உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27050 topics in this forum
-
மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு செய்வதாக மோடி அறிவிப்பு. ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதாலும், நாட்டில் கலவரச் சூழல் நிலவுவதாக சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளதாலும், அதுகுறித்து தேவையான மாற்றம் செய்யப் போவதாகவும், இதுகுறித்து மறு பரிசீலனை செய்யவுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நவம்பர் 8ம் தேதி திடீரென இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து அறிவித்தார் மோடி. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை மக்கள் போதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காமல் தெருத் தெருவாக அலைந்து வருகிறார்கள். அரசின் திட்டம் நல…
-
- 2 replies
- 750 views
-
-
டொனால்ட் ட்ரம்பின் வெற்றியும் அமெரிக்க ஜனநாயகத்தின் மெய்த்தோற்றமும் சர்வதேச விவகாரம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அந்தத் தேர்தல் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க வாக்காளர்கள் மீளவில்லை. அமெரிக்கத் தேர்தல் வரலாற்றில் மிகவும் அதிர்ச்சிகரமான முடிவைத் தந்த தேர்தல் இதுவாகும். இதன் பெறுபேறுகள் குறித்து பல வியாக்கியானங்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் அம்மையர் பிரசாரத்தை சரியாக வழிநடத்தியிருந்தால் ட்ரம்ப்…
-
- 0 replies
- 329 views
-
-
பிரான்ஸில் அதிபர் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் மும்முரம் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடக்க 5 மாதங்களுக்கு முன்னால், நடைபெறுகின்ற ஆரம்பகட்ட தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான மத்திய வலது சாரி குடியரசு கட்சியின் ஆதரவாளர்கள், அவர்களின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க இருக்கின்றனர். பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாமதமாகப் பெருகிய ஆதரவு இந்த வேட்பாளர் தேர்தலை மும்முனை போட்டியாக மாற்றியிருக்கிறது. இதில் போட்டியிடுகின்ற 7 வேட்பாளர்களில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் நிக்கோலாஸ் சர்கோசி மற்றும் முந்தைய பிரதமர் அலாங் யுபே ஆகியோர் முன்னிலை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வந்தனர். ஆனால், முன்னாள் பிரதமர் பிரான்சுவா ஃபியோங்க்கு சற்று தாம…
-
- 0 replies
- 207 views
-
-
இந்தியாவிலேயே தமிழர்கள் தான் கல்வியில் சிறந்தவர்கள் என பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியிலே முஷாரப் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தென் இந்தியா குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென் இந்தியர்கள் அவர்களுக்கான வளர்ச்சியை அவர்களே செய்து கொள்கின்றனர். இந்தியாவின் மற்ற பகுதிகளை விட தென் இந்தியா கல்வியில் சிறந்து விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பமும் அதிகரித்து வருகிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கொண்டுள்ள சாதனைகள் குறித்து அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தென் இந்தியர்களை குற…
-
- 10 replies
- 817 views
-
-
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் முதுபெரும் அதிகார வரிசையில் தன்னுடைய அடையாளத்தை மையப்படுத்துதல் தொடர்கின்ற நிலையில், வத்திக்கானில் நடைபெற்ற வழிபாட்டில் 17 புதிய கர்தினால்களை போப் பிரன்சிஸ் நியமித்திருக்கிறார், Image captionதிருச்சபைக்கு ஆற்றிய சிறந்த பணிகளுக்காக 80 வயதுக்கு மேலான நான்கு ஆயர்கள் கர்தினால்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் இந்த கர்தினால்களில் பெரும்பாலோர் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் வளர்முக நாடுகளை சேர்ந்தவர்களாவர். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்டோர் என்று கருதப்படும் மூன்று அமெரிக்க ஆயர்களையும் போப் பிரான்சிஸ் காதினால்களாக நியமித்திருக்கிறார். இந்த நடவடிக்கை, அமெரிக்க கர்தினால்களில் அதிக அளவில் பழமைவாத கொள…
