உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
துபாய் அரச குடும்பத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை: பாதுகாப்பு கோரி ஐநா கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கும் முன்னாள் மனைவி செபஸ்டீன் உஷேர் பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரின் முன்னாள் மனைவியின் வழக்கறிஞர்கள் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிகாரிகளுடன் இணைந்து சேனாப் ஜாவத்லி மற்றும் அவரின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். தன் கணவர் ஷேக் சயீத் பின் மக்தூம் பின் ரஷித் அல் மக்தூமிடமிருந்து குழந்தைகளை பெறுவதற…
-
- 0 replies
- 745 views
- 1 follower
-
-
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ; 33 பேர் உயிரிழப்பு 12 OCT, 2022 | 12:01 PM கடந்த வாரத்தில் மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிக மோசமான பருவமழை வடமேற்கில் உள்ள கர்னாலி மாகாணத்தைத் தாக்கியதில் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். பனிச்சரிவு மற்றும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மாகாணம் முழுவதும் குறைந்தது 22 பேர் காணாமல் போயுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாகாணத்தின் சில பகுதிகளில்…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்…
-
- 2 replies
- 212 views
-
-
முகநூல் வலைத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்தது ரஷ்யா முகநூல் வலைத்தளத்தை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா இணைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் பிரஜைகள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடும் வன்முறைத் தகவல்களை பேஸ்புக் அனுமதிக்கிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு குறித்த பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்திற்கு மொஸ்கோ நீதிமன்றம் விதித்து இருந்த தடையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்ய அரசாங்கம்…
-
- 0 replies
- 303 views
-
-
விசித்திர சக்தி கொண்ட'தீய கண்' - உலகம் முழுவதும் பிரபலமானது எப்படி? குவின் ஹர்கிடாய் ㅤ 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANM / GETTY IMAGES பண்டைய எகிப்து நாகரிகத்தில் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மறுசீரமைப்பைக் குறிக்கும் சின்னமான 'ஐ ஆஃப் ஹோரஸ்' காலம் தொடங்கி தற்போதுவரை மனித கற்பனையில் கண்கள் நிலையான இடத்தைப் பிடித்திருப்பதாகக் கூறுகிறார் க்வின் ஹர்கிடாய். உலகின் மர்மமான தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காப்பதற்கான குறியீடாக நம்பப்படும் 'தீய கண்' போல வேறு எந்த அடையாளமும் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை. 'வசீகரமான நீல நிறக்கண்கள்' இஸ்தான்புல் நகரின் சந்தைகள…
-
- 0 replies
- 891 views
- 1 follower
-
-
இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களை பெற முயற்சி- அவுஸ்திரேலியாவில் இருவர் கைது By RAJEEBAN 11 OCT, 2022 | 10:46 AM இலங்கை அதிகாரிகளிற்கு இலஞ்சம் வழங்கி உட்கட்டமைப்பு திட்டங்களிற்கான ஒப்பந்தங்களை பெற முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பலநாடுகளை அடிப்படையாக கொண்டு ஒரு தசாப்தகாலமாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தென்னாசியாவில் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தை சேர்ந்த இருவரையே அவுஸ்திரேலிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 14 மில்லியன் அவுஸ்திரே…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
