உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 21 செப்டெம்பர் 2025, 03:11 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் 2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார். புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68. மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக, மன்னர் தன்னுடைய மருமகனான 55 வயது முகமது பின் …
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை Nishanthan SubramaniyamDecember 18, 2025 11:55 am 0 உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் தீர்வு இல்லாத நிலை தொடர்ந்து நீடிக்கிறது. எனவே, ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உக்ரைனை இணைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்டகால கோரிக்கையை கைவிட தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்த சூழலில், வருடாந்திர கூட்டத்தில் இராணுவ தளபதிகள் மத்தியில் புடின் ந…
-
- 0 replies
- 144 views
-
-
சூடானின் துணை இராணுவ ஆதரவுப் படைகள், எல் கெசிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குறைந்தது 124 பேரைக் கொலை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது அந்த நாட்டில் இடம்பெற்று வரும் 18 மாத காலப் போரின் மிகக் கொடிய சம்பவங்களில் ஒன்றாகும் என்று கருதப்படுகிறது. அத்துடன் குறித்த மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் மிகப்பெரியது என்றும் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உயர் பதவியில் இருந்த Abuagla Keikal என்ற துணை இராணுவ அதிகாரி ஒருவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் இராணுவத்திடம் சரணடைந்ததைத் தொடர்ந்து, சரணடைந்த அதிகாரி வசித்து வந்த விவசாய கிராமத்தின் மீது இந்த பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சூடானில் இடம்பெற்று வரும் போரால் 11 ம…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது. கட்டுரை தகவல் ருஷ்டி அபுஅலூஃப் காஸா செய்தியாளர் 9 ஆகஸ்ட் 2025, 03:56 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடப் போருக்குப் பிறகு, ஹமாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ராணுவத் திறன் பலவீனமடைந்துள்ளது, அதன் அரசியல் தலைமை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆனால், போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரகசிய முறையைப் பயன்படுத்தி, ஹமாஸ் தொடர்ந்து பணம் வழங்கி வந்துள்ளது. இதன் மூலம், 30,000 அரசு ஊழியர்களுக்கு, மொத்தமாக 7 மில்லியன் டாலர் (சுமார் 5.3 மில்லியன் யூரோ ) சம்பளமாக வழங்கப்பட்டுள்…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல்; அமெரிக்காவுக்கான பயணத்தை தவிர்க்கும் கனேடியர்கள்! அமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத சுங்க வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே போல் கனடாவை 51 ஆவது மாநிலமாக உள்வாங்குவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவது குறித்தும் யோசனை வெளியிட்டுள்ளார். திங்களன்று (10), கனடா மற்றும் பிற இடங்களில் இருந்து அனைத்து எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதிகள் மீது 25 சதவீத வரிகளை விதிக்கும…
-
- 0 replies
- 143 views
-
-
அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்! – ட்ரம்ப் எச்சரிக்கை. ‘அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக ‘உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என வரிசையாக வரிகளை விதித்த ட்ரம்ப், நட்பு நாடான இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் எச்சர…
-
- 1 reply
- 143 views
-
-
பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா! பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர்(Angela Rayner) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்ட நிலையில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் தனது பொருளாதார ஆலோசனையை வலுப்படுத்த பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஆலோசகர்கள் குழு மறுவடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு ஆலோசகரின் மறுசீரமைப்பு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவின் சுயாதீன ஆலோசகர் ரெய்னர் சரியான வரி செலுத்தத் தவறியதன் மூலம் விதிமுறைகளை மீறியதாக தீர்ப்பளித்த பின்னர் , அவர் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்க…
-
- 0 replies
- 143 views
-
-
பலஸ்தீன அகதிகள் முகாமில் தீ! 9 சிறார்கள் உட்பட 21 பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 09:17 AM பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் ஏற்பட்ட தீப் பரவலில் குறைந்தபட்சம் 21 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காஸாவின் வடபகுதியிலுள் ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. இறந்தவர்களில் 9 சிறார்களும் அடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக காஸாவிலுள்ள இந்தோனேஷிய வைத்தியசாலையொன்றின் அவசரசேவைப் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சலேஹ் அபு லைலா தெரிவித்துள்ளார் குறித்த பகுதியில் பெருமளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீ விர…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 1 08 Sep, 2025 | 01:23 PM அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. 50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
