உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26853 topics in this forum
-
ரஷ்யா மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்! விமானச் சேவைகள் நிறுத்தம்! ரஷ்யா மீது உக்ரேன் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதன் கொண்டாட்டங்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் 8ஆம் திகதி முதல் நடைபெற உள்ளன. இதையடுத்து, உக்ரேனுடனான போரில் மூன்று நாள் போர் நிறுத்தத்தை ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார். இப் போர்நிறுத்தம் மே 8ஆம் திகதி தொடக்கத்தில் இருந்து மே 10ஆம் திகதி இறுதி வரை, அதாவது 72 மணி நேரம் நீடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது. மேலும் இந்த போர் நிறுத்தத்தை ஏ…
-
- 0 replies
- 284 views
-
-
தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட ஆராய்ச்சிக்கு நிதி உதவி நிறுத்தம் -டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு. “இரட்டை-பயன்பாட்டு” ஆராய்ச்சி என்று அழைக்கப்படும் சர்ச்சைக் குறிய உயிரியல் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் நிதியைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உத்தரவொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று (05) பிறப்பித்தார். குறித்த ஆராய்ச்சியானது தொற்றுநோயைத் தூண்டும் திறன் கொண்ட வைரஸ்கள் மற்றும் பிற நோய்க்கிருமிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொற்றுக் கிருமிகள் எவ்வாறு அதிகமாக பரவக்கூடும் அல்லது மக்களை நோய்வாய்ப்படுத்தக்கூடும் என்பதை இந்த ஆய்வுகள் மூலம் கண்டறிய முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய…
-
- 1 reply
- 217 views
-
-
ஆப்பரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் உள்ள ஆயுததாரிகளின் முகாம்கள் மீது தாக்குதல் ஆரம்பித்துள்ளதாக இந்தியா அறிவிப்பு. இது இந்திய ஆக்கிரப்பு கஸ்மீரில் இருந்து நடப்பதாக தெரிகிறது. பாகிஸ்தானிய இராணுவ நிலைகள் மீது தாக்குதலை தவிர்த்துள்ளோம் என்கிறது இந்தியா. இது இந்திய வான் எல்லைக்குள் இருந்து நடந்த கோழைத்தனமான தாக்குதல் - நாம் தகுந்த பதிலடி கொடுப்போம் என்கிறது பாக்கிஸ்தான்: BBC NewsIndia says it has launched strikes on Pakistan and Pakist...A spokesperson for Pakistan's military tells local media that three locations have been hit by missiles.
-
-
- 575 replies
- 26.9k views
- 2 followers
-
-
பட மூலாதாரம்,TAPANI KARJANLAHTI/ TVO கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பீசிங் பதவி, பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அணுக் கழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு கதிர்வீச்சின் நச்சுத் தன்மையுடன் இருக்கும். அதைப் பாதுகாப்பாகப் புதைத்து வைக்க சேமிப்புக் கிடங்கை எவ்வாறு கட்டமைப்பது? கோடைக்காலத்தில் ஒரு குளிரான நாளாக அது இருந்தாலும் வடகிழக்கு பிரான்சில் ஷாம்பெயின் பகுதியில் 1,500 அடிக்குக் கீழே சற்று கதகதப்பாகத்தான் உணரப்பட்டது. இந்த அணுக்கழிவுக் கிடங்கு மிக வெளிச்சமாகவும், காய்ந்தும் இருக்கும். இங்குள்ள தூசிகளை என்னால் உணர முடிகிறது. நான் என்னுடன் எடுத்துச் செல்லும் செயற்கை சுவாசக் கருவிகள் இந்த நிலத்தடியில் உள்ள ஆபத்துகளை உணர்த்துகின்றன. இங்குள்ள கரடுமுரடான பாதைகள், ஆய்வுக் …
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
இந்தியா – பாகிஸ்தான் பதற்றமும் ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரச கூட்டமும்! ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானின் இந்திய எதிர்ப்புப் பேச்சு தோல்வியடைந்தது, சந்திப்பு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் மூடிய கதவு கூட்டம், எந்த அறிக்கையும், தீர்மானமும் அல்லது அதிகாரப்பூர்வ முடிவும் இல்லாமல் முடிந்தது. இந்த விவாதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க பதில் எதுவும் வெளிவரவில்லை. பல ஆண்டுகளில் நிலைமை மிகவும் கொந்தளிப்பான நிலையை எட்டியுள்ளதாக பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் இந்த சந்திப்ப…
-
- 0 replies
- 239 views
-
-
இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டம் - இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஹமாஸுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை நேற்று இரவு கூடி இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்குத் தரைவழித் தாக்குதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு அமைச்சர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசாவை கைப்பற்றுவதும், கைப்பற்றிய பிரதேசங்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டிற்கு அமைய இஸ்ரேலிய இராணுவம் தயாராகி…
