உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
ட்ரம்ப்பின் பதிவைக் கவனிக்காமல் விட்ட ஃபேஸ்புக்: ஸக்கர்பெர்கை சாடும் முன்னாள் ஊழியர்கள் வன்முறையைத் தூக்கிப் பிடிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததற்காக ஃபேஸ்புக்கின் முன்னாள் ஊழியர்கள் பலர் அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை சாடி அவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான, செல்வாக்குள்ள முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்கள், இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதில் சிலர் ஃபேஸ்புக் சமூகத்துக்கான வழிகாட்டுதல்களை முதன்முதலில் உருவாக்கியவர்கள். அரசியல் பேச்சுகள் இப்படி கவனிக்கப்படாமல் போவது, ஃபேஸ்புக் பெருமை பேசும் அதன் கொள்கைகளுக்கே துரோகம் செய்வது போல என அவர்கள் க…
-
- 0 replies
- 821 views
-
-
கொரோனா சிகிச்சை : இந்தியாவிடம் உதவியை எதிர்பார்க்கும் பிரான்ஸ் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், பேரழிவை ஏற்படுத்திய, புயலால், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய, பிரான்ஸ் அரசு தயாராக உள்ளது. கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்க, இந்தியாவின் ஒத்துழைப்பை, பிரான்ஸ் எதிர்பார்க்கிறது.இந்த விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக 152,444 பேர் பாத…
-
- 0 replies
- 683 views
-
-
உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்தது சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 32.41 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 480-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. https://w…
-
- 0 replies
- 476 views
-
-
கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம் கெர்ரி ஆலன் பிபிசி மானிட்டரிங் Alamy மருத்துவர் ஹூ வேஃபெங் மத்திய சீனாவில், கொரோனா தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து, கொரோனா விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை என மக்களுக்குத் தோன்றிய எண்ணம், அரசுக்கு பின்னடைவைத் தந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா நோயுடன் போராடி வந்த மருத்துவர் ஹூ வேஃபெங், ஜூன் 2ஆம் தேதி காலமானார். சிகிச்சையின்போது, இவரது கல்லீரல் சரியாக செயல்படாமல் போனதால், உடல் கருப்பு நிறத்திற்கு மாறத்தொடங்கியது. அந்த தகவல் பல ஊடகங்களின் பார்வையை அவர் பக்கம் திருப்பின. இவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் பொதுவெளியில் அறிவிக்க…
-
- 0 replies
- 367 views
-
-
இந்திய-சீன ராணுவம் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை Posted on June 4, 2020 by தென்னவள் 10 0 இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில், நடைமுறை எல்லைக்கோடு அருகே பன்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்தியா சாலைகள் அமைத்து வருகிறது. இந்த சாலைகள் கட்டப்பட்டால், எல்லைக்கு இந்தியா எளிதாக படையினரையும், ஆயுத தளவாடங்களையும் அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு…
-
- 0 replies
- 414 views
-
-
அகாலமாகும் அகிம்சை வழிகள். .. அகிம்சை வழியில் ஈழத் தமிழர் தீர்வு பெறலாம் என்போர் இந்த மரணங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடினால் தீர்வு பெற முடியாது என்பது மீண்டும் ஒருதடவை துருக்கியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த 323 நாட்கள் உண்ணாநோன்பு ஈடுப்பட்டுவந்த நாட்டுப்புறக் கலைஞர் இப்ராஹிம் கெக்யக் நேற்று மரணித்து விட்டார் இதற்கு முன்னர் கடந்த 24.04.2020 யன்று 297 நாட்களாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி மரணமடைந்தார். அதற்கு முன்னர்; கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தா…
-
- 1 reply
- 571 views
-
-
சீனாவுடன் தொடரும் மோதல் போக்கு- விமான பறப்புக்கு தடைவிதித்தார் ட்ரம்ப் சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் திகதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது. இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவி…
-
- 1 reply
- 393 views
-
-
கறுப்பின அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்டு கொலை: 4 போலீசார் கைது மினியாபொலிஸ்: அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு, 46, உயிரிழந்த சம்பவத்தில் 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டு பலியான சம்பவத்தில் மினியாபொலிஸ் நகரத்தைச் சேர்ந்த 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் டெர்ரிக் சவுரின் என்ற போலீஸ் அதிகாரி தான் ஜார்ஜ் பிளயாட் கழுத்த…
-
- 0 replies
- 449 views
-
-
அமெரிக்கர்களிடமிருந்து நாம் கற்க வேண்டிய அறம். ஒரே ஒரு மனிதன்.. அந்த மனிதனும் ஒரு பெரும் மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவரோ.. அல்லது தியாகியோ.. முக்கியமான நபரோ அல்ல.. ஆனால் அந்த ஒரு மனிதனின் கொலைக்கு இன்று அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒரே காரணம் அந்த மனிதன் கொல்லப்பட்ட முறையும் அதற்குப் பின் இருக்கும் நிறவெறியும்தான். தன் கழுத்து நரம்பை நெறிக்கும் அந்த நிறவெறி முட்டுக்கு நடுவில் மூச்சு திணறலுடன் “i can’t breathe” என்று ஜார்ஜ்ஸ் ஃப்ளாய்ட் என்ற அந்த மனிதன் உச்சரித்த அந்த கடைசி வார்த்தைகள் இருக்கிறதே.. ஐயோ.. அதை கேட்கும்போது நம் கழுத்தே நெறி படுவதுபோல் மனம் பதறுகி…
