உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26655 topics in this forum
-
இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான அவசரத் தேவை எழுந்துள்ளதாக ஜப்பான் அறிவிப்பு! ஜப்பானுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால், அந்நாட்டு இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான, அவசரத் தேவை எழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். வடகொரியாவின் தொடர்ச்சியான அணு ஆயுத ஏவுகணை சோதனை முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜப்பானின் டோக்கியோவுக்கு தென்மேற்கே உள்ள சாகாமி வளைகுடாவில் ‘சர்வதேச கடற்படை திறனாய்வு’ என்ற பெயரில் நடைபெற்ற கடற்படை கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு க…
-
- 0 replies
- 140 views
-
-
அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு! அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து மே 8ஆம் திகதி திங்கட்கிழமை வங்கி விடுமுறை வரும் என்று சுனக் கூறினார். 73 வயதான சார்லஸ், தனது தாயார் இரண்டாம் எலிசபெத் இறந்தவுடன் தானாகவே மன்னரானார். சில நாட்களுக்குப் பிறகு, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் நடந்த விழாவில் அவர் ஐக்கிய இராச்சியத்தின் புதிய மன்னராக முறையாக உறுதிப்படுத்தப்பட்டார். 1953ஆம் ஆண்…
-
- 0 replies
- 383 views
-
-
ஏரியில் விழுந்து நொருங்கிய பயணிகள் விமானம்..! டான்சானியாவில் அதிர்ச்சி சம்பவம்! டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா விமான நிலையம் நோக்கி புறப்பட்டது. இன்று காலை புகோபா விமான நிலையத்தை நெருங்கியிருந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணமாக விக்டோரியா ஏரியில் விழுந்தது. …
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல் By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 06:51 PM ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என ஈரான் கூறியுள்ளது. யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விhமனங்களை ரஷ்யாவுக்கு நாம் விநியோகித்தோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைய்ன் அமீர் அப்தோலாஹியன் கூறினார் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்தது. ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக யுக்ரைனும் அதன் மேற்கு…
-
- 3 replies
- 832 views
- 1 follower
-
-
கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட சீனா- ஜேர்மனி உறுதி! மூன்று ஆண்டுகளில் முதல்முறையாக ஜி7 நாடுகளின் தலைவர் ஒருவரின் முதல் பயணத்தின் போது ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், நேருக்கு நேர் சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், உலக அமைதிக்காக மாற்றம் மற்றும் கடினமான காலங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என உறுதி பூண்டனர். பதற்றமான காலங்களில் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது நல்லது எனவும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கிற்கு சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் இதன்போது ஷோல்ஸ் ஸிக்கு தெரிவித்தார்.…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
கனடாவில் அதிகரித்து வரும் குரங்கம்மை நோய் By T. SARANYA 05 NOV, 2022 | 10:32 AM கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டாவா, கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 9 பேருக்கு மட்டுமே புதிதாக பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தன. இந்த பாதிப்பு அதிகரிப்பும் தொடர்ந்து குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தொற்று எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இதன்படி, கனடாவில் மொத்தம் 1,444 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சைக்காகi வைத்தியசாலையில் சேர்ந்துள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆக உ…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானவோட்டி அவுஸ்திரேலியாவில் கைது By RAJEEBAN 04 NOV, 2022 | 12:46 PM சீனாவில் பணியாற்றிய அமெரிக்க விமானப்படையின் முன்னாள் விமானியொருவர் அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மரைன் படைப்பிரிவிற்காக பணியாற்றிய டக்கன் (54) ஒக்டோபர் 21 ம் திகதி அவுஸ்திரேலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார். சீனா மேற்குலகின் ஓய்வுபெற்ற விமானவோட்டிகளை வேலைக்கு சேர்த்துக்கொள்வது குறித்து பிரிட்டன் எச்சரிக்கை விடுத்த அதேதினத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் வேண்டுகோளை தொடர்ந்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என தகவல்…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
