்றும் சாக்லெட்டுகளை விற்கும் கடைகளும் அதிகரித்துள்ளன. காதலர் தினத்…
-
- 0 replies
- 701 views
-
-
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட ஆரம்பிக்க உடன்பட்டுள்ளது. எரிபொருட்களின் விநியோகத்தைப் பெறுவதற்கு மாற்றீடாக, யொங்பியோனில் உள்ள தனது முக்கிய அணு ஆலையை 60 நாட்களில் மூட வடகொரியா ஒப்புக்கொண்டதாக, அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்தனர். மேலதிக உதவிகளுக்குப் பிறகு, அணு ஆலையை முழுமையாக அது கைவிடும். இந்த ஆலை மூடப்படுவது சர்வதேசக் கண்காணிப்பாளர்களால் மேற்பார்வை செய்யப்படும். இந்த உடன்படிக்கை உறுதியான ஒரு முன்னேற்ற நடவடிக்கை என்றும், ஆனால் முழுமையான அணு ஆயுதக் களைவை நோக்கிய ஒரு ஆரம்பமே இது என்றும், அமெரிக்க தூதுவர்…
-
- 0 replies
- 646 views
-
-
15,000 அடி உயரத்தில் இருந்து விழுந்த பரசூட் வீரர் உயிருடன் வீரகேசரி இணையத்தளப்பிரிவு 15,000 அடி உயரத்திலிருந்து விழுந்த பரசூட் ரொருவர் உயிருடன் நியூசலாந்தில் மீட்கப்பட்டுள்ளார். புதரொன்றில் விழுந்தமையினால் அவர் உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். உயிராபத்தின்று சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் தொபூம் பகுதியில் 15,000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரரான மைக்கல் ஹீம் இவ்வாறான சாகசங்களை முதலில் நிகழ்த்தியுள்ளார். குறித்த சம்பவத்தின் போது சுமார் 4000 அடி உயரத்தில் பறக்கும் போதே தாம் பரசூட் விரியாத்தை உணர்ந்தாக மைக்கல் தெரிவித்தார்
-
- 2 replies
- 1k views
-
-
காணாமல் போகும் காஷ்மீரிகள் காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தாலும் அந்த குரல் அதிகம் எடுபட்டதில்லை. இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதிகள் என்று கூறுவது வழக்கமான ஒன்று. இத்தகைய மனித உரிமை மீறல்களை பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் கண்டுகொண்டதில்லை. ஆனால் கடந்த வாரம் காஷ்மீரில் தாங்கள் "பதவி உயர்வு பெரும் பொருட்டு" சில இராணுவத்தினர் "Fake encounter"ல் அப்பாவி காஷ்மீரிகளை கொன்றிருப்பதை இந்திய வெகுஜன ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. (இது குறித்து வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை). இது குறித்த ஹிந்து நாளிதழின் தலையங்கம் Criminal…
-
- 0 replies
- 811 views
-
-
அல்-ஹைடாவுடன் நெருங்கிய தொடர்புடைய ஈராக்கிய குழுவொன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட இணைய ஒளிநாடா அமெரிக்க ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படுவதை காண்பிக்கின்றது. அமெரிக்க இராணுவம் உடனடியாக தனது சி.எச்.46 Sea Night ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்படவில்லை என தெரிவித்தாலும் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் அந்த ஒளிநாடாவின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துகின்றனர். சீ நைட் ஹெலிகொப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றனர். பெப்ரவரி ஏழாம் திகதி அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்டதை காண்பிக்கும் இரண்டு நிமிட வீடியோவில் சீ நைட் ஹெலிகொப்டர் பறப்பதும் பின்னர் அதற்கருகில் புகை போன்ற ஒன்று தென்படுவதும் பின்னர் உலங்கு வானூர்தி வெடித்து…
-
- 0 replies
- 870 views
-
-
