Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பைடன் நிர்வாகம் ஆராய்கின்றது By RAJEEBAN 07 SEP, 2022 | 05:52 PM சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜோ பைடன் நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும்இடையில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் பைடன் நிர்வாகம் இதுகுறித்து சிந்தித்து வருகின்றது என விடயங்கள்குறித்து நன்கறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் மாதங்களில் ஜனாதிபதியிடமிருந்து முதலீடுகளை கட்டுப்படுத்துவதற்கான உத்தரவொன்று வெளியாகலாம் என தகவல்கள் வெளிய…

  2. நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் பலி By T. SARANYA 07 SEP, 2022 | 12:28 PM தென் கொரியாவில் 'ஹின்னம்னார்' என்ற சக்தி வாய்ந்த சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலத்தடியில் வாகனம் நிறுத்துமிடத்தில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் உயிரிழந்துள்ளார்கள். போஹாங் நகரத்திலுள்ள தொடர்மாடி குடியிருப்பில் இருந்த ஒன்பது பேரின் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் இருந்து அகற்றுமாறு குடியிருப்பு நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கமைய தங்கள் வாகனங்களை அகற்ற சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள். இந்நிலையில், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு…

  3. வடகொரியாவிடமிருந்து... இராணுவ சாதனங்களை, ரஷ்யா வாங்கியதாக... அமெரிக்கா தகவல்! பொருளாதாரத் தடைகளால் துவண்டுபோயுள்ள ரஷ்யா, ஏற்கனவே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வடகொரியாவிடமிருந்து இராணுவ சாதனங்களை வாங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயோர்க் டைம்ஸ் பெற்ற இரகசிய உளவுத்துறையின் படி, ரஷ்யா வடகொரியாவிடம் இருந்து மில்லியன் கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகளை வாங்கியுள்ளது. அறிக்கை வெளிப்படுத்திய புதிய ஆயுத விநியோகங்களின் சரியான அளவு மற்றும் அளவு தெளிவாக இல்லை. போர் நீடித்து வருவதால், வடகொரியாவிடம் இருந்து கூடுதல் ஆயுதங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா தள்ளப்படும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.…

    • 4 replies
    • 566 views
  4. பரிசோதனை செய்மதிகளை வெற்றிகரமாக ஏவிய சீனா By T YUWARAJ 06 SEP, 2022 | 08:54 PM சீனாவானது தனது நாட்டின் வடமேற்கு மகாணமான சிசுவானிலுள்ள ஸிசாங் செய்மதி ஏவும் நிலையத்திலிருந்து இரு புதிய செய்மதிகளை இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் (06.09.2022) வெற்றிகரமாக ஏவியுள்ளது. மேற்படி சென்ரிஸ்பேஸ் 1-எஸ்3/எஸ்4 செய்மதிகள் லோங் மார்ச்-2டி ஏவுகணை மூலம் ஏவப்பட்டுள்ளன. மேற்படி செய்மதிகள் விஞ்ஞான பரிசோதனைகள், நில வள ஆய்வுகள், விவசாய உற்பத்தி மதிப்பீடுகள், அனர்த்த தடுப்பு மற்றும் தணிவிப்பு நடவடிக்கை என்பன குறித்து தகவல்களைச் சேகரிக்க உதவும் எனத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதிகள் சகிதம் லோங் மார்ச் ஏவுகணையொன்றால் மேற்கொள்ளப…

  5. 'பலஸ்­தீ­னர்­களை காத­லித்தால் எமக்கு சொல்­லி­வி­டுங்கள்' - இஸ்ரேல் நிபந்­தனை By VISHNU 06 SEP, 2022 | 03:40 PM இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னத்தின் மேற்­குக்­கரை பிராந்­தி­யத்­துக்கு செல்லும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான புதிய நிபந்­த­னை­களை இஸ்ரேல் அமுல்­ப­டுத்­த­வுள்­ளது. மேற்குக் கரை­யி­லுள்ள பலஸ்­தீ­னி­யர்­களை வெளி­நாட்­ட­வர்கள் காத­லிக்க ஆரம்­பித்தால் அது குறித்து இஸ்­ரே­லிய பாது­காப்பு அமைச்­சுக்கு அறி­விக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் நிபந்­தனை விதித்­தி­ருந்­தது. நேற்று திங்­கட்­கி­ழமை (05) முதல் புதிய விதிகள் அமு­லுக்கு வர­வி­ருந்­தன. எனினும் இறுதி நேரத்தில் மேற்­படி காதல் தொடர்­பான நிபந்­த­னை…

