உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், குர்து போராளிக் குழு படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் குர்து படைகளை தீவிரவாதக் குழுவாகக் கருதி துருக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதிகளில் இருந்து அமெரிக்கா தனது வீரர்களை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, துருக்கி படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. குர்து படைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், படைகளை திரும்பப் பெற்ற விவகாரத்தில் தான் தனித் தீவு போன்று ஒதுக்கப்ப…
-
- 2 replies
- 351 views
-
-
வடக்கு சிரியா மீது துருக்கி தாக்குதல் – ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் October 12, 2019 குர்து படைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளியேறியவர்கள் அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரங்களில் உள்ள பாடசாலைகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி மேற்கொண்டுள்ள இந்தத் தாக்குதலுக்குப் பல மனிதாபிமான குழுக்கள் கவலை தெரிவித்துள்ள அதேவேளை யார் என்ன சொன்னாலும் தாங்கள் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என துருக்கி ஜனாதிபதி எர்துவான் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் படைகளுக்…
-
- 0 replies
- 333 views
-
-
எத்தியோப்பியப் பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்கு (Abiy Ahmed) அமைதிக்கான நோபல் பரிசு 2019 வழங்கப்பட்டுள்ளது. அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியா கடந்த ஆண்டு எரித்திரியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 1998-2000 எல்லைப் போரைத் தொடர்ந்து 20 ஆண்டுகாலம் நிலவிய ராணுவ நெருக்கடிக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டது. ஒஸ்லோவில் நடைபெற்ற 100 வது அமைதிக்கான நோபல் பரிசை அறிவிக்கும் விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு 2019 எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமதுக்குக் கிடைத்துள்ளது. ஒன்பது மில்லியன் ஸ்வீடிஷ் கிரௌன்ஸ் (£730,000) மதிப்ப…
-
- 0 replies
- 369 views
-
-
ஹாங்காங்கில் போராட்டத்தில் வன்முறையாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் ஆப்-ஐ நீக்குவதற்கு அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.கே. மேப் லைவ் எனும் ஆப் பயன்படுத்தி போராட்டங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை போராட்டக்காரர்கள் கண்டறிந்து அங்கு சென்று சேர்ந்து கொள்வதாகக் கூறப்படுகிறது. காவல்துறை செக் போஸ்ட்களில் இருந்து தப்புவது, அவர்களைத் தாக்குவது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதாகவும், அதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் துணை போவதாகவும் சீன பத்திரிக்கைகள் சிலவற்றில் அரசு குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகின. ஹாங்காங் ரவுடிகளுக்கு ஆப்பிள் துணைபோகிறதா? என அந்நாட்டு அரசு ஊடகங்களில் ஒன்றான பீபிள்ஸ் ட…
-
- 1 reply
- 380 views
-
-
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரின் ஆர்ன்டேல் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட முயன்றார் என்ற சந்கேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவர் வணிகவளாகத்திற்குள் பாரியகத்தியால் தாக்குதலை மேற்கொண்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் என கருதப்படும் நபர் வணிகவளாகத்தில் காணப்பட்டவர்கள் மீது தாக்குதலை நடத்தினார் என காவல்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த ஆயுதமேந்தாத காவல்துறையினரையும்; குறிப்பிட்ட நபர் கத்தியால் குத்த முயன்றார் அவர்களை துரத்த முயன்றார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முதலில் சாதரண தாக்குதல் முயற்சி என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை கை…
-
- 0 replies
- 489 views
-
-
படத்தின் காப்புரிமைREUTERS 2019ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். "அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்" நடவடிக்கைகளை எடுத்ததற்காக அபிக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1998-2000 இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற எல்லைப் போரைத் தொடர்ந்து, ஏரிட்ரேயாவுடன் 20 ஆண்டுகாலமாக எத்தியோப்பியாவுக்கு நிலவி வந்த ராணுவ ரீதியிலான சிக்கலை கடந்த ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் மூலம் இவர் முடிவுக்கு கொண்டுவந்தார். அமைதிக்கான நோபல் பரிசை பெறும் 100ஆவது நபர்/அமைப்பு எனும் பெருமையை அபி அஹ்மத் பெற்றுள்ளார். வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், அபிக்கு நோபல் பரிசுட…
