உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26892 topics in this forum
-
புதுடெல்லி, இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு வெடிக்கும் என்ற ஹிஸ்புல் முஜாகிதின் மிரட்டல் எங்களிடம் பலிக்காது என்று வெங்கையா நாயுடு கூறினார். அணுகுண்டு யுத்தம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதின் இயக்க பயங்கரவாதி சையது சலாகுதின், நேற்று கராச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘காஷ்மீரில் நடந்து வரும் சுதந்திர போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய தார்மீக கடமை, பாகிஸ்தானுக்கு இருக்கிறது. அப்படி பாகிஸ்தான் ஆதரவு அளித்தால், இந்தியா–பாகிஸ்தான் இடையே அணுகுண்டு யுத்தம் வெடிக்க வாய்ப்புள்ளது. காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்தால், இரு நாட்டு காஷ்மீரிகளும் தாங்களே விவகாரத்தை கையி…
-
- 0 replies
- 192 views
-
-
ரஷ்யாவில் உள்ள உலகின் ஆழமான ஏரிகளில் ஒன்றான சைபீரியாவின் பைக்கால் ஏரியில் 51 வயது மதிக்க தக்க நபரும் அவரது மனைவியும் மது குடித்து விட்டு ஏரியில் நீந்தி கொண்டிருந்தனர். கொண்டிருந்துள்ளனர். அப்போது அவரது மனைவி ஆழமான பகுதிக்குச் என்று காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அருகிலிருந்த இளைஞர் குழு ஒன்று அவரது கணவருக்கு உதவி செய்து பெண்ணை காப்பாற்றியுள்ளனர். பின்னர், மயக்க நிலையில் இருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் செயற்கை மூச்சு கொடுத்து காப்பாற்றியுள்ளார். இதனை கண்ட போதை கணவர் அவர்களை தள்ளிவிட்டு சத்தம் போட்டுள்ளார். பின்னர், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார், இளைஞர்கள் அவரிடமிருந்து கத்தியை வாங்க முற்பட்டபோது, அவர் இரண்டு இளைஞர்களை சரமாரியாக குத்தியுள்ளார். …
-
- 3 replies
- 395 views
-
-
இரோம் ஷர்மிளா: முடிவுக்கு வந்துள்ள உலகிலேயே நீண்ட உண்ணாவிரதம் இந்தியச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக நடத்தி வந்த உண்ணாவிரதத்தை இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அவருடைய உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடைபெறயிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக பரப்புரை மேற்கொண்டு அரசியிலில் களமிறங்கப் போவதாகவும் கடந்த மாதம் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். ஆயுதப்படைப் பிரிவுகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக அவர் இந்த நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். பிடியாணை இல்லாமல் கைது செய்வது, குறி…
-
- 1 reply
- 335 views
-
-
நேபாளத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை இலங்கையில் சட்டவிரோதமாக கடத்தல்காரர்கள் மறைத்து வைத்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக நேபாளத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக 79 புலம்பெயர் தொழிலாளர்களை நேபாள அதிகாரிகள் மீட்டுள்ளதாக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து 19 நேபாள பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பங்களாதேஷிலிருந்து 60 புலம்பெயர் தொழிலாளர்களை மீட்டுள்ளதாகவும் நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் Bharat Raj Paudyalகூறியுள்ளார். இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் பெண்களே என பொலிஸ் சிரேஸ்ட கண்காணிப்பாளர் Sarbendra Khanal தெரிவித்துள்ளார். கொழும்பில் 22 பெ…
-
- 0 replies
- 358 views
-
-
கூகுள் நிறுவனத்தின் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் ; தீயிட்டு கொலை கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை முகாமையாளராக பணிபுரிந்துவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை முகாமையாளராக பணியாற்றி வந்த வனேசா மார்கோட்டி(27) மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்றிந்த வேளையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் நடைபயிற்சி செய்யச் சென்றுள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.மகளின் கையடக்கத்தொலைபேசிற்கு தொடர்பு கொண்…