-
- 0 replies
- 208 views
-
-
ட்ரோன் தாக்குதல்; மொஸ்கோவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்! மொஸ்கோவை குறிவைத்து உக்ரேன் தொடர்ந்து இரண்டாவது இரவாக இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தலைநகரின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா டெலிகிராமில் தெரிவித்துள்ளது. மொஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின், சமூக ஊடகங்களில் குறைந்தது 19 உக்ரேனிய ட்ரோன்கள் “வெவ்வேறு திசைகளில் இருந்து” நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாகக் கூறினார். சில ட்ரோன்களின் பாகங்கள் நகரத்திற்குள் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றில் விழுந்ததாகவும், ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற…
-
- 0 replies
- 301 views
-
-
அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க ட்ரம்ப் உத்தரவு! கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ள முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை (Alcatraz) மீண்டும் திறந்து விரிவுபடுத்த தனது அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை (05) தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடகமான ட்ரூத் தளத்தில் பதிவிட்ட அவர், அல்காட்ராஸ் சிறைச்சாலை மீண்டும் திறக்கப்படுவது “சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக” செயல்படும் என்று அவர் கூறினார். அல்காட்ராஸில் உள்ள கூட்டாட்சி சிறைச்சாலை 1963 இல் மூடப்படுவதற்கு முன்பு அல் கபோன் போன்ற மோசமான அமெரிக்க குற்றவாளிகளை வைத்திருந்தது. இது இப்போது சான் பிரான்சிஸ்கோவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்ற…
-
- 0 replies
- 392 views
-
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி! உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரைப்படத் துறை “மிக விரைவான மரணத்தை” சந்தித்து வருவதால், வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அதிகாரம் அளிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார். வரிகள் அமெரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் தொழில் வாய்ப்புகளை பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதன் விளைவாக உலகப்…
-
- 0 replies
- 265 views
-
-
முதலைகளுக்கு நடுவே 36 மணி நேரம் - அனகோண்டா காட்டில் விமான விபத்தில் சிக்கியவர்களின் கதை கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா ரான்ஸ்லி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமேசானில் முதலைகள் நிறைந்த சதுப்பு நிலப் பகுதியில் சிக்கிக் கொண்ட ஐந்து பேர் 36 மணி நேரம் விமானத்தின் மேல் நிர்கதியாக இருந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பொலிவியாவின் அமேசானாஸ் பகுதியில், 5 பேர் இருந்த சிறிய ரக விமானம் ஒன்று 48 மணி நேரத்திற்கு முன் காணாமல் போனது, தீவிரமாக மேற்கொண்ட தேடுதல்வேட்டையில் காணாமல் போனவர்களை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்தனர். மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் 29 வயது விமானி என மொத்தம் ஐந்து பேரும் நல்ல நிலையில் மீட்கப்பட்டதாக அவசரகால செயல்பாட்டு மையத்தின் இயக்…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 MAY, 2025 | 04:28 PM பிரித்தானியாவில் குறிப்பிட்ட இடமொன்றினை இலக்கு வைக்கும் சதித்திட்டம் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடத்திய இருவேறு தேடுதலில் நடவடிக்கையில் எட்டு ஆண்கள் சனிக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஈரானியர்கள் ஆவர். முதலில் கைது செய்யப்பட்ட 4 ஈரானிய நாட்டவர்களில் 29 வயதுடைய இருவர், 40 வயதுடைய ஒருவர் மற்றும் 46 வயதுடைய ஒருவர் அடங்குவர். ஐந்தாவது நபரின் நாடு மற்றும் வயது இன்னும் வெளியாகவில்லை. அதேவேளை, லண்டனில் மேலும் மூன்று ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நடவடிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தவை அல்ல என பொலிஸார் தெரிவித்தனர். "நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைக்…
-
- 0 replies
- 228 views
- 1 follower
-
-