-
- 2 replies
- 600 views
-
-
குர்திஸ் சிறையிலிருந்த மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது அமெரிக்கா துருக்கி சிரியாவின் வடபகுதி மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஐஎஸ் பீட்டில்ஸ் எனப்படும் ஆபத்தான பயங்கரவாதிகளை தனது கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசென்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈராக்கினதும் சிரியாவினதும் சில பகுதிகளை ஐஎஸ் அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவேளை மேற்குலகை சேர்ந்தவர்களை பிடித்து பணயக்கைதிகளாக வைத்திருந்த பின்னர் படுகொலை செய்த லண்டனை சேர்ந்தஐஎஸ் தீவிரவாதிகள் ஐஎஸ் பீட்டில்ஸ் என அழைக்கப்படுகின்றனர். லண்டனை சேர்ந்த இருவரும் தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ளனர…
-
- 0 replies
- 436 views
-
-
புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் lingga அக்டோபர் 10, 2019110 பினாங்கு, அக்டோபர் 10- புத்தம் புதிய மாற்றங்களுடன் அறிவார்ந்த மாநிலமாக பினாங்கு திகழும் என வீடமைப்பு, ஊராட்சி மன்றம் மற்றும் நகரப் பெரு வளர்ச்சித் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெகதீப் சிங் டியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கான பற்பல வசதிகளை நிர்மாணிப்பதில் அதிநவீன நுட்பங்களுடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. இதனை மெய்பிக்கும் வகையில் தற்போது மக்கள் பல்வேறு துறைகளில் பல்வகையான வசதிகளை எதிர் கொண்டிருப்பது இதற்கு சான்று என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பல்லூடக தொலைத் தொடர்பு தொழில் நுட்ப முற…
-
- 0 replies
- 407 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை இம்மாத இறுதிக்குள் வெளியேற்றும் தனது உறுதிமொழியை பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நிறைவேற்றாவிட்டால், அடுத்த மாதம் 26ஆம் திகதி பொதுத் தேர்தலொன்றை பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆதரிக்கவுள்ளது என சண் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலொன்றுக்குச் செல்வதற்கான வாக்களிப்பொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இம்மாதம் 21ஆம் திகதி முன்மொழிந்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலொன்றுக்குச் செல்ல தொழிலாளர் கட்சி இணங்கும் என சண் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ப…
-
- 0 replies
- 468 views
-
-
ஜேர்மனியில் துப்பாக்கி பிரயோகம் – இருவர் உயிரிழப்பு! ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஜேர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹாலே நகரத்தில் உள்ள யூத வழிபாட்டு ஸ்தலத்திற்கு அருகிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தப்பி ஓடிய மற்றவர்கள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்பதால் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. http://athavannews.com/ஜேர்மனியில்-துப்பாக்கி-ப/
-
- 0 replies
- 372 views
-
-
ட்ரம்பிற்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது – வெள்ளை மாளிகை! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வொஷிங்டனில் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டிஃபானி கிரிஷம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், உக்ரைன் அரசை ட்ரம்ப் மிரட்டியதாக நடத்தப்படும் விசாரணை, முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது ஆகும். இந்த விவகாரத்தில் ட்ரம்ப் மீது எந்தத் தவறும் இல்லை. இது ஜனநாயகக் கட்சியினருக்கு நன்றாகவே தெரியும். இந்த விசாரணையை நடத்துவது மூலம் 2016-ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராகவும், அம…
-
- 2 replies
- 672 views
-
-
ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, இந்தாண்டு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியை மேம்படுத்தியதற்காக இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.உலகின் மிக உயரிய விருதுகளில் நோபல் பரிசுக்கான, இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மருத்துவம், இயற்பியலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வேதியியல் துறைக்கான நோபல் விருதை தேர்வுக்குழு சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவித்தது. இவ்விருது, வேதியியல் பேராசிரியர்களான அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் ஜான் குட்டெனப், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் மிஜோ பல்கலைக்கழகத்தின் அகிரா யோஷினோ ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இ…
