உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு இணையத்தளம் முடக்கம் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலைத் தொடர்ந்து, அவ்விணையத்தளத்தை முடக்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கம் முயல்கிறது. இந்த இணையத் தாக்குதலின் காரணமாக, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் எவையும் திருடுபோகவில்லை என நேற்றுப் புதன்கிழமை தெரிவித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், முன்னெச்சரிக்கையாகவே இவ்விணையத்தளத்தை முடக்கும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் ஆரம்பித்த இந்த இணையத் தாக்குதல்கள…
-
- 0 replies
- 251 views
-
-
16 ஆண்டுகள் உண்ணாமல் உயிர் வாழ்ந்தது எப்படி? வெளியாகியது உண்மை மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் அப்பாவி மணிப்பூர் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியும் அரசு தந்து கோரிக்கையை ஏற்காததால், தானே முதல்வராகும் எண்ணத்தில் 16 ஆண்டுகால போராட்டத்தை தேன் அருந்தி முடித்து கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் ஷர்மிளாவின் உடல்நலத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த இரகசியத்தை ஷர்மிளாவின் சகோதரர் ஐரோம் சிங்கஜித் வெளியிட்டார். அவர் கூறுகையில்…
-
- 0 replies
- 254 views
-
-
ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர்.ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணித்துள்ளனர். அந்நாட்டிற்கு சென்ற இவர்கள், எங்கள் தாய்நாடான ஜேர்மனியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேலும் எங்கள் குழந்தைகள் வளர்வதற்கான பாதுகாப்பான சூழல் அங்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்னவென்றால், ஜேர்மன் நாட்டில் அளவுக்கதிமான குடியேறிகள் வந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், …
-
- 4 replies
- 595 views
-
-
நவ்ரு தடுப்பு நிலையத்தில் 2,000க்கு மேற்பட்ட துன்புறுத்தல்கள் நவ்ருவிலுள்ள அகதிகளுக்கான அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முயற்சிக்கப்பட்ட தானாக தாக்கிக் கொள்ளுதல் உட்பட 2,000க்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று நேற்றுப் புதன்கிழமை (10) தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை, சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டுள்ளது. கார்டியன் அவுஸ்திரேலியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள கசிந்த ஆவணங்களின் மூலம், அவுஸ்திரேலியாவினால், அயலிலுள்ள தென் பசுபிக் தீவுகளில் நடாத்தப்படும் இரண்டு அகதிகள் தடுப்பு நிலையங்களில் ஒன்றான நவ்ருவில் மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 264 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி அமைச்சர் புகார் கடந்த மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதை தடுக்கும் வண்ணம் உள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் சவுசோக்லு தெரிவித்துள்ளார். துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அதிகாரிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை மிகவும் தவறாக உள்ளதாகவும் மேலும் மேற்கத்திய நாடுகள் துருக்கியுடனான நட்பை துண்டித்தால் அது அவர்களின் தவறே ஒழிய அங்காரா, ரஷியா, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் கொண்ட உறவு காரணம் அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். சு…
-
- 0 replies
- 225 views
-
-
தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்டு வழங்க பரிசீலனை தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். கோப்புப்படம் தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது. தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்…
-
- 0 replies
- 213 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஹிலாரி கிண்டனை தடுக்க ‘’துப்பாக்கி ஆதரவாளர்கள்’’ அதனை பயன்படுத்தும் தமது உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக டொனால்ட் ட்ரம்ப் விமர்சிக்கப்படுகிறார். * நைஜீரியாவில் காணிகளுக்கான பிரச்சினை. விவசாயிகளுக்கும், மாடு மேய்ப்போருக்குமான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலி. * பிரிட்டனின் உயரமான மலைகளின் உயிரினங்களை தேடி ஒரு பயணம். அவை கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்.
