உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
பாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி உக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும்பானமையை பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தல் விடுத்துள்ளார். அரசியல் அனுபவமில்லாத வொளடிமீர் சிலேன்ஸ்கி கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தில் அவருடைய புதிய கட்சியின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனால் பொதுத்தேர்தல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகால மோதலில் 13 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரேனில் உயிரிழந்துள்…
-
- 1 reply
- 677 views
-
-
"ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அத்தோடு முடிந்து விடும்" ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் அதோடு முடிந்து விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதியாக டெனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஈரானுடானான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதன் பின்னர் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலும் பல்வேறு பொருளாதார தடைகளை ட்ரம்ப் விதித்து வருகிறார். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்தது. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர்க் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவம் மீ…
-
- 0 replies
- 647 views
-
-
அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி May 19, 2019 அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர். இதனால் லிபரல்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போதிலும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. #scottmorrison #australia #election #அவுஸ்தி…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிப்பு! ஈராக்கில் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாமொன்று முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும், முற்றிலுமாக அழிக்கப்படாத ஐ.எஸ். பயங்கரவாதிகள் சில இடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல்களையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் வெடிப்பொருட்களை பதுக…
-
- 0 replies
- 539 views
-
-
ஆரம்பப் பாடசாலைகளில் ஹிஜாப் அணியத் தடை: ஒஸ்ரியாவில் சட்டமூலம் நிறைவேற்றம் ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டமூலம் ஒஸ்ரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் வலதுசாரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவிற்கு நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், யூதர்கள் அணியும் யார்முல்கே மற்றும் சீக்கியர்கள் அணியும் பட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆளும் வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் வலதுசாரி சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavanne…
-
- 1 reply
- 1.2k views
-
-
தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின் குழுவொன்று மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஆதரவான செயல்பாடாக இது அமைந்துவிட கூடாது என்பதற்க…
-
- 0 replies
- 389 views
-
-
படத்தின் காப்புரிமை Reuters இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்த போரும் இருக்காது என இரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார். வளைகுடா பகுதியில் கடந்த …
-
- 20 replies
- 2.7k views
-
-
அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் பொப் ஹோக் காலமானார் அவுஸ்ரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் தொழிற்கட்சித் தலைவர் பொப் ஹோக் தனது 89ஆவது வயதில் காலமானார். முன்னாள் பிரதமர் தனது வீட்டில் இயற்கை மரணம் அடைந்ததாக அவரது மனைவி இன்று (வியாழக்கிழமை) ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவரது மரணத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொருளாதாரம் நவீனமயமாக்கப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு 1983 முதல் 1991 வரை நாட்டை அவர் வழி நடத்தியிருந்தார். மேலும் அவர் அவுஸ்ரேலியாவின் மத்திய-இடது தொழிற்கட்சி சார்பாக நீண்ட காலமாக பிரதமராக பணியாற்றியிருந்தார். 1947ஆம் ஆண்டில் தொழிற்கட்சியில் இணைந்த அவர் 1953இல் ஒக்ஸ்ஃபோ…
-
- 0 replies
- 468 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images எல்லா விதமான கருக்கலைப்புகளையும் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அலபாமா இணைந்துள்ளது. இந்தப் புதிய சட்டத்தின்படி பாலியல் வல்லுறவில் மூலம் உண்டான கரு, முறையற்ற குடும்ப உறவுகள் போன்றவற்றால் உண்டான கரு ஆகியவற்றையும்கூட கருக்கலைப்பு செய்ய முடியாது. இந்தச் சட்டம் கீழமை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டாலும், அமெரிக்க உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் அந்தத் தடை நீக்கப்படும் என்று இந்த சட்டத்துக்கு ஆதவானவர்கள் கருதுகின்றனர். …
-
- 0 replies
- 434 views
-
-