-
- 0 replies
- 239 views
-
-
மலேசியாவில் வெடித்தது மக்கள் புரட்சி! ஊழல் புகாரில் சிக்கி உள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது பதவி விலககோரி மலேசியாவில் இன்று மக்கள் புரட்சி வெடித்தது. இரண்டாவது முறையாக மலேசிய பிரதமராக உள்ள டத்தோஸ்ரீ நஜீப் முகம்மது, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 260 கோடி மலேசிய ரிங்கிட் (வெள்ளி) பணத்தை, தனது சொந்த கணக்கில் மாற்றியதற்காக அதிரடியாக ஊழல் புகாரில் சிக்கினார். ஆனால், அந்த பணம் வெளிநாட்டில் இருந்து தனக்கு நன்கொடையாக வந்ததாக அவர் விளக்கம் அளித்தார். அதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 'பெர்சே' அமைப்பு கடந்த மூன்று வருடங்களாகப் போராட்ட களத்தில் குதித்துள்ளது. மலேசியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் …
-
- 0 replies
- 819 views
-
-
திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மணமகனின் அத்தை கொல்லப்பட்டுள்ளார். உறவினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சர்ச்சைக்குரிய போதகர் பற்றி பிபிசியின் கீதா பாண்டே : சாத்வி ஓர் ஆயுத விரும்பி இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி வெளியான காணொளியில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவால்வராலும், பின்னர் இரட்டைக் குழல் துப்பாக்கியாலும் சுடுவது தெரிகிறது. அவரோடு சேர்ந்து அவருடைய சில பாதுகாப்பு பணியாளர்களும் சுடுகின்றனர். “புனிதப் பெண்” அல்லத…
-
- 7 replies
- 1k views
-
-
கொதி நிலையில் இருந்த அமிலதன்மை மிக்க ஒரு வெப்பக் குளத்தில் ஒரு நபர் விழுந்து இறந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்காவின் அதிகாரிகள், பூங்காவில் உள்ள எச்சரிக்கை அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறு பூங்காவுக்கு வருபவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். காலின் ஸ்காட் என்ற அந்த நபரின் உடலை மீட்பு குழுக்கள் மீட்கும் முன்னர் அவரது உடல் வெப்பக் குளத்தில் கரைந்து விட்டது. வெப்பக் குளத்தின் வெப்ப நிலையை சோதிக்க காலின் ஸ்காட் சற்று குனிந்து முயற்சிக்கையில், அவர் இந்த குளத்தில் தவறி விழுந்துள்ளார். யெல்லோ ஸ்டோன் தேசிய இயற்கை பூங்கா இந்த சம்பவத்தை அவரது சகோதரி தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளார். அதிபயங்கரமான இந்த சம்பவம் குற…
-
- 2 replies
- 691 views
-
-
காடுவரை உறவு இவ்வார புதிய தலைமுறை இதழுக்காக (சாத்திரி) குடியேற்றவாசிகளின் காடு அமேசன் காடு பற்றி அறிந்திருப்போம்.இதென்ன குடியேற்றவாசிகளின் காடு? இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் பிரான்சின் கடைசி நகரமான CALAIS யில் தான் குடியேற்றவாசிகளின் காடு அமைந்துள்ளது. பிரான்சில் குளிர்காலம் தொடங்கும்போதும் தேர்தல் காலத்திலும் இந்த குடியேற்றவாசிகளின் காடு ஊடகங்களின் முக்கிய இடத்தைப் பிடிப்பதோடு அரசியல் வாதிகளின் வாயிலும் பேசுபொருளாக மாறிவிடும்.இந்த வருட இறுதி குளிர்,தேர்தல் இரண்டுமே ஓன்று சேர்ந்து வருவதால் எங்கு பார்த்தாலும் இதே பேச்சுத்தான் .சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் நுழைய முயன்று முடியாமல் போனவர்கள் சிலர் CALAIS இரயில் நிலையத்திலும் வீதியோரங்களிலும் தங…
-
- 0 replies
- 722 views
-
-