பஹ்ரெய்னில் பாப்பரசர் பிரான்சிஸ் By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 02:12 PM பஹ்ரெனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை சந்தித்து கலந்துரையாடினார். பாப்பரசர் பிரான்சிஸ் 4 நாள் விஜயம் மேற்கொண்டுநேற்று வியாழக்கிழமை பிற்பகல் பஹ்ரெய்னை சென்றடைந்தார். மத்திய கிழக்கு நாடான பஹ்ரெய்னுக்கு பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும். ஷாகீர் றோயல் அரண்மனையில், கலந்துரையாடலுக்கான பஹ்ரெய்ன் மன்றத்தின் நிகழ்விலும் பாப்பரசர் இன்று பங்குபற்றினார். பஹ்ரெய்ன் மன்னர் ஹமத் பின் இஸா அல் கலீபா, முடிக்குரிய இளவரசர் சல்மான் பின் …
-
- 0 replies
- 440 views
- 1 follower
-
-
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு By T. SARANYA 04 NOV, 2022 | 03:42 PM ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானையை உயிரிழந்துள்ளது. நைரோபி, உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆப்பிரிக்காவில் உள்ளன. யானைகளை அழிவில் இருந்து காக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானை கொண்டிருந்தது. 60 முதல் 65 வயது கொண்ட இந்த யானை கென்யாவின் டிசவோ கிழக்கு தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்நிலையில், வயது ம…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
புட்டின் வந்தால் நான் வரமாட்டேன்: உக்ரேன் ஜனாதிபதி இந்தோனேசியாலில் நடைபெறவுள்ள ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு தனது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த மாநாட்டு வருகைதருவாராயின் தான் வரமாட்டேன் என்று அறிவித்துள்ளார். ‘ஜி20’ அரச தலைவர்கள் மாநாடு, எதிர்வரும் 15, 16 ஆம் திகதிகளில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி யோகோ விடோடோவின் தலைமையில் இந்தோனேசியாவில் நடைபெறவுள்ளது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/படடன-வநதல-நன-வரமடடன-உகரன-ஜனதபத/50-306837
-
- 6 replies
- 763 views
-
-
மசகு எண்ணெய் விலை மேலும் குறைந்தது 04 NOV, 2022 | 11:28 AM உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் கேள்வி குறைந்ததாலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 94.45 டொலர் வரை குறைந்துள்ளது. https://www.virakesari.lk/article/139098
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை! உக்ரைனில் 4.5 மில்லியன் மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். சமீபத்திய வாரங்களில், உக்ரைனிய மின் நிலையங்கள் மீது ரஷ்யா பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது. போர்க்களத்தில் தொடர்ச்சியான வலிமிகுந்த தோல்விகளுக்குப் பிறகு, ரஷ்யா முன்னணியில் இருந்து நகரங்களில் மின்சார உள்கட்டமைப்பு மீது சமீபத்திய வாரங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. ஜனாதிபதி ஸெலென்ஸ்கியின் கூற்றுப்படி, கடந்த மாதத்தில், நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உக்ரைனிய அரசாங்கம்…
-
- 0 replies
- 514 views
-
-
துருக்கியில் பணவீக்கம் 85.51 சதவீதமாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 02:05 PM துருக்கியின் வருடாந்த பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 85.51 சதவீதமாக அதிகரித்துள்ளதை உத்தியோகபூர்வ தரவுகள் இன்று (03) வெளிப்படுத்தியுள்ளன. 1997 ஆம் ஆண்டின் பின்னர் துருக்கில் ஏற்பட்ட மிக அதிகளவு பணவீக்கம் இதுவாகும். துருக்கியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கு வழக்கத்துக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை ஜனாதிபதி தாயீப் ஏர்டோவான் ஆதரித்து வருகிறார். விலை உயர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியாக உலகெங்கும் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ஆனால், உயர் …
-
- 0 replies
- 242 views
- 1 follower
-
-
இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு: போராட்டப் பேரணியில் பங்கேற்றபோது நடந்தது 3 நவம்பர் 2022, 12:26 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,RAHAT DAR/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி தனது அரசியல் கட்சியான தெஹ்ரீக்- இ- இன்சாஃப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கையசைக்கும் இம்ரான்கான். இந்த பேரணியில்தான் இம்ரான் சுடப்பட்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியின்போது சுடப்பட்டார். அவருக்கு வயது 70. வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மே…
-
- 10 replies
- 434 views
- 1 follower
-
-
ஆஸி யுவதி கொலை : இந்திய நபரை கைது செய்ய உதவினால் 5 கோடி ரூபா சன்மானம் By DIGITAL DESK 3 03 NOV, 2022 | 04:28 PM அவுஸ்திரேலியாவில் யுவதியொருருவரை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படும் இந்திய இளைஞர் ஒருவரை கைதுசெய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர் (23.22 கோடி இலங்கை ரூபா / 5.21 கோடி இந்திய ரூபா) சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்விந்தர் சிங் எனும் 38 வயதான இளைஞரே இவ்வாறு தேடப்படுகிறார். அவுஸ்திரேலியாவின் குயின்லாந்து மாநிலத்திலலுள்ள கெய்ன்ஸ் நகரில் 2018 ஒக்டோபர் மாதம் டோயாஹ் கோர்டிங்லே எனும்இ 24 வயது யுவதி மர்மமாக கொல்லப்பட்டிருந்தார். இவர் தனது நாயை அழைத்துக்கொ…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
பிரித்தானிய எல்லைப் பிரச்சனைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள்: அல்பேனிய பிரதமர்! உங்கள் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு எங்களைக் குறை கூறாதீர்கள் என அல்பேனியாவின் பிரதமர் குற்றம் எடி ராமா சாட்டியுள்ளார். பிரித்தானியா ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்படுவதாகக் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களில் இப்போது அல்பேனியர்கள் மிகப்பெரிய குழுவாக உள்ளனர். தெற்கு இங்கிலாந்து புலம்பெயர்ந்தோரின் படையெடுப்பை எதிர்கொள்கிறது என்று கூறிய பிரேவர்மேன், பல அல்பேனியர்கள் நமது நவீன அடிமைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் பிரேவர்மேன் குற்றம் சாட்டியுள்…
-
- 4 replies
- 382 views
-
-
வடகொரியா ஏவுகணை வீச்சு: தென்கொரியா, ஜப்பானை நோக்கி 'கண்டம் விட்டு கண்டம்' பாயும் ஏவுகணை வீச்சு டெஸ்ஸா வோங், யிவெட் டான் பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வட கொரியா ஒரு நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர். அதில் ஒன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறுகிறார். தென் கொரியாவின் பிராந்திய கடல் பகுதிக்கு அருகில் விழுந்த ஒரு ஏவுகணை உட்பட வட கொரியா புதன்கிழமை ஒரே நாளில் …
-
- 0 replies
- 195 views
- 1 follower
-
-
இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் பெஞ்சமின் நேதன்யாகு By DIGITAL DESK 2 03 NOV, 2022 | 09:35 AM இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம், அந்நாட்டின் அடுத்த பிரதமராக, மீண்டும், பெஞ்சமின் நேதன்யாகு பதவி ஏற்கவுள்ளார். மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேதன்யாகு. லிகுட் கட்சியைச் சேர்ந்த இவர் 15 ஆண்டுகள் இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்துள்ளார். 1996 முதல் 1999 வரையும், 2009 முதல் 2021 வரையும் இஸ்ரேலின் பிரதமராக நேதன்யாகு பதவி வகித்துள்ளார். கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி மூலம் நேதன்யாகு பிரதம…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
ஹலோவீன் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு; 14 பேர் காயம்: சிகாகோவில் சம்பவம் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 08:33 PM அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹலோவீன் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி, திங்கட்கிழமை (31) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் 3 சிறார்களும் அடங்கியுள்ளனர் எனவும் அவர்கள் மூவரும் 3, 11 மற்றும் 13 வதானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஒரு சில விநாடிகளில் இச்சம்பவம் நடந்து முடிந்தது என சிகாகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கான காரணம் த…
