உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேனின் ஆரம்ப உரையில் இலங்கையின் மனித உரிமைகளின் நிலவரம் குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் இலங்கையின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.…
-
- 0 replies
- 443 views
-
-
சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு சிரிய விவகாரம் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ரஸ்யாவிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்வது தொடர்பில் இவ்வாறு இணங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்த்தரப்பினரின் பிடியில் காணப்படும் சில பகுதிகளின் மீது சிரிய படையினர் தாக்குதல் நடத்துவதனை நிறுத்திக் கொள்ள உள்ளனர். ரஸ்யாவும் அமெரிக்காவும் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி மற்றும் ரஸ்ய ராஜாங்கச் செயலாளர் Sergei Lavrov ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போ…
-
- 0 replies
- 288 views
-
-
தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகையில் நடந்த மாணவர்களுக்கான தேசிய கவிதைப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாணவி சலாமே, மாணவர் ஜோயே ரெய்ஸ்பெர்க், மிஷேல் ஒபாமா, மாணவர் கோபால் ராமன், மாணவிகள் மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா | படம்: ஏஎப்பி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 …
-
- 0 replies
- 551 views
-
-
வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக் சர்ச்சை அந்த வரலாற்று சிறப்புமிக்க படம் ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வேறுபடுத்தி புரிந்து கொள்ள இயலாமை காரணமாக சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக நார்வே செய்தித்தாள் நிறுவனமான ஆஃப்டென்போஸ்டென் கருத்து தெரிவித…
-
- 0 replies
- 333 views
-
-
போத்துக்கல்லின் அந்தோனியே குற்றாரஸ் - ஐ.நாவின் அடுத்த பொதுச் செயலாளர்? ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளருக்கான தேர்வில் போத்துக்கல்லின் முன்னாள் பிரதமரும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பான (ருNர்ஊசு) ன் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குற்றாரஸ் முன்னிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு நெருக்கமான ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் இறுதியாக நடைபெற்ற அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பில் 15 நாடுகளின் பிரதிநிதிகளில் 11 பேரின் ஆதரவை குற்றாரஸ் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் இவரின் தெரிவில் அதிருப்தியும் ஒரு பிரதிநித…
-
- 0 replies
- 376 views
-
-
பிரிட்டனில் MASTER CARD பாவனையாளர் ஒவ்வொருவருக்கும் £300 இழப்பீடு கிட்டும். பிரித்தானியாவில் MASTER CARD பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது £300 ஸ்ரேலிங் பவுண் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது. MASTER CARD நிறுவனம் முறைகேடாக அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களிடம் சேவைப்பணம் அறவிட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பாவனையாளர்களுக்கு இழப்பீடாக 14 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பிரிட்டனின் நிதித்துறை கண்காணிப்பு மையமான ((Financial Ombudsman Service) தொடர்ந்திருக்கும் வழக்கில் 1992 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் நான்கு கோடியே 60 லட்சம் மக்களிடம் …
-
- 2 replies
- 751 views
-
-
தமிழர்களை உறைய வைக்கும் 'பந்த்' கர்நாடகாவில் திரும்புகிறதா 1991? உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றுவருகிறது. பாஜக, மஜத உட்பட நூற்றுக்கணக்கான கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் பங்கேற்றுள்ளதால் கர்நாடகாவில் பதற்றம் நிலவுகிறது. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள். பந்த்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லையென்றால் வீடு புகுந்து தாக்குவோம் என்ற அடாவடி அறிவிப்பு அவர்களை மிரட்சிக்குள்ளாக்கியுள்ளது. 700க்கும் மேற்பட்ட அமைப்புகளின் ஆதரவோடு …
-
- 9 replies
- 2.2k views
-
-
9/11 தாக்குதல்: சவுதி மீது வழக்கு தொடுக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஆதரவு அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல…
-
- 0 replies
- 338 views
-
-
-
- 0 replies
- 521 views
-
-
நேதாஜியின் மரணத்தை ஜப்பான் உடனே உறுதி செய்தது: பிரிட்டிஷ் ஊடகம் புதிய தகவல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் | கோப்புப் படம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்தை சில வாரங்களிலேயே அமெரிக்காவிடம் ஜப்பான் உறுதி செய்தது என்று பிரிட்டிஷ் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. நேதாஜியின் இறப்பு விவரங்கள் அடங்கிய ஜப்பான் அரசின் 60 ஆண்டு பழமையான ஆவணம் அண்மையில் பிரிட்டிஷ் இணையதளம் ஒன்றில் வெளியானது. அதில் 1945 ஆகஸ்ட் 18-ம் தேதி தைவான் விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டார் என்று உறுதியாக கூறப்பட்டுள்ளது. நேதாஜி பயணம் செய்த விமா னம் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி 20 மீட்டர் உயரத்தில் பறந்தபோது, இடதுபக்க இறக்கை யில் விசிறி உடைந்து…