செளதி அரேபியா- அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பு? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் யுக்ரேனும் ஒருவருக்கு ஒருவர் எதிராக உள்ளன. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் யுக்ரேனுக்கு ஆதரவாகவும் நிற்கும் இந்த நேரத்தில், செளதி அரேபியா இரு தரப்புடனும் நட்பு பாராட்டுகிறது. இதற்…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம்: ஈரானிய உச்ச தலைவர் குற்றச்சாட்டு! பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும்தான் காரணம் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார். அமைதியின்மை குறித்த தனது முதல் பொதுக் கருத்துக்களில், அயதுல்லா அலி கமேனி, ஈரானின் பரம எதிரிகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளால் கலவரங்கள் தூண்டப்பட்டதாக கூறினார். ஒரு தசாப்த காலமாக தனது ஆட்சிக்கு எதிர்ப்புகள் மிகப்பெரிய சவாலாக உள்ளன, மேலும் பாதுகாப்புப் படைகள் மேலும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அமைதியான போராட்ட…
-
- 5 replies
- 564 views
-
-
காலநிலை நெருக்கடி வெப்ப அலைகளை தீவிரப்படுத்துகிறது : ஐ .நா. எச்சரிக்கை By T. SARANYA 11 OCT, 2022 | 01:13 PM காலநிலை நெருக்கடியால் தீவிரமடைந்து வரும் பேரழிவுகரமான வெப்ப அலைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க சிறந்த நடவடிக்கை தேவை என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவைச் சங்க அறிக்கை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் நிறுவனமான (OCHA )மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (IFRC) திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பேரழிவுகளைத் தூண்டும் வகையில் அதிக வெப்பநிலை பதிவானது. இது ஆபத்தான, அடிக்கடி மற்றும் மிகவும் தீவிரமான வெப்பம் தொடர்ப…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
வெனிசுவெலாவில் மண்சரிவு ; உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு By T. SARANYA 11 OCT, 2022 | 10:09 AM வெனிசுலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் மண்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 1,000 அவசரகால பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். "நாங்கள் எங்களால் முடிந்தவரை காப்பாற்ற முயற்சிக்கிறோம், அன்புக்குரியவரை இழந்த அனைவருக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்" என துணைத் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். …
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
போதைப்பொருளுக்காக துறவிகள் வேடம் பூண்ட ஐவர் கைது By VISHNU 10 OCT, 2022 | 11:05 AM போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் சேகரிப்பதற்காக பௌத்த துறவிகள் வேடத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் 5 பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஐவரும் கம்போடியாவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ன. தாய்லாந்தின் காவோ போ தோங் மாவட்டத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நடவடிக்கைகள், பௌத்த துறவிகளின் நடவடிக்கைகளைப் போன்று இல்லாதிருப்பதை அவதானித்த உள்ளூர் மக்கள் இவர்கள் குறித்து சந்தேகமடைந்தனர். துறவிகள் வேடத்திலிருந்த இவர்களு…
-
- 4 replies
- 818 views
- 1 follower
-
-
மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ; தேர்தல் வேண்டாம் எனப் பதறும் எதிர்க்கட்சிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ISMAILSABRI60 FACEBOOK படக்குறிப்பு, இஸ்மாயில் சப்ரி யாகூப் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் இன்று அறிவித்துள்ளார். இதையடுத்து அடுத்த 60 நாள்களுக்குள் மலேசியாவில் 15ஆவது பொதுத்தேர்தல் நடைபெறும். பல்வேறு எதிர்ப்புகள், சிக்கலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் பொதுத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலேசிய பிரதமர். எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், இஸ்மாயில் சப்ரி யாகூப் தலைமையிலான அரசாங்கத்தில் இடம்பெற்றுள…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
புலிகளை பிரதி செய்த உக்ரைன் By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 01:40 PM சுபத்ரா ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்படையின் தளம் அமைந்துள்ள செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகே கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி தரைதட்டியிருந்த ஆளில்லாமல் இயங்க கூடிய படகு (USV - uncrewed surface vessel) ஒன்றை ரஷ்ய கடற்படையினர் கண்டுபிடித்தனர். செவஸ்டபோல் துறைமுகத்துக்கு அருகேயுள்ள உள்ள ரஷ்ய கடற்படைத் தளத்துக்கு அண்மையாக அந்த படகு காணப்பட்டது. அது உக்ரேனுக்குச் சொந்தமானதென ரஷ்ய கடற்படையினர் கூறுகின்றனர். ஆனால், படகு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. வெடிம…