ஈராக்கிலுள்ள அமெரிக்க பணியாளர்களை நாடு திரும்புமாறு உத்தரவு! ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி செல்லுமாறு ஈராக்கின் அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்தாத் இல் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஏர்பில் இல் உள்ள இணைத்துத்தரகம் ஆகிய இரண்டு இடங்களிலும் பணிபுரியும் அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஆணையிட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈராக்கில் வாழும் அமெரிக்கர்களையும் அமெரிக்க நலன்விரும்பிகளையும் ஈரானும் ஈராக்கிலுள்ள அதன் ஆதரவாளர்களு…
-
- 0 replies
- 397 views
-
-
வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. எந்த நிறுவனம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், சீனாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாவேயை நோக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். …
-
- 0 replies
- 853 views
-
-
தொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்? பகீர் குற்றச்சாட்டு! சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கப்பல்கள், பெர்ஷியன் கடலில் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை ஈரான் தாக்கி அழித்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி என்பது ஈரான், ஈராக், ஓமன், சிரியா ஆகிய நாடுகள் எண்ணெய் ஏற்றுமதி செய்ய பயன்படுத்தும் ஒரே வழியாகும். இந்த ஒரே வழி மூலம் தான் உலக அளவில் கடல் வழியாக செய்யப்படும் பெட்ரோல் / டீசல் ஏற்றுமதியில் 40 சதவிகித ஏற்றுமதி நடக்கிறது. கணக்குப்படி பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்களில் 90% சதவிகிதம் இது வழியாகவே வருகிறது. இந்த சிறிய கடல் பாதைதான் தற்போது பெரிய பிரச்சனை ஆகியுள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார். ஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இன்று பிரஸ்ஸல்ஸில் சந்திக்கவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் வருகைதந்துள்ள ஜெரமி ஹண்ட் செய்தியாளர்களிடம் பேசியபோதே போர் மூளும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய ஹண்ட் தெரி…
-
- 0 replies
- 559 views
-
-
அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா அதிரடி வரி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது. அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/55820
-
- 0 replies
- 579 views
-
-
விமானத்தை தரையிறக்குவதில் எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட விமானிகள்! பயணிகள் விமானத்தை தரையிறக்குவதில் ஏற்பட்ட எதிர்பாராத சவாலை எதிர்கொண்ட மியன்மார் விமானிகள் அவ்விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளனர். மியன்மார் தேசிய விமான சேவையின் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் சீராக தொழிற்பாடாமையின் காரணமாக அவ்விமானத்தை தரை இறக்குவதற்கு பாரிய சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், அவ்விமானத்தின் முன் சக்கரங்கள் இல்லாமலும், பயணிகளுக்கு எந்த விதமான இடையூறுகளும் ஏற்படாமலும், குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான சேவை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்து விமான சேவை உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எத…
-
- 0 replies
- 679 views
-
-
புர்கினா பசோ கிருஸ்தவ தேவாலயத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் துப்பாக்கிச் சூடு – 6 பேர் உயிரிழப்பு மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பசோ பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதிரியார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் இருவர் தேவாலயத்தில் ஆராதணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். இதில் பாதிரியார் உட்பட் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 முதல் புர்கினா பசோவில் ஜிஹாத் வன்முறை இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 5 வாரங்களில் இங்கு நடத்தப்படும் 3 ஆவது கிறிஸ்த்தவ தேவாலயம் மீதான த…
-
- 0 replies
- 747 views
-
-
லண்டனில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் 'ஹரோ ஒன்த ஹில்' பிராந்தியத்தில் உள்ள 'மெட்ரோ வங்கி' வங்குறோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும், அந்த வங்கியில் பாதுகாப்பு வைப்பிலிடப்பட்டிருக்கும் பொருட்களை இனிமேல் எடுக்கமுடியாது என்பதான வதந்திகள் சமூகவலைத்தளங்கள் ஊடாகப் பரவியதைத் தொடர்ந்து, இன்று நூற்றுக் கணக்கான மக்கள், குறிப்பாக தமிழர்கள் வாங்கிக்கு முன்பாக திரன்டிருந்தார்கள். தாம் பாதுகாப்பு பெட்டிகளில் வைப்பிலிட்ட நகைகள், ஆவணங்களை எடுப்பதில் நூற்றுக்கணக்கான தமிழ்கள் முண்டியடிப்பதை அங்கு காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டபோது, அதுவெறும் வதந்தி என்றும், மிகவும் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் தமது வங்கி மீது அபாண்டமான குற்றச்சாட்டை யாரோ வேண்டுமெ…
-
- 23 replies
- 2k views
-
-
மக்கள் புகைப்பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும்: நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்தால் சர்ச்சை புகைப்பிடிப்பது மற்றும் மதுபானம் அருந்துதல் தொடர்பான நோர்வே சுகாதார அமைச்சரின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நோர்வே மக்கள் எவ்வளவு வேண்டுமாயினும் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் என நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்ட சில்வி லிஸ்தோக், நோர்வே ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார். இதன்போது, தான் ஒரு இறுக்கமான பொலிஸ்அதிகாரி போன்று செயற்படப்போவதில்லை எனவும், மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் போவதில்லை என்ற…