-
- 1 reply
- 689 views
-
-
இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய பொப் இசை பாடகி மாயா கனடா வருகின்றார் இலங்கைத் தமிழர் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துச் கூறிய சர்வதேச பொப் இசை பாடகி மாயா அருள்பிரகாசம் அவர்கள் வரும் 9 ம் 10ம் திகதி நடைபெறும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளன வெள்ளிவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொள்கின்றார் அவர் பற்றி சிறு குறிப்பு நான் அப்படித் தான் இருப்போம்! மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார். ஈழத் தமிழ் பெண்ணான இவர், பின்னர் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பொப் இசைப் பாடகியாக இருக்கிறார். மாதங்கி என்ற பெயரைச் சுருக்கி எம்.ஐ.ஏ என்று மாற்றிக்கொண்டார். ம…
-
- 2 replies
- 718 views
-
-
இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய விளம்பரம்: பணிந்தது ஏர் சைனா! லண்டனில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என 'ஏர்சைனா' விமானத்தின் 'விங்ஸ் ஆஃப் சைனா' செப்டம்பர் மாத பதிப்பில் இடம் பெற்றுள்ள விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. '' பொதுவாக லண்டன் பாதுகாப்பான நகரம்தான். ஆனால் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் கருப்பின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பயணிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். இந்த இடங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது அவசியம் என அந்த விளம்பரம் கூறுகிறது. 'அத்துடன் பயணிகள் இரவில் இந்த பகுதியில் தனியாகப் போகக் கூடாது. பெண்கள் துணையுடன் மட்டும்தான் போக வேண்டும்' என்றும் அந்த விளம்பரம் அறிவுறுத்…
-
- 0 replies
- 547 views
-
-
பள்ளத்தாக்கில் பயணம் உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது. ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் …
-
- 1 reply
- 543 views
-
-
தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட மேலும் நால்வரை தேடும் மலேசிய காவல்துறை மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மலேசியாவுக்கான இலங்கை தூதுவர் இப்ராகிம் அன்சார் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, கோலாலம்பூர் விமான நிலையத்தில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப ட்டுள்ளனர். இவர்களின் விளக்கமறியல் மேலும் இரண்டு நாட்கள் – நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, மலேசிய கா…
-
- 0 replies
- 465 views
-
-
"பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விரைவாக விலக வேண்டும்" ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க், வெளியேறிய பிறகும் பிரிட்டனுடன் நெருக்கமான உறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் ஆனால் தற்போது தெரீசா மேயின் கையில் தான் முடிவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் ஸ்லோவாக்கியாவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பங்கு பெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும்…
-
- 2 replies
- 505 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஹிலரி கிளிண்டனின் ஆதரவு கரைகிறது; டொனால்ட் ட்ரம்ப் நேர்மையானவர் என்னும் கருத்து அதிகரிக்கிறது. புளோரிடா மாநிலம் அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்குமா? * காலைஸ் காட்டு முகாமை மூட முயல்கிறது பிரான்ஸ்; அங்குள்ள அகதிகள் எங்கே போவார்கள்? மோசமான சூழலில் அங்கு வாழ்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? *முஸ்லிம் சிறுமிகளிடம் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் கிரிக்கெட் பயிற்சி; கிழக்கு லண்டன் கிரிக்கெட் பயிற்சியாளரின் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 521 views
-
-
ஒபாமாவை விட புடின் சிறந்த தலைவர் : டிரம்ப் வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மீண்டும் பாராட்டியுள்ளார். கோப்புப் படம் மூத்த ராணுவ பிரிவினருடன் நடந்த கேள்வி - பதில் பகுதியில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை விட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு சிறந்த தலைவர் என்று டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையேயான உறவில் பிரச்சனைகள் இருக்காது என்றும் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை வெளி…
-
- 0 replies
- 427 views
-
-
கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டிய விமானம் விமானியின் தவறினால் மெல்பேர்னில் தரையிறங்கியது 2016-09-08 12:43:32 அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட பயணிகள் விமானமொன்று, விமானியின் தவறு காரணமாக கோலாலம்பூருக்குப் பதிலாக மெல்பேர்ன் நகரில் தரையிறங்கியதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணைகளின் பெறுபேறுகளை வான் போக்குவரத்து அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். மலேஷியாவின் எயார் ஏசியா நிறு…
-
- 0 replies
- 546 views
-
-