-
- 0 replies
- 586 views
-
-
புதிய அதிபர் என்ன செய்வார் உலகுக்கு? ஹிலாரி கிளின்டன் , டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலைப் புதிய நோக்குடன் அணுகவிருக்கிறது அமெரிக்கா. பலரும் நினைத்திருப்பதற்கு மாறாக, இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாகத்தான் இருக்கிறது. 1952 தேர்தலிலிருந்து நடந்த 16 தேர்தல்களைப் பார்க்கும்போது, 15 தேர்தல்களின்போது வேட்பாளர் தேர்வுக் கூட்டங்கள் முடிந்த இரண்டு வாரங்களில் கருத்துக் கணிப்புகளில் யார் முன்னிலையில் இருக்கிறாரோ, அவர்தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நடத…
-
- 0 replies
- 461 views
-
-
மணிக்கு 380 கி.மீ வேகத்தில் செல்லும் உலகின் மிக அதிவேக ரயிலை சீனா அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பாக சீன அரசு நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி வெளியிட்ட செய்தியில், அதிகபட்சமாக மணிக்கு 380 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த ரயில் செங்ஜூ - ஷூஜூ இடையே இயக்கப்படும். அந்த இரு இடங்களுக்கு இடையேயான பயணத்தை மேற்கொள்ள தற்போது இயங்கும் வேக ரயில்கள் 2 மணி நேரம் 33 நிமிடம் எடுத்துக் கொள்கின்றன. புதிய அதிவேக ரயில் வெறும் 80 நிமிடம் மட்டுமே எடுத்துக் கொள்ளும். சோதனை ஓட்டத்தின்போது, அதிகபட்சமாக மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் புதிய ரயில் இயக்கப்பட்டது. புதிய அதிவேக ரயில் ஓடத் தொடங்கும்போது, உலகின் மிக வேகமாக இயக்கப்படும் ரயில் அதுவாக இருக்கும். சீனாவின் முக்கி…
-
- 2 replies
- 528 views
-
-
பசு மாடுகளை காப்பாற்றுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி தலித்துக்களை தாக்குதவதை நிறுத்திவிட்டு என்னை சுடுங்கள் என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.தெலுங்கானா மாநிலத்திற்கு இன்று முதன் முறையாக விஜயம் செய்துள்ள மோடி இந்த செய்தியினை வெளியிட்டுள்ளார்.அப்போது, ‘தலித்துக்களை பயன்படுத்தி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்’ என மோடி பேசியுள்ளார்.‘’உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால், யாரையாவது தாக்க வேண்டும் என்றால், என்னை தாக்குங்கள். என்னுடைய தலித் சகோதரர்களை அல்ல. உங்களுக்கு யாரையாவது சுட வேண்டும் என்றால், என்னை சுடுங்கள். என்னுடைய தலித் சகோதரர்களை அல்ல’ என உருக்கமாக பேசியுள்ளார்.’’நம்முடைய தலித் சகோதரர்களை தாக்குவதற்கு என்ன காரணம்? அவர்களை தாக்குவதற்கு…
-
- 0 replies
- 663 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்டதில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். * இபோலாவில் இருந்து சியரா லியோன் கற்றுக்கொண்ட பாடங்கள். அந்த தொற்று நோய்க்கான உதவிகள் அங்கு சுகாதாரத்துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த தகவல்கள். * கிழக்கு திமோரில் முதலைகள் ஆட்களை கொல்வதால் அவற்றை ஒரு பண்ணையில் அடைத்துள்ளனர். ஆனால், அவை புனிதமானவை என்பதால் அவற்றை அடைத்து வைப்பது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
- 0 replies
- 426 views
-
-
பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தின் மீது பிரிட்டன் குற்றவியல் விசாரணை மோசடி, லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐரோப்பிய விமான தயாரிப்பாளரான ஏர் பஸ் நிறுவனம் மீது பிரிட்டனின் தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமானது குற்றவியல் விசாரணையை தொடங்கியுள்ளது. மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த முரண்பாடுகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும் என ஏர் பஸ் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. முக்கிய வணிக ஒப்பந்தங்களில் ஈடுபடுத்தப்படும் இடைத்தரகர்களை எதிர்ப்பதை உலகெங்கிலும் லஞ்ச எதிர்ப்பு சட்டங்கள் இலக்கு வைக்கின்றன. ஏர் பஸ் நிறுவனம் பிரான்சில் அதன் தலைமையகத்தை கொண்டுள்ளது. மேலும், ஐ…
-
- 0 replies
- 299 views
-
-