-
- 1 reply
- 536 views
-
-
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகில் கொரோனா வைரஸிலிருந்து அதிக இறப்பு விகிதம் ஸ்வீடனில் பதிவாகியுள்ளது. நாட்டி…
-
- 0 replies
- 274 views
-
-
மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை – பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரும் காதலி மகளின் வளர்ச்சியை அவர் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை என ஜோர்ஜ் பிலோய்ட்’டின் காதலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். பொலிஸாரின் பிடிக்கு இலக்காகி உயிரிழந்த ஜோர்ஜ் பிலோய்ட்டின் மரணத்துக்கு நீதி கோரி அமெரிக்க நகரங்களில் நடைபெறும் போராட்டங்கள் ஐந்து நாட்களையும் கடந்து நடைபெறுகிறது. அமெரிக்காவின் மின்னெசொட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரான மினியாபொலிஸில், அண்மையில் கைதான கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிலோய்ட், பொலிஸாரின் வலுக்கட்டாயமான பிடிக்குள் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து வெளிவந்துள்ள காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், உலகெங்கும் நீதிக்க…
-
- 0 replies
- 424 views
-
-
உலகின் பாதி மக்கள் தொகையை அழிக்கும் புதிய வைரஸ்? பிரபல விஞ்ஞானி வெளியிட்ட எச்சரிக்கை உலக அளவில் லட்சக்கணக்கில் மக்களை பலி எடுத்த, கொரோனா வைரஸை விட மோசமான வைரஸ், கோழிப் பண்ணைகளிலிருந்து பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். அறிவியலாளரும் பிரபல புத்தக ஆசிரியரான டாக்டர். மைக்கேல் கிரேகர் என்பவரே இந்த எச்சரிக்கையை விட்டுள்ளார். உலகின் பாதி மக்கள் தொகையை காலி செய்ய அந்த வைரசால் முடியும் என்கிறார் அந்த விஞ்ஞானி. அந்த வைரஸ் பெயர் அபோகலைப்டிக் (apocalyptic) என்ற தகவலையும் விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அழிக்கப்பட்டாலும், உலகில் அடுத்த பெருந்தொற்று நோய் என்பது கோழிப் பண்ணைகளில் இருந்து தான் உருவாகும் என்று அவர்…
-
- 1 reply
- 431 views
-
-
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம்- உலக சுகாதார அமைப்பு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொய்னா மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மாத்திரை தயாரிப்பில் இந்தியா முன்னணி வகிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இத்தாலி ஸ்பெயின் நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்கா பக்கம் திரும்பிய போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்கு பலன் தரும் என சொல்லப்பட்டது. ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் கொரோனா வைரஸ் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹ…
-
- 0 replies
- 269 views
-
-
நடப்பதை கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம் – கனேடிய பிரதமர் அமெரிக்காவில் நடப்பதைத் தாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதாகவும் இது மக்களை ஒருங்கிணைப்பதற்கும் அவர்களின் குரல்களைக் கேட்பதற்குமான நேரம் எனவும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தனது காலால் அழுத்தியமையினால் அவர் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பை அடுத்து நீதி கோரி பலர் போராட்டத்தில் இறங்கினர். அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்ததுடன் அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தைக் கிளப்பியுள்ளது. இந்த போராட்டங்களை அடக்க கடும…
-
- 0 replies
- 318 views
-
-
`கொரோனா எங்கள் பலவீனத்தை உணர்த்திவிட்டது’ - தங்கள் பிழையை ஒப்புக்கொண்ட சீனா சீனாவின் பொதுச் சுகாதார அமைப்பின் பலவீனத்தை அறிய இந்தக் கொரோனா வைரஸ் உதவியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவின் வுகான் நகரிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று மொத்த மனிதக்குலத்தையும் ஆட்டிப்படைத்து கொடூரம் நிகழ்த்தி வருகிறது. தற்போதுவரை சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டிவிட்டது. அதேபோல் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,80,000 -ஆக உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதே நேரம் வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ச…
-
- 12 replies
- 3.1k views
-
-
கொரோனா வைரஸ்: கட்டுப்பாடுகள் விதித்திருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளும் சுவீடன் by : Jeyachandran Vithushan கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க முடக்கத்தை அமுல்படுத்துவதில்லை என தீர்மானித்திருந்த சுவீடனில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேண்டும் என தொற்றுநோயியல் நிபுணர் கூறியுள்ளார். தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்னெல் பல மாதங்களாக மற்ற நாடுகளினால் அமுல்படுத்தப்பட்ட முடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சங்களை முன்வைத்து வந்தார். இருப்பினும் இன்று (புதன்கிழமை) காலை, ஸ்வெரிஜஸ் வானொலியில் இடம்பெற்ற நிகழ்வில் பேசிய அவர், நாட்டில் அதிகமானோர் உயிரிழப்பதை ஒப்புக்கொண்டார். உலகி…
-
- 0 replies
- 297 views
-
-
