உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சிரியா கடற்படைத் தளத்திலிருந்து 50 டொமாஹாக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமையன்று நடத்தப்பட்ட நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய ரசாயன தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதலில் டஜன்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செவ்வாய்க்கிழமை எந்த தளத்திருந்து தாக்குதல் நடைபெற்றதோ அப்பகுதியில் தாக்குதல் நடத்த தான் உத்தரவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மனித நேயம் கொண்ட அனைத்து நாடுகளும், சிரியாவில் நடைபெறும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். வியாழக்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் பேசுகையில், எதிர்கால சிரியாவ…
-
- 6 replies
- 807 views
-
-
இதுதான் சீனாவுக்கும் தலாய் லாமாவுக்கும் உள்ள பிரச்னை! #3MinsRead திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் ஒருவார அருணாச்சலப் பிரதேச பயணம், இன்றைக்கு இந்தியா - சீனா உடனான உறவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பீஜிங்கில் உள்ள, சீனாவுக்கான இந்திய தூதரை சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. ''நாங்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று சொல்லும் வேலை சீனாவுக்கு இல்லை'' என்று காட்டமாகப் பேசியுள்ளார் அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு. மதத்தலைவரைச் சீனா ஏன் எதிர்க்க வேண்டும்? அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இங்கே யாரை அனுமதிப்பது, அனுமதிக்கக் கூடாது என்று ம…
-
- 0 replies
- 426 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான இன சுத்திகரிப்பு எதுவும் நடக்கவில்லை; ஆட்சிக்கு வழிகாட்டும் தலைவி ஆங் சான் சூசி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி. * ஆண்டவன் வழிபாடும் அரசின் தடையுத்தரவும்; தீவிரவாதத்துக்கு எதிரான ரஷ்ய அரசின் கெடுபிடியால் அங்குள்ள ஜஹோவாவின் சாட்சியத்திருச்சபைகள் தடுக்கப்படலாம். * மேலே மேலே இன்னும் மேலே; ஆசிய நாடுகளின் வீட்டு விலைகள் விண்ணைத்தொடும் உயரத்தில் பறப்பதேன்? தாய்லாந்திலிருந்து சிறப்புச் செய்தி.
-
- 0 replies
- 295 views
-
-
ஜேர்மனியில் தாக்குதல்; கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் இலங்கை அகதி அனுமதி ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தாக்குதலுக்குள்ளானவர் 22 வயது இளைஞர் என்றும், தனது முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது…
-
- 2 replies
- 489 views
-
-
3,700 ஆண்டுகளுக்கு முந்தைய பிரமிட் பகுதிகள் கண்டுபிடிப்பு சுமார் 3,700 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட பிரமிடின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்திய அரசின் தொல்பொருட்கள் அமைச்சகம்தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA Image captionஆரம்ப அகழ்வில் வெளிப்பட்ட நடைபாதை பகுதி கெய்ரோவின் தெற்கில் உள்ள தாஹ்சூர் அரச இடுகாடு பகுதியில், உள்புற நடைகூடம் மற்றும் எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் அடங்கிய 10 வரிகள் கொண்ட ஒரு பகுதி ஆகியவை கண்டிபிடிக்கப்பட்டவைகளில் அடங்கும். உலகை அச்சுறுத்தும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் திட்டம் பிரமிடின் அளவை நிறுவவும், மேலும் பல தகவல்களை வெளிக்கொணரும் வகையிலு…
-
- 0 replies
- 322 views
-
-
வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை சோதனை நடத்திய தென்கொரியா கொரிய தீபகற்பத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. சியோல்: தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தென்கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகிறது. ஐ.நா. பொருள…
-
- 0 replies
