உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26608 topics in this forum
-
முல்லைத்தீவு படுகொலை: ஜெ. ஜெயலலிதா கண்டனம் [வெள்ளிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2006, 05:34 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா விமானக்குண்டுத் தாக்குதலுக்கு முல்லைத்தீவில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலிதா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை சிறுமியர் பாரமரிப்பு இல்லத்தின் மீது சிங்கள இராணுவத்தினர் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசியதால், அநியாயமாக 61 சிறுமியர் உயிர் இழந்த செய்தியையும், நூற்றுக்கும் மேற்ப…
-
- 6 replies
- 1.4k views
-
-
நாகரிகமற்ற- காட்டுமிராண்டித்தனமான - மனிதாபிமானம் - சிறிதுமற்ற - கொடுமை நிறைந்தது இலங்கை இராணுவத்தின் முல்லைத்தீவு படுகொலை என்று தமிழ்நாடு சட்டப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா வான்படை நடத்திய கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஆவுடையப்பன் கண்டனத் தீர்மானத்தை வாசித்தார். தீர்மான விவரம்: 14.8.2006 அன்று இலங்கையில் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனாதைக் குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதன் காரணமாக 61 மாணவிகள் உயிரிழந்தது…
-
- 15 replies
- 2k views
-
-
யுத்தமுனைப்பினை இருதரப்பும் நிறுத்தி சமாதான பேச்சுக்கு திரும்ப வேண்டும் அமெரிக்க தூதரக பேச்சாளர் யுத்தத்தின் முனைப்பினை இருதரப்பும் நிறுத்தி உடனடியாக சமாதான பேச்சுக்களுக்கு திரும்புமாறு அமெரிக்க அரசு இருதரப்பையும் வலியுறுத்துவதாக அமெரிக்க தூதரக பேச்சாளர் இவான் வில்லியம் ஓவன் தெரிவித்தார். தற்போதைய யுத்த நிலைப்பாட்டில் அல்லது யுத்த முனைப்புகளில் இருந்து உடனடியாக விலகிக்கொள்ள அமெரிக்க அரசு தனது அழுத்தத்தை இருதரப்பின் மீதும் பிரயோகிப்பதாகவும் மேலும் அழிவுகள் நேராமல் இருக்க இருதரப்பும் உடனடிப் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:முல்லைத்தீவி
-
- 1 reply
- 1.2k views
-
-
முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் வகையில் சிறிலங்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியை திரும்ப அழைக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் கிருஸ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழக சட்டமன்றம் 6 கோடி தமிழ் மக்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். எனவே, நடப்பு சட்டமன்றத் தொடரில் உடனடியாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் மனிதாபிமான செயல்களை கண்டிக்கும் வகையில் புதுடில்லி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களை மூடிவிடவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண, இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். முதல் நடவடிக்கையாக தமிழ் மக்களுக்…
-
- 1 reply
- 965 views
-
-
இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தின் புகள்மிக்க "இண்டிபென்ரன்" நாளிதள்...! வட பகுதியில் சிறுவர்கள் எண்றாலும் கொல்லப்படுவர்...அவர்கள் கூட எங்களின் இலக்கு எண்றார் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தன.... இவர்கள் ஆயுதம் ஏந்த கூடியவர்கள்... பதினேளு வயதானாலும் வர்களால் (எங்களை ) முன்னால் நிற்பவர்களை கொல்ல முடியும்.. அரசாங்க பேச்சாலர் ரம்புல்லவும் சொன்னார்....! இதேவேளை யுனிசெவ்ம், கண்காணிப்புகுழுவும் இந்த தாக்குதல் பாடசாலை மாணவர்கள் மேல்த்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது எனும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றது... உனிசெவ் இவர்கள் முதலுதவி பயிற்ச்சிகாய் கூடியவர்கள் எண்றும்... கண்காணிப்பு குழு இந்த இடத்தில் பயிற்ச்சி முகாமுக்கானதோ ஆயுத தளவாடங்களுகள…