நேட்டா படையில் பணிபுரியும் நாடுகளில் தஞ்சம் கோரும் துருக்கி ராணுவத்தினர் நேட்டோ படையில் பணிபுரியும் துருக்கி ராணுவத்தினர் சிலர், தாங்கள் பணிபுரியும் சில நாடுகளிலேயே தஞ்சம் கோரியிருப்பதாக நேட்டோ பொது செயலாளர் என்ஸ் ஸ்டோல்டென்பெர்க் உறுதிப்படுத்தியிருக்கிறார். சட்டப்படியான ஆட்சிக்கு துருக்கி மதிப்பளிக்க ஸ்டோல்டென்பெர்க் கோரிக்கை கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பையும், அதன் விளைவாக ஆட்கள் களையெடுப்பு நடப்பதையும் தொடர்ந்து இந்த முயற்சி மேற்கொள்ள படுகிறது. இந்த தஞ்சம் கோரிக்கை அந்தந்த நாடுகளின் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டிய விடயம் என்று ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை தொடங…
-
- 0 replies
- 433 views
-
-
குடியேறிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 பேர் அதிகரிப்பு கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350-க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்டிருந்த இறப்பை விட இந்த ஆண்டு இதுவரை 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர். (கோப்புப்படம்) லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான் சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியிலுள்ள சர்வதேச குடிவரவு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். இந்த சமீபத்திய புள்ளிவிவரம், இந்த ஆண்டு இதுவரை இறந்த அல்லத…
-
- 0 replies
- 239 views
-
-
மாநிலங்களவை விவாதம்: மேலே - ஆனந்த் ஷர்மா, பிரமோத் திவாரி | கீழே - மாயாவதி, யெச்சூரி ரூபாய் நோட்டு உத்தி மீது மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நாடு முழுவதும் ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், அதிமுக, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) கடுமையாக விமர்சித்தன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, "ஒரே இரவில் 86% பணத்தை புழக்கத்திலிருந்து அரசு தடை செய்துள்ளது. அப்படியெனில் அரசு அந்த பணம் அத…
-
- 2 replies
- 436 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அழிவின் விளிம்பிலுள்ள விலங்குகளின் பாகங்கள் பகிரங்கமாக விற்கப்படுவது குறித்த அதிர்ச்சித்தகவல்கள். * சொமாலியாவின் இருண்டகாலம் முடிவுக்கு வருகிறதா? முப்பதாண்டுகளுக்குப் பின் நடக்கும் தேர்தலில் மொகதிஷு நிலவரம் குறித்த பிபிசியின் நேரடி செய்தி. * உருவாகிறது இன்னொரு பசுமைப்புரட்சி; உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்க புதிய வழியை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு.
-
- 0 replies
- 392 views
-
-
டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி ஐரோப்பிய தலைவர்கள் கலந்தாய்வு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு நடைபெறுகின்ற தங்களின் முதல் உச்சி மாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பிடம் அதிகார ஒப்படைப்பு பற்றி கலந்தாய்வு நடத்தியுள்ளனர். பிரியாவிடை பயணமாக ஜெர்மனியில் பராக் ஒபாமா பெர்லினில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிபர் பராக் ஒபாமாவும் பங்கேற்றார். உக்ரேனில் ரஷ்ய தலையீட்டை அடுத்து, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் தளர்த்தக் கூடாது என்பதில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஒபாமா தெரிவித்திருக்கிறார். முன்னதாக, முஸ்லிம்கள் பற்றிய பயம் நியாயமானதே என்று சமீபத்தில் டுவிட்டர் பதிவிட்ட ஓய்வு பெற்ற தளபதி மைக்கேல…
-
- 0 replies
- 287 views
-
-