-
- 0 replies
- 463 views
- 1 follower
-
-
அமெரிக்க இடைக்கால தேர்தல்: 600 வார்த்தைகளில் புரிந்து கொள்ள உதவும் தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம். இடைக்காலத் தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றம், பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை என இரண்டு அவைகளைக் கொண்டது. இந்த இரு அவைகளுக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அமெரிக்க அதிபரின் நான்கு ஆண்டுகள் பதவிக்காலத்திற்கு மத்தியில் இந்த தேர்தல்கள் நடைபெறுவதால், இது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது…
-
- 0 replies
- 360 views
- 1 follower
-
-
நியாண்டர்தால்களின் எலும்பு புல்லாங்குழல்: மனிதர்களின் மூதாதையர்களுக்கு இசையறிவு இருந்ததா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY 1995-ஆம் ஆண்டு ஒரு வித்தியாசமான எலும்பை தொல்லியலாளர் இவான் டர்க் கண்டுபிடித்தார். கிடைத்த இடம் ஐரோப்பிய நாடானா ஸ்லோவேனியாவில் உள்ள திவ்ய பாப் குகை. பூமியின் பழைய கற்கால அடுக்கைத் தோண்டும்போது நியாண்டர்தால்களின் தீமூட்டும் இடம், கல் மற்றும் எலும்புக் கருவிகளுக்கு அருகே இந்த எலும்பால் ஆன பொருள் கிடைத்தது. "திவ்ய பாப் குகையில் கிடைத்த எலும்பு மனித வரலாற்றில் மிகவும் முக்கியமானது. மனிதன் எப்படி மனிதனாக உருவெடுத்தான் என்று தெரிந்து கொள்வதில் இது முக்கியமானத…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்திலிருந்து தற்காலிகமாக விலகுவதாக புடின் அறிவிப்பு! உக்ரைனிய தானிய ஏற்றுமதிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை பாதுகாப்பான பாதையில் செல்ல அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் தற்காலிகமாக விலகுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அறிவித்துள்ளார். எனினும், இந்த ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக விலகவில்லை என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். உக்ரைன் தனது கடற்படையைத் தாக்க கருங்கடலில் ஒரு பாதுகாப்பு வழித்தடத்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டி, ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா சனிக்கிழமை வெளியேறியது. ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்கவில்லை. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தம்…
-
- 0 replies
- 241 views
-
-
ரஷ்யாவின் பதிலடி தாக்குதல்களால் நிலை குலைந்த உக்ரைன் இரூளில் மூழ்கியது! உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட நாடு முழுவதும் ரஷ்யா பாரிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதால் மின்சாரம் மற்றும் தண்ணீர் துண்டிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவ்வில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு நகரமான கார்கிவில், முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவில் அதன் கருங்கடல் கடற்படை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் வந்துள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை…
-
- 4 replies
- 530 views
-
-
பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளி : பலி எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 31 OCT, 2022 | 01:33 PM கடந்த வாரம் பிலிப்பைன்ஸை தாக்கிய 'நால்கே' சூறாவளியின் போது உயிரிழந்தவர்களின எண்ணிக்கை 100 ஐ நெருங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக இந்த சூறாவளி அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீற்றர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சூறாவளியை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தி…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வெற்றி By T. Saranya 31 Oct, 2022 | 10:29 AM பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவை முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா தோற்கடித்துள்ளார். கடந்த 2 ஆம் திகதி நடைபெற்ற பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் எந்தவொரு வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவும், முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவும் இத்தேர்தலில் போட்டியிட்டனர். லூலா டா சில்வா …
-
- 3 replies
- 334 views
- 1 follower
-