- 381 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் குழந்தைகள் உள்பட பலரைக்கொன்ற இரசாயன ஆயுத தாக்குதலை நடத்தியது யார் என்பதில் ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் மோதல். * கடல்நீரைக் குடிநீராக்க செலவுகுறைந்த இயற்கையை பாதிக்காத எளிய வழியை கண்டறிந்திருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் அறிவிப்பு; அதிசயப்பொருளான கிராபீன் மூலம் உலகின் குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியுமென நம்பிக்கை. * உலக அளவில் இளம் தலைமுறையினரால் வீடு வாங்க முடியாமல் போவது ஏன்? சீனாவின் நிலரவத்தை நேரில் ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 257 views
-
-
ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 31 பேர் பலி ஈராக் தலைநகர் பாக்தாத்தின் வடக்கு பகுதியான டிக்ரிட்டில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 42 படுகாயமடைந்துள்ளனர். பொலிஸ் துறையை சேர்ந்த ரோந்து படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் தற்கொலைப் படையை சேர்ந்த ஐந்து பேர் காவல் அதிகாரியின் வீட்டினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என சலாஹ_தீன் மாகாண சபையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்கொலைப்படையை சேர்ந்த மூன்று பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எனினும், இரண்டு பேர் தங்கள் மீது கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர் என அகமது அல்-கரீம் என்பவர் தெரிவித்துள்ளார். குண்டு…
-
- 0 replies
- 305 views
-
-
60 வருடங்களுக்கு முன் தனது உயிரை காப்பாற்றிய வீரரை சந்தித்த தலாய்லாமா..! திபத்திலிருந்து தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த போது, தனக்கு உயிர் பாதுகாப்பு அளித்த இந்திய இராணுவ வீரரை 60 வருடங்களுக்கு பிறகு தலாய்லாமா சந்தித்துள்ளார். திபெத்தை சேர்ந்த 81 வயதான ஆன்மீகத்தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் வட கிழக்கு பகுதியான அருணாச்சல் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், 60 வருடங்களுக்கு முன் அவருக்கு உதவிய இந்திய இராணுவ வீரர் நரேன் சந்திர தாஸ் என்பவரை சந்தித்துள்ளார். மேலும் சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் தோல்வியுற்ற திபெத்திய குழுவினர், அந்நாட்டின் லாசா பகுதியிலிருந்து இரண்டு வார கடின பயணம் மேற்கொண்ட நிலையில் 1959 ஆம் ஆண்டு …
-
- 0 replies
- 301 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதலென சந்தேகிக்கப்படும் தாக்குதலில்-சிறார்கள் உட்பட குறைந்தது- ஐம்பத்துஎட்டு பேர் பலி; பலர் படுகாயம். * உறைநிலைக் கருக்களைக்கொண்டு குழந்தை பெரும் பெற்றோர்; அறிவியல் துணையோடு அதிகரிக்கும் சீனாவின் குழந்தை பிறப்புகள். * Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்துவது மூளைச்செயற்திறனை நிறுத்திவைப்பதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு; ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை.
-
- 0 replies
- 221 views
-
-
சிரியாவில் இரசாயனத் தாக்குதல்? சிறுவர்கள் உட்பட 58 பேர் பலி! சிரியாவில் நடத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரசாயனத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 58 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரசாயன வாயுவை சுவாசித்த பலரும் மூச்சடைத்தும், சுய நினைவிழந்தும் விழுந்து மரணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலரது வாயிலும் நுரை தள்ளியிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்ட பல குழந்தைகளின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் விமானம் மூலமாகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவு…
-
- 2 replies
- 593 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு; பத்துபேர் பலி; ஐம்பது பேர் காயம்; பயங்கரவாத தாக்குதலா என ஆராய்வதாக புடின் அறிவிப்பு. * மொசூல் நகர சண்டையில் சிறார்களை மனிதக்கேடமாக பயன்படுத்தும் ஐஎஸ் அமைப்பு; அதற்கான சாட்சியக்காட்சிகளை கண்டது பிபிசி. * கரைக்கு வந்தது தென்கொரிய கடலில் மூழ்கிய செவோல் பயணிகள் கப்பல்; இன்னமும் கணக்கில் வராத பயணிகளின் சடலங்கள் அதில் கிடைக்குமா? * ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்களின் அழகிய கண்காட்சி; ஐநூறு மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் இவை, தொடர்ந்து அதிகரிக்க காரணம் என்ன?
