உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27039 topics in this forum
-
ஹ்யூஸ்டன்: தொழிற்சாலை வெடித்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட அமெரிக்க நகரான ஹ்யூஸ்டனில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து ரசாயனங்கள் வளிமண்டலத்தில் கலந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக, குரோஸ்பையிலுள்ள அர்கெமா தொழிற்சாலையில் இருந்து வெட…
-
- 0 replies
- 410 views
-
-
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு: முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு! பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷாரப் தேடப்படும் குற்றாவளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதான எதிர்க்கட்சியான 'மக்கள் கட்சி'யின் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் இருந்தார் பெனாசிர் பூட்டோ. தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரக்காலமே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் ராவல்பிண்டி நகரில், மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார் பெனாசிர். இப்படுகொலையில் தொடர்புடையதாக தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத அமைப…
-
- 0 replies
- 310 views
-
-
ஜார்கண்ட் மாநிலத்தின் சாராகிலா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடுவீதியில் குழந்தையைப் பெற்றுள்ளார். அரவணைக்க யாரும் அற்ற இந்தப் பெண் நடுவீதியில் குழந்தையைப் பெற்றெடுத்தார். ப்ரியா என்ற பெண் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண ராம் என்பவரும் காதலித்து பழக்கம் நெருக்கமாகவே பிரியா கற்பமாகியுள்ளார். இதை அறிந்த அவரது காதலர் இந்தப் பெண்ணைச் சந்திப்பதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். இந்தப் பெண் கற்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோரும் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். தங்க வீடு இன்றி இந்தப் பெண் தெருவிலும் சாலையிலும் வசித்துள்ளார். பின்னர் நிறைமாதக் கர்ப்பிணியான இந்தப் பெண் அருகில் இருக்கும் சுகாதார மையத்திற்கு பிரசவத்திற்காக சென்ற போது அங்கு பணியா…
-
- 1 reply
- 553 views
-
-
அணு ஆயுதச் சோதனை சட்டப்பூர்வமாகத் தடை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் குறிப்பிட்டார். ஆண்டுதோறும் ஓகஸ்ட் 29ஆம் திகதி ஆணுவாயுத சோதனை எதிர்ப்புத் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையிலேயே குத்தேரஸ் இவ்வாறு குறிப்பிட்டார். ‘‘கடந்த 70 ஆண்டுகளில் உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அணு ஆயுத சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அணுவாயுதச் சோதனைகளை முழுமையாகத் தடைசெய்ய …
-
- 0 replies
- 406 views
-
-
பாகிஸ்தான், தீவிரவாதி களின் புகலிடமாக உள்ளது என்று ட்ரம்ப் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவுடனான உறவை தற்காலிகமாக முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆசியாவுக்கான புதிய கொள்கையை அண்மையில் வெளியிட்டார். தெற்காசியா தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்திவரும் தலிபான், ஹக்கானி உள்ளிட்ட பெருவாரியான தீவிரவாத அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் துணை போகிறது என்று குற்றம்சாட்டினார். தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது. தேவைப்பட்டால் பாகிஸ்தானில் புகுந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துவோம் எனவ…
-
- 0 replies
- 605 views
-
-
ஐவரை பலி வாங்கிய வெள்ளம்: முன்னறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவும் மும்பை வாசிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES வெள்ளப் பாதிப்புகள் இல்லாத பகுதிகளில் இருந்த மும்பை வாசிகள் தங்கள் முகவரிகளை சம…
-
- 0 replies
- 353 views
-
-
பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான ரொஹிஞ்ஞா முஸ்லிம்கள் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் இருந்து எல்லையை கடந்து வங்கதேசம் வந்துள்ளதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்! ஹார்வீ சூறாவளியால் நிலைகுலைந்து போன ஹியூஸ்டனில் சூறையாடலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது; மற்றும் சனிக்கிரகத்தை ஆராய்ந்த கசினி விண்கலனின் பணி முடிவுக்கு வருவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 321 views
-
-
ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு பகிர்க வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தங்கள் பிராந்தியம் மீது பறந்த இந்த ஏவுகணையை சுட்டு வீழ்த்த ஜப்பான் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏவப்பட்ட இந்த ஏவுகணை பாதுகாப்பு எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது. வட கொரியாவின் இந்த ஏவுகணை முயற்சியை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ''முன்னெப்போதும் இல்லாத ஒரு ஆபத்து'' என்று வர்ணித்துள்ளார். அண்மைகாலமாக தொடர்ச்சியாக பல ஏவுகணை முயற்சிகளை வடகொரியா மேற்கொண்ட …
-
- 2 replies
- 752 views
-
-
வெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரருக்கு 50,000 ரூபாய் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSHURIAH NIAZI Image captionவெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடிய போலீஸ்காரர் அபிஷேக் படேல் மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாவட்டம் சிதெளரா கிராமம். வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் ஒரு வெடிகுண்டு இருப்பதை மாணவர்கள் கண்டனர். பிற்பகல் 12.50 மணி…
-
- 0 replies
- 876 views
-
-
வட கொரியாவுக்கான எல்லா சாத்தியங்களும் தயார்: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியா மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவியிருப்பதன் மூலம் தான் தனிமைப் படுத்தப்படுத்துவதை அதிகரித்துக்கொள்ளும் என்றும், 'எல்லா சாத்தியப்பாடுகளும்' மேசை மீது தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். படத்தின் காப்புரிமைEPA Image captionவட கொரிய எல்லை அருகே …
-
- 0 replies
- 488 views
-
-
அமெரிக்காவின் ஹியூஸ்டனில் பெருவெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் ; சரக்கு ரயில்களில் கீழே மறைந்து வரும் குடியேறிகளை தடுக்க, அவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை ஆஸ்திரியா அதிகரித்துள்ளது மற்றும் எகிப்தில் பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவரின் கதை ஆகியவை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 244 views
-
-
ராம் ரஹீமுக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு! #WhyInGodsName பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு மேலும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். இதன்மூலம் அவருக்கு மொத்தம் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு வழக்குகளுக்கும் தலா ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், தலா ரூ.14 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜக்தீப் சிங், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002-ம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்யப்பட்டது. …
-
- 1 reply
- 862 views
-
-
கன்டெய்னர் லாரிகள், மினி பஸ் மோதல்: லண்டன் கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பலி பதிவு: ஆகஸ்ட் 28, 2017 00:57 லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ்சீபுரத்தை சேர்ந்தவர்கள். லண்டன்: லண்டனில் கன்டெய்னர் லாரிகளும், மினி பஸ்சும் மோதிக்கொண்ட கோர விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 3 பேர் காஞ…
-
- 6 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவின் ஹியூஸ்டனில் பெருவெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் ; சரக்கு ரயில்களில் கீழே மறைந்து வரும் குடியேறிகளை தடுக்க, அவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை ஆஸ்திரியா அதிகரித்துள்ளது மற்றும் எகிப்தில் பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவரின் கதை ஆகியவை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 333 views
-
-
‘த்ரில்’ அனுபவத்திற்காக 86 நோயாளிகளைக் கொலை செய்த ஜெர்மனி ஆண் நர்ஸ்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் முகத்தை மூடியிருக்கும் சீரியல் கில்லர். - படம். | ராய்ட்டர்ஸ். ஜெர்மனியில் நோயாளிகளுக்கு ஊசிமருந்து மூலம் மாரடைப்பு ஏற்படும் மருந்தை ஏற்றி 86 நோயாளிகளைக் கொலை செய்ததாக ஆண் நர்ஸ் மீது பரபரப்பு புகார் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. நீல்ஸ் ஹீகல் என்ற இந்த 40 வயது ‘சீரியல் கில்லர்’ 1999-2002-ம் ஆண்டுகளில் ஓல்டன்பர்க் மருத்துவமனையிலும், டெல்மென்ஹார்ஸ்ட் மருத்துவமனையில் 2003 முதல் 2005 வரையிலும் நர்ஸாகப் பணியாற்றி வந்தவர். இவர் 2015-ம் ஆண்டு இரண்டு கொலைகள் மற்றும் இரு கொலை முயற்சிகள் தொட…
-
- 0 replies
- 384 views
-
-
பெல்ஜியத்தில் ஆரம்பமாகவுள்ளது பிரக்சிற் பேச்சு வார்த்தைகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ்சில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நெகிழ்வுப் போக்கு மற்றும் புதிய யோசனைகளுடன் இந்தப் பேச்சுவார்த்தையை அணுக வேண்டும் என பிரித்தானியா சார்பில் பங்கேற்றுள்ள பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். வர்த்தகம் உள்ளிட்ட விடயங்களில் பரந்த அளவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பிரித்தானியா வெளியேறுவதற்கு பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். பிரஜைகளின் உரிமை, அயர்லாந்து எல்லை மற்றும் பிரிந்து செல்வதற்கான சட்டமூலம் குறித்து மு…
-
- 0 replies
- 333 views
-
-
ஹார்வே புயல்: ஹூஸ்டனில் வெள்ளப்பேரழிவில் இருந்து 2000 பேர் மீட்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மூன்றாயிரத்துக்கும் அதிகமான தேசிய மீட்புப் படையினர் உள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தில் கன மழையுடன் ஹார்வே புயல் புரட்டி எடுத்து வரும் நிலையில், ஹுஸ்டன் நகரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற…
-
- 0 replies
- 375 views
-
-
