Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளை... ரஷ்யாவுடன் சேர்ப்பதற்கான, வாக்கொடுப்பு ஆரம்பம்! உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளில், ரஷ்ய ஆதரவு அதிகாரிகள் ரஷ்யாவில் சேருவதற்கான வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றனர். உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளால் சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் ஏமாற்று வேலை என்று கண்டனம் செய்யப்பட்ட இந்த வாக்கெடுப்பு ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன. அதே நேரத்தில் நான்கு பகுதிகளும் – கிழக்கில் இரண்டு மற்றும் தெற்கில் இரண்டு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி ஏழு மாதங்களுக்குப் பிறகு, போரை மீட்டமைக்கும் முயற்சியில் விளாடிமிர் புடினின் எடுத்த மூன்று படிகளில் இணைப்பு மீதான வாக்கெடுப்பும் ஒன்…

  2. முடியாட்சிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் By RAJEEBAN 22 SEP, 2022 | 03:07 PM அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது எலிசபெத் மகாராணியை நினைவுகூறும் தேசிய நினைவு நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் முடியாட்சியை நீக்கவேண்டும் என கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பிரிஸ்பேர்ன், சிட்னி, மெல்பேர்ன் மற்றும் கான்பெரா ஆகிய நகரங்களில் முடியாட்சிக்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சிலர் அவுஸ்திரேலிய கொடியை எரித்துள்ளனர். பிரிஸ்பேர்ன் சிப…

  3. அணுசக்தி ஒப்பந்த உடன்பாட்டில்... அமெரிக்க அளிக்கும் வாக்குறுதிகளை, நம்ப முடியாது: ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் தெரிவிப்பு! வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பது தொடர்பான உடன்பாட்டில் அமெரிக்கா அளிக்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தைத் தக்கவைப்பதில் முழு உறுதியுடன் இருப்பதாக கூறியுள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் சபையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சி ஆற்றிய உரையில், ‘அணுசக்தி ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதில் நாங்கள் முழு உறுதியுடன் உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை, இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. ஆனால…

  4. புடினின் அச்சுறுத்தல்கள்... தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் – பெரிய பிரித்தானியா. ரஷ்ய ஜனாதிபதி புடினின் இன்று புதன்கிழமை காலை ஆற்றிய உரை உக்ரைனில் போர் தீவிரமடைந்ததை எடுத்து காட்டுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் அவரது அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தெளிவாக இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் கீகன் தெரிவித்தார். https://athavannews.com/2022/1300364

  5. ரஷியாவிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்: உலகத் தலைவர்களுடனான ஐ.நா.சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் உரை! ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். தினத்தந்தி நியூயார்க், ஐ.நா.பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் 21ம் தேதி (நேற்று) நடைபெற்றது. இந்த உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்றினார். முன்னதாக, ஐ.நா.பொதுச் சபையில் 2 ஆண்டுகளுக்கு பின் உலகத் தலைவர்கள் நேரடியாக கலந்துகொண்டனர். ரஷியாவின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் தோன்றியதும், அவர் சபையில் இருந்தவர்…

  6. டொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்: புதிதாக மோசடி வழக்கு தாக்கல்! டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தினத்தந்தி நியூயார்க், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் என்பவர், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று வாரிசுகளுக்கு எதிராக 250 மில்லியன் டாலர்கள் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மோசடி செய்ததற்காக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மோசடி வழக்கு தொடர்பாக சுமர் 200 …

  7. உக்ரேனியர்கள்... காட்டு மிராண்டித்தனத்திற்கு, ஆளாகிறார்கள் – பாப்பரசர். உக்ரேனியர்கள் காட்டுமிராண்டித்தனம், அரக்கத்தனம் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாப்பரசர் பிரான்சிஸ், உக்ரைன் போர் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் பேசிய பாப்பரசர், உக்ரேனியர்கள் ஒரு “உன்னதமான” மக்கள் தியாகிகள் என்று கூறினார். உக்ரைனில் உதவிகளை வழங்கி வரும் தனது தொண்டு நிறுவனத் தலைவர் கார்டினல் கொன்ராட் கிராஜெவ்ஸ்கியுடன் செவ்வாயன்று அவர் நடத்திய உரையாடலையும் அவர் கூட்டத்தில் கூறினார். https://athavannews.com/2022/1300339

  8. புடின் இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார், மேற்கு ரஷ்யாவை அழிக்க விரும்புகிறது என்று கூறுகிறார் September 21, 2022 Admin 0 லண்டன்: ஆக்கிரமிக்கப்பட்ட சில பகுதிகளை மீட்டெடுத்த உக்ரேனிய எதிர்த்தாக்குதலில் ரஷ்யப் படைகள் போரிடுகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை (செப். 21) ஒரு பகுதி இராணுவ அணிதிரட்டலை அறிவித்தார். தேசத்திற்கு தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், புடின் அதன் 2 மில்லியன் வலிமையான இராணுவ இருப்புக்களை ஓரளவு அணிதிரட்டுவது ரஷ்யாவையும் அதன் பிரதேசங்களையும் பாதுகாப்பதாகும், மேற்கு நாடுகள் ரஷ்யாவை அழிக்க விரும்புவதாகவும் உக்ரேனில் அமைதியை விரும்பவில்லை என்றும் கூறினார். “எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், எங்கள…