வட கொரியாவில்... கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த, இராணுவத்துக்கு... கிம் அழைப்பு! வடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங் உன், உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவில் கொவிட் தொற்று பரவியுள்ளதாக செய்தி வெளியானதில் இருந்து, இதுவரை 50பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி போடப்படாத மக்கள் மூலம் நோய் பரவுவதை மெதுவாக்கும் முயற்சியில் கிம் நாடு தழுவிய முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு உத்தரவிட்ட போதிலும், வடகொரியா ‘காய்ச்சல்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நோய்வாய்ப…
-
- 0 replies
- 143 views
-
-
02 Oct, 2025 | 01:05 PM பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் பெய்து வரும் தொடர் மழையாலும், அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்காலும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 1,006ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு, கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்த், கில்ஜித்-பல்திஸ்தான், பலுசிஸ்தான், ஆசாத் ஜம்மு காஷ்மீர் மற்றும் இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேசம் ஆகிய மாகாணங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் பலியானவர்களில் 275 குழந்தைகள், 163 பெண்கள் மற்றும் 568 ஆண்கள் அடங்குவர். வெள்ளம் தொடர்பான அனர்த்தங்களில் மொத்தம் 1,063 பேர் காயமடைந்துள்ளனர…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-
-
🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமா…
-
- 0 replies
- 142 views
-
-
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது ஃபரா மோக்ரானி • புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2025 • 21:23 • 2 நிமிடங்கள் படிக்கப்பட்டது பிரான்ஸ் மருத்துவமனை தயார்நிலை: மார்ச் 2026 க்குள் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு பிராந்திய மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கசிந்த சுகாதார அமைச்சகக் குறிப்பு வலியுறுத்துகிறது, இதில் துறைமுகங்கள்/விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மையங்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி/PTSD பயிற்சி ஆகியவை அடங்கும். நன்றி: DBrownPhotos, Shutterstock பிரான்சின் சுகாதார அமைச்சகம், மார்ச் 2026 க்குள் முழு தயார்நிலையுடன், ஐரோப்பாவில் ஒரு 'பெரிய இராணுவ ஈடுபாட்டிற்கு' தயாராகுமாறு நாட்டின் மருத்துவமனை…
-
- 0 replies
- 142 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாரி நாசர் பாலியல் விவகாரத்திற்கு பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரியம் பதவி விலகல் படத்தின் காப்புரிமைAFP பாலியல் முறைகேடு தொடர்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஒலிம்பிக் குழு விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரிய உறுப்பினர்கள் கீழ்படிவதாக தெரிவித்துள்ளனர். 18 உ…
-
- 0 replies
- 142 views
-
-
உக்ரைனுக்கு... 100 மில்லியன் பவுண்டுகள், மதிப்புள்ள ஆயுதங்களை.. வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவிப்பு! ரயில் நிலையத்தில் அகதிகள் மீது மனசாட்சியற்ற குண்டுவீச்சுக்கு பிறகு, உக்ரைனுக்கு 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை பிரித்தானியா பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். ஸ்டார்ஸ்ட்ரீக் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் 800 டேங் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட கூடுதல் இராணுவ உபகரணங்களை பிரித்தானியா அனுப்பும் என்று பிரதமர் உறுதியளித்தார். கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 50பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த த…
-
- 0 replies
- 142 views
-
-
குரங்கம்மை நோய்: மெக்ஸிகோ, அயர்லாந்து- அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளிலும் பரவியது! பல்வேறு நாடுகளில் மிகவேகமாக பரவிவரும் குரங்கம்மை நோய், தற்போது மெக்ஸிகோ, அயர்லாந்து மற்றும் அர்ஜெண்டீனா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. மெக்ஸிகோவில் மெக்சிகோ நகரில் உள்ள 50 வயதான ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்தின் சுகாதார நிறுவனம் நாட்டிலேயே முதல் குரங்கம்மை நோய் தொற்றை பதிவுசெய்துள்ளது. தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொருவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் லத்தீன் அமெரிக்க நாடாக அர்ஜென்டினா மாறியுள்ளது. இரண்டு நோயாளிகளுக்கும் ஸ்பெயினுக்கு பயணம் செய்த வரலாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கு…
-
- 0 replies
- 142 views
-
-
ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு பால்டிக் நாடுகள் மற்றும் போலந்து நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதற்காக மெர்க்கெல் கடுமையாக சாடினார். "உக்ரைனில் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகும், அவர் இன்னும் இப்படித்தான் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலைப் பற்றி ஒரு முன்னாள் தலைவர் கூறுகிறார். இணைப்பை நகலெடு ஏஞ்சலா மெர்க்கலின் கருத்துக்கள் போலந்தில், குறிப்பாக வலதுசாரி எம்.பி.க்களிடமிருந்து கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தின. | ஸ்டீபன் சாயர்/பட கூட்டணி கெட்டி இமேஜஸ் வழியாக அக்டோபர் 6, 2025 மாலை 7:50 CET கெட்ரின் ஜோச்செகோவா எழுதியது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு போலந்து மற்றும் பால்டிக் அதிகாரிகள் மீது முன்னாள் ஜெர்மன…