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்தியா நிராகரித்ததால் பாகிஸ்தானிடம் 2 கப்பல் ஆயுதங்களை வாங்கியது சிறிலங்கா [புதன்கிழமை, 16 ஓகஸ்ட் 2006, 18:57 ஈழம்] [ச.விமலராஜா] சிறிலங்காவுக்கு கனரக இராணுவ உதவிகளை செய்ய இந்தியா நிராகரித்தமையால் பாகிஸ்தானிடமிருந்து 2 கப்பல் ஆயுதங்களை சிறிலங்கா வாங்கியுள்ளது. இந்த ஆயுதக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கடந்த 14 ஆம் நாளன்று வந்தடைந்துள்ளன. முன்னதாக தனது ஆயுதக் கொள்வனவுப் பட்டியலை பாகிஸ்தானிடம் சிறிலங்கா அளித்தாக செய்திகள் வெளியாகின. இந்தியாவிலிருந்து வெளியாகும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் இதை அம்பலப்படுத்தியிருந்தது. கடந்த ஏப்ரலில் பாகிஸ்தான் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இராணுவக் கொள்வனவு தொடர்பாக குறிப்பாக விமானப் படைக்கான …
-
- 1 reply
- 1k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா வான்படையின் கொடூர வான்குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் இன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவையின் சார்பில் சென்னையில் இன்று புதன்கிழமை முற்பகலில் விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னையில் உள்ள தமிழ்நாடு தலைமை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உள்ளிட்ட சார் நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். http://www.eelampage.com/?cn=28227
-
- 14 replies
- 2k views
-
-
இந்தியா உதவினால் "தமிழ்நாடு விடுதலை"க்கான இயக்கம் தீவிரமடையும்: கொளத்தூர் மணி எச்சரிக்கை சிறிலங்காவுக்கு உதவினால் ஈழத்துக்கு அது சிறு பின்னடைவாகவும் "தமிழ்நாடு விடுதலை"க்கான தமிழ் தேசிய இயக்கம் தீவிரமடையும் என்று இந்திய அரசாங்கத்துக்கு பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா. செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொளத்தூர் தா.செ. மணி வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவுக்கு இராணுவ உதவி வழங்கும் தவறை நிச்சயமாக இந்தியா மீண்டும் செய்யாது. பலாலி படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த 11 ஆம் நாள் வான் தாக்குதலை நடத்தியபோது நான் பொதுக்கூட்டத்தில் இருந்தே…
-
- 4 replies
- 1.3k views
-
-
செஞ்சோலையில் கோர நர்த்தனம் ஆடிய சிங்கள அரசின் காட்டுமிராண்டிச் செயலுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று திங்கட்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை: உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சத்தை மனிதநேயம் உள்ளோர் மனதை நடுநடுங்கச் செய்யும் படுகொலையை சிங்கள அரசின் விமானப்படை நடத்தி இருக்கிறது. இலங்கைத் தீவின் கிளிநொச்சிப் பகுதியில், செஞ்சோலை எனும் குழந்தைகள் காப்பகம் மனிதநேயத் தொட்டிலாக இயங்கி வருகிறது. சிங்கள அரசின் ஈவு இரக்கம் அற்ற இனப்படுகொலையால் உயிர்நீத்த தமிழர்களின் குழந்தைகளை-தாய்-தந்தையரை இழந்த அனாதைக் குழந்தைகளைப் பாதுகாத்து, அரவணைத்து வளர்க்கும் சேவை மையமாக இந்த செஞ்சோலையை விடுதலைப் புல…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை, முல்லைத்தீவில் 16 குண்டுகளை வானிலிருந்து பொழிந்து 61 சிறார்களை அப்படியே புதைகுழிக்கு அனுப்பி வைத்திருக்கிறது இலன்கையில் புத்தன் வழி நடக்கும் சிங்கள அரச படைகள். இந்த குழந்தைகள் போராளிகளல்ல, அவர்கள் யுத்த பயிற்சியில் ஈடுபடவும் இல்லை, அவர்களது சடலங்களால் பிணக்காடாய் காட்சி தந்த செஞ்சோலை என்றளைக்கப்படுகிற அந்த வளாகத்தில் இராணுவ நடவடிக்கைகளுக்கான எந்த தடையமும் இல்லை என ஐ.