‘பாபாக்கள்’ உலகைப் புரிந்து கொள்ள முடியாது ‘நம் நாட்டின் எந்தப் பகுதியில் சதுர மைலுக்கு அதிக பாபாக்கள் வசிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்பினால், சமீபத்திய பஞ்சாப்-ஹரியாணா வன்முறைச் சம்பவ செய்திகளைப் படிக்காமல் இருந்தால் திணறியிருப்பீர்கள்; இப்போது புரிந்திருக்குமே அது பஞ்சாப், ஹரியாணா என்று! இவ்விரு மாநிலங்களும் வேளாண் செழிப்பு, பாசன வசதிகள், வீரம், விளையாட்டு, தொழில் வளர்ச்சி என்று பலவற்றுக்குப் புகழ் பெற்றிருந்தாலும் தங்களைத் தாங்களே ‘பாபா’ என்று அழைத்துக்கொள்பவர்களின் எண்ணிக்கைக்காகவும் பெயர் போனவை. எல்லா பாபாக்களுமே மோசமானவர்கள் அல்ல; சிலர் உண்மையிலேயே ஆன்மிக சித்தாந்தங்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 உடல்கள் – ஈராக்கில் பயங்கரம்!! ஈராக்கில் 2 புதைகுழிகளில் 500க்கும் மேற்பட்டோரின் உடல்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈராக்கில் 2014ம் ஆண்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் தொடங்கியது. ஈராக்கின் 2ஆவது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனி நாட்டை உருவாக்கினார்கள். தற்போது அமெரிக்க ராணுவம் உதவியுடன் ஈராக் ராணுவம் மொசூல் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளை மீட்டுள்ளது. அங்கு இராணுவம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது. மொசூல் அருகே படவுஸ் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. அங்கு 2 மிகப் பெரிய புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. …
-
- 0 replies
- 731 views
-
-
லண்டன் பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் தாக்கி 3 போலீஸார் காயம்: தீவிரவாத சதியா என போலீஸார் விசாரணை பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 3 போலீஸார் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து லண்டன் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்கிங்காம் அரண்மனைக்கு வெளியே தடை செய்யப்பட்ட பகுதியில் ஒரு கார் வந்து நின்றது. இதையடுத்து அங்கு நின்றிருந்த போலீஸ் வேனிலிருந்து வெளியே வந்த போலீஸார் (ஆயுதமின்றி), அந்தக் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காரிலிருந்த சுமார் 4 அடி ந…
-
- 0 replies
- 242 views
-
-
யிங்லக் ஷினவத்ரா துபாயில் தஞ்சம்: தாய்லாந்து அரசு தகவல் யிங்லக் ஷினவத்ரா - AFP தாய்லாந்தில் இருந்து தப்பிச் சென்ற முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா துபாய் சென்றுள்ளார். அவர் பிரிட்டன் அரசிடம் தஞ்சம் கோர முயற்சித்து வருகிறார் என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்தபோது அரிசி கொள்முதலில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக யிங்லக் நேற்று முன்தினம் நேரில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 536 views
-
-
பிரிவினைக்கு முந்தைய வரலாறு இந்தியா, பாகிஸ்தானில் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஸ்கைப் மூலமாக பிபிசி உருது செய்தியாளர் சுமலதா ஜாஃப்ரி பாகிஸ்தான் மாணவர்களிடையே உரையாடுகிறார் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி அவற்றின் நீங்காத விளைவுகளை அலசும் பிபிசியின் ஆய்வுத் தொடர். ஒரு காலத்தில் பிரிட்டி…
-
- 0 replies
- 519 views
-
-
கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். 'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்பு பேட்டி: இந்திய அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ பலகைகளிலும் அறிவிப்புகளிலும் உள்ள இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள். சுதந்திர தின உரையின் போதுகூட இந்தித் திணிப்பை எதிர்த்துப் பலமாக குரல் எழுப்பினீர்களே? இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான். நா…
-
- 8 replies
- 1k views
-
-
இராணுவ வீரர்களை கத்தியால் தாக்கிய நபர் சுட்டுக்கொலை பெல்ஜியம், பிரெஸிலஸ் நகரில் படை வீரர்கள் இருவர் மீது கத்திக் குத்து மேற்கொண்ட ஒருவர், இராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரர்ணுவ வீரர்கள் இருவர் மீது மேற்படி நபர் கத்திக் குத்து தாககுதலை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மேற்படி நபர் மீது இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் காயமடைந்த 30 வயதான தாக்குதல்தாரி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபர், பயங்கரவாத அ…
-
- 0 replies
- 631 views
-
-
’தாஜ்மஹால் கல்லறைதான்’ - முதன்முறையாக தொல்லியல் துறை ஒப்புதல்! ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மாஹால் ஒரு கல்லறைதான் என்று மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை முதன்முறையாகக் கூறியுள்ளது. தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னொரு காலத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகவும், எனவே இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி ஆக்ரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் 6 பேர் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், ராஜா ஜெய்சிங் என்ற மன்னர் கட்டியிருந்த தேஜோமஹலாய் (Tejomahalay) என்ற சிவன் கோயிலை இடித்துவிட்டே மன்னர் ஷாஜகான், அந்த இடத்தில் தனது மனைவி மும்தாஜுக்கு கல்லறை அமைத்திரு…
-
- 0 replies
- 519 views
-