உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26581 topics in this forum
-
பட மூலாதாரம், Photo by AMIR MAKAR/AFP via Getty Images படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி உட்பட அவரது கல்லறையின் 5,000 பொக்கிஷங்கள் முதல் முறையாக ஒன்றாகக் காட்சிப்படுத்தப்படும் கட்டுரை தகவல் கெய்ன் பியரி பிபிசி நியூஸ் 6 நவம்பர் 2025 பண்டைய உலகின் கடைசி எஞ்சியிருக்கும் அதிசயமான பிரமாண்டமான கிசா பிரமிடின் அருகில் கட்டப்பட்ட, உலகமே ஆவலுடன் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகம் இறுதியாக திறக்கப்பட்டது. 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தளம் - பிரான்சின் லூவர் அருங்காட்சியகத்தை விட இரண்டு மடங்கு பெரியது. பாய் கிங் (சிறிய வயதில் அரசரானவர்) என்று அழைக்கப்பட்ட துட்டன்காமன் உடன் புதைக்கப்பட்ட இதுவரை உலகத்தின் பார்வைக்கு காட்டப்படாத பொக்கிஷங…
-
-
- 11 replies
- 507 views
- 1 follower
-
-
உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகும் முதல் நபராக எலான் மஸ்க்! 07 Nov, 2025 | 12:38 PM டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலான் மஸ்க், உலகிலேயே ஒரு ட்ரில்லியன் டொலர் சொத்துடைய முதல் நபர் என்ற பெருமைக்குரியவராகியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்திடம் தனக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் ஊதியத்தினை வழங்க, டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மொத்தமாக உள்ள நிறுவனத்தின் பங்குதாரர்களில் 75 வீதமானோர் இந்த சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எலான் மஸ்க் இந்நிறு…
-
- 0 replies
- 140 views
-
-
இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி கட்டுரை தகவல் லூசி வில்லியம்சன் மத்திய கிழக்கு செய்தியாளர், காஸா 3 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை நோக்கி இருக்கும் கரையிலிருந்து காணுகையில் போரின் விளைவுகளை மறைக்க முடியாது. வரைபடங்கள் மற்றும் நினைவுகளிலிருந்து காஸா நகரம் அழிந்துவிட்டது. ஒருபுறம் பெயிட் ஹனூன் முதல் மறுபுறம் காஸா சிட்டி வரை தரை மட்டமாக ஒரே நிறத்தில் காட்சியளிக்கும் இடிபாடுகளே நினைவில் உள்ளன. இன்னும் தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கும் கட்டடங்களை தவிர, காஸா நகரில் நீங்கள் பயணிப்பதற்கோ அல்லது பல பத்தாயிர மக்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததற்கான அடையாளங்களை காண்பதற்கோ உங்களுக்கு எதுவும் இல்லை. போரின் ஆரம்ப வாரங்களில் இஸ்ரேலிய தரைப்படையின…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்! உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர். இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர். ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங…
-
- 0 replies
- 87 views
-
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு! அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது. தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி…
-
-
- 34 replies
- 1.8k views
- 1 follower
-
-
கல்மேகி சூறாவளி : பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 58 பேர் பலி 05 Nov, 2025 | 09:43 AM மத்திய பிலிப்பைன்ஸின் சில பகுதிகளில் கல்மேகி சூறாவளி தாக்கியதால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் 58 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளதுடன் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என சர…
-
- 4 replies
- 228 views
- 1 follower
-
-
"பாகிஸ்தான் அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறது" - டிரம்ப் குற்றச்சாட்டு : பாகிஸ்தான், சீனா மறுப்பு 04 Nov, 2025 | 10:43 AM ரஷ்யா மற்றும் சீனா மட்டுமின்றி, வடகொரியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் ஆசியப் பயணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப், அங்கு அணு ஆயுதச் சோதனை நடத்தப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்ட நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், "ரஷ்யாவும், சீனாவும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் இது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேச…
-
- 0 replies
- 92 views
-
-
04 Nov, 2025 | 10:28 AM ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை (03) மதியம் 12.40 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து, நேற்று மதியம் 2.14 மணியளவில் அப்பக்குதியில் ரிக்டர் 6.1 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Fenamad கட்டுரை தகவல் ஸ்டெஃபானி ஹெகார்ட்டி உலக மக்கள் தொகை செய்தியாளர் 3 நவம்பர் 2025, 03:18 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நவம்பர் 2025, 05:26 GMT பெருவின் அமேசான் பகுதியில் உள்ள ஒரு சிறிய திறந்த வெளியில் தாமஸ் அனெஸ் டோஸ் சான்டோஸ் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டில் காலடிச் சத்தம் நெருங்குவதைக் கேட்டார். அவர் தான் சூழப்பட்டுவிட்டதை அறிந்து உறைந்து போனார். "ஒருவர் நின்று, அம்புடன் குறிவைத்துக் கொண்டிருந்தார்," என்று அவர் கூறுகிறார். "எப்படியோ நான் இங்கு இருப்பதை அவர் கவனித்துவிட்டார், நான் ஓடத் தொடங்கினேன்." அவர் மாஷ்கோ பைரோ (Mashco Piro) பழங்குடியினரை நேருக்கு நேர் எதிகொண்டார். பல தசாப்தங்களாக, நுவேவா ஓசியானியா (Nueva Oceania) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் …
-
- 0 replies
- 151 views
- 1 follower
-
-
வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். https://www.cnn.com/2025/11/02/…
-
- 0 replies
- 103 views
- 1 follower
-
-
உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது. Tetyana Vysotska, Anastasia Protz — 31 அக்டோபர், 16:18 ஒரு வயலில் தானியங்களை அறுவடை செய்தல். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 1835 உக்ரைனுடனான மேம்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் 2025 அக்டோபர் 29 அன்று நடைமுறைக்கு வந்த பிறகு, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. சில உக்ரைனிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான ஒருதலைப்பட்ச தடைகளை நீக்குமாறு நாடுகளை வற்புறுத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. மூலம்: ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைமை செய்தித் தொடர்பாளர்…
-
-
- 14 replies
- 467 views
-
-
Nov 2, 2025 - 08:18 AM இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்த போது, பயணிகள் டொன்காஸ்டரில் இருந்து லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் நோக்கிப் பயணித்துள்ளனர். கத்திக் குத்துக்கு உள்ளானவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, அந்த ரயிலின் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நகரத்தின் பல வீதி…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் லானா லாம் பிபிசி செய்தியாளர் 42 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற 'கோரல் அட்வென்ச்சர்' என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், "கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே'' தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து 'கோரல் அட்வென்ச்சர்' கப்பலின் '60 நாள…
-
- 1 reply
- 236 views
- 1 follower
-
-
தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! 01 Nov, 2025 | 01:49 PM தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 …
-
- 0 replies
- 97 views
-
-
இந்தச் சிங்கங்கள் கடற்கரையில் காத்திருப்பது ஏன்? பட மூலாதாரம், Griet Van Malderen கட்டுரை தகவல் இசபெல் கெர்ரெட்சன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமீபியாவில், ஒரு பாலைவனச் சிங்கக் குழு தங்கள் பாரம்பரிய வேட்டையாடும் இடங்களை விட்டு வெளியேறி, அட்லாண்டிக் கடற்கரைக்குச் சென்று, உலகின் ஒரே 'கடல்சார் சிங்கங்களாக' மாறியுள்ளன. இந்த வியத்தகு நடத்தையை ஒரு புகைப்படக் கலைஞர் படம் பிடித்துள்ளார். அது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் புகைப்படம்: நமீபியாவின் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில் ஒரு பெண் சிங்கம் தூரத்தில் பார்வை பதிந்திருக்க, பின்னணியில் சீற்றமான அலைகள் கரையில் வந்து மோதிச் சிதறுகின்றன. நமீபியாவின் ஸ்கெலிட்டன் கடற்கரையின் கடினமான சூழலில் உயிர்வாழ கடல்நாய்களை வேட்டையாடக் கற்றுக் கொண…
-
-
- 1 reply
- 252 views
- 1 follower
-
-
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றத…
-
- 0 replies
- 104 views
-
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்த…
-
- 3 replies
- 146 views
- 1 follower
-
-
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025 சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகா…
-
- 1 reply
- 100 views
-
-
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது சகோரரர் ஆண்ட்ரூவின் இளவரசர் பட்டத்தை பறித்து, அவரை விண்ட்சர் மாளிகையான ரோயல் லோட்ஜை விட்டு வெளியேற வெளியேற உத்தரவிட்டுள்ளார். பக்கிங்ஹாம் அரண்மனை இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான ஆண்ட்ரூவின் உறவுகள் குறித்து நடவடிக்கை எடுக்க பல வாரங்களாக எழுந்த அழுத்தங்களின் பின்னணியில் இந்ந நடவடிக்கை வந்துள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அவமானப்படுத்தப்பட்ட இளவரசரைச் சுற்றியுள்ள ஊழலில் இருந்து அரச குடும்பத்தை விலக்குவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக இதனை பலர் கருதுகின…
-
- 2 replies
- 247 views
-
-
அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த கீஸ்பரோவில் உள்ள தம்ம சரண கோவிலின் தலைமை துறவியான 70 வயதான நாவோதுன்னே விஜிதா என்பவரே குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறார். மெல்போர்ன் வசித்து வரும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி மெல்போர்ன் விகாரையில் ஆறு சிறுமிகளுக்கு எதிரான வரலாற்று பாலியல் குற்றங்களில் தேரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 1994 மற்றும் 2002 க்கு இடையிலான காலப்பகுதுியில் இந்தக் குற்றங்களைச் செய்ததாக இன்றையதினம் கவுண்டி நீதிமன்ற நடுவர் மன்றம் தீர்ப்பளித்…
-
- 4 replies
- 359 views
-
-
வர்த்தகப் போருக்கு மத்தியில் தென் கொரியாவில் ட்ரம்ப் – ஜி வரலாற்று சந்திப்பு! உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை (30) தென் கொரிய விமானப்படை தளத்தில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பைத் தொடங்கினார். தெற்கு துறைமுக நகரமான பூசானில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள், 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்களின் முதல் நேரடி சந்திப்பாகும். அத்துடன், இது தென் கொரியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் பல வர்த்தக முன்னேற்றங்களைப் பற்றிய ட்ரம்ப்பின் ஆசியா முழுவதும் மேற்கொள்ளும் விசேட பயணத்தின் இறுதிக்கட்டத்தையும் குறிக்கிறது. சந்திப்பின் போது ஜியுடன் கைகுலுக்கிய…
-
- 0 replies
- 92 views
-
-
பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளன…
-
- 0 replies
- 111 views
-
-
மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் கு…
-
- 0 replies
- 117 views
-
-
ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்க…
-
- 3 replies
- 233 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை! இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது. இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் அடுத்த பொத…
-
- 0 replies
- 126 views
-