உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26606 topics in this forum
-
ஜுவாலாபுரம்: ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம், சான்றாக விளங்கும் சாம்பல் ரூ.1000க்கு விற்கப்படும் அவலம் படக்குறிப்பு,74,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் இந்தியாவில் சுற்றித் திரிந்ததாக ஜுவாலாபுரம் ஒரு கருதுகோளை முன்வைக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் ஆதிகால மனிதன் நடமாடிய அதிசய இடம் உள்ளது. இந்தியாவில் மனித கால் தடம் எப்போது பதிந்தது என்பதற்கான ஆதாரம், கண்டங்களைத் தாண்டி மனித இனம் பயணித்ததற்கான உறுதியான சான்று, நந்தியால் மாவட்டத்தின் சாம்பல்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரலாற்றுத் தளங்கள் குறித்து அறியாதவர்கள், அந்த சாம்பலை ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்று வருகின்றனர். மனித வரலாற்றுக்கா…
-
- 0 replies
- 487 views
- 1 follower
-
-
10 APR, 2025 | 01:39 PM உக்ரைனிற்கு எதிராக 155 சீனர்கள் ரஸ்யாவுடன் இணைந்து போரிடுகின்றனர் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் சீனர்களின் கடவுச்சீட்டு விபரங்கள் பெயர்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி சீனாவிற்கு இவர்கள் போரிடுவது நன்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார். சீனா விடயம் பாரதூரமானது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனா இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளதுடன், இருவது கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கம் தனது பிரஜைகள் போர்க்களங்களை தவிர்க்கவேண்டும், எந்த வித ஆயுதமோதலிலும் இணைந்துகொள்ளக்கூடாது என வேண்டுகோள…
-
- 0 replies
- 274 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 24 MAR, 2025 | 01:15 PM ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்வோல்ட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் பார்க்கக்கூடிய விதத்தில் ஈரான் தனது திட்டத்தை கைவிடவேண்டும் என தெரிவித்துள்ள அவர் அணுவாயுதங்களை உருவாக்கவேண்டும் என்ற விருப்பத்திலிருந்து ஈரான் விலகுவதற்கான தருணம் இது, அவர்கள் அணு ஆயுத திட்டங்களை தொடர்வதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய எந்த தாக்குதலிற்கும் ஈரானே காரணம் என கருதப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையிலேயே வெள்ளை மாளிகையின் த…
-
- 4 replies
- 395 views
- 1 follower
-
-
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது. இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்ட…
-
- 5 replies
- 399 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர், மைல்ஸ் பர்க் பதவி, 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 1966ஆம் ஆண்டில், தொலைதூர ஸ்பானிய கிராமமான பலோமரேஸ், "தெளிவான நீல வானத்தில் இருந்து, அணுகுண்டுகள் அதன் மீது விழுவதை" கண்டது. இந்தப் பயங்கரமான விபத்து நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கா ஒரு ஹைட்ரஜன் குண்டை இழந்தபோது என்ன நடந்தது என்பதைக் கண்டறிய பிபிசி நிருபர் கிறிஸ் ப்ராஷர் அங்கு சென்றார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, இதே வாரத்தில், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று அமெரிக்க ராணுவம் 80 நாட்களாக தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்த, காணாமல் போன அணு ஆயுதம் இறுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் சக்தியைவிட 100 மடங்கு அதிக சக்தி கொண்டது அந்த அணுகுண…
-
- 0 replies
- 262 views
- 1 follower
-
-
ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில்…
-
- 0 replies
- 206 views
-
-
Published By: RAJEEBAN 08 APR, 2025 | 04:23 PM இஸ்ரேலிய இராணுவத்திற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக இரண்டு பணியாளர்களை அந்த நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் 50 வது வருடகொண்டாட்டத்தின் போது அந்த நிறுவனம் இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை தொழில்நுட்பத்தினை வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இரண்டுபெண் ஊழியர்களையே அந்த நிறுவனம் வேலை நீக்கம் செய்துள்ளது. ஒருவர், புகழ்பெறுவதற்காகவும், இந்த பெரும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வை அதிகபட்சமாக சீர்குலைப்பதற்காகவும் தவறான நடத்தையில்…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு ம…
-
- 0 replies
- 289 views
-
-
சீனா மீது புதிய 50% வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்! உலக சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருவதால், சீனா தனது 34% எதிர் வரியை திரும்பப் பெறாவிட்டால், அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50% வரி விதிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ட்ரம்ப், சீன இறக்குமதிகள் மீது 34% வரி விதிக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து, பீஜிங் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது. அதன்படி, இது அமெரிக்காவின் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் குறைந்தபட்சம் 10% வரியை நிர்ணயித்தது. திங்களன்று (07) ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் சீனாவிற்கு அதன் எதிர் நடவடிக்கையை கைவிட அல்லது 50% வரியை எதிர்கொள்ள செவ்வாய்க்கிழமை (08) வரை அவகா…
