உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
ஆப்கான் மோதல்: அரசாங்கத்தின் கோட்டையான மசார்-இ-ஷெரீப்பும் தலிபான்கள் வசமானது !! அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாக இருந்த குறித்த பகுதி சண்டையின்றி வீழ்ச்சியடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தலிபான்கள் இப்போது நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி தலைநகர் காபூலை நெருங்கி வருகின்றனர். வன்முறையால் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன்…
-
- 0 replies
- 399 views
-
-
ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்குலகப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால் தாலிபன்கள் அதிவேகமாக ஆப்கனை கைப்பற்றி வருகிறார்கள். 2021 செப்டம்பர் 11ஆம் தேதிக்கும் ஒட்டுமொத்த அமெரிக்க படையையும் ஆப்கனில் இருந்து வெளியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரும்புகிறார். ஆப்கானிஸ்தானில் போர் தொடங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் அமெரிக்கா எவ்வளவு செலவழித்திருக்கின்றன என்பதைப் பார்ப்போம். ஆப்…
-
- 0 replies
- 302 views
-
-
மீண்டும் தலிபான்களின் உண்மையான முகத்திரை அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை நோக்கி தலிபான்கள் நகர்ந்து அதிகாரத்திற்கான தனது ஆக்கிரமிப்பை நிலைநிறுத்தியுள்ளனர். சில மாவட்டங்களில் தலிபான்கள் பயங்கரவாத ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. தலிபான்களின் இலக்குகள் அனைத்துமே அதன் நம்பிக்கைகள் மற்றும் நலன்களுக்கு விரோதமானவை என்று கருதப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் மற்றும் அமெரிக்க, மேற்கத்திய படைகள், மத சிறுபான்மையினர் மற்றும் ஆப்கானிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு உதவிய பொதுமக்கள் என அனைத்து தரப்புகளுமே தலிபான்களின் தற்போதைய இலக்குகலாகியுள்ளன. ஈரான் மற்றும் துர்க்மென…
-
- 55 replies
- 4.4k views
-
-
அகதிகள் குறித்து விழிப்புணர்வு: 8 நாடுகளுக்கு நடந்து செல்லும் அமல் இரவு, பகலும் தங்களது பெற்றோர்களுடன் உலகின் ஏதாவது ஒரு முனையில் அகதியாக செல்லும் இளம் குழந்தைகளின் அடையாளமாக மாறியிருக்கிறாள் அமல். குழந்தை அகதிகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமல் என்ற சிறுமி வடிவலான பொம்மையை Handspring Puppet Company வடிவமைத்துள்ளது. சுமார் 3.5 மீட்டர் உயரம் கொண்ட அமல், துருக்கி – சிரியா எல்லையிலிருந்து மான்செஸ்டர்வரை நடந்தே பயணம் செய்ய இருக்கிறாள். அதாவது சுமார் 8,000 ஆயிரம் கிலோ மீட்டர். ஜூலை மாதம் தனது பயணத்தை தொடங்கிய அமல் நவம்பர் மாதம் நிறைவு செய்கிறாள். தான் பயணம் செய்யும் 8 நாடுகளின் கலாச்சார விழாக்களிலும்…
-
- 0 replies
- 281 views
-
-
லண்டன் (சிஎன்என்) பிரிட்டனின் தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் கடந்த ஒரு தசாப்தத்தில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு சந்தேக நபர் இறந்து கிடப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிளைமவுத்தின் கீஹாம் பகுதியில், பிடிக் டிரைவில், மாலை 6:10 மணியளவில் "தீவிர துப்பாக்கிச் சம்பவத்திற்கு" பதிலளிக்க அதிகாரிகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைக்கப்பட்டனர். உள்ளூர் நேரம் வியாழக்கிழமை. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை 22 வயதான ஜேக் டேவிசன் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை பெயரிட்டனர். ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், டெவோன் மற்றும் கார்ன்வால் போலீஸ் தலைமை காவலர் ஷான் சாயர் கடலோர நகரத்தில் பயங்கரவாதிகள் முன்னால் பல இடங்களில் பரவிய ஒரு…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
அல்ஜீரியாவில்... வரலாறு காணாத காட்டுத்தீக்கு இதுவரை 65பேர் தீக்கிரை! வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீயானது நாட்டின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாகும். இதில் உயிரிழந்தவர்களில் 28 இராணுவ வீரர்களும் அடக்கம். கைபல் பிராந்தியத்தில் பற்றி ஏரியும் காட்டுத்தீயில் மேலும் 12 இராணுவ வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீப்பிடித்த பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் (118 பாரன்ஹீட்டை விட) கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில்…
-
- 6 replies
- 725 views
-
-
