உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26866 topics in this forum
-
ஈரான் தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை பொய்- ஈரான் தகவல் ஈராக்கின் பக்தாத் நகரிலுள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் எந்தவித உயிர்ச் சேதமும் இடம்பெறவில்லையென வெள்ளை மாளிகை குறிப்பிடும் தகவல்கள் பொய் என ஈரான் அரச ஊடகமொன்று அறிவித்துள்ளது. அந்நாட்டின் ஆன்மீக தலைவர் ஆயதுல்லா அலி கொமேனியின் கீழ் உள்ள செய்திச் சேவையான “மெஹர்” ஊடகமே இதனைக் கூறியுள்ளது. ஈரானின் தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஈரானின் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீ…
-
- 0 replies
- 714 views
-
-
சுலேமானீ கொலை: இஸ்ரேல் மீது இரான் கோபப்படுவது ஏன்? படத்தின் காப்புரிமை EPA இரானின் முக்கிய ராணுவ தளபதிகளில் ஒருவரான காசெம் சுலேமானீயை அமெரிக்கா கொன்ற பிறகு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உருவான பதற்ற நிலை இன்னமும் தொடர்ந்து வருகிறது. இந்த சம்பவத்தின் காரணமாக, முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ள அமெரிக்கா - இரான் இடையிலான உறவில் மோதல் போக்கு நிலவுகிறது. சுலேமானீயை கொன்றதற்கு பழிவாங்கும் வகையில் இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகளின் மீது கடந்த புதன்கிழமை இராக் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இந்த தாக்குதலில் தங்களது வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்ப…
-
- 0 replies
- 726 views
-
-
இரான் - அமெரிக்கா மோதல்: யாருக்கு லாபம்? யாருக்கு இழப்பு? முனைவர் சனம் வகில் பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images இரானின் முக்கிய படைத் தளபதியான காசெம் சுலேமானீ அமெரிக்காவல் கொல்லப்பட்டார், இரானும் பதிலடியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே பதற்றமும், இந்த சூழல் போருக்கு வித்திடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இவ்வாறான தாக்குதலால் யார் லாபம் அடைகிறார்கள்? யார் பாதிக்கப்படுகிறார்கள்? அடுத்து இரானும் அமெரிக்காவும் என்ன செய்ய போகின்றன? இங்கே வெற்றியோ தோல்வியோ அடைந்தது யார்? …
-
- 0 replies
- 773 views
-
-
ஈரானுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு! ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ‘ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனியை தற்காப்புக்காகவே கொலை…
-
- 0 replies
- 460 views
-
-
அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்படும் – ஈரான் அமெரிக்கப் படைகள் அனைத்தும் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து உதைத்து வெளியேற்றப்படும் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “ஈரான் இராணுவத் தளபதி காசிம் சோலெய்மனி ஐ.எஸ். மற்றும் அல்-குவைதா போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக வீரமாகப் போராடியவர். அவர் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடவில்லை என்றால் ஐரோப்பிய தலை நகரங்கள் தற்போது ஆபத்தில் இருந்திருக்கும். சோலெய்மனியின் படுகொலைக்கு நாங்கள் அளிக்கும் இறுதிப் பதில் அமெரிக்காவின் படைகள் அனைத்தும் இந்தப் பிராந்தியத்தில் இருந்து அடித்து அனுப்பப்படுவதாகும்” என…
-
- 0 replies
- 687 views
-
-
பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு.. #ஈரானில் தொடரும் சோகம். ஈரானில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர். ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பயணிகளுடன் சென்ற பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்…
-
- 0 replies
- 466 views
-
-
ஈரானுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு! by : Anojkiyan ஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல் காசிம் சோலெய்மனி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடும் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த பதற்ற நிலை இரு நாடுகளுக்கிடையிலான போராக மாறினால், உலக நாடுகள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் மிக மோசமானதாக இருக்கும் என்பதால் சீனா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. இதற்கிடையில், ‘ஈரா…
