உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு! by : Anojkiyan உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படும் வெளிநாட்டினரை, திருப்பி அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், ரஷ்யாவின் பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்கான ‘தேவையான அனைத்து மருந்துகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் உள்ளன’ என்றும் கூறினார். ரஷ்யாவில் இதுவரை 2 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருமே சீனாவைச் சேர்ந்தவர்கள், சைபீ…
-
- 0 replies
- 370 views
-
-
உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடிப்பு- தகவல் வெளியானது உலகை மிரட்டிவரம் கொரோனா வைரஸூக்கு தாய்லாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள யுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 25இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு தற்போது 362 பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,300 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தாய்லாந்து பாங்கொக்கில் உள்ள ராஜவிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் எச்.ஐ.வி.இற்கு சிகிச்சையளிக்கப் பயன்ப…
-
- 0 replies
- 691 views
-
-
இதுவரை 425 பேர் உயிரிழப்பு: வுஹான் நகர் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது! சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் இதுவரை வெளியான தகவலின் பிரகாரம் 425 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி நேற்று (திங்கட்கிழமை) மாலை வெளியிடப்பட்டதன் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வுஹான் நகரை சீன இராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்கான வேலையில் இராணுவம் இறங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக 200இற்கும் அதிகமான இராணுவ உயர் அதிகாரிகளுடன் 130 வாகனங்கள் வுஹான் நகரை அடை…
-
- 0 replies
- 476 views
-
-
கொரானா வைரஸ் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்கா அச்சத்தை உருவாக்கி பரப்புவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனாவில் கொரானா வைரஸ் பரவத் தொடங்கியுவுடன், அங்கிருந்து முதன் முதலில் இருந்த தங்கள் நாட்டவரை மீட்ட நாடு அமெரிக்கா. சீனாவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண அறிவுரையையும் அமெரிக்காதான் முதன் முதலில் வெளியிட்டது. இதேபோல, அண்மையில் சீனாவுக்கு சென்று வந்த வெளிநாட்டவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது என அமெரிக்கா நேற்று தடை விதித்தது. இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்-யிங், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மீறி, பயணம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அதீத கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிப்பதாக கூ…
-
- 1 reply
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images உள்ளூர் புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) வணிகம் தொடங்கிய சீன பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடே பதற்றத்துக்கு உள்ளாகி இருப்பதே இந்த சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இன்று ஒரே நாளில் ஷாங்காய் பங்குச்சந்தை குறியீட்டு எண் கிட்டதட்ட எட்டு சதவீதம் குறைந்தது. கடந்த நான்கு ஆண்டு காலத்தில், ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய வீழ்ச்சி இதுதான். உற்பத்தித்துறை, மூலப்பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்…
-
- 0 replies
- 734 views
-
-
https://theconversation.com/quantitative-easing-now-looks-permanent-and-has-turned-central-banks-into-pseudo-governments-130098 Quantitative easing now looks permanent – and has turned central banks into pseudo governments January 23, 2020 12.26pm GMT Author Valerio Cerretano Senior Lecturer in Management, University of Glasgow Disclosure statement Valerio Cerretano does not work for, consult, own shares in or receive funding from any company or organisation that would benefit from this article, and has disclosed …
-
- 1 reply
- 1k views
-
-
லண்டனில் பொதுமக்களை கத்தியால் தாக்கியதுடன் மனித வெடிகுண்டாக செயல்பட இருந்த இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர். வணிகவளாகங்கள், பொழுதுபோக்கு அரங்குகள் நிறைந்த ஸ்ட்ரீதம் ஹை ரோட்டில்((Streatham High Road)) சுற்றித்திரிந்த 20 வயது இளைஞன், திடீரென பொதுமக்கள் 2 பேரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை விலகச் சொல்லி இளைஞனை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட சுதேஷ் மாமூர்((Sudesh Mamoor)) என்ற அந்த இளைஞன் உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சுதேஷ், கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.…
-
- 3 replies
- 1.2k views
-
-
தான்ஸானியாவில் மத போதனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு! கிழக்கு ஆபிரிக்க நாடான தான்ஸானியாவில், வெளிப்புற மத போதனையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16பேர் மோசமான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை கூடுமென அஞ்சப்படுகின்றது. வடக்கு நகரமான மோஷியில் உள்ள ஒரு அரங்கத்தில் பெந்தேகோஸ்தே சேவையில் நூற்றுக் கணக்கான வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, இறைவனின் தூதார் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பாதிரியார் போனிஃபேஸ் மாம்போஸா என்பவர், தன்னிடமிருந்த எண்ணெயை தரையில் ஊற்றினார். இந்த புனித எண்ணெய் தங…
-
- 0 replies
- 342 views
-
-