-
- 0 replies
- 636 views
-
-
மத்திய வெனிசுலாவில் நிலச்சரிவு: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 50க்கும் மேற்பட்டோர் மாயம்! மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெனிசுவேலாவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமானது. இது சமீபத்திய மாதங்களில் வரலாற்று மழை அளவைக் கண்டது. 1999ஆம் ஆண்டில், கராகஸின் வடக்கே உள்ள வர்காஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் சுமார் 10,000பேர் உயிரிழந்தனர். கனமழையால் சான்டோஸ் மிச…
-
- 0 replies
- 245 views
-
-
முக்கிய கிரிமியா பாலத்தில் லாரி வெடிகுண்டு தீப்பிடித்ததாக மாஸ்கோ கூறுகிறது DigipaperBoy October 8, 2022 2014 ஆம் ஆண்டில் உக்ரைனிலிருந்து பிரதேசத்தை இணைத்த கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஒரு முக்கிய சாலை மற்றும் ரயில் பாலத்தில் லாரி வெடிகுண்டு மூலம் தீ விபத்து ஏற்பட்டது, மாஸ்கோ அதிகாரிகள் அக்டோபர் 8, 2022 அன்று தெரிவித்தனர். “இன்று காலை 6:07 மணிக்கு (0307 GMT) கிரிமியன் பாலத்தின் சாலைப் போக்குவரத்துப் பக்கத்தில் … ஒரு லாரி வெடிகுண்டு வெடித்தது, கிரிமியாவிற்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்ட ஏழு எண்ணெய் டேங்கர்களுக்கு தீ வைத்தது” என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தேசிய எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பயங்கரவாதக் குழு கூறியது.…
-
- 4 replies
- 386 views
- 1 follower
-
-
பிரேசிலில் வெற்றிபெறப் போவது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? By DIGITAL DESK 5 09 OCT, 2022 | 03:32 PM சுவிசிலிருந்து சண் தவராஜா உலகின் ஐந்தாவது பெரிய நாடான பிரேசிலில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் எவருமே ஐம்பது சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றிராத நிலையில் இரண்டாவது சுற்று எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரேசில் தேர்தல் விதிமுறைகளின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒக்டோபர் மாத முதலாவது ஞாயிற்றுக் கிழமையிலும், இரண்டாவது சுற்று மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையிலும் நடைபெறுவது வழக்கம். தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் முன்னாள் ஜனாதிபதியும் தொழிலாள…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
பிரித்தானியாவில் குளிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் சாத்தியம் By T. SARANYA 07 OCT, 2022 | 01:18 PM பிரித்தானியாவில் எரிவாயு விநியோகம் குறைந்தால் குளிர்காலத்தில் மூன்று மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான தேசிய கிரிட் எச்சரித்துள்ளது. இது ஒரு "சாத்தியமற்ற" சூழ்நிலை என தெரிவித்துள்ளதுடன் நெருக்கடி அதிகரித்தால் விநியோக குறுக்கீடுகள் சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது. மின்வெட்டு தொடர்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக தேவை உள்ள நேரங்களில், ஒருவேளை காலை அல்லது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மின்வ…
-
- 5 replies
- 808 views
- 1 follower
-
-
சே குவேரா நினைவு நாள்: கம்யூனிச புரட்சியாளர் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய குறிப்புகள் 14 ஜூன் 2018 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,KEYSTONE கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. கியூபப் புரட்சியில் அவர் பங்கெடுத்த காலங்களில் அவரது சக போராளிகளால் 'சே' என்று அழைக்கப்பட்டார். அப்படித்தான் 'எர்னஸ்டோ குவேரா' பின்னாட்களில் 'சே குவேரா' ஆனார். 