ஸ்பெனிய கடற்பரப்பில் 10 இலங்கையர் மீட்பு நிஷாந்தி ஸ்பெய்னில் படகுகளில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 372 சட்ட விரோத வாசிகளை ஸ்பானிய விமானப்படையினர் மீட்டுள்ளனர்.. ஒரு கிழமை படகில் தத்தளித்து கொண்டிருந்த இவர்கள் வழங்கிய அபாய குரலையடுத்து இவர்கள் ஸ்பானிய விமான படையின்ரால் மீட்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவருகிறது.. இவர்களுள் 305 காஷ்மீரை சேர்ந்த இந்தியர்களும், 22 மியான்மார் வாசிகளும்,10 இலங்கையர்களும் அடங்குவதாக ஏ.எப்.பி தெர்வித்துள்ளது.. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 849 views
-
-
இராக்கில் நடைபெறும் ஷியா தீவிரவாதிகளின் வன்முறைக்கு இரான் தீவிரமான ஆதரவு வழங்குகிறது என்பதற்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிகாரிகள், இரான் ஷியா போராளிகளுக்கு நவீன ஆயுதங்களை வழங்குகிறது என தாங்கள் நம்புவதாக கூறியுள்ளனர். இராக்கில் நடத்திய திடீர் சோதனைகளின் போது அகப்பட்ட ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் என அனைத்தையும் வைத்து ஆராய்ந்ததில், இந்த வன்முறையில் இரானின் பங்கு எவ்வளவு என்பதை காட்டும் ஒரு ஆவணத்தையே தாங்கள் தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்கள். இந்த ஆவணத்தை வெளியிடும் முன்னர் அதில் உள்ள தகவல்களை தந்த உளவுத் தொடர்புகள் குறித்து வெளியே தெரியாதபடியும் அதே சமயம் நம்பத்…
-
- 0 replies
- 788 views
-
-
மணிலா:பிலிப்பைன்சில் ஆறாயிரம் ஜோடிகள் ஒரே நேரத்தில் தொடர்ந்து கட்டி அணைத்தபடி முத்தம் கொடுத்து உலக சாதனை படைத்துள்ளனர். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, "லவபலுõசா' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆறாயிரத்து 124 ஜோடிகள் கலந்து கொண்டு ஒருவரையொருவர் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தனர். குறைந்தது பத்து வினாடிகள் முதல் நீண்ட நேரம் இந்த முத்த பரிமாற்றம் தொடர்ந்தது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் அதிக ஜோடிகள் தொடர்ந்து முத்தம் கொடுத்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.பெரும்பாலும் இளம் ஜோடிகள் கலந்து கொண்ட இந்த விழாவில் ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். முத்தம் கொடுத்த ஜோடிகளை உற்சாகப்படுத்தும் விதமாக இசைக் கலைஞர்…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார் ஆப்ரிக்க இனப் வேட்பாளர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் முதல் ஆப்ரிக்க அமெரிக்கர் தான் தேர்தலில் போட்டியிடப் போவது குறித்து அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த செனட்டரான பார்ரக் ஒபாமா தனது பிரச்சாரத்தை இல்லினாய்ஸில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கின்றார். இணையத்தில் தனது ஆதரவாளர்களுக்கு அவர் விடுத்துள்ள வீடியோ செய்தியில், ஒரு பெரும் பயணத்தை தாங்கள் ஆரம்பிப்பதாகவும், அரசியலில் குற்றம் காணுவதை விட்டுவிட்டு, மக்களின் அன்றாட வ…
-
- 2 replies
- 1.3k views
-
-
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 22 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1 வாரம் தண்டனை அளித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் முரளி. மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். கடந்த 1985ம் ஆண்டு போலியான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை அவர் தயாரித்து விநியோகித்தார். இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் கூடுல் முதன்மை குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 22 வாரங்களாக வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. 2 நாட்களுக்கு முன்புதான் இந்த வழக்கில் நீதிபதி ஜெகன்…