-
- 0 replies
- 433 views
-
-
மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய் துபாய்: மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே, 'கேப்ஸ்யூல்' போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள் செல்லக் கூடிய வகையில் இப்போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை. எனவே, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த 100 பொறியாளர்களை அழைத்து, அவர்களுக்கிடையே 48 மணி நேரத்திற்கு ஒரு போட்டியை நடத்தி…
-
- 9 replies
- 667 views
-
-
பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விபத்து நடந்த மருத்துவமனை (கோப்பு படம் ) இராக் தலைநகர் பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தினை மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து இராக் சுகாதார அமைச்சக பேச்சாளர் ஒருவர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டது குறித்த ஆரம்ப விசாரணைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சார பழுதே காரணம் என்று சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 182 views
-
-
ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு அபராதம் ரத்து- ஐரோப்பிய ஒன்றியம் அதிகப்படியான வரவு செலவு திட்ட பற்றாக்குறைகள் தொடர்பாக ஸ்பெயினுக்கும், போர்ச்சுகல்லுக்கும் அபராதங்களை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேலாக வரவு செலவு திட்டப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையை இந்த இரு நாடுகளும் மீறி இருக்கின்றன. இந்த வரையறைக்கு கீழே அதனுடைய பற்றாக்குறைய கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஸ்பெயினுக்கு வழங்கியிருக்கும் அதேவேளையில், மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் இரண்டரை சதவீதத்திற்குள் பற்றாக்குறையை கொண்டுவர போர்ச்சுக்கல்லுக்கு ஓராண்டு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன…
-
- 0 replies
- 256 views
-
-
போர்த்துக்கலில் பாரிய காட்டுத்தீ ; 174 பேர் காயம் ; 400 பேர் இடம்பெயர்வு ( அதிர்ச்சியூட்டும் படங்கள் ) போர்த்துகல் நாட்டின் மெடீரா தீவில் பன்ஜல் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயினால் 174 பேர் காயமடைந்துள்ளதோடு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி பரவி வருவதால், பன்ஜல் நகரில் உள்ள சுமார் 400 பேர் இருப்பிடத்தினை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 27 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீயினை அணைக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், 26 தீயணைப்பு விமானங்கள் மற்றும் 1262 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர். வடக்குபகுதியில் தான் …
-
- 0 replies
- 458 views
-
-
ஜனாதிபதியாவதற்கு ட்ரம்பிடம் அடிப்படை பண்புகளே இல்லை; அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டறிக்கையில் தெரிவிப்பு டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதியாக இருப்பதற்கான அடிப்படை பண்புகளே இல்லை எனவும் அவர் ஜனாதிபதியானால் அமெரிக்காவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமென்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சி.ஐ.ஐ.ஏ. முன்னாள் இயக்குநர் மைக்கல் மோரல…
-
- 0 replies
- 231 views
-
-
அகதியாக மாறிய சீன சுற்றுலாப்பயணி சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ஜேர்மனிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோது, அகதியாகக் கருதப்பட்டு, அகதி முகாமொன்றில் 12 நாட்கள் தங்கியிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவரது முழுப் பெயர் வெளியிடப்படாததோடு, "திரு. எல்" என்று மாத்திரமே அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டரின் மொழி மாத்திரமே பேசத்தெரிந்த குறித்த சுற்றுலாப்பயணி, தன்னுடைய பணப்பையைத் தொலைத்துள்ளார். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடும் நோக்கில் சென்ற அவர், அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலகத்துக்கு மாறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அங்கு வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கி…
-
- 0 replies
- 365 views
-
-
ரியோ டி ஜெனீரோவில் பதற்றம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பண…
-
- 0 replies
- 306 views
-
-
ரஷ்யாவில் உள்ள உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றான சைபீரியாவின் பைக்கால் ஏரியில் 51 வயது மதிக்க தக்க நபரும் அவரது மனைவியும் மது குடித்து விட்டு ஏரியில் நீந்தி கொண்டிருந்தனர். கொண்டிருந்துள்ளனர். அப்போது அவரது மனைவி ஆழமான பகுதிக்குச் என்று காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்த இளைஞர் குழு ஒன்று அவரது கணவருக்கு உதவி செய்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர். பின்னர், மயக்க நிலையில் இருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் செயற்கை மூச்சு கொடுத்து காப்பாற்றியுள்ளார். இதனை கண்ட போதை கணவர் அவர்களை தள்ளிவிட்டு சத்தம் போட்டுள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார், இளைஞர்கள் அவரிடமிருந்து கத்தியை வாங்க முற்பட்டபோது, அவர் இரண்டு இளைஞர்களை சரமாரியாக குத்தியுள்ளார். …
-
- 3 replies
- 394 views
-
-
பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் சமீபகாலமாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களை அடுத்து சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இதுகுறித்து 18,000 பொதுமக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மக்களிடம் நைஸ் தாக்குதல் மற்றும் ஜேர்மனியின் ஆன்ஸ்பக் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதில் ஒட்டுமொத்தமாக 75 சதவிகித மக்கள் பாதுகாப்பின்மையை முன்னைவிட அதிகமாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் விட்டுத்தர தயார் என 64 சதவிகித மக்கள் தெரிவி…
-
- 1 reply
- 512 views
-
-
மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ - ஷூஜூ இடையே இயக்கப்படும். அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன. புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது. புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கி…
-
- 2 replies
- 528 views
-
-
இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வந்துள்ள உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம் இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பரப்புரை மேற்கொண்டு அரசியிலில் களமிறங்கப் போவதாகவும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அவர் இந்த நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறி…
-
- 1 reply
- 334 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கிய விமானப்படையால் ரஷ்ய ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் தடவையாக சந்திக்கிறார்கள். இராஜதந்திர உறவுகள் மேம்படுமா? * உங்கள் கலாச்சாரம் மற்றும் குடும்ப மானத்துக்கு எதிரான போராட்டம். ஆண்களின் குற்றக்குழுவால் வழி தவறிய பிரிட்டனில் உள்ள ஆசிய முஸ்லிம் பெண் ஏனையவர்களுக்கு உதவ முயல்கிறார். * தன்சானியாவில் சர்க்கரைக்கான தட்டுப்பாடும், விலை மற்றும் வரி அதிகரிப்பும் வணிகங்களின் இலாபத்தை பாதிக்கின்றதாம்.