  6. சீனாவுடனான அதிகாரப்போட்டிக்கு மத்தியில் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்துகின்றார் பைடன் By RAJEEBAN 06 SEP, 2022 | 05:01 PM வோசிங்டனுடன் நீண்டகாலமாக நெருக்கமான உறவுகளைகொண்டுள்ள பசுபிக்கில் சீனா தன்னை விஸ்தரித்துவரும் நிலையில் செப்டம்பரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பசுபிக் நாடுகளின் மாநாட்டை நடத்தவுள்ளார். செப்டம்பர் 28 29ம் திகதிகளில் பசுபிக் நாடுகளின் மாநாடு வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது. வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ள முதலாவது பசுபிக் மாநாடு சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கை முன்னோக்கி நகர்த்தும் என வெள்ளை மாளிகை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பசுபிக் தீவுகள் எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சினை…

  7. உக்ரேன் போர்க்களத்தில் அவுஸ்திரேலியர் பலி By RAJEEBAN 06 SEP, 2022 | 11:59 AM உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஸ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்…

  8. சீனாவில் பாரிய பூகம்பம் ; 46 பேர் பலி : 50 பேர் படுகாயம் 06 Sep, 2022 | 09:33 AM சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் அதிர்ந்தன. பூகம்பத்தை தொடர்ந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த பூகம்பத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பூகம்பத்தில் உயிரிழந்…

  9. ஜேர்மனியில்... விலை உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க, 65 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு! உக்ரைன் போரைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டதை அடுத்து, பல ஐரோப்பிய நாடுகள் நீண்ட குளிர்காலத்திற்குத் தயாராவதற்கு அவசர நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோக தடையால் நேரடியாக மற்றும் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஜேர்மனி, மக்கள் மற்றும் வணிகங்கள் உயரும் விலையைச் சமாளிக்க உதவும் வகையில் 65 பில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் எரிசக்தி செலவுகள் உயரும் என்ற எதிர்பார்ப்புகளின் மத்தியில், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடந்…

  10. ரிஷி சுனக் vs லிஸ் டிரஸ்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஏன் பிரிட்டன் பிரதமர் ஆக முடியவில்லை? ஜுபைர் அஹமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS பிரிட்டனின் அடுத்த பிரதமர் ஆகவுள்ளார் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ். பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகுவதாக அறிவித்தபின் தங்கள் அடுத்த தலைவரை தேர்ந்தடுக்கும் பணிகளை கன்சர்வேட்டிவ் கட்சியினர் தொடங்கினர். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கை வீழ்த்தி போட்டியில் வென்றுள்ளார் லிஸ். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிஷி சுனக் தோற்றது எப்படி? போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் பிரிட்…

  11. பிரித்தானியாவின்... புதிய பிரதமராக, லிஸ் ட்ரஸ்... உத்தியோகபூர்வமாக தேர்வு! பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும் லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளைப் பெற்றார். லிஸ் ட்ரஸின் கடும் போட்டியாளரான சுனக் 60,000க்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளார். சுனக்கின் 60,399 (43%) வாக்குகளுடன் ஒப்பிடுகையில், ட்ரஸ் 81,326 (57%) வாக்குகளைப் பெற்றார். 82.6% வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்படுகின்றது. வெற்றியின் பின், லிஸ் ட்ரஸ் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை வழங்க முடியும் என்பதை கன்சர்வேட்டிவ் கட்ச…

  12. மத்திய கனடாவில்... 13 இடங்களில், கத்திக் குத்து: 10பேர் உயிரிழப்பு- 15பேர் படுகாயம்! மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் கிராமத்தில் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என பெயரிடப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் – வெல்டனின் வடகிழக்கில் சுமார் 200 பேர் வசிக்கும் சுமார் 2,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு ப…