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதத்துக்காக ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொல்லும் அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்கா, டெல்லி முதல் லண்டன் வரையிலான பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு அவர் மூளையாக செயல்பட்டார் என்றும், அதனாலேயே கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பயங்கரவாதத்துக்காக சுலைமானியை ஆளில்லா விமானம் மூலம் கொன்ற அமெரிக்கா, அதே காரணத்துக்காக பாகிஸ்தான் ராணுவ தளபதிகளை ஏன் கொல்லக்கூடாது என்று பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் விவகார நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள…
-
- 3 replies
- 671 views
-
-
அமெரிக்க இராணுவத்தை.. தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்! மூன்றாம் உலக போர் எப்போது ஆரம்பமாகும் என உலகநாடுகளே அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவே பல அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்தி வந்தநிலையில், முதல்முறையாக அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் இராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. இதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் …
-
- 0 replies
- 372 views
-
-
ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவர் கத்தியுடன் போலீசாரை நோக்கி வந்தார். எச்சரித்தும் நிற்காமல் தாக்க முயன்ற அவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451870 Gelsenkirchen knifeman killed by German police 'mentally ill' Image copyright EPA Image caption The attack happened outside a police station in Gelsenkirchen German police have shot dead a man who tried to attack officers with a knife in the western city of Gelsenkirchen. Police say a search of the man's flat later did not suggest a terrorist motive. The 37-year-old Turkish citizen is thoug…
-
- 1 reply
- 524 views
-
-
திபெத் பகுதியில் நவீன ஆயுதங்கள் சோதிக்கும் சீன இராணுவம்! சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட திபெத் பகுதியில் சீன இராணுவம் முன்னெடுத்துவரும் பயிற்சியின்போது, நவீன ஆயுதங்கள் சோதித்துப் பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து வெளியாகும் ‘குளோபல் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘சீன இராணுவத்தின் திபெத் படைப் பிரிவானது, புத்தாண்டு பயிற்சியைத் தொடங்கியது. இதில், ஹெலிகொப்டர்கள், நவீன துப்பாக்கிகள், ஏவுகணைகள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. திபெத் பீடபூமியில் செயற்படக் கூடிய வகையிலான நவீன பீரங்கிகளும் பயிற்சியின்போது சோதித்துப் பார்க்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 546 views
-
-
ஈராக் பாராளுமன்றில் இன்றைய தினம் வெளிநாட்டு இராணுவத்தினர் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலினால் ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் குவாசிம் சுலைமான் படு கொலை செய்யப்பட்டமைக்கிணங்கவே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் பக்தாதாத்தில் உள்ள ஈராக் பாராளுமன்ற உறுப்பினர்கள், வான்வெளி, நிலம் உள்ள எந்த காரணத்தையும் வெளிநாட்டு இராணுவத்தினர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். ஈராக்கின் பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆற்றிய உரையில் வெளிநாட்டு இராணுவ பிரசன்னத்தை முடிவுக்குக் கொண்டுவ…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் இராணுவ நிலைகள் தாக்கப்படும் – ஈரான் அறிவிப்பு அமெரிக்காவின் இராணுவ நிலைகளுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை ஈரான் மேற்கொள்ளும் என அந்நாட்டு ஆன்மீகத் தலைவரின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹொசைன் டெஹ்கான் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய தளபதியை கொலை செய்தமைக்கான பதிலடி நிச்சயம் இராணுவ ரீதியிலானதாக காணப்படும் எனவும் இந்தத் தாக்குதல் இராணுவ இலக்குகள் மீது மேற்கொள்ளப்படும் என்றும் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஒரு போதும் யுத்தத்தை விரும்பவில்லை என எங்கள் தலைமை தெரிவித்துள்ளது. அமெரிக்காவே யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் நடவடிக்கைகளுக…
-
- 1 reply
- 739 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு, நடப்பு வாரத்தில் முன்னெடுக்கப்படும் என, அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார். ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி அண்மையில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் உள்ளிட்டவற்றில், அமெரிக்கர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டும், அமெரிக்கர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதை அடிப்படையாக வைத்தும், மக்கள் பிரதிநிதிகள் அவையில் தீர்மானத்தை தாக்கல் செய்து இயற்ற உள்ளதாக நான்சி பெலோசி தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ஒப்புதலை பெறமால், டிரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக எ…