-
- 0 replies
- 453 views
-
-
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஒப்பரேசன் பீஸ் ஸ்பிரிங் என்ற நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக துருக்கியின் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துருக்கி விமானதாக்குதல்களுடன் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது எனினும் பின்னர் ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெறுகின்றன. சிரியாவின் எல்லை நகரான டெல்அப்யாட்டில் பாரிய வெடிப்புச்சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப்பகுதியிலிருந்து மக்கள் பெருமளவில் வெளியேறி வருகின்றனர். ரஸ் அலி அய்ன் என்ற நகரத்திலும் பாரிய சத்தங்கள் கேட்டதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. விமானங்களின் சத்தங்களை கேட்க முடிகின்றது ரஸ் அலி அய்ன் நகரிலிருந்து கரும…
-
- 11 replies
- 1.6k views
-
-
ஜேர்மனியில் யூதவழிபாட்டு தலமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் உள்ள ஹலே நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன,சந்தேகநபர்கள் வாகனத்தில் தப்பியோடியவண்ணமுள்ளனர் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடனடியாக காவல்துறையினரை அங்கு அனுப்பியுள்ளோம்,இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் குற்றவாளிகள் தப்பியோடுகின்றனர் வீடுகளிற்குள் இருங்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இராணுவசீருடை அணிந்தவர்களே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் பெண்ணொருவர் உட்பட இரு…
-
- 0 replies
- 310 views
-
-
தாய்மொழிப் பள்ளிகள் விவகாரத்தில் உத்தரவாதம் அளிப்பீர்! -கெராக்கான் வலியுறுத்து lingga அக்டோபர் 9, 2019அக்டோபர் 9, 2019220 கோலாலம்பூர், அக்.9- தமிழ், சீனப்பள்ளிகள் நிலைநாட்டப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கெராக்கான் கேட்டுக் கொண்டது. தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்படாது என்று பாக்காத்தான் கூட்டணி தேர்தல் கொள்கை அறிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாக வரலாற்றில் மிகச் சிறந்த துணை கல்வியமைச்சரான தியோ நோ சிங் கூறினார் . ஆனால், இந்தத் தேர்தல் கொள்கை அறிக்கை என்பது சட்டப்பூர்வ சாசனம் அல்ல. மேலும் இவ்வறிக்கை ஒரு பைபிள் அல்ல என்றும் இதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் துன் …
-
- 0 replies
- 525 views
-
-
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை! அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா சிறிய ரக மற்றும் இடைநிலைத்தூர ஏவுகணைகளை சோதனை செய்து வருவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்தநிலையில் ஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் வடகொரியாவினால் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் சாங் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும்…
-
- 1 reply
- 723 views
-
-
மூன்று விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 2019 பிரபஞ்சம் பற்றிய “பெரு வெடிப்பு” ஆராய்ச்சிக்காகவும் மற்றும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்காகவும் மூன்று விஞ்ஞானிகளுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பௌதீகவியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற விழாவில் ஜேம்ஸ் பீபிள்ஸ், மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். பிரபஞ்சத்தின் பரிணாமம் பற்றிய பணிக்காக பீபிள்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை மிஷேல் மயோர் மற்றும் டிடியர் கொயலோஸ் ஆகியோர் சூரியனைப் போன்ற ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்தப் பரிசை வென்றுள்ளனர். வெற்றியாளர்கள் மூவரும் ஒன்பது மில்லியன் குரோனரின் (£738,000) பரிசுத் தொகையைப் ப…
-
- 0 replies
- 326 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தம் ஒன்று சாத்தியமானதா என்று இந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை ஒப்பந்தமொன்று மதிக்க முடியுமா எனப் பார்ப்பதை நோக்கி பேச்சுக்கள் தற்போது விரைவாக முன்னேறுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இம்மாதம் 31ஆம் திகதியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் தாமதமொன்றுக்கு இருக்கும் என சிந்திப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளீர்க்கப்படக்கூடாது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். எவ்வாறெனினும், ஐரோப்பிய…
-
- 1 reply
- 438 views
-
-