ஆப்கானிஸ்தான் உலகத்தால் கைவிடப்படுகிறது: போர்க்களத்தில் இருந்து ஒரு இந்திய பெண் செய்தியாளரின் பார்வை யோகிதா லிமாயே பிபிசி செய்தியாளர், ஆப்கானிஸ்தானில் இருந்து 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, தாங்கள் பெண் கல்விக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் பெண்களின் உரிமைக்கு உறுதியளிப்பதாகவும் கடந்த ஆண்டு தாலிபன்கள் கூறினார்கள் ஒவ்வொரு முறையும் நான் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும்போதெல்லாம் என்னை அங்குள்ள மக்கள் அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தியாவில் இருந்து வருகிறேன் என்று தெரிந்தவுடன், தாங்கள் டெல்லிக்குச் சென்று வந்த நாள்களையும், அங்கிருந்ததை அவர்கள் எந்த அளவு விரும்பினார்கள்…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செல…
-
- 15 replies
- 930 views
-
-
ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள். தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். …
-
- 0 replies
- 231 views
-
-
ஆப்கானில் தலிபான் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கின்ற அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு இன்னும் ஒருமாதகாலமே இருக்கின்ற நிலையில் தலிபான் பாரிய வன்முறையில் ஈடுபட்டு;ள்ளதால் ஆப்கானின் பலபகுதிகளில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. கந்தஹாரின் ஸ்பின்பொல்டாக் மாவட்டத்தில் பொதுமக்களையும் முன்னாள்மாகாண அதிகாரிகளையும் தலிபான் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலை செய்துள்ளது. காஸ்னி மாகாணத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளை தலிபான் அமைப்பு கொலை செய்துள்ளது. அமெரிக்க பிரிட்டன் தூதரகங்கள் தலிபானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை யுத்த குற்றம் என வர்ணித்துள்ளன. சர்வதேச சட்டங்களினால் பாதுகாக்கப்…
-
- 0 replies
- 332 views
-
-
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில்... கனேடிய தொழிலதிபருக்கு, சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை! தங்கள் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் மைக்கேல் ஸ்பாவோருக்கு சீன நீதிமன்றம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இரண்டரை வருடங்களுக்கும் மேல் சீனாவில் சிறை வைக்கப்பட்டிருந்த மைக்கேல் ஸ்பாவோர், மீதான வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, போதை மருந்து வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ரொபர்ட் லாய்டுக்கு, சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒருநாளுக்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு சீனாவின் முன்னணி தகவல் தொழில…
-
- 0 replies
- 418 views
-
-
கோவிட் தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்புக்கரைசல் செலுத்தப்பட்டோரில் பலர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஜெர்மனியில் பல்லாயிரம் நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிக்குப் பதில் ஒரு செவிலியர் உப்புக்கரைசலை செலுத்தினாரா என்று விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில், 8 ஆயிரம் முதியோர்களை மீண்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. வடக்கு கடற்கரை அருகே உள்ள ஃப்ரீஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள தடுப்பூசி மையம் ஒன்றில் இந்த செவிலியரின் செயல்பாடு குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 6 பேருக்கு மட்டுமே இப்படி உப்புக்கரைசல் ஊசி போடப்பட்டதாக நம்பப்பட்டது. இப்படி தடுப்பூசி மருந்துக்குப் பதில் உப்…
-
- 3 replies
- 592 views
-
-
நூற்றுக்கணக்கான... அரச படையினர், தலிபான்களிடம் சரணடைவு ! அண்மையில் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் குண்டூஸ் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான அரச படையினர் தலிபான்களிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வீரர்கள், பொலிஸார் மற்றும் எதிர்ப்புப் படைகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை கையளித்து சரணடைந்ததாக குண்டுஸ் மாகாண சபை உறுப்பினர் அம்ருதீன் வாலி தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் துருப்புக்கள் தொடர்ந்து பின்வாங்குவதால் தாலிபான் போராளிகள் குழு தற்போது ஆப்கானிஸ்தானின் மாகாண தலைநகரங்களில் கால் பகுதிக்கு மேற்பட்டவற்றினை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க தலைமையிலான வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்ப…