டெல்டா ஏர் நிறுவன கணினி அமைப்புகள் பழுது; ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பு கணினி அமைப்புகள் பெரிய அளவில் பழுதான காரணத்தால், தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்ட டெல்டா ஏர் விமான நிறுவனத்தின் உலகளாவிய சேவைகளில், தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்கள் இயங்க தொடங்கியுள்ளன. ஆனால் இந்த அமெரிக்க விமானச் சேவை நிறுவனம், அதன் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் எனவும் தாமதம் ஆகலாம் எனவும் எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள், விமான நிலையத்தில் பயணச் சீட்டைக் காட்டி நுழையும் இடங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே பறந்து கொண்டிருக்கும் விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அட்லாண்டாவில் உள்ள அதன் தலைமையகத்தில் ஏற்பட்ட மின் தடை காரண…
-
- 0 replies
- 364 views
-
-
நீதிமன்றம் மற்றும் காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சமீபகாலமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை ஒப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் சட்டம் மற்றும் காவல் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதில் பின்லாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 நாடுகளின் பட்டியலின் விவரம் பின்லாந்து (94%) டென்மார்க் (91) நோர்வே (87) சுவிட்சர்லாந்து (87) சுவீடன் (84) லக்ஸம்பேர்க் (81) பிரான்ஸ் (81) ஆஸ்திரியா (81) எஸ்டோனியா (80) பிரித்தானியா (79) …
-
- 0 replies
- 273 views
-
-
பலுச்சிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் குண்டு வெடிப்பு: 30 பேர் பலி பாகிஸ்தானின் தென் கிழக்கு பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலுச்சிஸ்தான் மாகாணத்தின் தலைநகரமான குவெட்டாவில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பான்மையானவர்கள் வழக்கறிஞர்கள் என்றும், அவர்கள் ஏற்கனவே முன்னர் கொல்லப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஒருவரது உடலை மருத்துவமனைக்கு உள்ளே எடுத்து செல்ல வந்தவர்கள் என்றும் மாகாணத்தின் உள்துறை அமைச்சர் அக்பர் ஹரிஃபல் தெரிவித்துள்ளார். வெடி குண்டு தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. பாகிஸ்த…
-
- 1 reply
- 389 views
-
-
எதிர்ப்பு படைகளின் பிடியில் இருக்கும் அலெப்போ நகருக்கு உதவிகள் சிரியாவின் அலெப்போ நகரில், அரசுப் படைகளின் முற்றுகையை தகர்த்தபின், எதிர்ப்பு படைகளின் கட்டுப்பாட்டில் வந்திருக்கும் பகுதிக்கு, சில உதவிகள் கிடைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. போராளிகளின் பிடியில் உள்ள அலெப்போவின் கிழக்குப்பகுதிக்கு, டிரக் ஒன்றில் காய்கறிகள் வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த பாதைகள் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வகையில் ஆபத்து நிறைந்து உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமையன்று நடந்த கடும் சண்டையில் போராளிகள் தங்கள் முற்றுகையை தகர்த்ததாக கூறுவதை அரசுப் படைகள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். கிழக்கு அலெப்போவில் தங்கள் முற்று…
-
- 0 replies
- 312 views
-
-
நாட்டின் பிரபல அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய இரான் அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு தான் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக இரான் உறுதிப்படுத்தி உள்ளது. ஏழு ஆண்டுகளுக்குமுன், மெக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடிரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார். ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், இரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார். பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார். தன் சொந்த விருப்பத்தின் பேரிலே அமிரி அமெரிக்க சென்றதாகவும…
-
- 0 replies
- 459 views
-
-