ஜார்ஜ் ஃப்ளாய்ட் வாழ்க்கையின் கடைசி அரை மணி நேரம் TWITTER/RUTH RICHARDSON அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், போலீஸ் காவலில் கொல்லப்பட்டதால் நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. மின்னசோட்டா தலைநகர் மினியாபொலிஸில், 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீஸார் பிடியில் கழுத்து நெறிபட்டு இறந்தார். ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற காவலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஃப்ளாய்ட் மரணத்திற்கு கா…
-
- 1 reply
- 870 views
-
-
அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப் கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரரகள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: மே 31, 2020 07:32 AM வாஷிங்டன் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்…
-
- 17 replies
- 1.6k views
-
-
பரிசோதனை வேண்டாம், காத்திருக்க வேண்டாம் - கொரோனா நோயாளிகளை அசாத்தியமாக கண்டறியும் செல்லப்பிராணி லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது வீசும் வாடையை நுகர வைக்கப்படுகின்றன. பின் கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் மற்றும் பாதித்தவர்களை நுகர்ந்தே கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.ப்ரிட்டன் அரசாங்கம் இதற்கென 5 லட்சம் யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 4,73,53,285 ஒதுக்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை மிக எளிதில், அதிவேகமாக முன்கூட்டியே கண்டறியும் ஆய்வுகளின் அங்கமாக இந்த சோதனை நடத்தப்படுகிறது.கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் நாய்கள், மருத்துவ பரிசோதனை நாய்கள் என்று…
-
- 0 replies
- 325 views
-
-
விலையுயர்ந்த விவாகரத்து - உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண் உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில் 4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார். இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்க…
-
- 0 replies
- 482 views
-
-
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றுவீதம் குறைந்துள்ளது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் நடுப்பகுதியில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணித்தியாலத்தில் 271பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 13பேர் உயிரிழந்தனர். மேலும், 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் ஒட்டுமொத்தமாக 183,765பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 8,618பேர் உயிரிழந…
-
- 0 replies
- 438 views
-
-
உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்பவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு! by : Anojkiyan நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு அமைதியின்மையைத் தணிக்க இராணுவத்தை அனுப்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். நகரங்களும் மாநிலங்களும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், தங்கள் குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க இராணுவத்தை நிலைநிறுத்தி அவர்களுக்கான பிரச்சினையை விரைவாக தீர்ப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், 40இற்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்ப…
-
- 0 replies
- 359 views
-
-
கொரானா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்... மிலன் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63,66,193ஆக உயர்ந்து உள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 29,03,605ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,77,437ஆக உயர்ர்ந்து உள்ளது. ஐரோப்பாவில், கொரோனா வைரசுக்கு முதல் இலக்கு இத்தாலிதான். பிப்ரவரி 21-ஆம் தேதியன்று கொரொனா வைரஸின் முதல் பாதிப்பு வெளியானது. அங்கு இதுவரை 2,33,197 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, மொத்தம் 33,475 பேர் வைரசுக்கு பலியாகியுள்ளனர். வயதானவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் இத்தாலியில் கொரோனா தாக்குதலின் ஆரம்ப நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அ…
-
- 0 replies
- 439 views
-
-
சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா னா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது. பதிவு: ஜூன் 01, 2020 10:20 AM வாஷிங்டன் சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ கூறியதாவது:- "சீன கம்யூனிஸ்ட்கட்சியின் இராணுவ முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, அவை உண்மையானவை. சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது இராணுவ சக்த…
-
- 3 replies
- 546 views
-
-
போராட்டகாரர்களுக்கு அஞ்சி இரகசிய பதுங்கு குழியில் பதுங்கிய ட்ரம்ப்! ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி போராடிவரும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த போராட்டக்காரர்களிலிருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், துணைவியார் மெலனியா ட்ரம்ப் மற்றும் அவர்களது மகன் பரோன் ஆகியோரை பாதுகாக்க, நிலத்தடி பதுங்கு குழிக்கு கொண்டு சென்றதாக இரகசிய சேவை முகவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர், வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்னர், அவர்கள் மேல் மாடிக்கு கொண்டு வரப்பட்டதாக சேவை முகவர்கள் தெரிவித்தனர். ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி மற்றும் சட்ட அமுலாக…
-
- 1 reply
- 497 views
-