டிரம்ப் பாப்பரசர்: நாலாபுறமும் எதிர்ப்பு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாப்பரசராகத் தோன்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்தப் புகைப்படத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி விமர்சிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புகைப்படம் வெள்ளை மாளிகை ஊழியர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றப்பட்டது. புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு புதிய திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார், மேலும் அது 7 ஆம் திகதி கார்டினல்களின் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும். இதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் குழு …
-
- 0 replies
- 408 views
-
-
சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா! சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஆரம்ப கால அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது. இதேவேளை, அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா…
-
-
- 2 replies
- 385 views
-
-
04 MAY, 2025 | 07:42 AM சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், லோரன்ஸ் வோங் மீண்டும் பிரதமராகிறார். சிங்கப்பூர் பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 97 தொகுதிகளில் போட்டியிட்டு 87 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பொதுத்தேர்தல் சனிக்கிழமை (3) இடம்பெற்றது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் 97 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 12 உறுப்பினர்கள் நியமன அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதன்படி சிங்கப்பூரில் 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது. இதில் 30 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். காலை வாக்குப்பதிவு…
-
- 0 replies
- 204 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,UNIVERSIDADE DE YORK படக்குறிப்பு,இந்த இளைஞனின் எலும்புகள் 2004ஆம் ஆண்டு யார்க்கில் நடைபெற்ற அகழ்வாய்வில் கிடைத்தவை கட்டுரை தகவல் எழுதியவர், அலெக்ஸ் மோஸ் மற்றும் விக்டோரியா கில் பதவி, பிபிசி நியூஸ் 3 மே 2025, 03:48 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரோமானிய கிளாடியேட்டர் ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்ட பல் தடங்கள், சிங்கத்துக்கும் ஒரு மனிதனுக்கும் சண்டை நடந்ததை உறுதிப்படுத்தும் முதல் தொல்லியல் ஆதாரங்கள் ஆகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரிட்டனின் யார்க் பகுதியில் உள்ள ட்ரிஃப்பீல்டு டெரஸ்-இல், 2004-ஆம் ஆண்டு நடந்த அகழ்வாய்வில் இந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்புக்கூட்டில் தடய ஆய்வு செய்யப்பட்டபோது, அந்த இளைஞனின் இடுப்பு …
-
- 0 replies
- 289 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல் அவுஸ்திரேலியாவில் இன்று சனிக்கிழமை (03.05.2025) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமரைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் இடம்பெறுகிறது. முன்னதாக பிரதமர் அந்தோணி அல்பனீஸ், வீட்டுவசதி பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 12 இலட்சம் வீடுகள் கட்டப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு உறுதியளித்தார். ஆனால் அது தொடர்பான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்படவில்லை. எனவே ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சிக்கு இந்த தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே திர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி கூட்டணிக்கு ஆதரவு …
-
-
- 18 replies
- 988 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராகிறார் மைக் வோல்ட்ஸ் 03 May, 2025 | 09:42 AM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வோல்ட்ஸ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவுள்ளார். யேமனில் கௌத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடர்பாக மைக் வோல்ட்ஸும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்பர்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டதால், மிகுந்த…
-
- 0 replies
- 209 views
-
-
Published By: VISHNU 02 MAY, 2025 | 07:59 PM சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.…
-
- 0 replies
- 208 views
- 1 follower
-
-