-
- 0 replies
- 236 views
-
-
81 படகுகளை தீ வைத்து எரித்துள்ள இந்தோனேசிய கடற்படை ..! எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை தீ வைத்து எரித்துள்ளது. இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மீனவர்கள் எல்லை மீறி வந்து மீன்பிடித்த குற்றத்திற்காக அந்நாட்டு கடற்படையினர் 81 படகுகளை சிறைப்படுத்தியிருந்தனர். மேலும் இந்தோனேசியாவின் கடல் எல்லையில் அத்துமீறி வந்து மீன்பிடிக்கும் வெளிநாட்டு மீனவர்கள் மீது அந்நாடு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கைப்பற்றிய 81 படகுகளை அந்நாட்டு கடற்டபடையினர் தீ வைத்து எரித்து அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகி…
-
- 0 replies
- 289 views
-
-
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 10 பேர் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. படத்தின் காப்புரிமைEVN Image captionசெயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சென்னயா லோஸ்சத் மற்றும் அருகிலுள்ள டெக்னாலஜி இன்ஸ்டிடியூஷன் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்ததாக செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. அந்த ரயில் நிலையத்திலுள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். …
-
- 5 replies
- 630 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் மற்றுமொரு கப்பல் கடத்தல் 11 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த இந்திய வர்த்தக கப்பல் ஒன்று சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஏமனில் உள்ள அல் முகாலா துறைமுகத்திற்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய நாட்டை சேர்ந்த அக் கவுசார் என்ற வர்த்தக கப்பலை இம் மாதம் முதலாம் திகதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவை சேர்ந்த கொள்ளையடிப்பு எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் அப்திரிசாக் முகமது திரிர் கருத்து தெரிவிக்கையில், “இந்திய கப்பலை சோமாலியா கொள்ளையர்கள் கடத்திவிட்டனர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிற…
-
- 2 replies
- 356 views
-
-
தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனிய நாட்டு பெண்மணி மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்ததியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். படத்தின் காப்புரிமைகோப்புப் படம் இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து பெற்றுள்ள மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பெண் 38 வயது மிக்கவர் எனவும், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த கடற்கரையில் சூரியகுளியல் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரை மூன்று பேர் கடத்தி சென…
-
- 4 replies
- 1.5k views
-
-
மத்திய தரைக் கடலில் மீட்கப்பட்ட புகலிடக் கேரிக்கையாளர்களில் இலங்கையர்களும் உள்ளடக்கம் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் நான்கு நாள் சிசுவொன்றும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு படகுகளில் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குவதாகவும் இத்தாலி நோக்கியே இந்தப் படகுகள் மூலம் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட, மத்திய ஆபிரிக்கா, இலங்கை, ஏமன் உள்ளிட்ட நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தப் படகில் பயணித்துள்ளனர். ஸ்பெய்னின் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளது. http://globaltamilnews.net/archives…
-
- 0 replies
- 250 views
-
-
ஜெர்மனி விமான நிலையத்தில் இந்தியப் பெண்ணுக்கு அவமரியாதை: அறிக்கை கோரினார் சுஷ்மா ஜெர்மனியின் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையின்போது இந்தியப் பெண் ஒருவரை ஆடைகளை களையச் செய்யுமாறு வற்புறுத்தி அவமானப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிக்கை கோரியுள்ளார். ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரக அதிகார் ரவீஷ் குமாருக்கு அனுப்பியுள்ள ட்வீட்டில், பிராங்க்பர்ட் சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியை இணைத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரியுள்ளார். நடந்தது என்ன? ஸ்ருதி பஸப்பா, பெங்களூருவில் இருந்து ஐஸ்லாந்து நாட்டுக்கு தனது கணவர் மற்றும் 4 வயத…
-
- 4 replies
- 678 views
-
-