  13. வங்கிக் கணக்கில் தவறாக வந்த ரூ.56 கோடியை ஆடம்பரமாகச் செலவழித்த பெண்ணின் இன்றைய நிலை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தேவமனோகரி மணிவேலின் வங்கிக் கணக்கில் 70 லடசம் டாலர் வந்தபோது, தன்னை உலகத்தின் பெரிய அதிருஷ்டசாலி என்று அவர் நினைத்தார். ஆனால் தற்போது அவரும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் பிரச்சனையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர அவர்கள் இதற்கு வட்டி மற்றும் சட்ட நடவடிக்கை கட்டணங்களையும் செலுத்த வேண்டும் 2021 மே மாதம் Crypto.com, நிலுவையில் இருந்த நூறு ஆஸ்திரேலிய டாலர்களை தேவ மனோகரியின் கணக…

  14. அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் சிறுவயது கட்டாய திருமணங்கள் - ஏபிசி By RAJEEBAN 04 SEP, 2022 | 12:58 PM அவுஸ்திரேலியாவில் சிறுவர் திருமணமும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைப்பதும் அதிகரிக்கி;ன்றது என அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நியுசவுத்வேல்சிலும் விக்டோரியாவிலும் அதிகளவு காணப்படும் இந்த வகை திருமணங்களை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியாமல் காவல்துறையினரும் அதிகாரிகளும் தடுமாறுகின்றனர் என தெரிவித்துள்ள ஏபிசி கடந்த வருடம் பொலிஸாருக்கு இது தொடர்பில் 80 முறைப்பாடுகள் கிடைத்தன இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவை 18 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு திருமணம் தொடர்பானது எனவும் குறிப்பிட்டுள்ளது. பணத்…

  15. எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா : பதிலளிக்க தயார் என்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை ரஷ்யா ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என ஐரோப்பா குற்றம் சாட்டியுள்ளது. நீராவி இயந்திரம் ஒன்றில் ஏற்பட்டுள்ள சேதம் சரிசெய்யப்படும்வரை நோர்ட் ஸ்ட்ரீம் 01 எரிவாயுக் குழாய் மூடப்பட்டிருக்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் காஸ்ப்ரோம் நிறுவனம் தெரிவித்தது. அந்தக் குழாய் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலிருந்து பால்ட்டிக் கடல் வழியாக ஜெர்மனி வரை செல்கிறது. தற்போது போதுமான …

  16. லிஸ் ட்ரஸ்: பிரிட்டன் பிரதமர் போல ஏழு வயதில் நினைத்தவர், இப்போது பிரதமர் வேட்பாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS அந்த சிறுமிக்கு அப்போது ஏழு வயது. தனது பள்ளியில் நடந்த மாதிரி பொதுத் தேர்தலில் தன்னை மார்கரெட் தாட்சரைப் போல எண்ணிக்கொண்டு போட்டியிட்டார் அந்த சிறுமி. ஆனால், மார்கரெட் தாட்சர் பெற்றதைப் போன்ற வெற்றியை அந்த சிறுமியால் அப்போது பெறமுடியவில்லை. அந்தத் தேர்தல் குறித்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த அந்த சிறுமி "நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பிரச்சார மேடையில் எனது இதயப்பூர்வமான உரையை நிகழ்த்தினேன், ஆனால் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. நானே எனக்கு வா…

  17. டைனோசர் வரலாற்றை மாற்றும் கண்டுபிடிப்பு: 23 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய 'சூப்பர் கண்ட' டைனோசர் ஷிங்கை நியோகா & ஆலிவர் ஸ்லோ பிபிசி நியூஸ், ஹராரே & லண்டன் 3 செப்டெம்பர் 2022, 09:48 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREY ATUCHIN / VIRGINIA TECH படக்குறிப்பு, எம்பிரேசரஸ் ராதியின் மாதிரி வடிவம் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆப்ரிக்காவின் பழமையான டைனோசரின் எச்சங்களை ஜிம்பாப்வேயில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எம்பிரேசரஸ் ராத்தியின் (Mbiresaurus raathi) என்று அழைக்கப்படும் இந்த டைனோசர், ஒரு மீட்ட…