  9. ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்கப்பட்ட உக்ரைன் பகுதியில் பாரிய மனித புதைகுழி- By RAJEEBAN 16 SEP, 2022 | 05:01 PM ரஸ்யாவின் சமீபத்தில் மீட்கப்பட்ட இசியும் பகுதியில் பாரிய மனித புதைகுழிகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட புதைகுழிகளில் 440 உடல்கள் காணப்படுகின்றன என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஸ்ய படையினரிடமிருந்து இந்த வாரம் மீட்கப்பட்ட பகுதியில் காணப்படும் உடல்கள் புச்சா மரியபோல் போன்ற பகுதிகளில் இடம்பெற்ற படுகொலைகளை நினைவுபடுத்துகின்றன என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ரஸ்யாவை உலகம் இந்த போருக்கா பொறுப்பாளியாக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் உக்ரைனின் வடக்க…

  10. பிரிட்டனின் லெஸ்டரில் நகரில் இந்து முஸ்லிம் இளைஞர்களிடையே பதற்றம் - நடந்தது என்ன? 18 நிமிடங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, பிரிட்டனில் இந்து - முஸ்லிம் இளைஞர்களிடையே அமைதியின்மை பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த சிறிய மோதலின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது. கடைசியாக, கடந்த சனிக்கிழமையன்று (செப்.17) இந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே லெஸ்டர் நகரில் நடந்த இந…

  11. ரஷ்யாவுடன் இணையும் உக்ரைன் பிராந்தியங்கள் ரஷ்ய ஆதரவு பெற்றுள்ள பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் நான்கு பிராந்தியங்கள், அந்நாட்டுடன் இணைய உள்ளன. இதற்காக மக்களிடம் கருத்து கேட்கும் ஓட்டெடுப்பு விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களை கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய இந்த நான…

  12. எகிப்தியர்களுக்கு முன்பே 'மம்மி' செய்த தென்னமெரிக்காவின் பழங்கால சின்சோர்ரோ கலாசாரத்தினர் ஜுவான் ஃபிரான்சிஸ்கோ ரியுமல்லோ பிபிசி ஃப்யூச்சர் 36 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SERGIO DONOSO/EYEEM/GETTY IMAGES எகிப்தியர்களின் மம்மிகள் மிகவும் பிரபலமானவையாக இருக்கலாம். ஆனால், அவைதான் பழைமையானவை என்று கூறமுடியாது. சிலியின் அட்டகாமா பாலைவனத்தில் வாழ்ந்த சின்சோர்ரோ மக்கள்தான் முதன்முதலாக, 7,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடலை மம்மியாக செய்துள்ளனர். பூமியின் வறண்ட பகுதியான சிலியின் அட்டகாமா பாலைவனத்தில், எகிப்தியர்களின் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிகளை விடப் …

  13. உக்ரைனுக்கு, 2023ஆம் ஆண்டும்... குறைந்தபட்சம் "2.3 பில்லியன் பவுண்டுகள்" ஆதரவு வழங்க பிரித்தானியா திட்டம்! உக்ரைனுக்கு 2023ஆம் ஆண்டும் குறைந்தபட்சம் 2.3 பில்லியன் பவுண்டுகள் ஆதரவு வழங்க பிரித்தானியா தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஆதரவு தொகை, இந்த ஆண்டு ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு பிரித்தானியா வழங்கிய 2.3 பில்லியன் பவுண்டுகள் உடன் ஒத்துப்போகும் அல்லது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூயோர்க் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் லிஸ் ட்ரஸ், அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் போது, உக்ரைனுக்கு தொடர்ச்சியான மற்றும் கணிசமான இராணுவ உதவி பற்றிய செய்தியை வழங்குவார…

  14. புதிய முகக்கவசத்தை உருவாக்கியுள்ள சீன ஆராய்ச்சியாளர்கள் By T YUWARAJ 20 SEP, 2022 | 09:59 PM சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள COVID-19, H5N1 மற்றும் H1N1 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களை 10 நிமிடங்களுக்குள் கண்டறிந்து ஒரு சாதனத்திற்கு அறிவிப்புகளை அனுப்பும் வகையில் …

  15. அமெரிக்காவில்... கொவிட் தொற்றுநோய், முடிவுக்கு வந்துவிட்டதாக... பைடன் அறிவிப்பு! கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். சிபிஎஸ் தொலைக்காட்சியில் ஜோ பைடன், 60 நிமிடங்களுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எங்களுக்கு இன்னும் சிக்கல் உள்ளது. நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இன்னும் நிறைய வேலைகளை செய்து வருகின்றது. நீங்கள் கவனித்தால், யாரும் முகக்கவசம் அணியவில்லை. எல்லோரும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெ…