-
- 0 replies
- 748 views
-
-
[10 - February - 2007] [Font Size - A - A - A] பலஸ்தீனத்தின் ஹமாஸ், பதாஹ் அமைப்புகள் வியாழக்கிழமை ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக இரு தரப்பினதும், ஆதரவாளர்கள் மத்தியில் இடம்பெற்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வருவதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்குலக உதவியை பெறுவதற்குமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கு பின்னர் 90 பேர் பலியாவதற்கு காரணமாகவிருந்த கடுமையான மோதலை முடிவிற்கு கொண்டு வருவதற்கான மெக்கா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பலஸ்தீன ஜனாதிபதி மமூட் அப்பாஸ் ஹமாஸ் பிரதமர் இஸ்மாயில் ஹனியே ஆகியோரிடையே இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், பதாஹ் அதிகாரிக…
-
- 0 replies
- 824 views
-
-
சிதம்பரம் கண்டுபிடித்த பெரிய வரிப்பூதம் சேவை வரியாகும். அரசு நிர்ணயித்த ரூ.36500 கோடி இலக்கை தாண்டி அதிகமாக ரூ 5600 கோடி வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் சேவை வரி வசூலிப்பதன் மூலம் ரூ.40000 கோடி கிடைக்கும். இந்திய மொத்த வரிவருவாயில், சேவை வரியின் பங்கு 54 விழுக்காடாக உள்ளது. இன்னும் பல துறைகளை சேவை வரியின் பிடியில் சிதம்பரம் கொண்டு வர உத்தேசித்துள்ளார். 12% சேவை வரி தற்போது வசூலிக்கப்படுகிறது. இது ரொம்ப அதிகமானது. சேவை வரியின் சுமை மத்தியதர மக்களின் தலையில் தான் இறங்கிறது என சிதம்பரத்துக்கு தெரியும். யார் எப்படி போனால் என்ன, என் கணக்கில் பணம் சரியாக இருக்க வேண்டும் என சிதம்பரம் நினைக்க கூடியவர். அதெல்லாம் சரி, தொல…
-
- 1 reply
- 761 views
-
-
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளது போல் இஸ்லாமிய வங்கி ஒன்றை இந்தியாவிலும் ஆரம்பிக்க வேண்டும் என்றும்,. புனித மறையின் படி முஸ்லிம் மக்கள் வட்டிக்கு பணம்(prohibition of usury )அளிக்ககூடாது.அதனால் இஸ்லாமிய வங்கி தொடங்கி முஸ்லிம் மக்கள் தங்களது வட்டி இல்லா வைப்புதொகை- சேமிப்பினை வங்கியில் தொடங்க வசதியாக இருக்கும் எனவும்,. வங்கியில் கிடைக்கும் வருமானத்தை ஹஜ் யாத்திரை செல்லும் மக்களுக்கு பயணசீட்டு வாங்க பணம் அளிக்கலாம் என்றும் அம்மக்கள் தெரிவிக்கிறார்கள்.ஆனால் பாஜகவினர், இந்திய அரசு இந்த வங்கியினை அரசு நிதியுடன் தொடங்க கூடாது என்றும். தனியார் இவ்வங்கி தொடங்கினால் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 949 views
-
-
ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் கடந்த வாரம் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது. சில இடங்களில் மழை சிகப்பு நிறத்திலும், சில இடத்தில் மஞ்சள் நிறத்திலும் பனி மழை பொழிந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலவில்லை. பக்கத்தில் உள்ள கஸகிஸ்தான் வீசிய சூறாவளியுடன் பறந்த செம்மண் தூசி தான் காரணம் என்றும் , அவ்விடத்தில் ரஷ்யா முன்பு நடத்திய அணு சோதனை என்றும், சுற்று சூழல் மாசு என்றும்சொல்லப்படுகின்றன. உண்மையான காரணம் அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். -வே..பிச்சுமணி
-