-
- 3 replies
- 396 views
- 1 follower
-
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்…
-
- 0 replies
- 232 views
-
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே (Aceh) மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கடலில் சுனாமி அலைகள் எதுவும் எழவில்லை என்று இந்தோனேஷியாவின் நாட்டின் வானிலை மற்றும் புவியில் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆக இருந்ததாக நிறுவனம் அறிவித்தது, பின்னர் அதை கீழ்நோக்கி திருத்தியது. இந்த நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி அதிகாலை 2:48 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையம் சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபாங் நகரிலிருந்து தென்கிழக்கே 62 கி.மீ தொலைவில், கடற்பரப்பிலிருந்து 30 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளது. நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்ப…
-
- 0 replies
- 235 views
-
-
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை அர்த்தமற்றது – ஈரான்! இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்காவுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை “அர்த்தமற்றது” என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) விவரித்துள்ளார். கடந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்கு அனுப்பிய கடிதத்தில், தெஹ்ரான் அணு ஆயுதங்களை வாங்குவதைத் தடுக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று நம்புவதாக ட்ரம்ப் கூறியதை அடுத்து ஈரான் வெளிவிகார அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. கடந்த வாரம் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து நே…
-
- 1 reply
- 249 views
-
-
07 APR, 2025 | 10:39 AM சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை குறித்து ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎவ்பி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார், ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத…
-
-
- 4 replies
- 405 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 07 APR, 2025 | 03:26 PM காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அந்த கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் போது பாலஸ்தீன் டுடே தொலைக்காட்சியின் உள்ளுர் செய்தியாளரான யூசெவ் அல் பஹாவி கொல்லப்பட்டார் . வ…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை! சவுதி அரேபியா அரசாங்கம் புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சில விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. ஹஜ் யாத்திரை காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஊடக அறிக்கைகளின்படி, ஹஜ் யாத்திரை முடிவடையவுள்ள ஜூன் நடுப்பகுதி வரை இந்தத் தடை அமுலில் இருக்கும். புதிய வழிகாட்டுதல்களின் கீழ், உம்ரா விசாக்கள், வணிக வருகை விசாக்கள் மற்றும் குடும்ப வருகை விசாக்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் இந்தியா, பாகிஸ்தான் மற்று…
-
- 0 replies
- 293 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சீனா வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால், மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ள அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கட்டுரை தகவல் எழுதியவர், நடாலி ஷெர்மன் பதவி, பிபிசி, நியூயார்க் 5 ஏப்ரல் 2025, 12:46 GMT அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை தீவிரமாக சரிந்தது. இது நீடித்த வர்த்தகப் போர் நடைபெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, உலக பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளும் 5 சதவிகிதத்துக்கும் மேலாக சரிந்தன. இதில் எஸ்&பி 500 கிட்டத்தட்ட 6 சதவிகிதம் சரிந்தது. இது …
-
- 3 replies
- 417 views
- 1 follower
-
-
காசாவில் எட்டு மருத்துவர்களின் உயிரிழப்புக்கு செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்! தெற்கு காசாவின் ரஃபாவில் பணியில் இருந்த எட்டு மருத்துவர்கள் கொல்லப்பட்டதற்கு சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC) கோபமடைந்துள்ளதாக கூறியுள்ளது. மார்ச் 23 அன்று அல்-ஹஷாஷினில் ஒன்பது பேர் கொண்ட அம்பியூலன்ஸ் குழு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக IFRC தெரிவித்துள்ளது. ஒரு வாரமாக அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரு மருத்துவர் இன்னும் காணவில்லை. பாலஸ்தீன ரெட் க்ரெசண்ட் சொசைட்டி (PRCS), தங்கள் ஊழியர்களின் உடல்களும், காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆறு உறுப்பினர்களின் உடல்களும், ஒரு ஐ.நா. ஊழியரின் உடல்கள…
-
- 4 replies
- 384 views
- 1 follower
-
-
அமெரிக்க நகரங்களில் ஜனாதிபதி டரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்! வொஷிங்டன், டி.சி. மற்றும் அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை (05)ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பில்லியனர் கூட்டாளியான எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத்தை மாற்றியமைக்கவும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்தவும் விரைவான முயற்சியைத் தொடங்கியதிலிருந்து அவர்களுக்கு எதிராக ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்தது. சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதாரப் பிரச்சினைகள் வரை ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள குறைகளை போராட்டக்காரர்கள் மேற்கோள் காட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்…