  18. தலிபான் தலைவருக்கு எதிராக இளம் பெண் வெளியிட்ட காணொளி தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கட்டாயத் திருமணம் செய்த தலிபான் தலைவருக்கு எதிராக இளம் பெண்ணொருவர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். தலிபான் உள்துறை அமைச்சின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சயீத் கோஸ்டி, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் (என்டிஎஸ்) மகளை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்துள்ளார். இது தொடர்பில் அவரது மனைவி எலாயா (24-09-2022) காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். காணொளியில், காபூல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்துவந்த எலாயா, சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். தலிபான் புலனா…

  19. ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு : 18 பேர் பலி By T. SARANYA 03 SEP, 2022 | 11:39 AM ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பள்ளிவாசலில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நேற்று மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. பள்ளிவாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குஜர்கா மசூதியின் இமாம் ஆக உள்ள முக்கிய இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி என்பவர் பரிதாபமாக கொல்லப்பட்டார். பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக இந்த குண்டு…

  20. கொலம்பியாவில்... ரோந்து பணிக்காக பயணித்த, பொலிஸ் வாகனம் மீது... குண்டுத்தாக்குதல்: 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு! மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ரோந்து பணிக்காக பயணித்த பொலிஸ் வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டின் கிட்டத்தட்ட 60 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டுவருவதாக உறுதியளித்து, தான் பதவியேற்ற பிறகு, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது என்று ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வருத்தம் தெரிவித்துள்ளார். ‘இந்த செயல்கள் முழு அமைதிக்கு ஒரு தெளிவான நாசவேலை. விசாரணைய…

  21. 1.1 பில்லியன் டொலர் பெறுமதியான... ஆயுதங்களை, தாய்வானுக்கு வழங்க... அமெரிக்கா அனுமதி. சீனாவை ஆத்திரமூட்டும் வகையில் தாய்வானுக்கு 1.1 பில்லியன் டொலர் மதிப்பைலான ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. உள்வரும் தாக்குதல்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கண்காணிக்க ஒரு ரேடார் அமைப்பு அடங்கலாக இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற வேண்டும் அல்லது எதிர் நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சீனா கேட்டுக்க…

  22. ஜேர்மனியில்... விமானிகள், வேலைநிறுத்தப் போராட்டம்: நேற்று 800 விமானங்களை இரத்து! விமானிகளின் திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த நடவடிக்கை காரணமாக, ஜேர்மனியின் லுஃப்தான்சா எயார்லைன்ஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 800 விமானங்களை இரத்து செய்யவுள்ளது. அத்துடன், அதன் இரண்டு பெரிய மையங்களான பிராங்பேர்ட் மற்றும் முனிச்சில் இருந்து ஏறக்குறைய அனைத்து பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களையும் இரத்து செய்வதாக ஜேர்மன் கேரியர் லுஃப்தான்சா தெரிவித்துள்ளது. லுஃப்தான்சா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழிற்சங்கம் வியாழன் தொடக்கத்தில் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகள் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து வெளிநடப்பு செய்யப் போவதாகக் கூறியது. இந்த முடிவான…

  23. பிரிட்டன் பிரதமர் தேர்தல் ; இறுதிக்கட்டத்தை எட்டியது வாக்குப்பதிவு By T. SARANYA 02 SEP, 2022 | 02:48 PM பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் பிரச்சாரம் 6 வாரங்களாக நடந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜோன்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார். அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சா…

  24. கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பினார் ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி By RAJEEBAN 02 SEP, 2022 | 04:55 PM ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸ் டி கிச்னர் கொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார். துணைஜனாதிபதியை நோக்கிய துப்பாக்கியை நீட்டிய நபர் ஒருவர்கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆர்ஜென்டீனாவின் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள் மத்தியில் காணப்படுவதையும் அவ்வேளை நபர் ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியை நீட்டுவதையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் பிரேசிலை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீத…

  25. ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை! மியன்மார் நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. முன்னாள் தலைவருக்கு ஏற்கனவே 17 வருடங்களுக்கும் அதிகமாக அந்நாட்டு நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=165210

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.