நா குழந்தைகளுக்கான அமைப்பு, இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரான நார்வே பிரதிநிதிகள் என அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், மீண்டும் மீண்டும் சிங்கள அரசு, சிங்கள தரப்பு மற்றும் கருணா குழு ஊடகங்களும் (அவற்றில் சில வலைப்பதிவுகளும் அடங்கும்) உண்மையை மூடிமறைத்து புலிகளை எதிர்ப்பதை அப்பாவி கு…
-
- 0 replies
- 957 views
-
-
தமிழகத்தின் கோவை மற்றும் திருப்பூர் நகரங்களில் சிங்கள தேசியக் கொடிகள் இன்று எரிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் சிறிலங்கா விமானப்படையின் வான் குண்டுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் பலியெடுக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகத்தில் சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டுள்ளன. கோவையில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன், ஆட்சிக் குழு உறுப்பினர் வெ.ஆறுச்சாமி உள்ளிட்டோர் தலைமையில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் அருகே சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து 40 பெரியார் திராவிடர் கழகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் அங்ககுமார் தலைமையில் சிங்களத் த…
-
- 28 replies
- 3.7k views
-
-
இலங்கைக்கு போர் தளபாடங்கள் ஆயுதங்களை வழங்குவதை இந்திய அரசு ஒத்திவைத்தது [14 - August - 2006] [Font Size - A - A - A] இலங்கைக்கு இராணுவ தளபாடங்களையும் ஆயுதங்களையும் வழங்குவதை புதுடில்லி ஒத்திவைத்துள்ளது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைவரத்தை கருத்தில் கொண்ட இந்தியா இந்த முடிவையெடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஆயுதங்களை கோரியுள்ளது. இந்த ஆயுதங்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டா என இலங்கை உறுதியளித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கிளேமோர்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய வாகனங்களையும் இலங்கை கோரியுள்ளது. மேலும், கடல்புலிகளை இலங்கைக் கடற்படையினர் வலிமை மிகுந்த எதிரிகளாக கருதுவதால் அவர்களை எதிர்கொள்வதற்கு இந்திய கடற்ப…
-
- 4 replies
- 2.7k views
-
-
முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான் சிங்களக் காடையன்! கேள்வி கேட்க நாதியில்லை உலகில்! ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில முணுமுணுப்புகள் - அவ்வளவே! கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை முறுக்கிக் கொண்டு! முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா, பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில் பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம் பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும் சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் ம…
-
- 2 replies
- 1.3k views
-
-