-
- 2 replies
- 649 views
-
-
தாய்லாந்தில் கொரோனா அதிகரிப்பையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு கோரி போராட்டம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை பதவி விலகக்கோரி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமரை பதவி வில…
-
- 0 replies
- 500 views
-
-
ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டன் பிரஜை ஜேர்மனில் கைது! ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் இங்கிலாந்து பிரஜையொருவர் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தி பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது. டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் பேர்லினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்ததாக ஜேர்மன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மதிப்பிடப்படாத பணத் தொகைக்கு பதிலாக அவர் குறைந்த பட்சம் ஒருமுறையாவது ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை பெர்லினுக்கு வெளியே போட்ஸ்டாமில் கைது செய்யப்பட்டதுடன், புதன்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவு…
-
- 0 replies
- 352 views
-
-
இளம் பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக திருமணம் செய்யும் தலிபான்கள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வதாக “த மெயில்” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான்கள் புதிய நகரம் அல்லது மாவட்டத்தைக் கைப்பற்றும் போதெல்லாம், உள்ளூர் மசூதிகளின் பேச்சாளர்கள் மூலம் அனைத்து உள்ளூர் பெண்கள் மற்றும் விதவைகளின் பெயர்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தலிபான்களுக்கு அஞ்சும் மக்கள் தங்கள் குடும்பங்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உட்பட பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். …
-
- 7 replies
- 843 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக, தலிபான்கள் மீது... தொடர்ந்து விமான தாக்குதல்: அமெரிக்கா தெரிவிப்பு ஆப்கானிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவாக தலிபான்கள் மீது தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ஜோன் கிர்பி கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அங்கிருக்கும் எங்கள் அதிகாரிகள் மூலம் தொடர்ந்து விமான தாக்குதல் நடத்தி ஆதரவளிப்போம்” என கூறினார். எனினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒகஸ்ட் இறுதிக்குள் இராணுவம் முழுமையாக திரும்பப் பெறும் என அறிவித்துள்ள நிலையில், அதன்பிறகும் ஆதரவு தொடருமா என்ற கேள்விக்கு ஜோன் பதிலளிக்கவில்லை…
-
- 0 replies
- 288 views
-
-
இங்கிலாந்தில்... இதய அறுவை சிகிச்சை காத்திருப்பு, 40 சதவீதம் அதிகரிக்கலாம்! அடுத்த வசந்த காலத்தில் இங்கிலாந்தில் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்துக்கும் அதிகமாக உயரும் என்று ஒரு தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இதற்காக அதிக அரசாங்க பணம் தேவை என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதய சேவைகள் கொவிட் தொற்றுக்கு முந்தைய நிலைக்கு திரும்ப ஐந்து ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பே, முக்கிய இதய பராமரிப்புக்கான காத்திருப்பு பட்டியல்கள் மிக நீளமாக இருந்தன என பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனம் கூறியது. காத்திருப்பு பட்டியலைக் குறைப்பதற்காக இந்த ஆண்டு 1…
-
- 0 replies
- 346 views
-
-
போர் நிறுத்தத்திற்கான... சர்வதேச அழைப்புகளை, நிராகரித்து தலிபான்கள் அமைப்பு! ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை தலிபான்கள் நிராகரித்துள்ளனர். முக்கிய வடக்கு நகரமான குண்டூஸையும், சர்-இ-புல் மற்றும் டலோகானையும் தலிபான்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. ஐந்து பிராந்திய தலைநகரங்கள் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளன. இதனிடையே தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் விமானங்கள் மீண்டும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. சமீபத்திய தாக்குதல்களில் டஸன் கணக்கான தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும், தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் தலையீடுக்கு எதிராக எச்சரித்தார். ஆ…
-
- 0 replies
- 308 views
-
-
