உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்! நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் 15 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாவதாக மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்து அவர் உத்தரவிட்டார். இச் சுவர் திட்டம்தான், 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் அனைவரும் பொதுவெளியில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கும் மசோதாவில் பைடன் கையெழுத்திட்டுள்ளார். அடுத்ததாக குறிப்பிட்ட சில இஸ்லாமிய நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் பைடன் கையெழுத்திட்டுள்ளார். மேலும் பரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் …
-
- 2 replies
- 804 views
-
-
வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் Digital News Team 2021-01-20T19:58:58 ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக இறுதியாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் டிரம்ப் ஹெலிக்கொப்டரில் தற்போது வெள்ளை மாளிகையிலிருந் வெளியேறி அன்ரூ தளத்திற்கு சென்றுள்ள டிரம்ப் அவர் அங்கு உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் அதன் பின்னர் விமானப்படை விமானத்தில் புளோரிடா செல்லவுள்ளார் Thinakkural.lk
-
- 6 replies
- 960 views
-
-
நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது! ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி, கடந்த வருடம் விசத்தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நாடு திரும்பிய அவரது விமானம், மொஸ்கோவில் இருந்து ஷெரெமெட்டியோ விமான நிலையம் நோக்கி திருப்பிவிடப்பட்டு, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தன் மீது மேற்கொள்ளப்பட்ட விசத்தாக்குதலுக்கு ரஷ்ய அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என நவால்னி குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்த கருத்தை முற்றாக மறுப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதும், …
-
- 2 replies
- 725 views
-
-
பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்…
-
- 25 replies
- 1.7k views
-
-
ட்றம்பின் பழிவாங்கல் | இரவிரவாகக் கொலைக் களங்களாகும் அமெரிக்கச் சிறைகள் மாயமான் தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாக, அமெரிக்க மத்திய சிறைகளில் மரணதண்டனை விதிக்கப்பட்டு நீதிக்காகவும் மன்னிப்புக்காகவும் ஏங்கிக்கொண்டிருக்கும் கைதிகளை இரவோடிரவாக ‘முடித்து’ விடுவதில் இன்பம் கண்டுவருகிறார் ட்றம்ப். இரண்டாம் உலகப் போரிற்குப் பிறகு அதிக மரணதண்டனைகளுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதியென்ற பெயர் அவருக்குப் போகிறது. இந்த அவசரக் ‘கொலைகளுக்கு’ ட்றம்ப் மட்டுமல்ல தம்மை நாணயஸ்தராகக் காட்டிக்கொண்டு பதவியைத் துறக்கும் சட்டமா அதிபர் வில்லியம் பார் முதல் ‘கண்ணீர் மன்னன்’ பராக் ஒபாமா வரையில் எல்லோரும் காரணகர்த்தாக்கள் தான். இதில் கொடுமை என்னவென்றால் இந்த அவசர பலிபீடத்துக்கு இன்றிரவு யார…
-
- 0 replies
- 618 views
-
-
உறைய வைக்கும் பனி நீரில் புனித நீராடினார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்! Digital News Team 2021-01-20T10:00:55 ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினின் (Vladimir Putin) உடல் நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில் உறைபனி நீரில் அவர் புனித நீராடிய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது. ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து ஞானஸ்தானம் பெற்ற நாளில் பாரம்பரிய முறையில் கிறிஸ்தவர்கள், நீர்நிலைகளில் புனித நீராடுவது வழக்கமான ஒன்றாகும். அந்தவகையில் 68 வயதான விளாடிமிர் புட்டினும் எபிபனி என அழைக்கப்படும் குறித்த நாளில் மாஸ்கோ தேவாலயத்தில் சிலுவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தில் புனித நீர…
-
- 0 replies
- 634 views
-
-
-
- 4 replies
- 548 views
- 1 follower
-
-
பிரியாவிடை உரையில் பைடனின் பெயரை குறிப்பிடாது வாழ்த்துக்களை தெரிவித்தார் ட்ரம்ப் பல தசாப்தங்களாக புதிய போர்களைத் தொடங்காத முதல் ஜனாதிபதியாக நான் திகழ்கிறேன் என்று தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், நான்கு ஆண்டு காலம் தன்னுடன் இணைந்து பணியாற்றிய தனது நிர்வாக உறுப்பினர்களுக்கும் நன்றியினை கூறினார். வெளிச்செல்லும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்புக்கு முன்னதாக செவ்வாயன்று வொஷிங்டனிலிருந்து காணொளி மூலமாக ஆற்றிய பிரியாவிடை உரையின்போதே இதனைக் குறிப்பிட்டார். அமெரிக்க நாடானது, ஒளி மிகுந்த, நம்பிக்கை வாய்ந்த மற்றும் அமைதியை விரும்பும் குடிமக்களை கொண்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நம்முடைய நாட்டை மறுகட்டமைப்பு செய்…
-
- 2 replies
- 599 views
-
-
வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது - பிரியாவிடை உரையில் மெலனியா ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப் தனது கடைசியுரையில் மக்களிடம் பிரியாவிடை பெறும் வகையில் உரையாற்றியுள்ளார். அதில், "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வமாக இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் பதில் அல்ல, வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 ஆம் திகதி, ஜோ பைடன் பெற்ற வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் வழங்…
-
- 2 replies
- 921 views
-
-
45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு 1 Views 45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது. …
-
- 30 replies
- 2.9k views
-
-
ஊழல் குற்றம்; Samsung தலைவருக்கு சிறை தென் கொரியாவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான Samsung நிறுவனத்தின் தலைவரான லீ ஜே-யோங்குக்கு (Lee Jae-yong) ஊழல் குற்றத்துக்காக இன்று(18) இரண்டரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த, நீண்ட நாள்களாக நீடித்த வழக்கு, இதன் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. லீயின் தந்தை, சென்ற ஆண்டு இதய நோயால் உயிரிழந்தார் அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சொத்துகள் அவரது வாரிசுகளின்கீழ் வந்தன. வாரிசுரிமைச் சட்டப்படி, மூத்த லீயின் சொத்துகளைப் பெறுவதற்குப் பெருந்தொகையை வாரிசு வரியாகச் செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக லீ, அதிகாரிகளுக்கு லஞ்ச…
-
- 0 replies
- 516 views
-
-
இந்தோனேசிய நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டடங்கள் கடுமையாக இடிந்து தரைமட்டமானது. இந்த நிலநடுக்கத்தில் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். அதேநேரம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர்…
-
- 0 replies
- 508 views
-
-
ஜேர்மனியில் அங்கெலா மேர்க்கல்லின் கட்சிக்கு புதிய தலைவர் தெரிவானார்! ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin Laschet) இன்று (சனிக்கிழமை) தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போதைய ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கலுக்குப் பின்னர், செப்டம்பர் மாதம் கூட்டாட்சித் தேர்தல்களில் அதிபருக்கான வேட்பாளராக அர்மின் லாசெட் போட்டியிடுவார் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜேர்மனியின் அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு மாநிலமான வடக்கு ரைன்-வெஸ்ற்பாலியாவின் (North Rhine-Westphalia) பிரதமரான லாசெட்டுக்கு ஆதரவாக கட்சியின் ஆயிரத்து ஒரு பிரதிநிதிகளில் 521 பேர் வாக்களித்துள்ளனர். இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரீட்ரிக்…
-
- 9 replies
- 711 views
-
-
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் ஐஸ் கிறீமிலும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பெருந்தொகை ஐஸ் கிறீம் அடங்கிய பெட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் வைரஸ் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகருக்கு சென்றுள்ளனர். மேலும் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவிவருகிறது. சீனாவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிலும் வைரஸ் த…
-
- 0 replies
- 410 views
-
-
ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பதவியேற்பு ஜனவரி 20: அமெரிக்காவின் புதிய அரசியல் தலைமை குறித்த சுவாரசிய செய்திகள் பட மூலாதாரம்,EPA/BIDEN CAMPAIGN/ADAM SCHULTZ அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கின்றனர். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பூர்விகம், குடும்பம் உள்ளிட்டவை குறித்து பிபிசி தமிழில் சமீபத்தில் வெளியான சில சுவாரசியமான செய்திக் கட்டுரைகளை உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம். ஜோ பைடனுக்கு தமிழகத்துடன் தொடர்பு என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க ஜனநாயகக் கட்…
-
- 0 replies
- 520 views
-
-
முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு - திணறும் இந்தோனீசியா பட மூலாதாரம்,GETTY IMAGES திணறும் இந்தோனீசியா: முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு இந்தோனீசியாவின் செமெரு மலையில் இருக்கும் எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் ஜாவா தீவின் வான்பகுதியில் சுமார் 5.6 கிலோமீட்டர் உயரம் அளவுக்கு சாம்பல் மற்றும் புகையை அது வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த தீவுதான் இந்தோனீசியாவிலேயே அதிக அளவில் மக்கள் வாழும் தீவு. இதுவரை மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை. எந்த உயிரிழப்புகளும் இதுவரை தெரியப்படுத்தவில்லை. …
-
- 0 replies
- 422 views
-
-
வைத்தியசாலையில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் பலி! -இத்தாலியில் சம்பவம் இத்தாலியில் ரோம் அருகேயுள்ள வைத்தியசாலையில் விஷவாயு கசிந்ததில் 5 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை குறித்த வைத்தியசாலையில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 5 நோயாளிகளும், ஊழியர்கள் 2 பேரும் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. Thinakkural.lk
-
- 0 replies
- 530 views
-
-