  16. ஜப்பானை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் By T. SARANYA 20 SEP, 2022 | 12:25 PM ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நான்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதன்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது. இடைவிடாமல…

  17. Queen Elizabeth II has died, Buckingham Palace announces 2 minutes ago Queen Elizabeth II, the UK's longest-serving monarch, has died at Balmoral aged 96, after reigning for 70 years. Her family gathered at her Scottish estate after concerns grew about her health earlier on Thursday. The Queen came to the throne in 1952 and witnessed enormous social change. With her death, her eldest son Charles, the former Prince of Wales, will lead the country in mourning as the new King and head of state for 14 Commonwealth realms. In a statement, Buckingham Palace said: "T…

  18. அரச பாரம்பரிய முறைப்படி பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடல் நல்லடக்கம் 19 Sep, 2022 | 10:48 PM பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடல் அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. பிரித்தானியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 96) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8 ஆம் திகதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இலட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசைய…

  19. சீனா, முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால்... அமெரிக்கா, தாய்வானை பாதுகாக்கும்: ஜோ பைடன்! தாய்வான் மீது சீனா முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தினால், அமெரிக்கா தாய்வானை பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கூறியுள்ளார். சி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தாய்வானை பாதுகாப்பார்கள்’ என கூறினார். இந்த நேர்காணல் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது, அமெரிக்க கொள்கை மாறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த வெள்ளை மாளிகை தூண்டியது. வொஷிங்டனின் கொள்க…

  20. 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு - நேரலை By T. Saranya 19 Sep, 2022 | 04:22 PM 2 ஆம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், 2 ஆம் எலிசபெத் மகாராணியின் பூதவுடல் தாங்கிய பேழை வெஸ்மினிஸ்டர் தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரோயல் கடற்படையின் பீரங்கி வண்டியில் வைத்து மகாராணியின் பூதவுடல் கொண்டு செல்லப்பட்டது. 142 மாலுமிகள் அதை இழுத்துச் சென்றனர். மறைந்த இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபு இறுதிச் சடங்குக்காக இந்த வண்டி கடைசியாக 1979 இல் பயன்படுத்தப்பட்டது. அதற்கு…

  21. கிர்கிஸ்தான்- தஜிகிஸ்தான் எல்லை மோதலில்... 94பேர் உயிரிழப்பு: ரஷ்யாவின்... தலையீட்டால், போர் நிறுத்தம்! கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரண்டு மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையேயான வெடித்த சண்டை, ரஷ்யாவின் தலையீட்டால் வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில், இரு தரப்பினரும் வெள்ளிக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இரு த…

  22. இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கு: பங்கேற்க அழைக்கப்படாத நாடுகள் எவை தெரியுமா? இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சில நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. பிரிட்டனின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த இங்கிலாந்தின் முன்னாள் அரசத் தலைவரும், கொமன்வெல்த் நாடுகளின் தலைவருமான இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96வது வயதில் செப்டம்பர் 8 ஆம் திகதி ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையின் கோடைகால இல்லத்தில் காலமானார். அவரது உடல் செப்டம்பர் 19ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அடக்கம் செய்யப…

  23. தாய்வானில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது, இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலநடுக்கம் மதியம் 2:44 மணிக்கு (06:44 GMT) டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடம் மற்றும் ஒரு கடை இடிந்து விழுந்தது . மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக உள்ளூர் ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. கிழக்கு தாய்வானில் உள்ள டோங்லி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி இடி…

  24. போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது’ - அதிபர் புதினிடம் கூறிய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டு By Rajeeban 18 Sep, 2022 | 11:29 AM போர் தொடுப்பதற்கான காலம் அல்ல இது ’ என ரஷ்ய அதிபர் புதினிடம் நேரடியாக தனது கருத்தை நாசுக்காக தெரிவித்த பிரதமர் மோடியை அமெரிக்க பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகருக்கு சென்றிருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கரோனா தொற்று காலத்துக்குப்பின், உல…

  25. வறுமையில் வாடும் வடகொரியா By DIGITAL DESK 5 16 SEP, 2022 | 01:58 PM ஐங்கரன் விக்கினேஸ்வரா “அமெரிக்காவுக்கு எதிராக அணுவாயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது” என்று அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜொங் உன் தலைநகர் பியோங்யாங்கில் அதிரடியாக கூறினார். கொரிய போரின் 69ஆவது ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கூற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். “போர் நடைபெற்று 70ஆண்டுகளுக்கு பின்னரும் தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு எதிராக ஆபத்து நிறைந்த, சட்டவிரோத பகைமை விளைவிக்கும் செயல்களில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அமெரிக்கா தனது செயல்களுக்கு ஆதரவு சேர்க்கும் வகைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.