-
- 0 replies
- 631 views
-
-
கென்யாவில் அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட ராணுவ தளத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியாவை ஓட்டி உள்ள லமு கவுன்டியில் இருக்கும் மாண்டா பே தளத்தை அமெரிக்க ராணுவமும், கென்ய ராணுவம் பயன்படுத்தி வருகின்றன. அந்த தளத்தின் மீது சோமாலியாவை சேர்ந்த அல்கொய்தா ஆதரவு அல் சாபாப் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் முகமூடி அணிந்துவந்து அதிகாலை திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டு விட்டதாக கென்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் கென்யா, அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்களா எனத் தெரிவிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு பொறுப்பேற்று அதுதொட…
-
- 0 replies
- 554 views
-
-
அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! > NEWS & ANALYSIS > WORLD > அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! ENVIRONMENT WORLD அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! January 2, 2020 marumoli 0 Comments ‘Think . Act . Responsibly’ ஜனவரி 02, 2020 பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாத அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் . சிங்கப்பூர் நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவின் தண்ணீரைக் கனடிய நிறுவனமொன்றிற்…
-
- 0 replies
- 939 views
-
-
சட்டவிரோத எரிபொருள் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கையர்கள் 7 பேர் உட்பட 66 பேர் நைஜீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். நைஜீரிய கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சம்பவம் தொடர்பில் 57 நைஜீரிய பிரஜைகளும் 7 இலங்யைர்களுமேக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அந்நாட்டு கடற்படையினரால் 7 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு , இவ்வாறு மேற்கொண்ட சட்டவிரோத எரிபொருள் மோசடி அதிகரித்திருந்தால் எரிபொருள் துறைக்கு மிக பெரிய அளவிலான பாதிப்பு மற்றும் நஷ்டம் ஏற்பட்டுருக்குமென நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/7250…
-
- 0 replies
- 388 views
-
-
ஈராக் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுத குழுக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் ஈராக்கிய தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்துள்ளது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈராக்கில் கடும்பாதுகாப்பிற்கு மத்தியில் காணப்படும் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தின் மதில் மற்றும் வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழமையாக தடை செய்யப்பட்ட பச்சை வலயத்தின் ஊடாக ஈரானின் ஆதரவாளர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு பேரணியாக சென்ற பின்னர் தூதரகத்திற்கு …
-
- 6 replies
- 791 views
-
-
அமெரிக்கா, தைவான் இடையே போர்ப் பயிற்சி ஒத்திகை நடந்து வரும் நிலையில் இரு நாடுகளையும் எச்சரிக்கும் வகையில் புதிய வீடியோ ஒன்றை சீனா வெளியிட்டுள்ளது தென் சீனக் கடல் பகுதியில் தைவானும், அமெரிக்காவும் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குறிப்பிட்ட கடல் பகுதியை உரிமம் கொண்டாடி வரும் சீனா நேற்று புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து போர் விமானம் புறப்பட்டுச் செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. ஃபிளையிங் ஷார்க் எனப்படும் ஜே 15 என்ற அதிநவீன விமானத்தை புதிய கப்பலில் இயக்கி தனது வலிமையை பறைசாற்றி உள்ளது. சீனா வெளியிட்டுள்ள புதிய வீடியோ அமெரிக்கா மற்றும் தைவானை எச்சரிக்கும்…
-
- 0 replies
- 402 views
-
-
பிரான்ஸ் தலைநகரமான பாரிஸில் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பூங்காவில் கத்தி குத்து மேற்கொண்ட நபரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரவித்துள்ளது. அதேவேளை கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி சுமார் நான்கு பேர் வரையில் படுகாயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகரிலிருந்து தெற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வில்லேஜுஃப் நகரில் உள்ள பூங்காவிலேயே சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு , சந்தேக நபரையும் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 351 views