ஒத்திகையின் போது இந்துசமுத்திரத்தை நோக்கி ஏவுகணையை செலுத்தியது ஈரான் ஈரானின் புரட்சிகர காவல்படையினர் இராணுவ ஒத்திகையொன்றின் போது இந்து சமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்றை செலுத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர காவல்படையினர் மேற்கொண்டுள்ள ஒத்திகையின் இரண்டவாது நாளான இன்று இந்துசமுத்திர பகுதிக்குள் நீண்ட தூர ஏவுகணையொன்று செலுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நாட்டின் மத்திய பாலைவன பகுதியில் ஈரான் இந்த ஒத்திகையை நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை சோதனை செய்துள்ளது. …
-
- 0 replies
- 554 views
-
-
புலம் பெயர்தோர் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியர்கள் முதலிடம் –ஐ.நா உலகளவில், புலம் பெயர்ந்து வசிப்போரில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது. தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து, வெளிநாடுகளில் வசிப்போர் குறித்து, 2020ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை, ஐ.நா., மக்கள் தொகை விவகாரங்கள் பிரிவு அண்மையில் வெளியிட்டது. இவ் அறிக்கையின் அடிப்படையில் ” இந்தியாவைச் சேர்ந்த, 1.80 கோடி பேர், வெளிநாடுகளில் வசித்துவருவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவில் தான், இந்தியர்கள் அதிகமானோர் வசிக்கின்றனர். அனைத்து கண்டங்கள் மற்றும் பிராந்த…
-
- 0 replies
- 450 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு: ஆயுதம் தாங்கியவரால் பரபரப்பு – வொஷிங்டனில் பலத்த பாதுகாப்பு அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் தலைநகர் வொஷிங்டனில் ஏராளமான ஆயுதங்களுடன் ஒருவர் சிக்கியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து வொஷிங்டன் முழுவதும் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையைச் சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் வர்ஜீனியாவைச் சேர்ந்த வெஸ்லி ஆலன் பீலர் என்பவர் போலிச் சான்று மூலம் வொஷிங்டனுக்குள் நுழைய முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரைத் தடுத்து…
-
- 0 replies
- 401 views
-
-
முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை.! சீனாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த தொடா்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களை அந்த நாட்டு அரசு மறுத்துள்ளது. விரும்பத்தின்பேரில்தான் முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று சீன அரசு விளக்கமளித்துள்ளது. உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், உய்குா் இன முஸ்லிம்களைக் குறிவைத்து மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக கடந்த 4 ஆண்டுகளாகவே உய்குா் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஷின்ஜியாங் பகுதியில் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த அதிகம் …
-
- 5 replies
- 1.4k views
-
-
இலங்கை விவகாரம் :: சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமருக்கு அழைப்பு.! இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்க…
-
- 0 replies
- 364 views
-
-
கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம் உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி ப…
-
- 0 replies
- 585 views
-
-
1953க்கு பின்னர் முதல்தடவையாக அமெரிக்காவில் பெண்ணொருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றம் அமெரிக்காவின் மரணதண்டனை விதிக்கப்பட்டஒரேயொரு பெண் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. லிசா மொன்ட்கொமேரி என்ற பெண்ணிற்கே அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்தியானாவில் உள்ள சிறையொன்றில் விசஊசி ஏற்றி லிசா மொன்ட்கொமேரிக்கு அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான தடையை நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து அதிகாரிகள் மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளனர். குறிப்பிட்ட பெண் சித்தசுவாதீனமற்றவர் சிறுவயதில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர் என அவரது சட்டத்தரணிகள் வாதிட்டுவந்ததன் காரணமாக இந்…
-
- 4 replies
- 776 views
-
-
புதிய நீர்மூழ்கிப் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியது வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இராணுவ அணி வகுப்பின்போது வடகொரியா புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை என்று சந்தேகிக்கப்படும் ஏவுகணைகளை காட்சிப் படுத்தியுள்ளது. பியோங்யாங்கின் கிம் இல் சுங் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த இராணுவ அணி வகுப்பினை கோட் மற்றும் ஃபர் தொப்பி அணிந்திருந்த வடகொரியத் தலைவர் கிம்யொங் உன் தனது கைகளை அசைத்த வன்னம் புன்னகைத்து பார்வையிடும் காட்சிகளையும் வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த அணிவகுப்பில் அணிவகுப்பு படையினரின் வரிசைகள் மற்றும் டாங்கிகள் மற்றும் ராக்கெட் ஏவுகணைகள் உள்ளிட்ட பல இராணுவ ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. உலகின் மிக சக்திவாய்ந்த…
-
- 0 replies
- 570 views
-