- 3 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவுக்கும் மற்றும் தன்னால் உலக ஆதிக்கத்துக்கான பேராசை என்று கூறப்படுவதற்கும் எதிராக ரஷ்ய அதிபர் விளாடிமின் பூட்டின் கடுமையான தாக்குதலை ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமீர் பூட்டின் ஜேர்மனியின் முனிச் நகரில் நடக்கும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பூட்டின் அவர்கள், அமெரிக்கர்கள் உலகில் முடிவுகளை எடுக்கும் ஒரேயொருவராக தாங்களே இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், உலகெங்கும் தேசிய எல்லைகளைத் தாண்டி அவர்கள் தமது சட்டங்களை அமுல்படுத்த விளைகிறார்கள் என்று, இந்தக் கொள்கை மேலும் போர்களுக்கும், பாதுகாப்பின்மைக்குமே வழிசெய்யும் என்று கூறியுள்ளார். அங்கு கூடியிருந்த தலைவர்களுடனான கடுமையான வாதப் பிரதி வாதங்களுக்கு மத்தியில், பூட்டின் அவர்கள், ரஷ்யாவின் …
-
- 0 replies
- 831 views
-
-
உலகம் அப்படியொன்றும் கண்மூடியபடி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது பிரித்தானியாவின் அறிவுஜீவிகள் விரும்பிப்படிக்கும் "த கார்டியன்" பத்திரிகை.. ............................ சிறீலங்காவின் அரச அதிபர் வெடிகுண்டுதாரிகளைப் போல மனிதாபிமானம் அற்றவர்: த கார்டியன் நாளேடு [சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2007, 05:56 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழ் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற விடுதலைப்புலிகளை முறியடிக்கலாம் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா நம்புவாராக இருந்தால் அவர் ஒரு மனிதாபிமானமற்றவராகவே கொள்ளப்படுவார். என நேற்று வெள்ளிக்கிழமை வெளியாகிய த கார்டியன் நாளேட்டில் ஜேனார்தன் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் எழுதிய ஆய்வின் முழுவடிவம் வரு…
-
- 0 replies
- 815 views
-
-
45 வயதானவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை இஸ்லாமாபாத்,பிப்.10 பாகிஸ்தானில் 45 வயதுடையவருக்கு 4 வயது சிறுமியை திருமணம் செய்துவைத்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது. மலைஜாதியினர் பழக்க வழக்கப்படி ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக இந்த பொருந்தா திருமணத்தை செய்துவைத்துள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர். பாகிஸ்தானின் வட-மேற்கு மாகாணத்தில் மலை ஜாதியினர் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் டேரா இஸ்லாமி கான் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சேர்ந்தவர் பரூக். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் ஓடி விட்டனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்தில் பரூக்கிற்கு ரூ.1.5 லட்சம்…
-
- 17 replies
- 3.3k views
-
-
உலகின் நம்பர் ஒன் காதல் ஜோடி! வில்லியம் சார்லஸ் - கேத் மிடில்டன்... உலகின் இப்போதைய லேட்டஸ்ட் ஹாட் காதல் ஜோடி இது தான்! சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா பார்க்கர் ராணியாக முடியாத காரணத்தால், இப்போது புது ராணிக்காகக் காத்திருக்கிறது பிரிட்டன். ‘பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ்’ பட்டத்தைச் சுமந்துகொண்டு இருக்கும் வில்லியம்ஸுக்குச் சரியான மனைவியைத் தேர்ந்தெடுத்து நாட்டுக்குத் தகுதியான ஒரு ராணியைக் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் இருக்கிறது. கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு ராணுவப் பயிற்சியையும் முடித்துவிட்டார் வில்லி யம்ஸ். அடுத்தது திரு மணம்தான். இப்போது 25 வயதாகும் வில்லியம்ஸ், சம வயதுள்ள கேத் மிடில்ட னைத் தனது காதல் மனைவியாகத் தேர்ந்தெடுத்துவிட்டார். இ…
-
- 6 replies
- 2k views
-
-