-
- 1 reply
- 367 views
-
-
பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்க விபரங்கள்: நிலநடுக்க அளவு: 6.9 ரிக்டர் (USGS அறிக்கையின்படி 7.2 ரிக்டர் அளவு என்றும் பதிவாகியுள்ளது). நேரம்: ஏப்ரல் 5, 2025, அதிகாலை 6:04 மணி (உள்ளூர் நேரம்). இடம்: கிம்பேயிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கு தொலைவில், சாலமன் கடல் பகுதியில். ஆழம்: 33 கி.மீ (ஆழமற்ற நிலநடுக்கம்). பிற அறிக்கைகள்: …
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 03 APR, 2025 | 02:22 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் சகாக்களிற்கு கத்தார் அதிகாரிகளுடன் தொடர்புகள் உள்ளமை தெரியவந்ததை இஸ்ரேல் அரசியல் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. கத்தார் குறித்து இஸ்ரேலில் சிறந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதற்காக கத்தாரிடமிருந்து பணம் பெற்றதாக பெஞ்சமின் நெட்டன்யாகுவின் இரண்டு நெருங்கிய சகாக்கள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசாரணையின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். கத்தார் ஹமாசிற்கு முழுமையான ஆதரவை வழங்குகின்ற நாடு என இஸ்ரேலில் பலர் கருதுவதாலும், இஸ்ரேலிற்கும் கத்தாருக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் இல்லை என்பதாலும், இந்த விவகாரம் இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் இஸ்ரேலின் அரசியலின் உயர்பீட…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
உலக நாடுகளை நடுங்கச் செய்யும் ட்ரம்பின் புதிய வரி; இலங்கை பொருட்களுக்கு 44% வரி! அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 10% குறைந்தபட்ச வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (02) அறிவித்தார். இதன் மூலம் அவர், பல நாடுகளின் பொருட்களுக்கு மிக அதிக வரிகளுடன், பணவீக்கத்தை அதிகரித்து அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் அச்சுறுத்தலான உலகளாவிய வர்த்தகப் போரை அதிக அளவில் தொடங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அதிக வரி விகிதங்களுடன் தங்களை இணைத்துக் கொண்ட பல நீண்டகால அமெரிக்க நட்பு நாடுகளிடமிருந்து குழப்பமான கண்டனத்தைப் பெற்ற இந்த கடுமையான வரிகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருளாதாரத்தைச் சுற்றி புதிய தடைகளை எழுப்புவதாக உறுதியளிக்…
-
-
- 3 replies
- 322 views
- 1 follower
-
-
மத்திய யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் - 18 பேர் பலி மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த நகரான கிரிவி ரிஹ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் மக்கள் குடியிருப்பு சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, 'இராணுவ தரப்பினர் மற்றும் மேற்கத்தேய பயிற்றுவிப்பாளர்களை" இலக்கு வைத்து தாக…
-
- 1 reply
- 288 views
-
-
அமெரிக்காவுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் கனடா பிரதமர்! “அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக் கொண்டுவந்தார். கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிய வர்த்தக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்றாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு, அலுமினியம் மற்றும் வாகனங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா ப…
-
- 1 reply
- 271 views
-
-
அமெரிக்காவில் முதலீடுகளை நிறுத்த பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு! அமெரிக்காவில் திட்டமிடப்பட்ட முதலீட்டை ஐரோப்பிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழக்கிழமை (04) அழைப்பு விடுத்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இறக்குமதிகள் மீதான உலகளாவிய வரிகளை உயர்த்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பிரெஞ்சு ஜனாதிபதியின் இந்த அழைப்பு வந்தது. அமெரிக்காவுடன் விடயங்கள் தெளிவுபடுத்தப்படும் வரை வரவிருக்கும் முதலீடுகள் அல்லது அண்மைய வாரங்களில் அறிவிக்கப்பட்ட முதலீடுகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு தொழில்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது மக்ரோன் கூறினார். பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM, அமெரிக்காவில் கப்பல் தளவாடங்கள்…
-
- 1 reply
- 276 views
-
-
மியான்மரில் அடுத்தடுத்து இரு பெரிய நிலநடுக்கங்கள்.. அண்டை நாடான தாய்லாந்திலும் அதிர்ந்த கட்டடங்கள் VigneshkumarUpdated: Friday, March 28, 2025, 12:49 [IST] மியான்மர்: மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் உணரப்பட்டது. இதில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. பூமிக்கு அடியில் பல்வேறு டெக்டோனிக் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையே மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று அடுத்தடுத்து ஏற்பட்ட பூக…
-
-
- 13 replies
- 535 views
- 1 follower
-