-
- 4 replies
- 712 views
-
-
வெனிசூலா துணை சபாநாயகர் சிறைவைக்கப்பட்டுள்ளார் May 12, 2019 வெனிசூலாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதனையடுத்து துணை சபாநாயகர் எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட எட்கர் ஜாம்ப்ரனோ, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டதனையடுத்து அவர் இவ்வாறு சிறைவைக்கப்பட்டுள்ளார். எட்கர் ஜாம்ப்ரனோவை பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில் சிறையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நீதிமன்றினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசூலாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் போது ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து எட்கர் ஜாம்ப்ரனோ செயல்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரை உட…
-
- 0 replies
- 369 views
-
-
இந்தோனேசிய சிறைச்சாலையில் கலவரம் – 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 150 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறைச்சாலையில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட கலவரத்தினைத் தொடர்ந்து கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், தப்பியோடியுள்ள ஏனைய கைதிகளை மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 404 views
-
-
சீனாவின் உற்பத்தி பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிப்பு அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்துள்ளதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது. உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அவர்,இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/55723
-
- 0 replies
- 382 views
-
-
கிழக்கு லண்டனில் பள்ளிவாசலுக்கருகே துப்பாக்கிச்சூடு கிழக்கு லண்டனில் பள்ளிவாசலொன்றுக்கு வெளியே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. புனித றமழான் மாதத்தில் மாலை நேர பிரார்த்தனைகள் இடம்பெற்றுவந்த சந்தர்ப்பத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. லிஃபோர்ட் மாவட்டத்திலுள்ள செவன் கிங் மஸ்ஜிட் பள்ளிவாசலுக்குள் துப்பாக்கியுடன் ஒருவர் உள்நுழைய முயற்சிப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச்சூட்டில் எவ்வித பாதிப்புகள் இடம்பெறவில்லை என உறுதிபடுத்தியுள்ளனர். இதேவேளை, வெளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எவரும் காயமடையவில்லை என்றும் பள்ளிவாசல் கட்டடத்திற்க…
-
- 0 replies
- 562 views
-
-
பாகிஸ்தான் லாகூர் வரலாற்றுப் பழமை வாய்ந்த மசூதிக்கு அருகில் நடந்த வெடிப்புச் சம்பவம் ஒன்றில்.. குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள்.. புனித நோன்பு மாதத்தை அனுஷ்டிக்கும் இவ்வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தான் உட்பட.. உலகின் பல இஸ்லாமிய நாடுகளில்.. இஸ்லாமிய மதத்துக்குள் இருக்கும் பிரிவுகள் தமக்கிடையே மோதிக் கொள்வதும்.. மசூதிகளை தற்கொலை தாக்குதல்கள்.. மற்றும் தாக்குதல் வடிவங்களைக் கொண்டு தாக்கி அப்பாவி மக்களை கொல்வது வாடிக்கையாகும். பாகிஸ்தான் அதிகாரிகள்.. இது மசூதிக்கு அருகில்... பொலிஸ் வாகனத்தை குறிவைத்து நடந்த தாக்குதல் என்கிறார்கள். Sufism is a form of Islamic mysticism that exists across the Isl…
-
- 1 reply
- 586 views
-
-
அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை! அல் – கொய்தா தீவிரவாத அமைப்பு மீண்டும் வலுப்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புலனாய்வு பிரிவினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் ஒன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அபோடபாத் நகரத்தில் அமெரிக்க படைகளால் அல் – கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஜிகாதி அமைப்புகளிலேயே மிகவும் பயங்கரமான அமைப்பாக அல் – கொய்தா கருதப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்த அமைப்பில் இணைந்து மேற்குலகிற்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வந்தனர். இந்த தீவிரவாத அமைப்புக்கு வளமான பொருளாதார பின்புலமும் இருந்தது. எனினும் அந்த அமைப…
-
- 0 replies
- 449 views
-
-
விமான நிலையத்திற்கு அருகே வெடிப்புச் சம்பவம் – 58 பேர் உயிரிழப்பு 37 பேர் காயம் ! ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நைகர் தலைநகர் நியாமியின் விமான நிலையத்தினருகே இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் ஒன்று தீப்பற்றி எரிந்தமை காரணமாகவே நேற்று(திங்கட்கிழமை) மாலை இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்திற்கு அருகே கவிழ்ந்த குறித்த கொள்கலனிலிருந்து எரிபொருளை சேகரிப்பதற்காக சென்றவர்களே இதன்போது அதிகளவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது காயமடைந்த 37 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் காயமடைந்தவர்களை …
-
- 3 replies
- 783 views
-