[09 - February - 2007] [Font Size - A - A - A] அமெரிக்காவுக்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பாக்தாத்துக்கு அருகில் வீழ்ந்து நொருங்கியதில் அதிலிருந்த 7 பேர் பலியாகியுள்ளதாக அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர். மூன்று வாரங்களில் பாக்தாத்தில் வீழ்த்தப்பட்ட ஐந்தாவது ஹெலிகொப்டர் இதுவெனவும் இதற்கான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் 4 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. இது ஒரு நவீன தந்திரம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை மேற்காகவுள்ள அன்வர் மாகாணத்தில் இது வீழ்ந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தினரின் அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டின் எந்தப் பகுதியை விடவும் அன்வர் மாகாணமே நீண்ட காலமாக…
-
- 13 replies
- 1.7k views
-
-
நளினியின் மகள் நோர்வே பயணம். http://thatstamil.oneindia.in/news/2007/02/09/nalini.html
-
- 1 reply
- 1.2k views
-
-
காதலி..கனடா.. போலி விசா: வாலிபர் கைது சென்னை: போலி விசா மூலம் காதலியை சந்திக்க கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கை வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிப்பட்டார். கொழும்புவை சேர்ந்த நிதர்சன் ஜோசப்(26), நிரூபமா(22) இருவரும் காதலர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் ஜோசப். கடந்த 6 மாதங்களாக நிரூபமாவை தொடர்பு கொள்ள முடியாததால் கவலை அடைந்த ஜொசப் படிப்பை கைவிட்டு கொழும்பு திரும்பினார். அப்போது நிரூபமா கனடாவிற்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவரது கனடா முகவரி மற்றும் செல் நம்பரை கண்டுபிடித்த ஜோசப், நிரூபமாவுடன் தொடர்பு கொண்டு, உடனே இலங்கைக்கு வரச் சொல்ல, அவரோ தனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருப்பதாகவும் 5 ஆண்டுகளுக்கு கனடாவை விட்டு வர மு…
-
- 25 replies
- 3.7k views
-
-
சென்னை: அதிமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சைகள் மற்றும் தேமுதிக வேட்பாளர்களிடம் பேசி அவர்களை விலக வைக்கும் முயற்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை நிரூபிப்பது போல பல வார்டுகளில் தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் விலக முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் பாஜக வேட்பாளர்களும் கூட விலக முன் வந்துள்ளனராம். இதனால் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தின் 140வது வார்டு உள்பட பல வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது. மா.சுப்பிரமணியத்தின் வார்டில் தேமுதிக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது தியாகராஜன் என்ற ஒரே…
-
- 0 replies
- 820 views
-
-
நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பலுக்கு உதவ மௌரிரானியா மறுப்பு [07 - February - 2007] 200 சட்ட விரோத குடியேற்ற வாசிகளுடன் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கப்பலுக்கு உதவுவதற்கு மௌரிரானியா மறுத்துள்ளது. ஆபிரிக்காவின் மேற்கு கரையோரத்திற்கு அப்பால் பழுதடைந்த நிலையில் தத்தளிக்கும் இந்த ஸ்பானிய கப்பலை திருத்துவதற்கு உதவி செய்யுமாறும் அல்லது பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் மௌரிரானியாவிடம் உதவி கோரியிருந்தது. இக்கோரிக்கையை மௌரிரானியா நிராகரித்துள்ளதுடன் இப்பழுதடைந்த கப்பலுக்கு தாம் ஒன்றும் செய்யமுடியாதெனவும் அதில் உள்ளவர்களை பொறுப்பேற்க முடியாதெனவும் மௌரிரானியா வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே அயல் நாடான செனகலும் …
-
- 0 replies
- 627 views
-