பெல்ஜியம் தாக்குதலில் ஈடுபட்டவர் அடையாளம் வெளியீடு பெல்ஜியத்தில் கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு பெண் போலிசார் மீது வெட்டுக்கத்தி தாக்குதல் நடத்தியவர், ஒரு அல்ஜீரியா பிரஜை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை கே.பி என வழக்கறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். 2012ல் இருந்து அவர் பெல்ஜியத்தில் வாழ்ந்ததாகவும், அவர் மீது குற்றவியல் பதிவுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். போலிஸாரால் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னதாக, சார்லர்வாவில் உள்ள முக்கிய காவல் நிலையத்திற்கு வெளியே தாக்குதலின் போது அந்த தாக்குதல்தாரி 'அல்லாஹூ அக்பர்' ( கடவுள் பெரியவர்) என சத்தமிட்டார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமை…
-
- 0 replies
- 456 views
-
-
ஆஃப்கானிஸ்தான்: ஐ.எஸ் பிடியில் அமெரிக்க ராணுவ வீரர்? ஆஃப்கானிஸ்தானில் தங்கள் படையை சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை ஐ.எஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளதாக வெளியான தகவலை அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையினர் மறுத்துள்ளனர். ஐ.எஸ் இணைய தளத்தில் ரையன் ஜே லார்சன் என்ற ராணுவ அதிகாரியின் அடையாள அட்டை வெளிப்படையாக பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு நேட்டோ படையினரின் இந்த மறுப்பு வந்துள்ளது. கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளிடம் இருந்து கைப்பற்றியதாக சொல்லப்படும் ஆயுதங்கள், வெடிப்பெருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. நங்கர்ஹார் மாகாணத்தில் ஆஃப்கன் படைகளுக்கு உதவியாக அமெரிக்க சிறப்பு …
-
- 0 replies
- 347 views
-
-
டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் மக்களை சந்தித்த பிரதமர் மோடி தமிழ்நாட்டு இட்லியை பீட்சாவோடு ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி இந்திராகாந்தி மைதானத்தில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் உரையாடியானர். அப்போது PMO app என்னும் ஸ்மார்ட் போன்களுக்கான புதிய செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலியின் மூலம் நரேந்திர மோடியின் அரசு சார்ந்த செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும் பசு மாட்டினை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு சிலர் தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் பசுக்கள் கொல்லப்படுவதை விட சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை உண்பதால் தான் அதிக பசுக்கள் உயிரிழப்பதாகவும் மோடி கூறினார். உணவு குறித்தும் அதன் பா…
-
- 2 replies
- 455 views
-
-
ஜேர்மனி நாட்டில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை பிணையக்கைதியாக வைத்துள்ளதால் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ஜேர்மனியில் உள்ள Saarbruecken நகர் உணவகம் ஒன்றில் சற்று முன்னர் ஆயுதம் ஏந்திய மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும், உணவகத்தில் இருந்து சில ஊழியர்கள் தப்பி வெளியேறியுள்ளனர்.மேலும், எந்த நேரத்திலும் உணவகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்தி உறுதி செய்யப்பட்டதும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் பொலிசார் உணவகத்தை சுற்றி குவிக்கப்பட்டனர். இதற்கிடையில், பொலிசார் உணவகத்திற்குள் நுழைந்தபோது, அங்கு கீழ்தளத்தி…
-
- 3 replies
- 361 views
-
-
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் துருக்கி அதிபர் எர்துவான் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பேரணி துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அங்குள்ள பெரிய நகரமான இஸ்தான்புல்லில் பிரம்மாண்ட பேரணி ஒன்று இன்று நடைபெற உள்ளது. துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் எதிர்க்கட்சி தலைவர்களுடன் துருக்கி அதிபர் ரிசீப் தாயிப் எர்துவான் கூட்டத்தினரிடையே உரையாற்ற இருக்கிறார். இந்த கூட்டத்திற்கு குர்து குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஜனநாயகத்தை நிலைநாட்ட துணையாக நிற்போம் என்று மக்கள் பலர் கூறினாலும், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு…