-
-
மன்னிப்பு கோரினார் திருத்தந்தை! மக்கள் சந்திப்பின் போது பெண் ஒருவரின் கையைத் தட்டிவிட்டதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். இத்தாலியிலுள்ள சென்ட் பீற்றர் சதுக்கத்தில் புத்தாண்டின் முதல் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு முன்னர் மக்களை திருத்தந்தை பிரான்சிஸ் சந்தித்தார். இதன்போது திருத்தந்தையை கண்ட உற்சாகத்தில் அவரின் கையை பெண்மணி ஒருவர் இழுத்திருந்தார். இதன் காரணமாக நிலைதடுமாறி விழப்போன திருத்தந்தை பிரான்சிஸ் பெண்ணின் கையைத் தட்டிவிட்டிருந்தார். இந்தநிலையிலேயே தற்போது குறித்த விடயம் தொடர்பாக திருத்தந்தை பிரான்சிஸ் மன்னிப்புக் கோரியுள்ளார். http://athavannews.com/மன்னிப்பு-கோரினார்-திருத/
-
- 0 replies
- 378 views
-
-
“புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்த வடகொரியா தீர்மானம் வட கொரியாவின் தலைவர் அணுசக்தி திட்டங்களை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்காலத்தில் ஒரு “புதிய மூலோபாய ஆயுதத்தை” அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு இன்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த அவர், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இன்னும் இடம் இருப்பதாகவும் அணுவாயுதக் களைவு குறித்து முடக்கப்பட்டுள்ள பேச்சை, அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இழுத்தடிப்பதாகவும் குற்றம் சாட்டினார். அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த வாரம் நான்கு நாட்கள் தொழிலாளர் கட்சி அதிகாரிகளின் கூட்டத்திற்கு கிம் ஜோங் உன் தலைமை தாங்கினார். இதன்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை…
-
- 0 replies
- 369 views
-
-
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன், புத்தாண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதன் தொடர்பில் பிளவுபட்ட தம் நாட்டை ஒன்றிணைக்கவுள்ளதாகக் கூறியுள்ளார். சுமார் 2 வாரங்களுக்கு முன் தேர்தல் வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற ஜோன்சன், தம் புத்தாண்டு உரையில் அவ்வாறு கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் வாக்களித்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள தருணத்தில் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவது தம் முதல் பணி எனத் ஜோன்சன், சொன்னார். பிரெக்சிட் உடன்பாட்டிற்கு முதற்கட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளார் அவர். இனி நாடாளுமன்றம் அதனை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும். அதன்பின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ப…
-
- 0 replies
- 665 views
-
-
முன்னர் அங்கொன்று இங்கொன்றாக தமிழ் பெயர்களில் ஸ,ஷ,ஜ,ஹ,ஶ்ரீ போன்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும். இப்பொழுதல்லாம் அந்த எழுத்துக்கள் இல்லாத தமிழர்கள் பெயரே இல்லை எனலாம். எங்கிருந்து இந்த மோகம் வந்தது அல்லது ஏன் வந்தது என்பதுதான் தெரியவில்லை. கந்தசாமி,சண்முகம், குமாரசாமி, கமலா விமலா, பத்மினி போன்ற பெயர்கள் எல்லாம் பழசாகிவிட்டன போலும். யேர்மனியர்கள் இந்த பெயர் விடயத்தில் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களில் பலர் பழையதையே விருப்பத்துடன் தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள். எங்காவது கலப்புத் திருமணங்கள் நடக்கும் பட்சத்தில் புதுப் பெயர்கள் வந்து சேர்ந்து கொள்வது இயல்பு. ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த ஆண்டு பிறந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்களில் எந்தப் பெயர்…
-
- 0 replies
- 1k views
-
-
ரஷ்யாவில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்த்த திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதற்காக, அதிபர் டிரம்ப்புக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் நன்றி தெரிவித்தார். பீட்டர்ஸ்பெர்க் நகரில் தாக்குதல் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரஷிய பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இதில் சந்தேகப்படும்படியாகக் கைது செய்யப்பட்ட இரு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவர்களிருவரும் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடமிருந்த பொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். இந்நிலையில், சரியான நேரத்தில் தகவல் அளித்ததற்காக டிரம்ப்புக்கு அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட…
-
- 0 replies
- 426 views
-