கிரேக்க தீவான... ஈவியாவில், காட்டுத்தீ: குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேற்றம்! கிரேக்க தீவான ஈவியாவில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால், குடியிருப்புவாசிகள் கடல் வழியாக பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது வயதானவர்கள் படகுகளில் வெளியேறியுள்ளனர். தீயை அணைக்க போதுமான உதவி அனுப்பப்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தீவின் பல பகுதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டன. கிரேக்கத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் 45சி (113எஃப்) ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பல காட்டுத் தீ பதிவாகியுள்ளது. ஏதென்ஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் ஏற்பட்ட தீ தற…
-
- 0 replies
- 206 views
-
-
வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்-நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இராணுவத்துக்கு உத்தரவு வடகொரியாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு இராணுவத்துக்கு அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்துக்குப் பின் 1,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நாட்டில் உணவு தொடர்பாக “பதற்றமான” சூழல் ஏற்பட்டதாக கிம் ஜோங் உன் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக வடகொரியாவில் தானிய உற்பத்தி இலக்குகள் தவறிப்போயின. அதனால் இந்த ஆண்டு அறுவடையை…
-
- 0 replies
- 204 views
-
-
சிங்கப்பூர் தேசிய நாள்: கேலி செய்யப்பட்ட சின்னஞ்சிறு தீவு பணக்கார நாடாக உருவெடுத்தது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் தனது 56-ஆவது விடுதலை நாளைக் கொண்டாடுகிறது. இன்று சிங்கப்பூரின் தேசிய நாள். 1965-ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக சிங்கப்பூர் உருவெடுத்தது இந்த நாளில்தான். சமீப தசாப்தங்களாக உலக அளவில் தனிநபர் வருமானம் அதிகம் உள்ள நாடுகளின் வருடாந்திரப் பட்டியலில் தொடர்ந்து முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது சிங்கப்பூர். ஆனால் அது தனி நாடாக உருவான போது கட்டமைப்புகள் ஏதும் இல்லாத, உணவுப் பொருள் உற்பத்தி …
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide பாரிய மனிதப் புதைகுழிகளில் ஏற்கனவே புதைக்க ப்பட்டிருந்த 19 பொஸ்னிய முஸ்லிம்களின் எச்சங்கள், தோண்டியெடுக்கப்பட்டு, டீஎன்ஏ சோதனைகள் மூலம் அவை அடையாளங் காணப்பட்டு, பிரேதப் பெட்டிகளில் வைக்கப்பட்டு, அந்தக் கிழக்கு பொஸ்னிய நகரத்தின் ஓரத்தில் கொல்லப் பட்டவர்களுக்காகக் கட்டப்பட்ட துயிலும் இல்லத்தில் புதைக்கப் பட்டிருக்கின்றன. படுகொலை நடைபெற்ற அந்தக் காலப் பகுதியில் அருகிருந்த வொல்யாவிற்சா (Voljavica) என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஒன்பது வயது நிரம்பிய வாஹிட் சுல்ஜிச் (Vahid Suljic) தனது குடும்பத் தாருடன் ஸ்றபிறெனிற்சாவில் அடைக்கலம் தேடியிருந்தார். இனவழிப்பிலிருந்து அவரால் உயிர் பிழைக்க முடிந்தது. ஆனா…
-
- 0 replies
- 470 views
-
-
இஸ்ரேல் நிலைகளை நோக்கி லெபனானின் ஹிஸ்புல்லா படை ஏவுகணை தாக்குதல்! இஸ்ரேல் நிலைகளை நோக்கி ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா படையினர், ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் தங்கள் நிலைகள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா படையினர் தெரிவித்துள்ளனர். எனினும், தெற்கு லெபனானில் இருந்து முன்னதாக வீசப்பட்ட ஏவுகணை குண்டுகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவே தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ துணைத் தளபதி அம்னான் ஷெஃப்ளர் கூறுகையில், ‘லெபனானிலிருந்து தங்கள் பகுதிகளை நோக்கி 19 ஏவுகணை குண்டுகள் வீசப்பட்டத…
-
- 0 replies
- 199 views
-
-
டோக்கியோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்: 10 பேர் படுகாயம் - சந்தேக நபர் கைது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் மேற்கு நகரிலுள்ள செடாகயா வார்டு பகுதியில் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் 20 வயது இளம் பெண் ஒருவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்த அந்நாட்டு பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அதற்கிடையில், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அத்தோடு, தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இருந்து…
-
- 0 replies
- 214 views
-