-
- 0 replies
- 349 views
-
-
படாம், இந்தோனேஷியாவின் படாம் தீவுப்பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 6 பயங்கரவாதிகள் சிக்கினர். அவர்கள் சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், இவர்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதி பஹ்ருன் நயிமுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. மேலும் படாமில் இருந்தவாறே சிங்கப்பூரில் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சிங்கப்பூருக்கு மிக அருகே வெறும் 15 கி.மீ. தொலைவிலேயே படாம் இருப்பதால் ராக்கெட் வீச்சு சாத்தியப்படும் என பாதுகாப்பு வல்லுனர்கள் கூறியுள்ளனர். படாமில் இருந்து சிங்கப்பூருக்கு படகு போக்குவரத்து நடக்கிறது. சுற்றுலா பிரதேசங்களான இந்த பகுதிகளில் மக்கள் அடிக்கடி கூடி தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். எனவே இந்த பகுதிகள…
-
- 1 reply
- 358 views
-
-
ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் நபர் கைது ஆஸ்திரேலியாவின் மெல்ஃபோன் நகரில் ஒரு தீவிரவாதத் தாக்குதலை திட்டமிட்டதாக, தீவிரவாதக் குழுக்களோடு தொடர்புடையதாக அறியப்படும் தீவிர வலதுசாரி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதத் தடுப்பு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைக்கு பிறகு, சனிக்கிழமை அன்று பிலிப்பு காலியே கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு மெல்போர்னில் குடியேறிகள் ஆதரவு குழுக்களோடு நடைபெற்ற வன்முறை மோதல்களில், ட்ரு புளு மற்றும் ரிகிளெயிம் ஆஸ்திரேலியா போன்ற தீவிர வலதுசாரி குழுக்கள் ஈடுபட்டிருந்தன. http://www.bbc.com/tamil/global/2016/08/160807_australia_arrest
-
- 0 replies
- 283 views
-
-
அல்ஜியர்ஸ்: ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து மார்செய்லே என்ற இடத்துக்கு போயிங் 737-600 ரக பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிறுவனத்தின் “ரேடார்” கட்டுப்பாட்டில் இருந்து அந்த விமானம் திடீரென மாயமானது. இதனால் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த விமானம் எங்கோ விழுந்து நொறுங்கி விபத்துக் குள்ளானதாக கருதப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் அது விபத்துக்குள்ளாகவில்லை என அறிவிக்கப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் மீண்டும் அல்ஜியர்ஸ் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை இறக்கப்பட்டது. இச…
-
- 0 replies
- 255 views
-
-
ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? - போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் முன்னிலை: பெண் போட்டியாளர்கள் பின்னடைவு அந்தோனியோ குட்டெர்ஸ் ஐ.நா.சபையின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற் கான நடவடிக்கையில் போர்ச்சு கல் முன்னாள் பிரதமர் அந்தோ னியோ குட்டெர்ஸ் முன்னிலை வகிக்கிறார். இவர் ஐ.நா. தூதராக (அகதிகள்) 10 ஆண்டுகள் பணி யாற்றி உள்ளார். இப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 11 பேர் போட்டி இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையான முறையில் பொதுச் செயலாளரை தேர்…
-
- 0 replies
- 176 views
-
-
கார்களுக்கு அடிப் பகுதி வழியாக வழி விடும் அளவுக்கு உயரமான பேருந்தின் சோதனை ஓட்டம் சீனாவில் நடத்தப்பட்டது. இந்தப் புதுமையான வடிவமைப்பின் மூலம், போக்குவரத்து நெரிசல் பெருமளவு மிச்சமடைவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேருந்து மின்சாரத்தில் இயங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சீன அரசு நாளிதழான "பீப்பிள்ஸ் டெய்லி' தெரிவித்ததாவது: கார்கள் புகுந்து செல்லும் அளவுக்கு உயரமாக வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட "டி.ஈ.பி-1' வகைப் பேருந்து, செவ்வாய்க்கிழமை சோதனை முறையில் ஓட்டிப் பரிசோதிக்கப்பட்டது. ஹெபேய் மாகாணம், குன்ஹுவான்டாவ் நகரில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது. 22 மீட்டர் …
-
- 3 replies
- 417 views
-