-
- 0 replies
- 410 views
-
-
நேபாலில் லட்சக்கணக்கில் எருமைகள் மற்றும் விலங்குகள் கோயில் திருவிழாவில் கொல்லப்படுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழத்துகிறது. உலகின் மிகப்பெரிய அளவிலான விலங்குகள் உயிர்த்தியாக திருவிழா நேபாலத்தில் உள்ள காதிமை (Gadhimai) கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 2009 ல் நடந்த திருவிழாவில் மட்டும், பக்தர்கள் கொண்டுவந்த நீர் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா, மற்றும் எலிகள் என 5 லட்சம் உயிர்கள் இரண்டு நாட்களில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டன. இந்து மத தெய்வமான காதிமைக்கு விலங்குகளை பலி கொடுத்தால் தங்களுக்கு பாதுகாப்பும் செழுமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலங்குகளை கொண்டுவந்து கொடுக்கின்றனர். அவைகள் மொத்தமாக திருவிழா நாளில் படுக…
-
- 0 replies
- 400 views
-
-
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட 143 பதிவுகளை செய்துள்ளார். அதில் சில வசனங்கள் ஆங்கில மொழியிலும், மேலும் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது மூன்றாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது…
-
- 0 replies
- 246 views
-
-
உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் பள்ளி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பஹாராவில் உள்ள எம்.ஏ. கான்வென்ட் என்ற தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதித்து அதன் மேலாளர் ஜியா உல் ஹக் என்பவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பள்ளியில் முதல்வராக பணியாற்றியவர் உள்பட 8 ஆசிரியர்கள் தங்களது வேலையை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, அவர்கள் அளித்த பேட்டியில், கடந்த 12 ஆண்டுகளாகவே தேசியக் கீதத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலை வெளியிட்டனர். அந்தப் பள்ளி போதிய அனுமதியின்றி 20…
-
- 0 replies
- 299 views
-
-
எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள் காணாமல் போன விமானத்தில் பயணித்த உறவினர்களின் துயரம் (கோப்புப்படம்) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் எம்.எச் 370, நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி (6 ஆயிரம் மீட்டர்) வேகத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.எச். 370 விமானத்தின் தானியங்கி சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய தகவல்களும், போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தின் பதிவிறக்கங்களும் …
-
- 0 replies
- 295 views
-
-
ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு அதிகாரி உள்பட 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டை காஷ்மீரில் அடிக்கடி ஊடுருவும் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல்…
-
- 0 replies
- 178 views
-
-
புதுடெல்லி, இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு வெடிக்கும் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் மிரட்டல் எங்களிடம் பலிக்காது என்று வெங்கையா நாயுடு கூறினார். அணுகுண்டு யுத்தம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க பயங்கரவாதி சையது சலாகுதின், நேற்று கராச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘காஷ்மீரில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை, பாகிஸ்தானுக்கு இருக்கிறது. அப்படி பாகிஸ்தான் ஆதரவு அளித்தால், இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு யுத்தம் வெடிக்க வாய்ப்புள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்தால், இரு நாட்டு காஷ்மீரிகளும் தாங்களே விவகாரத்தை கையி…
-
- 0 replies
- 192 views
-