கொரோனா வைரஸைத் தொடர்ந்து சீனாவின் மற்றொரு மாகாணத்தில் அதிகரித்துள்ள பறவைக் காய்ச்சல்! சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் மனிதர்களைக் காவுகொண்டு உலகை மிரட்டிவருகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான வுஹானிலிருந்து 350 மைல் தொலைவில் அமைந்துள்ள தெற்கு மாகாணமான ஹுனானின், ஷாயாங் நகரில் பறவைக் காய்ச்சல் அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் தாக்கம் அதிகரித்திருப்பதாக சீன வேளாண்மை மற்றும் கிராம விவகார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறு ஒரு பண்ணையில் 7,850 கோழிகளில் இந்தப் பறவைக் காய்ச்சல் இனங்கானப்பட்டுள்ளதுடன் அவற்றில் 4,500 கோழிகள் பறவைக் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவிக்க…
-
- 0 replies
- 352 views
-
-
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரியில் வெளவால்களின் மரபணுக்கள் காணப்படுவதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 'கொரோனா எவ்வாறு உருவானது' என்பது குறித்து சீன ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையில், 'கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த 9 நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் வெளவால்களின் மரபணுக்கள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸின் மரபணுவும் அதில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வுஹான் மாகாணத்திலுள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்பனை செய்யப்பட்ட வெளவாலில் இருந்தே இந்த வைரஸ் பரவியுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட 9 பேருமே அந்த சந்தைக்கு சென்ற…
-
- 0 replies
- 471 views
-
-
தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதி ஆன்மீக நிகழ்ச்சியில் 20 பேர் பலி… February 2, 2020 தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கடும் நெரிசலில் 20 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் ஒன்றின் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நோய்களை குணமாக்கும் புனித எண்ணெய் வழங்கப்படுவதாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தப் புனித எண்ணெய்யை பெறுவதற்கு மைதானத்தில் திரண்டிருந்தோர் வரிசைகளை மீறி முன்னேறினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்ட…
-
- 0 replies
- 436 views
-
-
கொரோனா வைரஸ்: சீனாவிற்கு வெளியே பதிவான முதல் மரணம்! பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 44 வயதுடைய ஒருவர் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்தார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வுஹானில் இருந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்ற சீன நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் சீனாவிற்கு வெளியே இந்த வைரஸால் இறந்த முதல் நபர் இவர் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அவருக்கு பிலிப்பைன்ஸுக்கு வருவதற்கு முன்பே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவருடன் வந்த சீன பெண்ணும் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது குணமடைந்துள்ளார் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்…
-
- 3 replies
- 516 views
-
-
அமெரிக்க படையினர் கண்ணிவெடிகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார். முன்னைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் விதித்திருந்த தடையையே டிரம்ப் நீக்கியுள்ளார். ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை காரணமாக அமெரிக்க படையினர் மீது விதிக்கப்பட்ட கண்ணிவெடி பயன்பாட்டு தடையால் எதிரிகளுடனான மோதல்களின் போது அமெரிக்க படையினருக்கு பாதகமான நிலை ஏற்படுகின்றது என பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்ணிவெடி பயன்பாட்டு தடை காரணமாக எமது படையினருக்கு ஆபத்து ஏற்படுவதை அனுமதிக்க ஜனாதிபதி தயாரில்லை என பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னரை விட வலுவானதாக அமெரிக்க இராணுவத்தினை மாற்றிவருகின்றார் எனவ…
-
- 0 replies
- 315 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக செனட் சபையில் நடைபெறும் விசாரணையில், சாட்சிகளை ஆஜர்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை குடியரசுக் கட்சியினர் நிராகரித்தனர். அமெரிக்க முன்னாள் துணை அதிபரான ஜோ பிடென் மீது ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டிரம்ப் பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்டு உள்ளார். ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. அந்த தீர்மானம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட்சபையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், உக்ரைன் நாட்டுடன் முறையற்ற தொடர்பு கொண்ட போதும், அவரை பதவி நீக்க…
-
- 0 replies
- 290 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன் இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியமாகவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் க…
-
- 7 replies
- 1.1k views
-
-
சீனாவுடனான ஒற்றுமையை வெளிக்காட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தங்கள் நாட்டு மாணவர்களை மீட்கமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, நாடு, உலகம் ஆகியவற்றின் நன்மை கருதியே வுகானில் இருந்து பாகிஸ்தானியர்களை மீட்கவில்லை என்றார். ஒருவேளை பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டு எங்கள் நாட்டினரை வுகான் நகரில் இருந்து மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் காட்டுத்தீ போல பல இடங்களுக்கும் பரவிவிடும் என்று அவர் கூறினார். கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டுள்ளதால் தற்போது உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். ht…
-
- 7 replies
- 890 views
-
-
கொரோனா வைரஸ் – 213 பேர் பலி – சர்வதேச ரீதியில் அவசரநிலை பிரகடனம்… January 31, 2020 புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். குறைந்தளவு ஊட்டச்சத்தை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 18 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதனால் 98 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்…
-
- 0 replies
- 535 views
-
-
காணொளியை... முழுமையாக பாருங்கள்.