முல்லைப் படுகொலை: சென்னையில் 17 ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலைப் போராட்டம் [திங்கட்கிழமை, 14 ஓகஸ்ட் 2006, 19:49 ஈழம்] [புதினம் நிருபர்] முல்லைத்தீவில் சிறிலங்காவின் விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து சென்னையில் எதிர்வரும் 17ஆம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ளது. சேலத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 17 ஆம் நாளன்று மதுரையில் நடைபெற இருந்த விடுதலைச் சிறுத்தைகளின் "தமிழர் எழுச்சி" மாநாடு இரத்துச் செய்யப்பட்டு அன்றைய நாளில் சென்னையில் உண்ணாநிலைப் …
-
- 1 reply
- 965 views
-
-
அமெரிக்க உற்பத்திகளுக்குள் அடங்கும் பெப்சி..கொக் போன்ற மென்பான விற்பனையை இந்தியா தடை செய்யுமானால்..இந்தியாவிற்கான அமெரிக்க முதலீடுகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்கா பொருளாதார யுத்த எச்சரிக்கை ஒன்றை இந்தியா மீது செய்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4789615.stm
-
- 3 replies
- 1.5k views
-
-
அரபுலகின் அதி நவீன இராணுவமாக வெளிப்படும் ஹிஸ்புல்லா போராளிகள் [13 - August - 2006] [Font Size - A - A - A] -அ.ரஜீவன்- ஹிஸ்புல்லா போராளிகளின் போரிடும் திறனையும், நவீன ஆயுதங்களையும் மேற்குலக ஊடகங்கள் ஒருவித ஆச்சரியத்துடன் பார்ப்பதை அவதானிக்க முடிகின்றது. ஹிஸ்புல்லா அமைப்பு முற்று முழுதாக புதிதானவொன்று போல தென்படுகின்றது என்கிறது நியூஸ்வீக். நவீன ஆயுதங்களையும், அற்புதமான ஒழுக்கநெறியையும் கட்டுப்பாட்டையும், கொண்டுள்ள அராபிய கெரில்லா இராணுவம் என ஹிஸ்புல்லா அமைப்பை அது வர்ணிக்கின்றது. அதன் வீரர்கள் மரணிக்கும் வரை போராட தயார் என்கின்றனர். எனினும், நவீன உடற் பாதுகாப்பு கவசங்களையும், தொலைத்தொடர்பு கருவிகளையும் கொண்டுள்ளனர். அவர்களது தந்திரோபாயம், …
-
- 1 reply
- 1.3k views
-
-
பெப்சி, கோக கோலாவுக்கு இந்தியா முழுவதும் தடை வந்தால் ஆதரிப்போம் என்று கருணாநிதி கூறினார். அந்நிய நாட்டு நிறுவனங்களின் தயாரிப்பான பெப்சி, கோக கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக டெல்லியை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் 2-வது முறையாக ஆய்வில் கண்டுபிடித்து கூறியுள்ளது. இந்த பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருப்பதால் இது நச்சுத்தன்மை கொண்டது என்று அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் இந்த பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. பல்வேறு கட்சிகள் இந்த குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றன. டெல்லி, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் கல்வி நிலைய வளாகங்களில் இந்த …
-
- 0 replies
- 884 views
-
-
பலாலி படைத்தளம் மீதான தாக்குதல்: பேரெழுச்சியில் தமிழ்நாடு [சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 08:20 ஈழம்] [புதினம் நிருபர்] யாழ். பலாலி படைத்தளம் மீதான விமானத்தாக்குதல் செய்திகள் வெளியான உடனேயே தமிழ்நாட்டில் பேரெழுச்சியான அலை ஏற்பட்டுள்ளது. சேலத்தில் உலகத் தமிழர்கள் குவிந்திருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டு வளாகத்திலிருந்து எமது செய்தியாளருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் அளித்த உற்சாக நேர்காணல்: பல்வேறு தடைகளைத் தாண்டி உலகத் தமிழர் பேரமைப்பு மாநாடு சேலத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் வந்து குவிந்து கொண்டிருக்கிற தமிழர்கள், புலிகளின் வான்படை முதன்முதலாக செயற்பட…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள விமான நிலையங்கள் குண்டு புரளி காரணமாக மூடப்பட்டிருந்தது. தற்போது ஒரு சில விமான சேவைகளே நடைபெறுகின்றது.