'சே' என…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் கடத்திக்கொல்லப்பட்ட இந்தியக் குடும்பம் ; சந்தேக நபர் கைது By T. SARANYA 07 OCT, 2022 | 02:55 PM அமெரிக்காவில் இந்தியக் குடும்பம் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த குடும்பம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணிக்கப்படும் மெமோரியலிற்கு அமைதிக்கான நோபல் பரிசு By RAJEEBAN 07 OCT, 2022 | 05:33 PM இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ள அமைப்புகளில் ஒன்று மெமோரியல் மேமோரியலை புட்டின் ஆட்சியின் கீழ் தடைசெய்யப்பட்ட ரஸ்யாவின் மனச்சாட்சி என வர்ணித்துள்ள ஏஎவ்பி விமர்சனங்களை எழுப்பும் குரல்களிற்கு எதிரான ஒடுக்குமுறையின் போது மெமேரியல் மூடப்படவேண்டிய நிலையேற்பட்டது எனவும் தெரிவித்துள்ளது மெமோரியல் குறித்து ஏஎவ்பி மேலும் தெரிவிப்பதாவது 1990களில் ஜனநாயகத்தை நோக்கிய ரஸ்யாவின் குழப்பகரமான மாற்றத்தின்போது நம்பிக்கையின் சின்னமாக உருவெடுத்த இந்த அம…
-
- 3 replies
- 389 views
-
-
உய்குர் முஸ்லிம் விவகாரம்: இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையில் அசந்து போன சீனா! Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. Xinjiang Uighur Muslim: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், உய்குர் முஸ்லிம்கள் தொடர்பாக சீனாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டினால் சர்வதேச நாடுகள் அதிர்ந்து போனது, சீனாவுக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியாவும் சீனாவும், கிழக்கு லடாக்கில் மோதி வருகின்…
-
- 5 replies
- 458 views
- 1 follower
-
-
இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு By T. SARANYA 05 OCT, 2022 | 04:24 PM 2022ம் ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு "மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்" வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்தி…
-
- 1 reply
- 639 views
- 1 follower
-
-
யுக்ரேன் vs ரஷ்யா: லைமன் நகரில் சடலங்கள் திரளாக புதைக்கப்பட்டதைக் கண்டுபிடித்ததாகக் கூறும் யுக்ரேன் மெர்லின் தாமஸ் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் மீட்ட கிழக்கு நகரமான லைமன் நகரில், இரண்டு திரள் மயானங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக யுக்ரேன் கூறுகிறது. கண்டுபிடிக்கப்பட்ட மயானத்தில் பொதுமக்களின் சடலங்கள் இருக்கும் கிட்டத்தட்ட 200 கல்லறைகள் இருந்ததாக டான்டேஸ்க் பிராந்தியத்தின் யுக்ரேன் கவர்னர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார். மற்றொரு மயானத்தில் எத்தனை சடலங்கள் உள்ளன என்று இன்னும் தெளிவாக இல்லை என்றும்,…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – முக்கிய ISIS பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வடக்கு சிரியாவில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் இரண்டு முக்கிய ISIS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிரியாவின் வடகிழக்கில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய ஹெலிகாப்டர் தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ISIS தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அபு-ஹும் அல்-உமாவி உட்பட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. https://athavannews.com/2022/1303326
-
- 0 replies
- 517 views
-
-
ரஷ்யா உக்ரேனை நோக்கி அணுவாயுதங்களை எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தகவல்களை நிராகரித்தது அமெரிக்கா! உக்ரேனை நோக்கி ரயில் மூலமாக அணுவாயுதங்களை ரஷ்யா எடுத்துச் செல்வதாகக் கூறப்படும் தகவல்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது. அது ஆதாரம் இல்லாத தகவல் என்பதனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ரஷ்யத் பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான இராணுவத் தளவாடங்கள் எடுத்துச் செல்லப்படுவது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக ரஷ்யப் படைக்குப் பின்னடைவு ஏற்பட்டிரக்கும் ஹெர்சன் பகுதிக்கு அந்த அணு ஆயுதங்கள் எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. புதிதாக இணைத்துக் கொண்ட உக்ரேனிய …
-
- 2 replies
- 554 views
-