ட்ரம்ப் ஜெயித்த கதை! மருதன் டொனால்ட் ட்ரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மறுநாள், அமெரிக்காவில் உள்ள 25 நகரங்களில் மக்கள் வீதிகளில் திரண்டு ‘எங்கள் அதிபர் ட்ரம்ப் அல்ல!’ எனப் போராடத் தொடங்கிவிட்டனர்; பெருந்துயர் நிகழ்ந்துவிட்டதைப்போல், பல அமெரிக்கர்கள் மெழுகுவத்தியை ஏந்தியபடி வீதிகளில் ஊர்வலம் சென்றுகொண்டிருக்கிறார்கள். ‘டொனால்ட் ட்ரம்ப்பை அதிபராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என, என் மகளிடம் எப்படிச் சொல்வேன்?’ என ட்விட்டரில் மனம் வெதும்பி வெடித்திருக்கிறார் ஓர் அமெரிக்கத் தாய். `ட்ரம்பைத் திரும்பப் பெறுவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா?’ என, சிலர் கூகுளிடம் அப்பாவித்தனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு சமூக வலைதள…
-
- 1 reply
- 562 views
-
-
ஒபாமா நிர்வாகத்தின் கடுமையான விமர்சகரை அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தார் டிரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகம் மீது தீவிர விமர்சனம் செய்து வரும் ஒரு ஒய்வு பெற்ற ராணுவத் தளபதியை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். மைக்கேல் ஃபிளின் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு முகமையின் இயக்குநராக கடந்த 2014-ஆண்டு வரை, இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகித்த மைக்கேல் ஃபிளின், பாதுகாப்பு தொடர்பான அம்சங்களில் டொனால்ட் டிரம்புக்கு பல மாதங்களாக ஆலோசனை வழங்கி வருகிறார். தற்போதைய ஒபாமா அரசின் நிர்வாகத்தை, பொதுவான உலக விவகாரங்களில் அதன் அணுமுறையையும், மேலும் குறிப்பாக இஸ்லாமிய அரசு என்று தங்கள…
-
- 0 replies
- 347 views
-
-
ட்ரம்பின் வெற்றி ஏற்படுத்திய பிளவு! அச்சம் தரும் வாக்குறுதிகளையும் தாண்டி ட்ரம்ப் வென்றது ஏன் என்று சிந்திக்க வேண்டும் அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் அதிர்ச்சி தரத்தக்க வகையில் வெற்றி பெற்றதிலிருந்தே, எதிர்ப்புப் பேரணிகளால் அமெரிக்கா அதிர்ந்துகொண்டே இருக்கிறது. இதை ‘வெள்ளைச் சின அலை’ என்றும், ‘வெள்ளைச் சவுக்கடி’ என்றும் வர்ணிக்கிறார்கள். 2012-ல் ஒபாமாவை இரண்டாவது முறையாக அதிபராக்க 51.1% வாக்காளர்கள் இணைந்து வாக்களித்த பிறகு, வெள்ளையர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு பக்கமும் மற்றவர்கள் இன்னொரு பக்கமும் அணி திரண்டுள்ளனர்; இது மூன்றுவிதக் கருத்துகளை உருவாக்கியிருக்கிறது. முதலாவதாக, தேர்தல் முடிவைக…
-
- 0 replies
- 546 views
-
-
விஜய் மல்லையா. | படம்: ஏ.எஃப்.பி. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறுப்பு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,201 கோடி கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது. விஜய் மல்லையா உட்பட மொத்தம் 63 பேரின் கணக்குகளில் இருந்த வாராக் கடன் தொகை ரூ.7,016 கோடியை எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. பணத்தை திருப்பிச் செலுத்த வசதியிருந்தும் செலுத்தாமல் உள்ள (வில்புல் டிபால்டர்) 100 பேரில் 63 பேரின் கடன் இவ்விதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 37-ல் 31 நபர்களின் நிலுவைத் தொகை பகுதியளவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் செலுத்த வேண்டிய தொகை வசூலாகாத கடன் (என்பிஏ) கணக்கில் சேர்க்…
-
- 1 reply
- 439 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், *காலநிலை மாற்ற ஒப்பந்தத்தை மாற்ற வேண்டாம் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். *உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தும் சீனா தனது சுயேச்சை வேட்பாளர்களை எப்படி மௌனமாக்குகிறது என்பது குறித்த பிபிசியின் தகவல். *காகிதம் மற்றும் கண்ணாடி மறுசுழற்சிக்கு உள்ளாவதை போலவே பிரிட்டனில் தொலைக்காட்சி பெட்டிகளும் மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.