டிரம்பின் உதவியாளராக இணைந்தார் மகள் இவான்கா அமெரிக்க அதிபரின் உதவியாளர் என்ற நிலையில் ஊதியம் வழங்கப்படாத பணியாளராக இவான்கா டிரம்ப் தன்னுடைய தந்தையின் நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. படத்தின் காப்புரிமைANDREW HARRER-POOL/GETTY IMAGES அதிகாரப்பூவமற்ற முறையில் பணிபுரியும் தன்னுடைய தொடக்க திட்டத்திற்கு அறநெறிமுறை வல்லுநர்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்புக்களை தொடர்ந்து அமெரிக்காவின் முதல் மகளான இவான்கா டிரம்ப் இதற்கு இசைந்திருக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட திறனோடு, அதிபருக்கு ஆலோசனை வழங்குவதில் சிலர் தெரிவித்த கவலைகளுக்கு செவிமடுத்துள்ளதாக 35 வயதாகும் இவான்கா டிர…
-
- 1 reply
- 346 views
-
-
பிரிந்து செல்ல மீண்டும் பொதுவாக்கெடுப்பு: பிரிட்டனுக்கு ஸ்காட்லாந்து பிரதமர் கடிதம் பிரிந்து செல்வது தொடர்பாக மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டனிடம் ஸ்காட்லாந்து பிரதமர் நிகோலா ஸ்டர்ஜியன் முறையாக கோரினார். லண்டன்: பிரிட்டனின் ஓர் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து, தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. இதுதொடர்பாக 2014-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், ஸ்காட்லாந்து, பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து 55 சதவீத மக்கள்…
-
- 0 replies
- 298 views
-
-
மாதவிடாய் சோதனைக்காக 70 மாணவிகளை நிர்வாணப்படுத்திய கொடுமை உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி பகுதியில் உறைவிடப் பள்ளி ஒன்றில் மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்ததும், மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் சிங், சந்திரஜித் யாதவ்வின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்தார். மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இருந்தபோதிலும், சில ஆசிரியர்களின் சதியினால் தான் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக சுரேகா தோமர் கூறுகிறார். இந்த மாதம் 29 ஆம் த…
-
- 3 replies
- 3k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சட்டரீதியிலான யானைத்தந்த வர்த்தகத்தில் சரிபாதியை இன்றோடு மூடுகிறது சீனா; அழிவின் விளிம்பிலுள்ள ஆப்ரிக்க யானைகளை காக்க இதுமட்டும் போதுமா? * ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்த தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் குன் ஹீ சிறையில் அடைப்பு. * பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் பெண்களை நியமிக்க மறுக்கும் அரசு; கேள்வி எழுப்பும் செயற்பாட்டாளர்கள்; பிபிசியின் நேரடிச் செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 203 views
-
-
நெதர்லாந்து தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படும் உண்மைகள் ஐரோப்பா முழுவதும் வெகுஜன ஈர்ப்பு அலை பரவும் என்று எழுந்த கணிப்பைப் பொய்யாக்கியிருக்கின்றன நெதர்லாந்து தேர்தல் முடிவுகள். பிரதமர் மார்க் ருட்டேயின் மைய வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக் கான மக்கள் கட்சி’(விவிடி) 33 இடங்களில் வென்றிருப்பதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான, முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கை கொண்ட, அகதிகள் வருகையை எதிர்க்கின்ற கீர்ட் வைல்டர்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரத்துக்கான கட்சி’க்கு(பிவிவி) 20 இடங்கள் கிடைத்திருக்கின்றன. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்தின் கீழ் சபைக்கு, 28 கட்சிகள் போட்டியிட்டிருக்கும் நிலையில், கூட்டண…
-
- 0 replies
- 306 views
-
-
டிரம்ப் பிறப்பித்த புதிய பயண தடை உத்தரவுக்கு காலவரையின்றி தடை: ஹவாய் கோர்ட்டு அதிரடி 6 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு காலவரையின்றி தடை விதித்து ஹவாய் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது வாஷிங்டன்: சூடான், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்த பயணிகள் அமெரிக்காவுக்கு வர 90 நாட்கள் தடையும், அந்த நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு 120 நாட்கள் தடையும் விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 6-ந் தேதி கையெழுத்திட்டு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்தா…
-
- 0 replies
- 264 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பர்மாவில் ஆங் சான் சூசியின் கட்சி ஆட்சிக்கு வந்து ஓராண்டாகும் நிலையில் அது மியான்மாரில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? * சிரியாவில் போர் தொடங்கி ஏழாண்டு ஆகும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஹோம்ஸ் நகருக்கு சென்ற பிபிசி அங்கு முன்னர் சந்தித்த சிறுமையை மீண்டும் சந்திதது. * சிறார்களிடம் மன அழுத்தம் அதிகரிக்கும் சூழலில் தியானம் எப்படி பெரிய வர்த்தகமாக வளர்ந்துள்ளது என ஆராய்கிறது பிபிசி
-
- 0 replies
- 212 views
-