Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரான்ஸில் ஒருமாதத்திற்கு மேலாக நீடித்த போராட்டத்திற்கு முதல் வெற்றி! பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டத்திற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஓய்வூதிய சீர் திருத்தத்தில் பல்வேறு மாற்றங்களை தொழிலாளர்கள் கோரிக்கையாய் வைத்துள்ள நிலையில், அரசு முதல்கட்டமாக வயது வரம்பு தொடர்பான பிரச்சனைக்கு மட்டும் தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளது. இதற்கமைய 62 வயதில் இருந்து 64 வயதாக மாற்றப்பட்ட ஓய்வூதிய காலத்தை, மீண்டும் 62 வயதாகவே மாற்றியுள்ளது. இதுகுறித்து பிரதமர் எத்துவார் பிலிப் கூறுகையில், ‘வேலை நிறுத்தம் ஆரம்பித்து இன்று 40 நாட்கள் ஆன நிலையில், அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. நான் குறுகிய கால நடவடிக்…

  2. 6 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை TWITTER சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …

  3. 180 பேருடன் பயணித்த விமானம் விபத்து! 180 பேருடன் பயணித்த விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைனுக்கு சொந்தமான போயிங் 737 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலெழுந்து சிறிது நேரத்திலேயே குறித்த விமானம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை. எ…

  4. யேர்மனியில் இன்று அதிகாலையில் Thueringen நகரத்திலும் Berlin நகரத்திலும் சில குறிப்பிட்ட இடங்களில் பொலீஸார் அதிரடியாகத் தேடுதல் மேற்கொண்டிருந்தார்கள். Chechnya நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரது வீடுகள் அலுவலகங்கள், கிட்டங்கிகள் போன்ற இடங்களிலேயே இந்தத் தேடுதல் அதிகாலையில் நடந்திருக்கிறது. பாரிய ஒரு தாக்குதலை யேர்மனியில் செய்வதற்கான திட்டமிடல் நடைபெறுகின்றது என்ற ஊகத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை நடத்தப்பட்டது என்று தெரியவருகிறது. இந்தத் தேடுதலில் எவரேனும் கைது செய்யப் பட்டார்களா அல்லது தேடுதலின் போது ஏதாவது தகவல்களைப் பெற்றார்களா? போன்ற விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. பொதுவாக யேர்மனிய நாட்டில் இருந்து கொண்டு ஒரு தாக்குதலுக்குத…

  5. பின்லாந்தில்.. நான்கு நாட்கள் மட்டும் வேலை என்ற செய்தி பொய்யானது! பின்லாந்தில் தொழிலாளர்கள் நான்கு நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என, அந்நாட்டின் பிரதமரும், உலகின் இளம் பிரதமரான சன்னா மரீன் அறிவித்ததாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ற் மாதம் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, சன்னா மரீன் அரசின் ஒரு குழு விவாதத்தில் இந்த யோசனையை சுருக்கமாக முன்வைத்தார், ஆனால் அவர் பிரதமரான பின்னர் இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என பின்லாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையுடன் 34 வயதான சன்னா மரீன் பின்லாந்தின் பிரதமராக…

  6. விமானத்தை தாக்கியதில் 176 பேர் பலி: ஈரான் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் முடிவு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு சென்ற போது அவரை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது.இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை வீசி ஈராக்கில் உள்ள அமெரிக்க படைதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் ஈரானில் இருந்து உக்ரைனுக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானத்தை எதிரி நாட்டு விமானம் என்று தவறுதலாக நினைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியது.இதில் 176 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஈரான் மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். சுவீடன், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயணிகளும் உயிரிழந்தனர்.முதலில் விமானம் தொழில…

  7. போர் தேவையில்லை: முடிவு ஈரானிடம் தான் உள்ளது என்கிறார் ட்ரம்ப்! ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கிடையில் போர் பதற்றம் நிலவி வருகின்ற நிலையில், போர் தேவையில்லை என்ற முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கு ஈரானிடம் தான் முடிவு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இருநாடுகளும் தற்போது மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால், மூன்றாம் உலகப் போர் வெடித்து விடுமோ என்ற அச்சம் உலகநாடுகள் மத்தியில் நிலவி வருகின்றது. ஆகையால் இருநாடுகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்படுத்த பிரித்தானியா, சீனா, ரஷ்யா, சௌதி ஆகிய நாடுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்த நிலையில் இப்பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டரில் பதிவொன்ற…