-
- 0 replies
- 307 views
-
-
தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தோல்வியடைந்த பிறகு, தான் கலந்து கொண்ட முதல் பொது சந்திப்பில், அதிபர் தேர்தலில் தான் டொனால்ட் டிரம்பிடம் தோல்விடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தனது பேச்சில் ஹிலரி கிளிண்டன்அப்பட்டமாக வெளிப்படுத்தினார். வாஷிங்டன் டிசியில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீண்டும் தனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே தான் விரும்பவில்லை என்று கூறினார். ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டியதாக தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ்நாட்டில் 2014ல் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்ற உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம், அது தொடர்பாக, தமிழக அரசு பதிவு செய்த சீராய்வு மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக 2017ல் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014ல் தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கடந்த ஜனவரி 8-ந் தேதி அனுமதி வழங்கி, விளையாட்டை நடத்துவதில் சில விதிமுறைகளை கொண்டுவந்தது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தன…
-
- 0 replies
- 251 views
-
-
சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன... கடவுள் கிருஷ்ணன் அருள்புரிவார்: மத்திய அமைச்சர் சுஷ்மா. டெல்லி: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் சுஷ்மா சுவராஜுக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த சுஷ்மாவிற்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது டயாலிசிஸ் நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து…
-
- 1 reply
- 445 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * சிரிய அரச எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள அலெப்போ மீதான தாக்குதல் மீண்டும் துவக்கம்; அமெரிக்காவின் அடுத்த அதிபர் சிரியாவின் நண்பராக அமையக்கூடும் என்கிறார் சிரிய அதிபர் அசாத். * உலகின் மிகப்பெரிய அகதி முகாமை மூட கென்யா முடிவு; ஆனால் தபாப் முகாமிலிருக்கும் அகதிகளில் பலர் சொமாலியா திரும்ப அச்சம். * போலிச் செய்திகளின் பரவலைத் தடுப்பதில் கூகுள் நிறுவனம் தீவிரம்; கூகுள் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை பிபிசிக்கு பிரத்யேக பேட்டி.
-
- 0 replies
- 321 views
-
-
புதிய 4 இந்திய மொழிகள் உட்பட மேலும் 11 உலக மொழிகளில் பிபிசி உலக சேவை 1940 ஆம் ஆண்டுக்குப் பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலகசேவை அறிவித்துள்ளது. பிபிசி உலகசேவை விரிவாக்கப்படுகிறது இந்தியாவில் நான்கு புதிய மொழிச்சேவைகளை பிபிசி துவக்கப்போகிறது. 1940 ஆம் ஆண்டுக்குப்பிறகான தனது மிகப்பெரிய விரிவாக்கத்தை பிபிசி உலக சேவை அறிவித்துள்ளது. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகும் இடங்கள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு தனது சுயாதீன ஊடகசெயற்பாட்டை பிபிசி கொண்டு செல்லும் நோக்கில் இந்த முடிவு வந்துள்ளது. அதில் நான்கு புதிய இந்திய மொழிச்சேவைகளும் அடங்குகின்றன. தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி …
-
- 0 replies
- 267 views
-
-
எங்களுக்கு 1 ரூபாய் சம்பளம் போதும்..!அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் வெற்றிபெறு தனது முதல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று சில நாட்களே ஆன நிலையில் பதவிக்கு வராத முன்பே தனது பிரச்சாரத்தில் அறிவித்ததைப் போல் தனது பதவிக் காலத்தில் சம்பளம் வாங்கமாட்டேன் என அறிவித்துள்ளார். இவர் மட்டும் தான் இத்தகைய காரியத்தைச் செய்துள்ளாரா என்றால் இல்லை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களும் வருடத்திற்கு ஒரு ரூபாய் சம்பளம் பெறுகிறார். இவர்களைப் போலவே வர்த்தகச் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் 1 ரூபாய்/1 டாலர் சம்பளத்தைப் பெறுகின்றனர். யார் இவர்கள்..? முதன்முதலாக உலகில் 1 ரூபாய் சம்பளத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முகமது…
-
- 1 reply
- 746 views
-