-
- 2 replies
- 950 views
-
-
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810பேர் உயிரிழப்பு! கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 810 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, பாலைவனம், ஆறுகள் என பல்வேறு வழித்தடங்கள் வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகளாக நுழையும் முயற்சியில் 2019ஆம் ஆண்டு 810 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளதாக உலக அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கள் நாடுகளில் நிலவும் வற…
-
- 0 replies
- 409 views
-
-
கொரோனா வைரஸ் : சீனாவுடனான எல்லையை மூடுகிறது ரஷ்யா கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவுடனான தனது எல்லையை மூடுவதாகவும், சீன நாட்டினருக்கு மின்னணு வீசா வழங்குவதை நிறுத்தப்போவதாகவும் ரஷ்யா இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடுகிறது. இதற்கான உத்தரவில் ரஷ்யப் பிரதமர் மிகைல் மிஷுஸ்ரின் (Mikhail Mishustin) கையெழுத்திடுள்ளார். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க நாம் அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ரஷ்யப் பிரதமர் தெரிவித்துள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இன்று வியாழக்கிழமை சீனக் குடிமக்களுக்கு மின்னணு வீசாக்கள் வழங்குவதை நிறுத்திவிடும். இந்த வீசாவானது தூர கிழக்கு மற்றும் மேற்கு ரஷ்யாவின் சில பகுதிக…
-
- 0 replies
- 636 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) நிபந்தனைகளை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கிகரித்துள்ளனர். பெல்ஜியத் தலைநைகர் ப்ரஸெல்ஸில் இடம்பெற்ற உணர்ச்சிமயப்பட்ட விவாதமொன்றைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தத்தை 621-49 என்ற வாக்குகளில் அடிப்படையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அங்கிகரித்திருந்தனர். வாக்களிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதைக் குறிக்கும் முகமாக, பிரியாவிடைகளைக் குறிப்பதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படும் ஸ்கொட்லாந்துப் பாடலான ஓல்ட் லங் சைனை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடியிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஒரு நாள் பிரி…
-
- 0 replies
- 389 views
-
-
தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியை கைப்பற்றிய சிரிய அரசுப் படை! by : Anojkiyan சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கியப் பகுதியை, ரஷ்யப் படைகள் ஆதரவுடன் சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. அலெப்போ மற்றும் டமாஸ்கஸை இணைக்கும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மாரெட் அல் நுமன் பகுதியையே சிரிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிரிய அரசுப் படைகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக சிரியாவில் பல கிராமங்களிலிருந்து தீவிரவாத படைகள் அகற்றப்பட்டுள்ளன. சிரிய மண்ணில் பயங்கரவாதம் …
-
- 0 replies
- 264 views
-
-
ட்ரம்பின்... இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சி பாலஸ்தீன அதிகாரிகளால் நிராகரிப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள இஸ்ரேலிற்கு சாதகமான மத்திய கிழக்கு சமாதான முயற்சியை பாலஸ்தீன அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் சமாதான திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமட் அப்பாஸ் ஜெரூசலேம் விற்பனைக்கில்லை என தெரிவித்துள்ளார். எங்கள் அனைத்து உரிமைகளும் விற்பனைக்கு உரியவையில்லை, அந்த உரிமைகள் குறித்து பேரம்பேச முடியாது எனவும் பாலஸ்தீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியின் யோசனையை பாலஸ்தீன, அராபிய கிறிஸ்தவ முஸ்லீம் குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேள…
-
- 0 replies
- 217 views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை Getty Images பலரால் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், பாலத்தீன நிலத்தில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை நடைபெற்ற முக்கிய தருணங்களைத் தொகுத்துள்ளோம். இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு என அவர் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித் திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம். சரி... இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் என்ன பிரச்சனை? அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் உருவா…
-
- 0 replies
- 740 views
-
-
அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளைத் தனிமைப்படுத்த அரசாங்கம் திட்டம் by : S.K.Guna சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குத் திரும்பி வரும் 600 பிரஜைகளை, கிறிஸ்மஸ் தீவில் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 1,200 மைல் தொலைவில் கிறிஸ்மஸ் தீவு உள்ளது. ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வந்த சீனாவின் தேசிய மகளிர் கால்பந்து அணி அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது. பெப்ரவரி 5 ஆம் திகதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்பத்திரண்டு வீரர்கள் மற்றும…
-
- 0 replies
- 802 views
-