  8. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானிய வீராங்கனை நாட்டை விட்டு வெளியேறினார் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈரானின் ஒரே பெண் வீராங்கனையான கிமியா அலிசாதே தன் நாட்டை விட்டு வெளியேறியதாக அறிவித்துள்ளார். "போலித்தனம், பொய், அநீதி, முகஸ்துதி" ஆகியவை நிறைந்த ஈரானின் ஓர் அங்கமாக இருக்க தான் விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறியதாக 21 வயதாகும் அலிசாதே தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஈரானில் ஒடுக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான பெண்களில் தானும் ஒருவர் என்றும் தனது வெற்றியை இரான் அரசு அதிகாரிகள் பிரசார கருவியாக பயன்படுத்தியதாகவும் அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார். தாம் தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்பதை அலிசாதே தெரிவிக்கவில்லை எ…

  9. பிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி தம்பதி பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அவர்களின் இந்த முடிவு பிரிட்டனில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் குழந்தை ஆர்ச்சியை வளர்ப்பதில் ஐக்கிய இராச்சியத்திற்கும் வட அமெரிக்காவிற்கும் இடையில் தங்கள் நேரத்தை செலவு செய்ய போகிறார்களாம். அதேபோல் இவர்கள் சொந்தமாக வேலை பார்த்து உழைக்க உள்ளனர். பரம்பரை சொத்து வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். சொந்தமாக பொருளாதார ரீதியாக வாழ்க்கையில் நிறைவு பெற வேண்டும் என்று இவர்கள் கூறியுள்ளனர். …

  10. விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு எதிராக போராட்டம் – தெஹ்ரானில் பிரித்தானிய தூதுவர் கைது! உக்ரைன் பயணிகள் விமானம் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்ந்து நொறுங்கியதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக ஈரானுக்கான பிரித்தானிய தூதர் தெஹ்ரானில் கைது செய்யப்பட்டுள்ளார். 176 பேர் கொல்லப்பட்ட உக்ரேனிய பயணிகள் விமானத்தை தற்செயலாக சுட்டதாக அரசாங்கம் கடந்த புதன்கிழமை அறிவித்ததை அடுத்து ஈரானுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் போராட்டங்கள் தொடர்பாக தூதுவர் றொபேர்ட் மெக்கெய்ர் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதேவேளை குறித்த கைது குறி…

  11. சோலெய்மனியால் இலக்குவைக்கப்பட்ட 4 அமெரிக்கத் தூதரகங்கள்: ட்ரம்புக்கு கிடைத்த தகவல் ஈரான் புரட்சிப் படையின் தளபதி காசிம் சோலெய்மனியை அமெரிக்கா ஈராக்கில் வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது. இதனையடுத்து ஈரான், அமெரிக்க நிலைகள் மீது ஈராக்கில் தாக்குதல் நடத்திய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது. இந்நிலையில், காசிம் சோலெய்மனியை கொலை செய்வதற்கு உத்தரவிட்டமை தொடர்பான அமெரிக்க ஜனாதிபதி சில காரணங்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “காசிம் சோலெய்மனி கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த தாக்குதலை ஈரான்தான் நடத்திய…

  12. ஈராக்கின் அமெரிக்க தளம் மீது 6 ரொக்கட்டுகள் வந்து வீழ்ந்துள்ளதாக பி.பி.சி தெரிவிக்கிறது. News > World > Middle East Related: US defence secretary questioned on Iran tensions Iran crisis: Tehran launches missile attack on US-Iraqi Ain al-Asad air base Republican Guard fires 'tens' of warheads, state TV reports say Jon Sharman, Andrew Buncombe @AndrewBuncombe 18 minutes ago Iran has claimed res…

  13. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் எதிரொலி- ஈரானில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்- டிரம்ப் ஆதரவு உக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஏற்றுக்கொண்டுள்ளதை தொடர்ந்து ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் டெஹ்ரானில் ஆயிரக்கணக்கானவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள அமீர் கபீர் பல்கலைகழகத்திற்கு வெளியே பெருமளவானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனியை பதவி விலகுமாறும், விமானம் வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர்களை தண்டிக்குமாறும் கோரி ஆர்ப்பாட்டக்கார…