நியூயார்க்: 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா.வில், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.வின்., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை. அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்…
-
- 7 replies
- 938 views
-
-
ஜேர்மனியில் சிரிய பிரஜையொருவர் சாரதியை இழுத்துவிழுத்திவிட்டு டிரக்கொன்றை எடுத்துச்சென்று பல கார்களின் மீது மோதியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதால் இது பயங்கரவாத தாக்குதல் முயற்சியாகயிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட நபர் டிரக்கினை திருடி கார்களின் மீது மோதினார் என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது பயங்கரவாத தாக்குதலாகயிருக்கலாம் என்ற கோணத்திலும்; விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் லிம்பேர்க் நகரில் முக்கிய புகையிரத நிலையத்திற்கு முன்னாள் நின்றிருந்த கார்களி;ன் மீது மேர்சிடஸ் ரக வாகனத்தை பயன்படுத்தி நபர் ஒருவர் மோதினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
- 1 reply
- 531 views
-
-
ஐநா மனித உரிமை ஆணையருடன் அமைச்சர் வேதமூர்த்தி சந்திப்பு ஐநா மனித உரிமை ஆணையர் திருமதி மிக்கெலி பேச்லெட்டை பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி அண்மையில் தன்னுடைய அலுவலகத்தில் சந்தித்தார். அடிப்படை மனித உரிமையை நிலைநாட்டுவதில் மலேசியா காட்டிவரும் முனைப்-பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மேற்கொண்ட இந்தப் பயணத்தின்போது புத்ராஜெயா பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியை சந்தித்தார் ஆணையர் மிக்கெலி பேச்லெட். நம்பிக்கைக் கூட்டணி அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை பற்றி அமைச்சர் அவரிடம் எடுத்துரைத்தார். அப்போது, மலேசி…
-
- 0 replies
- 357 views
-
-
தெய்வ நிந்தனை செய்த குற்றச்சாட்டில் ஈரானின் இன்ஸ்ரகிராம் நட்சத்திரம் கைது! ஈரானைச் சேர்ந்த இன்ஸ்ரகிராம் நட்சத்திரமான சாஹர் தாபர் என்பவர் தெய்வ நிந்தனை செய்ததாகவும், வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தாஸ்னிம் செய்தி முகாமை தெரிவித்துள்ளது. 22 வயதான சாஹரின் இன்ஸ்ரகிராம் பதிவொன்று கடந்த வருடம் வைரலாக பரவியதை அடுத்து சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்தியானார். சாஹருக்கு 50 பிளாஸ்ரிக் சேர்ஜரி முறையில் அறுவைசிகிச்சைகள் நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவர் இன்ஸ்ரகிராமில் பதிவும் ஔிப்படங்கள் அனைத்தையும் பெரும்பாலும் திருத்தம்செய்தே அவர் பகிர்ந்து வருகின்றார். அவர் கடந்த வருடம் பகிர்ந்த ஒரு…
-
- 0 replies
- 288 views
-
-
மறு கல்வி மையங்கள் எனும் பெயரில் சீனாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான இஸ்லாமியர்களை கைகளையும், கண்களையும் கட்டி அழைத்துச் செல்வது போன்ற காட்சிகள் வெளியான நிலையில், அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின்ஸின்ஜியாங் ( Xinjiang) நிங்க்ஸியா (Ningxia), கின்காய் (Qinghai), கன்சு (Gansu) ஆகிய மேற்கத்திய மாகாணங்களில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். ஹன் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் ஸின்ஜியாங்கில், உய்குர் இன இஸ்லாமியர்களால் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாக அந்த மாகாண நிர்வாகம் கருதுவதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 லட்சம் இஸ்லாமியர்களைப் பிடித்து மறு கல்வி மையம் எனும் பேரில் முகாம்களில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களின் குழந…
-
- 2 replies
- 645 views
-
-
வடமேற்கு சிரியா பகுதியில் துருக்கி ராணுவம் குர்து இன கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தவுள்ள தாக்குதலில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அமெரிக்கா கூறியுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து இஸ்லாமிய அரசு குழுக்களின் கைதிகளை பாதுகாக்கும் பொறுப்பை துருக்கி ஏற்றுகொண்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாங்கள் பயங்கரவாதிகள் என கருதும் குர்து இன கிளர்ச்சியாளர்களை தங்கள் எல்லை பகுதியில் இருந்து நீக்க துருக்கி நினைக்கிறது. அதோடு இரண்டு மில்லியன் சிரியா அகதிகளை எல்லையை ஒட்டிய ஒரு பாதுகாப்பு பகுதியில் தங்க வைக்க துருக்கி நினைக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தாயிப் எர்துவான் ஆகியோர் இது குறித்து பேசியுள்ளனர். …
-
- 7 replies
- 736 views
-
-
படத்தின் காப்புரிமைC.UMAPATHI Image captionதேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். வந்தவர் குழம்பவில்லை…
-
- 0 replies
- 532 views
-