02 MAY, 2025 | 06:21 PM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மைக் வோல்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். யேமனில் ஹௌத்தி கிளா்ச்சியாளர்களின் தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரக…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் ஒரு புதிய வைரஸ் பரவி வருவதால், மற்றொரு சாத்தியமான தொற்றுநோய்க்கு தயாராகுமாறு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மனிதகுள வரலாற்றில் பல முக்கிய தொற்று நோய்கள் பரவின. இவற்றில் SARS-CoV-2 என்று அழைக்கப்படும் வைரஸ், COVID-19 எனப்படும் நோயை உருவாக்கி, உலகளாவிய நெருக்கடி ஏற்படுத்தியது. இந்த நோய் 5 ஆண்டுகளுக்கு மேல் உலகளாவிய அளவில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தற்போதைய நிலைமை, வரவிருக்கும் நாட்களில் அமெரிக்கா மற்றொரு COVID-19 போன்ற தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க பால் பண்ணைகளில் H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கைகளை எழுப்பி வருவதாக அறிக…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,BBC/ XIQING WANG படக்குறிப்பு,சீனா 2024இல் மட்டும் 34 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொம்மைகளை ஏற்றுமதி செய்திருந்தது, அதில் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியானது கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, சீனா செய்தியாளர், யிவூ நகரிலிருந்து 9 மணி நேரங்களுக்கு முன்னர் "அமெரிக்காவுக்கான விற்பனைகள் குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை," என்கிறார் ஹு டியான்கியாங். அவருடைய ஃபைட்டர் ஜெட் பொம்மை ஒன்று, எங்கள் தலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது அவர் இதைத் தெரிவித்தார். பொம்மை விமானங்கள், சிறிய ட்ரோன்கள் என, வாங்குபவர்களை ஈர்க்கும் வகையில், அவரைச் சுற்றியுள்ள பொம்மைகளின் இரைச்சலுக்கு நடுவே அவர் பேசுவதைக் கேட்பது கடினமானது. உலகிலேயே மி…
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ - ட்ரம்ப் எச்சரிக்கை ‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். தற்போது ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ட்ரம…
-
- 0 replies
- 228 views
-
-
விலா எலும்புகளை உடைத்து கண்கள், மூளையை அகற்றி கொடூரம்; உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் மரணம் ரஷ்ய இராணுவக் காவலில் சித்திரவதையை அனுபவித்து உக்ரைன் பத்திரிகையாளர் விக்டோரியா ரோஷினாவின் மரணம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையில், ஒரு இதயத்தை உடைக்கும் செய்தி வெளிவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், விக்டோரியா ரோஷ்சினா என்ற பெண் பத்திரிகையாளர், ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஜியா பகுதியில் உக்ரேனிய குடிமக்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவது குறித்து செய்தி வெளியிட்டார். இப்போது அந்த பத்திரிகையாளரின் மரணம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. இறப்பதற்கு முன், 27 வயதான விக்டோரியா ரஷ்ய…
-
- 0 replies
- 554 views
-
-
காசாவில் கடும் தாக்குதலுடன் முடக்கம்; போசணை குறைபாடு 80% உச்சம் - போரை நிறுத்த நெதன்யாகு அரசுக்கு இராணுவத்தில் இருந்து அழுத்தம் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி இஸ்ரேலுக்குள்ளும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பில் இஸ்ரேல் ரிசர்வ் படையினரும் அரசுக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர். காசாவில் இரண்டு மாதங்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் கடந்த மார்ச் 02 ஆம் திகதி தொடக்கம் காசாவுக்கான அனைத்து உதவிகளையும் இஸ்ரேல் முடக்கி வருகிறது. …
-
- 0 replies
- 194 views
-
-
ரஷ்யா – வடகொரியா இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பம்! ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யப் பிரதமர் மிக்காயில் மிஷுஷ்டின் தெரிவித்துள்ளார். புதிய பாலத்தின் கட்டுமானப் பணிகளுக்கான ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே மிஷுஷ்டின் இதனை தெரிவித்தார். அண்டை நாடுகள் என்ற முறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும் வடகொரியாவும் விரும்புகின்றன எனவும் இதற்கான சின்னமாகவே புதிய பாலம் திகழும்,” எனவும் மிஷுஷ்டின் மேலும் தெரிவித்துள்ளார். குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்ற நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜய…
-
- 0 replies
- 234 views
-