-
- 0 replies
- 142 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை கட்டுரை தகவல் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி முண்டோ 23 ஜூன் 2025, 01:22 GMT இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை. கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது. அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாள…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடாக மாறிய ரஷ்யா! ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா வியாழக்கிழமை (03) மாறியுள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் குல் ஹசன் ஹாசனிடமிருந்து முறையான நற்சான்றிதழ்களைப் பெற்றதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அறிவித்தது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் உற்பத்தித் திறன் கொண்ட இருதரப்பு ஒத்துழைப்பை வளர்க்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஆப்கானிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு, இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று கூறியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்க…
-
- 0 replies
- 142 views
-
-
பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூடு: வெள்ளை மேலாதிக்கவாதிக்கு பிணையில்லா ஆயுள் தண்டனை! பஃபேலோ பல்பொருள் அங்காடி துப்பாக்கி சூட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட வெள்ளை மேலாதிக்கவாதிக்கு, பிணையில்லா ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள பஃபேலோ பல்பொருள் அங்காடியில், பேட்டன் ஜென்ட்ரான் என 19 வயதான இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 கறுப்பினத்தவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 3பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், பேட்டன் ஜென்ட்ரான் மீதான வழக்கு விசாரணை நேற்று (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் வெறுப்பால் தூண்டப்பட்ட பயங்கரவாதம் உட்பட 25 குற்றச…
-
- 0 replies
- 142 views
-
-
Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 11:11 AM guardian காசாவில் உள்ள அனைத்து பாலஸ்தீனியர்களையும் ரஃபாவின் இடிபாடுகளில் உள்ள ஒரு முகாமில் தள்ளுவதற்கான திட்டங்களை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வகுத்துள்ளார். இந்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவதற்கான திட்டம் என சட்டநிபுணர்களும் கல்விமான்களும் வர்ணித்துள்ளனர். ரஃபா நகரின் இடிபாடுகளில் ஒரு முகாமை நிறுவுவதற்குத் தயாராகுமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் காட்ஸ் கூறியதாக இஸ்ரேலின் ஹரெட்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் "மனிதாபிமான நகரம்" என்று வர்ணித்துள்ளார் பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைவதற்கு முன்பு "பாதுகாப்பு சோதனை"க்கு உட்படுத்தப்படுவார்கள் உள்ளே நுழைந்தவுட…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
வடகொரியாவில்... முதன் முறையாக, கொவிட் தொற்று: முழு பொது முடக்கம் அமுல்! வடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில் பிஏ.2 எனப்படும், அதிக அளவில் பரவக்கூடிய ஓமிக்ரோன் வைரஸின் துணை மாறுபாடு கண்டறியப்பட்டதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, வடகொரிய தலைவர் கடுமையான தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார். அத்துடன் தொற்று நோயை விரைவாக அகற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார். ஓமிக்ரோன் மாறுபாட்டின் கண்டுபிடிப்பு வட கொரியாவிற்கு ஒரு தீவிரமான ஆபத்தை அளிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அதன் 25 மில்லியன் மக…
-
- 0 replies
- 141 views
-
-
டொனால்ட் டிரம்ப் 2024இல் அதிபர் போட்டியில் மீண்டும் களமிறங்குவதாக அறிவிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்கர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதற்குத் தேவையான ஆவணங்களை மத்திய தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். ஃப்ளோரிடாவில் இருக்கும் அவருடைய மார்-அ-லாகோ எஸ்டேட்டில் உரையாற்றுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக டிரம்ப் போட்டியிடுவதை உறுதி செய்யும் ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மத்திய தேர்தல் ஆணையத்திடம் டொனா…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்! -டொனால் ட்ரம்ப் உறுதி. மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார். காசா முனை மற்றும் மேற்கு கரை எ…
-
- 0 replies
- 141 views
-
-
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 15 பேர் பலி August 25, 2025 3:06 pm தெற்கு காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நாசர் வைத்தியசாலையில் நடந்த தாக்குதலில் அதன் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ஏனைய மூவர் அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் என்பிசி ஆகியவற்றில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவமும் பிரதமர் அலுவலகமும் உடனடி கருத்துக்களை வெளியிடவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/15-killed-including-journalists-in-i…
-
- 0 replies
- 141 views
-