  14. அரபு நாடுகளிலேயே நீண்ட காலம் மன்னராக இருந்தவரான ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு முன்பு சுல்தானாக இருந்த தனது தந்தையையே, பிரிட்டிஷ் உதவியுடன் ஆட்சியில் இருந்து நீக்கி, 1970இல் இவர் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது இவருக்கு வயது 29. ஓமனின் பிரதமர், பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர், நிதியமைச்சர், வெளியுறவு அமைச்சர் ஆகிய உட்சபட்ச பதவிகளையும் இவர் தன் வசமே வைத்திருந்தார். இவரது இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ஓமனின் அடுத்த சுல்தானாக இவரது ஒன்று விட்ட சகோதரர் ஹைத்தம் பின் தாரிக் அல் சைத் பதவியேற்றார். கடந்த மாதம் சுல்தான் காபூஸ், பெல்ஜியம் நாட்டில் சிக…

    • 0 replies
    • 429 views
  15. ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் தஞ்சம்- ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம் அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட…

  16. காசீம் சூலேமானி: இரான் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரை கொன்றது அமெரிக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES / AFP Image captionஇரானின் புரட்சிகர காவலர் படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் காசீம் சூலேமானி இரானின் புரட்சிகர காவல் படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசீம் சூலேமானி அமெரிக்கப் பட…

  17. ஈரான் தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை பொய்- ஈரான் தகவல் ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் எந்தவித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லையென வெள்ளை மாளிகை குறிப்பிடும் தகவல்கள் பொய் என ஈரான் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது. அந்நாட்டின் ஆன்மீக தலைவர் ஆயதுல்லா அலி கொமேனியின் கீழ் உள்ள செய்திச் சேவையான “மெஹர்” ஊடகமே இதனைக் கூறியுள்ளது. ஈரானின் தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஈரானின் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீ…

    • 0 replies
    • 711 views
  18. சுலேமானீ கொலை: இஸ்ரேல் மீது இரான் கோபப்படுவது ஏன்? படத்தின் காப்புரிமை EPA இரானின் முக்கிய ராணுவ தளபதிகளில் ஒருவரான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்ற பிறகு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவான பதற்ற நிலை இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக, முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ள அமெரிக்கா - இரான் இடையிலான உறவில் மோதல் போக்கு நிலவுகிறது. சுலேமானீயை கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது கடந்த புதன்கிழமை இராக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இந்த தாக்குதலில் தங்களது வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்ப…

    • 0 replies
    • 722 views
  19. இரான் - அமெரிக்கா மோதல்: யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? முனைவர் சனம் வகில் பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார், இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இவ்வாறான தாக்குதலால் யார் லாபம் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? அடுத்து இரானும் அமெரிக்காவும் என்ன செய்ய போகின்றன? இங்கே வெற்றியோ தோல்வியோ அடைந்தது யார்? …

    • 0 replies
    • 769 views
  20. ஈரானுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு! ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ‘ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனியை தற்காப்புக்காகவே கொலை…

  21. அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்படும் – ஈரான் அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து உதைத்து வெளியேற்றப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி ஐ.எஸ். மற்றும் அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக வீரமாகப் போராடியவர். அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால் ஐரோப்பிய தலை நகரங்கள் தற்போது ஆபத்தில் இருந்திருக்கும். சோலெய்மனியின் படுகொலைக்கு நாங்கள் அளிக்கும் இறுதிப் பதில் அமெரிக்காவின் படைகள் அனைத்தும் இந்தப் பிராந்தியத்தில் இருந்து அடித்து அனுப்பப்படுவதாகும்” என…

  22. பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு.. #ஈரானில் தொடரும் சோகம். ஈரானில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பயணிகளுடன் சென்ற பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்…

    • 0 replies
    • 463 views
  23. ஈரானுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு! by : Anojkiyan ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ‘ஈரா…

    • 0 replies
    • 1.2k views
  24. பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும், அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்காக சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள…

  25. அமெரிக்க இராணுவத்தை.. தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்! மூன்றாம் உலக போர் எப்போது ஆரம்பமாகும் என உலகநாடுகளே அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவே பல அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்தி வந்தநிலையில், முதல்முறையாக அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் இராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. இதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.