-
- 11 replies
- 1.9k views
-
-
கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் ACF தன்னார்வ நிறுவனத்தின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு தொடர்பில் அமெரிக்கா தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வன்முறைகளை முடிவுக்கொண்டுவந்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு உதவி புரியும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இயலுமான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளதாகவும் அமெரிக்காவின் இராஜங்கச் செயலாளரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவந்து அதன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான பாதையைத் திறந்துவிட…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கை பிரச்சனை : கருணாநிதியுடன் பிரதமர் தூதர் சந்திப்பு! புதன், 9 ஆகஸ்ட் 2006 (13:45 ஐளுகூ) சென்னை வந்துள்ள பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து இலங்கை இனப்பிரச்சனை குறித்து பேசினார்! இலங்கை அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி வந்து முக்கிய அமைச்சர்களை சந்தித்துப் பேசினார். இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என்று அவரிடம் அயலுறவு துணை அமைச்சர் ஈ. அகமது வலியுறுத்தினார். இந்த நிலையில், இலங்கை இனப்பிரச்சனையில் இந்திய அரசின் அணுகுமுறையை விளக்கவும், அதன் மீது தமிழக அரசின் கருத்தை அறியவும் பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன், தமிழக முதலமைச்சர் கருண…
-
- 11 replies
- 1.9k views
-
-
கியூப ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ உடல் நலம் தேறி வருகிறார். குடலில் ஏற்பட்ட இரத்தக் கசிவுக்காக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இன்னும் சில வாரங்களில் அவர் பணிக்குத் திரும்பிவிடுவார் என்று துணை ஜனாதிபதி கார்லோஸ் லாகி தெரிவிக்கிறார். பொலிவியா நாட்டின் சுக்ரே என்ற நகருக்கு திங்கட்கிழமை வந்த அவர் இத் தகவலைத் தெரிவித்தார். வரும் 13 ஆம் திகதி காஸ்ட்ரோவுக்கு 80 ஆவது பிறந்தநாள் வருகிறது. இன்னும் 80 ஆண்டுகள் அவர் உயிரோடு இருப்பார் என்று கார்லோஸ் லாகி தெரிவித்தார். காஸ்ட்ரோ திரும்பிவரமாட்டார். அவருக்கு வயிற்றில் புற்றுநோய் என்று அமெரிக்கா செய்துவரும் பிரசாரம் உண்மை அல்ல என்று அதன் மூலம் நிரூபணமாகிவிடும் என்றும் குறிப்பிட்டார் கார்லோஸ் லாகி.
-
- 0 replies
- 740 views
-
-
பாகிஸ்தானில் கடும் மழையால் பாலம் இடிந்து வீழ்ந்து 40 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 100 இற்கும் மேற்பட்டவர்கள் மழை வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பலியாகி விட்டனர். வடமேற்கு மாகாணம் தான் இந்த மழையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மர்தான் நகரில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி பாலத்தை தொட்டபடி சென்றது. இந்த பாலத்தின் மீது ஏராளமான பொதுமக்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது அந்த பாலம் திடீர் என்று இடிந்து விழுந்தது. பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள் 100 இற்கும் மேற்பட்டவர்கள…
-
- 0 replies
- 672 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறையில்லை - வைகோ - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 08 யுரபரளவ 2006 12:39 இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அக்கறையின்றி செயற்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ் சாட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை தமிழக அரசு மாற்றிவிட்டது. இது குறித்து பொது மக்களிடம் எடுத்துரைப்போம். மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தலின் நிலைப்பாடு குறித்து அதிமுக ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
புரட்சித்தலைவியின் அடிவருடிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.... நம்ம அம்மாவும் கின்னஸ் புத்தகத்தில் ஒரு சாதனைக்காக இடம் பெற்றிருக்கிறார்.... அனேகமாக இந்தியாவிலேயே அல்லது உலகத்திலேயே ஒரு மாநில முதல்வர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது இது முதல் முறையாக இருக்கக்கூடும்..... அதுகுறித்த சுட்டி இதோ : http://www.guinnessworldrecords.com/conten...?recordid=54234 விபரம் இதோ : Largest Wedding Banquet Jayalalitha Jayaram, former Tamil Nadu chief minister and movie star, hosted a luncheon for over 150,000 guests at her foster son's wedding. The banquet was served in grounds by the coast in the state capital, Madras, on September 7, 1995. (http://madippa…
-
- 3 replies
- 1.6k views
-