பரபரப்பான இரவு வாழ்க்கையை லண்டன் இழந்துள்ளதா? உலக அளவில் இரவு கேளிக்கை அம்சங்களில் பலராலும் விரும்பப்பட்ட லண்டன் நகரம், அந்நிலையிலிருந்து தற்போது வீழ்ச்சியடைந்து வருவது குறித்து, லண்டன் மாநகர மேயரான, தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார். சாதிக் கான் (கோப்புப் படம்) இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் இரு இளைஞர்கள் இறந்துள்ள ஃபேப்ரிக் இரவு விடுதியின் உரிமத்தினை ஒரு உள்ளூர் நகர சபை திரும்பப் பெற்றதற்கு பின்னர், சாதிக் கான் இதனை தெரிவித்தார். பலரையும் ஈர்க்கக் கூடிய உலகின் மிக முக்கிய நடன கேளிக்கை மையங்களில் ஒன்றாக ஃபேப்ரிக் இரவு விடுதி கருதப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில், லண்டனில் உள்ள இரவு விடுதிகளில் பாதியளவும…
-
- 0 replies
- 579 views
-
-
பிரான்ஸின் துறைமுக நகரமான கலேயில் பிரிட்டனுக்குள் நுழையும் நோக்குடன் முகாமிட்டிருக்கும் 9 ஆயிரம் வரையிலான குடியேறிகள் இருப்பிடத்தைச் சுற்றி தடு;ப்புசசுவர் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும என்று பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கலேயின் பெருஞ்சுவர் என்று ஊடகங்கள் வர்ணிக்கும் இந்தச் சுவர் 4 மீற்றர் உயரம் கொண்டதாக 1 கிலோ மீற்றர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பதாக இந்தச் சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் பிரித்தானிய அரசின் செலவில் அமைக்கப்படும் இந்தச் சுவர் குடியேறிகள் சுரங்கவழிப்பாதையில் அத்துமீறிப்பரவேசிப்பதை தடுக்க உதவும் என்றும் உள்துறை அமைச்சர் அம்பர் றுட் தெரிவித்துள்ளார். குடிய…
-
- 0 replies
- 466 views
-
-
பாரிஸ் தேவாலயம் எதிரில் நின்ற எரிவாயு நிரம்பிய கார் ; இருவர் கைது சனிக்கிழமையன்று பாரிஸ் நகரில் உள்ள நாட்ர டாம் தேவாலயத்திற்கு எதிரில் எரிவாயு கலன்கள் நிறைந்த கார் ஒன்றை கண்டறிந்தது தொடர்பாக இருவரை ஃபிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோப்புப் படம் காரின் முன் இருக்கையில் காலியான கலமும், பின்புறம் பொருட்களை வைக்கும் ட்ரங்க் பகுதியில், எரிவாயு நிரப்பப்பட்ட ஆறு கலன்களும் அதன் சிக்னல் விளக்கு ஒளிரும் நிலையில் ஆட்கள் இன்றி இருந்தது. வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை; ஆனால் கைது செய்யப்பட்டவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களா என்று விசாரணை நடந்து வருகிறது. இருவரும் பாதுகாப்பு சேவைகளுக்கு அறியப்பட்டவர்கள் என…
-
- 0 replies
- 508 views
-
-
உலகளவில் 50 கோடி குழந்தைகள் புலம் பெயர்வு: யுனிசெஃப் பொக்கோ ஹராம் அமைப்பின் வன்முறையில் இருந்து தப்பிக்க நைஜீரிய அகதிகள் முகாமில் தங்கியிருந்த குழந்தை பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 50 மில்லியன் குழந்தைகள் போர், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் தங்கள் தாய்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அவசர கால நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்டனி லேக், ''அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் கரையில் ஒதுங்கிக்கிடந்தது. ஐந்து வயதான சிறுவன் ஒம்ரான் டாக்னீஷ் சிரிய போரால் தரைமட்டமான தனது வீட்டிலிருந்து மீட…
-
- 0 replies
- 491 views
-
-
அலெப்போவில் குளோரின் வாயு தாக்குதல்? நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதி சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ மாவட்டத்தில் குளோரின் வாயு மூலம் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஹெலிகாப்டர்களில் இருந்து குண்டுகள் வீசப்பட்ட பிறகு, ஒருவர் உயிரிழந்துவிட்டதாக அந்த நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். மூச்சுத்திணறலுக்காக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அதிபர் அசாத் அரசு தொடர்ந்து…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கை உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் பயங்கரவாதச் செயற்பாடு அல்ல – மலேசியா மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதச் செயற்பாடு கிடையாது எனவும் இந்த சம்பவமானது அரசியல் ரீதியான முரண்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது எனவும் மலேசியாவின் பிரதி உள்துறை அமைச்சர் Datuk Nur Jazlan Mohame தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கடந்த காலங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் அரசியல் ரீதியானது எனவும் பயங்கரவாத அடிப்படையில் இடம்பெற்றதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர…
-
- 0 replies
- 411 views
-
-
அகதிகள் கடத்தல் சந்தேகத்தில் 21 பேர் கைது; இத்தாலி காவல்துறை அதிரடி பழைய கார்களின் தொடரணியை பயன்படுத்தி ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குள் அகதிகளை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஐரோப்பா முழுவதுமுள்ள 21 பேரை, இத்தாலி காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். போலியான நிறுவனங்களின் பெயர்களில் பதிவு செய்த வாகன வலையமைப்பை பயன்படுத்தி, வடக்கு பகுதிக்கு குடியேறிகளை அனுப்புவதற்கு, பயணிக்கு தலா 500 அமெரிக்க டாலருக்கு அதிகமாக இந்த சந்தேக நபர்கள் கட்டணம் வசூலித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சரியான ஆவணங்கள் இல்லாத பல குடியேறிகள் இருந்த காரோடு இத்தாலியர் ஒருவர் ஹங்கேரியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஓராண்டுக்கு முன்னர் இந்த ப…
-
- 0 replies
- 460 views
-